Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோல்வியை நோக்கிய பயணத்தில் தாமரை மொட்டுத் தரப்பு!!

Featured Replies

  • தோல்வியை நோக்கிய பயணத்தில் தாமரை மொட்டுத் தரப்பு!!
 
 

தோல்வியை நோக்கிய பயணத்தில் தாமரை மொட்டுத் தரப்பு!!

நிறை­வேற்று அரச தலை­வர் நடை­மு­றையை ஒழிப்­ப­தற்­காக அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்­தத்தை நிறை­வேற்ற, அதனை நாடா­ளு­மன்­றத்­தில் சமர்­பிக்­கும் பொறுப்பை ஜே. வி. பியின் தலை­வர் அனு­ர­கு­மார திஸ­நா­யக பொறுப்­பேற்­றுள்­ளார்.

குறித்த பிரே­ரணை நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­ற ப் பட்­ட­தும் தற்­போ­தைய நாடா­ளு­மன்­றத்தை உட­ன­டி­யாக கலைத்­து­விட வேண்­டு­மென்ற நிபந்­த­னை­யின் அடிப்­ப­டை­யில் குறித்த பிரே­ர­ணைக்கு கூட்டு எதி­ர­ணித்­த­ரப்பு ஆத­ரவு வழங்­கத் தயா­ரா­யி­ருப்­ப­தாக கூட்டு எதி­ர­ணிப் பிர­மு­க­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பந்­துல குண­வர்த்­தன அண்­மை­யில் தெரி­வித்­தி­ருந்­தார்.

நிறை­வேற்று அரச தலை­வர் நடை­மு­றையை இல்­லா­தொ­ழிக்­கும் அர­ச­மைப்­புத் திருத்­தப் பிரே­ரணை விட­யத்­தில் கூட்டு எதி­ரணி எடுக்­க­வுள்ள நிலைப்­பாட்­டுக்­க­மை­யவே மகிந்த அலை­யின் பய­ண­மார்க்­கம் அமை­யும். நாட்­டின் சாதா­ரண பொது­மக்­கள் மத்­தி­யில் நிறை­வேற்று அரச தலை­வர் பத­வியை இல்­லா­தொ­ழிக்­கும் விட­ யத்­தை­விட வேறு எத்­த­னையோ சமூக பொரு­ளா­தா­ரப் பிரச்­சி­னை­கள் முக்­கி­யத்­து­வம் பெற்­றுத் திகழ்­கின்­றன.

இத்­த­கைய நிலை­யில் நிறை­வேற்று அரச தலை­வர் நடை­மு­றையை ஒழிப்­பது குறித்து ஜே. வி.பி இவ்­வ­ளவு அக்­க­றை­யும், அவ­ச­ர­மும் காட்­டு­வ­தன் நோக்­கம் என்ன? உண்­மை­யில் இது விட­யத்­தில் ஒரு கல்­லெ­றி­யில் இரண்டு குரு­வி­களை வீழ்த்­தும் திட்­டமே முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­கக் கொள்ள முடி­கி­றது.

பதின்­மூன்­றா­வது திருத்­தத்தை
நடை­மு­றைப்­ப­டுத்­தத்­தக்க ஆபத்து

நடை­மு­றை­யி­லுள்ள அர­ச­மைப்­பில், அதற்­கான 13வது திருத்த விதி­கள் உள்­ள­டங்­கி­யுள்ள நிலை­யில், நிறை­வேற்று அரச தலை­வர் நடை­மு­றையை இல்­லா­தொ­ழிப்­பது சரி­யா­னது தானா? இந்த நாட்டு மக்­க­ளது நிறை­வேற்று அதி­கா­ரம், முழு நாட்டு மக்­க­ளது வாக்­கு­க­ளால் தெரி­வு­செய்­யப்­பட்ட ஒரு தனி மனி­த­ரது கைவ­சம் இருப்­பது, அர­சி­னது பிள­வு­ப­டாத ஒரே நாடு என்ற தன்­மை­யைப் பாது­காப்­ப­தற்­கான ஒரு வாய்ப்­பா­கும்.

