Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமற்போனவர்கள் குறித்த மர்மம் துலங்குமா?

Featured Replies

  • காணாமற்போனவர்கள் குறித்த மர்மம் துலங்குமா?
 
 

காணாமற்போனவர்கள் குறித்த மர்மம் துலங்குமா?

காணா­மல் போன­வர்­க­ளில் பலர் தடுப்பு முகாம்­க­ளில் சுய­ந।ி­னை­வில்­லாத நிலை­யில் காணப்­பட்­டனர் என்று பூசா தடுப்பு முகா­மி­லி­ருந்து அண்­மை­யில் விடு­த­லை­யான முன்­னாள் போராளி ஒரு­வர் தெரி­வித்­த­தால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.

காணா­மல் போன­வர்­க­ளின் விவ­கா­ரம் தமி­ழர்­கள் மத்­தி­யில் பூதா­கா­ரம் எடுத்­துக் காணப்­ப­டு­கின்­றது. அவர்­க­ளின் உற­வு­கள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலா­கத் தொடர் போராட்­டங்­க­ளில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். கண்­ணீ­ரும் கம்­ப­லை­யு­மாக இவர்­கள் காணப்­ப­டு­கின்­றமை தாங்க முடி­யாத வேத­னையை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றது.

பல்­வேறு சந்­தர்ப்­பங்­க­ளில்  படை­யி­ன­ரால் கைது  செய்­யப்­பட்­டோரே காணாமல்போயினர்

வீடு­க­ளில் வைத்­துக் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளும், போர் முனை­யில் வைத்­துக் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளும், படை­யி­ன­ரி­டம் சர­ண­டை­வ­தற்­கா­கச் சென்­ற­வர்­க­ளும், போர் இடம் பெற்­றுக் கொண்­டி­ருக்­கும்­போது அச்­சம் கார­ண­மா­கப் படை­யி­ன­ரின் பிர­தே­சத்­தி­னுள் உள்­நு­ழைந்­த­வர்­க­ளு­மெ­னப் பலர் காணா­மல் போயுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இவர்­க­ளின் உற­வு­கள் இவர்­களை எங்கு தேடி­யும் அவர்­க­ளைக் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை. ஆனா­லும் உற­வி­னர்­கள் இன்­ன­மும் நம்­பிக்­கையை இழந்­து­வி­ட­வில்லை.

அண்­மை­யில் யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தந்த அரச தலை­வர், ‘‘எங்கு தேடி­யும் காணா­மல் போன­வர்­க­ளைக் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை. இத­னால் அவர்­க­ளின் உற­வு­க­ளுக்கு நட்­ட­ஈடு வழங்­கு­வது தொடர்­பாக அரசு சிந்­தித்து வரு­கின்­றது’’ எனத் தெரி­வித்­தமை காணா­மல் போன­வர்­க­ளது உற­வு­க­ளுக்கு மிகக் கடு­மை­யான வேத­னையை ஏற்­ப­டுத்­தி­விட்­டது. ஆனா­லும் அதன் பின்­ன­ரும் அவர்­கள் நம்­பிக்­கையை இழந்­து­வி­ட­வில்லை.

காணா­மல் போனோ­ரில் பலர் உயி­ரு­டன் உள்­ள­தான செய்தி  பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது

தற்­போது காணா­மல் போன­வர்­க­ளில் பலர் உயி­ரு­டன் இருப்­ப­தாக வௌிவந்த செய்தி, அந்த உற­வி­னர்­கள் மத்­தி­யில் ஒரு புறத்­தில் மகிழ்ச்­சி­யை­யும் மறு­பு­றத்­தில் வேதனை கலந்த எதிர்­பார்ப்­பை­யும் ஏற்­ப­டுத்்­தி­யுள்­ளது.

அரசு இந்த விட­யத்­தில் இனி­யும் மெத்­த­ன­மாக இருக்க முடி­யாது. காணா­மல் போன­வர்­கள் தமி­ழர்­கள்தானே­யென்ற அலட்­சிய மனோ­ப­வம் அர­சி­டம் இனி­யும் இருக்­கு­மே­யா­னால், அதன் எதிர் விளை­வு­கள் மோச­மா­ன­தாக அமைந்­து­வி­டும்.

அண்­மை­யில் இலங்­கைக்­குப் பய­ணம் மேற்­கொண்ட வௌிநாட்­டுப் பிர­தி­நி­தி­க­ளி­டம் காணா­மல் போன­வர்­கள் கண்­டி­பி­டிக்­கப்­ப­டு­வ­தன் அவ­சி­யத்தை எதிர்­கட்­சித் தலை­வ­ரான சம்­பந்­தன் வலி­யு­றுத்­திக் கூறி­யுள்­ளார். ஐ.நாவும் இந்த விட­யத்­தில் அதிக அக்­கறை செலுத்தி வரு­கின்­றது. இத­னால் அரசு இனி­யும் மெத்­த­ன­மாக இருந்­து­விட முடி­யாது.