அர­ச­மைப்­புக்­கான 13வது திருத்­தத்­தின் மூலம் கூட்­டாட்சி உரு­வா­காத வகை­யில் தடுக்­கும் ஒரு வாய்ப்­புக் கிட்­டி­யமை, 1978ஆம் ஆண்­டின் அர­ச­மைப்­பின் மூல­மாக நிறை­வேற்று அரச தலை­வர் நடை­முறை ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­த­னாலே ஆகும். வடக்கு கிழக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரா­க­வி­ருந்த வர­த­ரா­ஜப்­பெ­ரு­மாள் தமக்­கான அதி­கார வரம்பை மீறிச் செயற்­பட்­ட­போது, வடக்கு கிழக்கு மாகாண சபை­யைக் கலைக்­காது, அதனை ஆளு­ந­ரது நிர்­வா­கத்­தின் கீழ் கொண்டு வர வாய்ப்­புக்­கிட்­டி­யமை, நிறை­வேற்று அரச தலை­வர் நடை­முறை அப்­போது நடை­மு­றை­யில் இருந்­த­தி­னா­லேயே ஆகும்.

1987ஆம் ஆண்­டில், இந்­திய இலங்கை ஒப்­பந்­தத்­தின் மூலம் அர­ச­மைப்­புக்­கான 13வது திருத்­தம் இணைக்­கப்­பட்ட வேளை வரை, இந்த நாட்டு மக்­க­ளது வாக்­கி­னால் தெரிவு செய்­யப்­பட்ட அரச தலை­வ­ருக்கு நிறை­வேற்று அதி­கா­ரம் இருந்­தி­ருக்­கா­விட்­டால், உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­கள் எவ­ருக்­கும் அர­ச­மைப்­பின் 13வது திருத்­தத்­தின் மூலம் அர­சி­னது பிள­வு­ப­டாத ஒரே நாடு என்ற தன்­மைக்­குப் பாதிப்­பே­தும் ஏற்­ப­டாது எனக் கூற வாய்ப்­புக் கிட்­டி­யி­ருந்­தி­ருக்­க­மாட்­டாது.

நிறை­வேற்று அரச அதி­பர்  நடை­மு­றையை ஒழிக்­கத்
திட்­ட­மி­டப்­ப­டுகிறது

இன்று நாட்டு மக்­க­ளது தம்­மைத் தாமே ஆளும் அதி­கா­ரத்­தின் மூலம் உரு­வான நிறை­வேற்று அதி­கா­ரம், ஒரு தனி­ம­னி­த­ரது கைவ­சம் இருக்­கும் நடை­மு­றையை இல்­லா­தொ­ழிக்க முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது.
ஆனால் 1987ஆம் ஆண்­டில் அர­ச­மைப்­பில் உள்­ள­டக்­கப்­பட்ட 13வது திருத்­தம் அதே விதத்­திலோ அல்­லது அதை­வி­டப் பலம் வாய்ந்­த­தா­கவோ இருந்து வரு­கி­றது. அர­ச­மைப்­புக்­கான 13வது திருத்­தம் நடை­மு­றை­யில் உள்ள நிலை­யில், பிள­வு­ப­டாத ஒற்­றை­யாட்சி நடை­மு­றையே நாட்­டில் செயற்­ப­டு­வ­தா­கக் கூறக் கார­ண­மான நிறை­வேற்று அரச தலை­வர் நடை­மு­றையை இல்­லா­தொ­ழித்­தால், 13வது திருத்­தத்­தின் படி­யான தலைமை அமைச்­சரே அர­சுக்­குத் தலைமை தாங்­கும் நடை­மு­றை­யின் கீழ் பிள­வு­ப­டாத நாட்­டின் ஒற்­றை­யாட்­சித் தன்மை பாது­காக்­கப்­ப­டுமா? நிறை­வேற்று அரச அதி­பர் நடை­முறை இல்­லா­தொ­ழிக்­கப்­ப­டும் நிலை­யில் நடை­மு­றை­யில் இருக்­கும் 13ஆவது திருத்­த­மும், நிறை­வேற்று அரச தலை­வர் நடை­முறை கடைக்­கொள்­ளப்­ப­டும் நிலை­யில், செயற்­ப­டும் திருத்­த­மும் 13வது திருத்­தம் தானா?.

அர­ச­மைப்­புக்­குக் கொண்­டு­வந்து நிறை­வேற்­றப்­பட்ட 19வது திருத்­தத்­தால் நாடு அரா­ஜக நிலைக்கு உட்­பட்­டுள்­ளது என்­பது அதனை நிறை­வேற்ற முன்­னின்ற தரப்­பி­னர்­க­ளுக்­குத் தற்­போது தௌிவா­கப் புரிந்­துள்­ளது. அரச தலை­வர் மற்­றும் தலைமை அமைச்­சர் ஆகி­யோர் மத்­தி­யில் நில­வும் பனிப்­போ­ரைத் தவிர நல்­லாட்சி என்­ப­தன் கீழ் இந்த நாட்டு மக்­க­ளால் வேறெந்­தப் பலா­ப­ல­னை­யும் ஈட்ட முடி­ய­வில்லை.

அர­ச­மைப்­புக்­கான 19வது திருத்­தத்­தால் சிக்­க­லைச் சந்­தித்­துள்ள இந்த நாட்­டில், 20வது திருத்­தத்­தின் மூலம் நிறை­வேற்று அரச தலை­வர் நடை­மு­றை­யை­யும் நீக்­கி­விட்­டால் நாட்­டின் கதி என்­ன­வா­கும் என எண்­ணத் தோன்­று­கி­றது.

தாம­ரை ­மொட்­டுத் தரப்­பி­னர்  நிறை­வேற்று அதி­கா­ரத்தை
ஒழிக்க ஆத­ர­வ­ளிப்­பார்­களா?

இத்­த­கைய அம்­சங்­களை ஆராய்ந்து பார்க்­காது, தாமரை மொட்­டுத் தரப்­பி­ன­ரால், நிறை­வேற்று அரச தலை­வர் நடை­மு­றையை இல்­லா­தொ­ழிக்க ஆத­ர­வ­ளிக்க இய­லுமா? அவ்­வி­தம் அத­ரவு வழங்­கு­வது சர।­­யா­னது தானா?

நிறை­வேற்று அரச தலை­வர் நடை­முறை செயற்­ப­டும்­போது நாட்டு மக்­க­ளது அபி­மா­னம் பெற்ற பிர­மு­க­ரொ­ரு­வரே அரச தலை­வ­ராகச் செயற்­பட வாய்ப்பு அமை­ கி­றது. அந்த அடிப்­ப­டை­யில் நோக்­கி­னால், அத்­த­கைய தகு­தியை இன்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முற்­று­மு­ழு­தாக இழந்து போயுள்­ளார்.

ஐ. தே. கட்­சி­யில் புன­ர­மைப்­பைக்­கோ­ரும் ஐ. தே. கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு, அடுத்த அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லுக்கு முன்­னர் ஐ.தே.கட்­சிக்­குப் பொருத்­த­மான தலை­வ­ரொ­ரு­வர்­நி­ய­மிக்­கப்­ப­டு­வார்­என ரணில் தெரி­வித்து வரு­கி­றார்.

அதற்கு முன்­னர் அரச தலை­வர் நடை­முறை ஒழிக்­கப்­ப­டு­மா­னால், ரணி­லுக்­குத் தமது அந்த வாக்­கு­று­தியை நிறை­வேற்ற வேண்­டிய தேவை எது­வும் எழாது .அதற்­குப் பின்­னர் பொதுத் தேர்­த­லில் பெரும்­பான்­மையை ஈட்­டித் தலைமை அமைச்­சர் பத­வியை ரணில் கைப்­பற்ற எண்­ணு­கி­றார். தமக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தில் வெற்றி பெற்­றமை போன்று, தலைமை அமைச்­சர் பத­வியை மீண்­டும் கைப்­பற்­று­வது சிர­ம­மா­ன­தொன்­றல்ல என ரணில் எண்­ணு­வது நியா­ய மானதே.

நிறை­வேற்று நடை­முறை ஒழிக்­கப்­பட்­டால்
தலை­மை­ அ­மைச்­ச­ரா­கும் வாய்ப்பு மகிந்­த­வுக்­குக் ­கிட்­டக்கூடும்

அதே­ச­ம­யம், தாம­ரை­மொட்­டுத் தரப்பை நோக்­கும் போது, மகிந்­த­வால் மீ்ண்டும் அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யிட அர­ச­மைப்பு ரீதி­யில் வாய்ப்­புக் கிடை­யாது. ஆத­லால், அரச தலை­வர் ந­டை­முறையை ஒழி்த்­து­விட்டு, தலைமை அமைச்­சர் தலை­மை­யி­லான நிர்­வா­க­முறை ஏற்­ப­டுத்­தப்­ப­டு­மா­னால், மகிந்­த­வுக்கு தலைமை அமைச்­ச­ராக அர­சுக்­குத் தலைமை தாங்க வாய்ப்­புப் கிட்­டக்­கூ­டும்.