பயங்­க­ர­வா­தத் தடுப்­புச் சட்­டத்­தின் கீழ் கைது செய்­யப்­பட்ட அர­சி­யல் கைதி­கள் எவ்­வித விசா­ர­ணை­களு­ மின்­றிப் பல ஆண்­டு­க­ளா­கச் சிறை­க­ளில் வாடி வரு­கின்­ற­னர். பலர் பத்து ஆண்­டு­க­ளுக்கு மேலா­கக்­கூட இவ்­வாறு சிறை­க­ளில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இவர்­கள் தொடர் பாக உரிய விசா­ர­ணை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு அவர்­கள் குற்­ற­வா­ளி­க­ளென நிரூ­பிக்­கப்­பட்­டால், தண் டனை வழங்­கப்­பட வேண்­டும், நிர­ப­ரா­தி­கள் எனக் காணப்­பட்­டால் விடு­தலை செய்­யப்­ப­டல் வேண்­டும். இதில் ஒன்­றை­யும் செய்­யாது அரசு காலம் கடத்­து­வதை இனி­யும் அனு­ம­திக்க முடி­யாது.

பெரும்­பான்மை இனத்­த­வ­ரால்  கிள்­ளுக் கீரை­யா­கக்  கரு­தப்­ப­டும்சிறு­பான்மை இனத்­த­வர்­கள்

இந்த நாட்­டைப் பொறுத்­த­வ­ரை­யில், சிறு­பான்­மை­யின மக்­கள் கிள்­ளுக் கீரை­யா­கவே கரு­தப்­ப­டு­கின்­றார்­கள். அவர்­களை மனி­தர்­க­ளாக மதிக்­கின்ற மனோ­பா­வத்தை இங்கு காண­மு­டி­ய­வில்லை. பௌத்த மதத்­தைக் கடைப்­பி­டிப்­ப­தா­கக் கூறிக் கொள்­ப­வர்­கள், அதன் வழி நில்­லாது அதர்­மத்­தைக் கையில் எடுத்­துக்­கொள்­வது நல்­ல­தல்ல.

சிறு­பான்­மை­யி­னத் தலை­வ­ரான சம்­பந்­தனை எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யி­லி­ருந்து அகற்ற வேண்­டு­மென ஒரு பகு­தி­யி­னர் இன­வா­தக் கூச்­சல் போடு­கின்­ற­னர்.

நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணைக்கு எதிர்ப்­புத் தெரி­விப்­ப­தற்கு கூட்­ட­மைப்பு ஏதா­வது நிபந்­த­னை­களை விதித்­தி­ருந்­தால் அவை ஏற்­றக்­கொள்­ளப்­ப­டக் கூடா­தென ஒரு சாரார் கூறி வரு­கின்­ற­னர். ஆனால் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பாக இவர்­கள் சிறி­து­கூட அக்­கறை காட்­டு­வ­தில்லை.

மாறா­கத் தமி­ழர்­கள் படு­கின்ற வேத­னை­யில் இன்­பம் காணத் துடிக்­கின்­ற­னர். இது எந்த வகை­யில் நியா­ய­மெ­னத் தெரி­ய­வில்லை.

காணா­மல் போன­வர்­க­ளில் பலர் சுய­நி­னை­வின்றி தடுப்­புக் காவ­லில் உள்­ள­தாக முன்­னாள் போரா­ளி­யொ­ரு­வர் கூறி­யி­ருப்­பது சாதா­ர­ண­மா­ன­தொரு விட­ய­மல்ல. இந்த விட­யத்­தில் அதிக கரி­சனை காட்­டப்­ப­டல் வேண்­டும். ஆராய்ந்து பார்த்து உட­ன­டி­யாக நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்பட­ வேண்­டும்.

அரச தலை­வ­ரும், தலைமை அமைச்­ச­ரும், தாம் இந்த நாட்­டின் தலை­வர்­கள் என்ற ரீதி­யில் உட­ன­டி­யா­கச் செயற்­பட்டு நீதியை நிலை­நாட்ட வேண்­டும். காணா­மல் போன­வர்­க­ளும், அவர்­க­ளது உற­வு­க­ளும் விடு­கின்ற கண்­ணீ­ரைச் சாதா­ர­ண­மா­கக் கரு­தி­வி­டக்­கூ­டாது.

அவர்களது கண்ணீருக்கு அதிக வலு­வுள்­ளது என்­ப­தை­யும் மறந்­து­வி­டக் கூடாது. இந்த விட­யத்­தில் எடுக்­கப்­ப­டு­கின்ற ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­கள் இந்த நாட்­டின் மீதான தவ­றான அவப்­பெ­ய­ரைத் துடைத்­தெ­றி­யும். உரி­ய­வர்­கள் இதை உணர்ந்­தால் அதுவே போது­மா­னது.

http://newuthayan.com/story/85555.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.