அவ்­வி­தம் மட்­டும் எண்ணி மகிந்த நிறை­வேற்று அரச தலை­வர் நடை­மு­றையை ஒழித்­து­விட உடன்­ப­டு­வார் என, தற்­போது திருத்­தப் பிரே­ர­ணை­யைக் கொண்­டு­வர முய­லும் தரப்­பி­னர் எண்­ணக்­கூ­டும்.
இவை யாவற்­றை­யும் விட, குறித்த திருத்­தத்­தின்­மூ­லம் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வின் அர­சி­யல் பாதையே தடுக்­கப்­பட வாய்ப்பு அதி­கம்.

அரச தலை­வர் பத­விக்­கான தேர்­தல் நடத்­தப்­ப­டாது போகு­மா­னால், தாம­ரை­மொட்­டுத் தரப்­புக்கு மகிந்த என்ற பாத்­தி­ரத்­துக்­குப் பதி­லாக கோத்­த­பாய ராஜ­பக்ச என்ற பாத்­தி­ரத்­தின் தேவை ஏற்­ப­டாது. அத்­த­கைய நிலை­யில் மகிந்­த­வுக்­குப் பதி­லாக, அல்­லது மகிந்­த­வுக்­குப் பின்­ன­ரா­வது தலைமை அமைச்­சர் பத­வியை வகிக்க தாம­ரை­மொட்டு தரப்­பால் மற்­றொ­ரு­ ரா­ஜ­பக்­ச­வுக்கு வாய்ப்­புப் கிட்­டும்.

எனவே அத்­த­கைய மற்­றொரு ராஜ­பக்­ச­வும், ஜே.வி.பி.தரப்­பால் கொண்டு வரப்­ப­ட­வுள்ள அரச தலை­வர் நடை­மு­றையை இல்­லா­தொ­ழிக்­கும் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வ­ளிக்­கும் நிலைக்கு கூட்டு எதி­ரணி தள்­ளப்­பட்­டுச் செல்ல அதிக வாய்ப்­புண்டு.

தாம­ரை­மொட்­டுத் தரப்­பின் அர­சி­யல் ஆலோ­ச­கர்­க­ளா­க­வுள்ள சில­பி­ர­மு­கர்­கள், வெவ்­வேறு சந்­தர்ப்­பங்­க­ளில் வெளிப்­ப­டுத்­தி­வ­ரும் கருத்­துக்­க­ளி­லி­ருந்து மேற்­கு­றிப்­பிட்ட விட­யம் உறு­தி­யா­கி­றது.

தாமரை மொட்­டுத் தரப்­பின் அர­சி­யல் ஆலோ­ச­கர்­க­ளது
பல்­வேறு ஆலோ­ச­னைகள்

தாமரை மொட்­டுத் தரப்­பின் அர­சி­யல் ஆலோ­ச­கர்­க­ளில் ஒரு­வ­ரான சப்­ர­க­முவ பல்­க­லைக்­க­ழ­கப் பேரா­சி­ரி­ய­ரொ­ரு­வர், ‘‘தாமரை மொட்­டுத் தரப்­பின் சார்­பில் 2020 ஆண்­டின் அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யிட மிகப் பொருத்­த­மா­ன­வர் கோத்­த­பா­யவா அல்­லது பஸிலா என்­ப­தல்ல பிரச்­சினை. உண்­மை­யில் அதற்­குப் பொருத்­த­மா­ன­வர் மகிந்­த­வே­யா­யி­னும், துர­திஷ்­ட­வ­ச­மாக அவ­ரால் போட்­டி­யிட இய­லாது. 2020ஆம் ஆண்­டில் அரச தலை­வர் தேர்­தல் இடம்­பெ­றுமா என்­ப­து­கூட நிச்­ச­ய­மில்லை. ஆனா­லும் அவ்­வி­தம் இடம்­பெ­று­மா­னால், எனது தெரிவு பஸில்­ரா­ஜ­பக்­சவே’’ என்று தெரி­வித்­துள்­ளார்.

ஆனால் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வால் பிரச்­சினை வரு­மா­னால், அத­னைத் தீர்த்­துக்­கொள்ள மாற்­று­வழி, நிறை­வேற்று அரச தலை­வர் நடை­மு­றையை ஒழி்க்­கும் பிரே­ர­ணைக்­கு­ ஆ­த­ர­வ­ளிப்­பதே என்­பது அவ­ரது நிலைப்­பா­டா­கும்.

அதே­வேளை கோத்­த­பாய ராஜ­பக்­ச­வையை அடுத்த அரச தலை­வர் தேர்­த­லில் கூட்டு எதி­ரணி வேட்­பா­ள­ராக நிறுத்த வேண்­டு­மென்ற நிலைப்­பாட்­டைக் கொண்­டுள்ள ஒரு தரப்­பி­னர், அர­சி­யல்­வா­தி­கள் தரப்­பில் என்று மட்­டு­மல்­லாது, சிங்­கள இன­வாத புத்­தி­ஜீ­வி­கள் எனத் தம்மை அடை­யா­ளப்­ப­டுத்­தி­வ­ரும் தரப்­பி­ன­ரி­லும் இருக்­கவே செய்­கி்ன்­ற­னர்.

அதே­வேளை, தாமரை மொட்­டுத் தரப்­பின் எதிர்­கால அரச தலை­வர் வேட்­பா­ளரோ, அல்­லது தலைமை அமைச்­சர் வேட்­பா­ளரோ, சிறு­பான்மை இனத்­த­வர்­ளது ஆத­ர­வைப்­பெ­றும் விதத்­தில் தெரிவு செய்­யப்­பட வேண்­டும் எனவும், தற்­போ­தைய அரச தலை­வர் வச­முள்ள 13வீத நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளது ஆத­ரவை தாமரை மொட்­டுத் தரப்­புக்­குப் பெற இய­லாது போகு­மா­னால், மேற்­கு­றித்த யோசனை பரி­சீ­லிப்­ப­ட­லாம் என­வும் கருத்து முன்­வைக்கப் பட்டு வரு­கி­றது.

கடை­சி­யில் என்­ன­தான் ஆகப் போகி­றது? தனிப்­பட்ட பிர­மு­கர்­க­ளது அதி­கார விருப்பை நிறை­வேற்றி வைக்க முயன்று, நிறை­வேற்று அரச தலை­வர் நடை­முறை ஒழிக்­கப்­பட்டு, இந்த நாட்­டில் அர­ச­மைப்­புக்­கான 13ஆவது திருத்­தத்தை முற்­று­மு­ழு­தாக வலு­வு­டன் செயற்­ப­டுத்­து­வ­தாக ஆகப் போகி­றது. முற்­று­மு­ழு­தாக பிள­வு­ப­டாத நாடு என்ற ஒற்­றை­யாட்சி நிலைப்­பாட்­டில் தொங்­கிக்­கொண்­டிக்­கும் நிலை­யும், முற்­று­மு­ழு­தாக அற்­றுப்­போய்­வி­டப் போகி­றது.

மிகப்­பெ­ரும் அர­ச­மைப்­புத் திருத்­தம் இல்­லாது, சம்­பந்­தன் தரப்­பின் எதிர்­பார்ப்­புக்­கள் நிறை­வே­றும் நிலை ஏற்­ப­டப்­போ­கி­றது. இத­னைக் கார­ண­மாக வைத்து மகிந்த தரப்­பின் ஒற்­றுமை குலைந்­து­ போக வாய்ப்பு ஏற்­ப­ட­வுள்­ளது. ஒரே கல்­லெ­றி­யில் நான்கோ அல்­லது ஐந்தோ குரு­வி­களை வீழ்த்­தி­வி­டும் நிலை உரு­வா­கப் போகி­றது.

இந்­தி­யா­வில் முத­லா­வது தலைமை அமைச்­சர் ஜவ­கர்­லால் நேரு­வுக்கு ஆங்­கில விவே­க­மும் இந்­திய உள்­ள­மும் இருப்­ப­தாக மகாத்­மா­காந்தி ஒரு சந்­தர்ப்­பத்­தில் தெரி­வித்­தி­ருந்­தார். எமது நாட்­டின் அர­சி­யல் போகும் போக்கை அவ­தா­னிக்­கை­யில், எமது நாட்­டின் அர­சி­யல் தலை­வர்­க­ளில் பல­ருக்­கும்­கூட ஆங்­கில விவே­க­மும் இந்­திய உள்­ள­மும் இருப்­ப­தா­கத் தோன்­று­கி­றது. பிரச்­சி­னை­யின் ஆரம்­பமே அங்­கு­தான் உள்­ளது.

http://newuthayan.com/story/87181.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.