Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடப்பாடுகளை மறந்த அரசு

Featured Replies

கடப்பாடுகளை மறந்த அரசு

13-afeca0d9472472bd33feb7aa953d246fcee20faf.jpg

 

உள்­ளூ­ராட்சித் தேர்தல் நடந்து கிட்­டத்­தட்ட மூன்று மாதங்கள் ஆகப் போகின்ற நிலை­யிலும், கொழும்பு அர­சியல் அரங்கில் தோன்­றிய கொந்­த­ளிப்பு இன்­னமும் அடங்­கு­வ­தாகத் தெரி­ய­வில்லை.

உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் ஏற்­பட்ட பின்­ன­டைவு, கூட்டு அர­சாங்­கத்தின் நிலையை கேள்­விக்­குள்­ளாக்­கி­யது. இரண்டு கட்­சி­க­ளுக்­குள்­ளேயும், உள்­மு­ரண்­பா­டு­களைத் தோற்­று­வித்­தது. இது கட்­சிகள் சார்ந்து உரு­வா­கிய பிரச்­சினை.

அதே­வேளை, கூட்டு அர­சாங்­கத்தைக் கவிழ்ப்­ப­தற்கு எடுக்­கப்­பட்ட முயற்­சிகள், பிர­த­ம­ருக்கு எதி­ராக கொண்டு வரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை என்­பன நாட்டின் அர­சியல் உறு­திப்­பாட்டைக் கேள்­விக்­குட்­ப­டுத்­தி­யது.

இதன் விளை­வாக பொரு­ளா­தார நிலையும், ஆட்சி நிர்­வாக கட்­ட­மைப்பும் பல­வீ­ன­ம­டைந்து கொண்­டி­ருக்­கின்­றன.

தற்­போ­தைய அர­சாங்­கத்தின் முன்­பாக மிகப்­பெ­ரிய இலக்­கு­களும், கடப்­பா­டு­களும் இருக்­கின்ற நிலையில், அவற்றின் மீது கவனம் செலுத்த முடி­யா­த­ள­வுக்குப் பிரச்­சி­னை­களை அர­சாங்­கமும், அர­சாங்­கத்தை நடத்திச் செல்லும் கட்­சி­களும் எதிர்­கொண்­டி­ருக்­கின்­றன.

உள்­ளூ­ராட்சித் தேர்தல் முடிந்­ததும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை அர­சாங்­கத்தில் இருந்து விலக வைத்து, ஆட்­சியைக் கவிழ்க்க மேற்­கொண்ட முயற்­சி­களை அடுத்து, ஓர் இணக்­கப்­பாடு ஏற்­பட்­டது.

கூட்டு அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் மறு­சீ­ர­மைக்­கப்­படும். அமைச்­ச­ரவை மறு­சீ­ர­மைப்பு மேற்­கொள்­ளப்­படும். புதிய கொள்கைத் திட்­டத்தின் அடிப்­ப­டையில் அர­சாங்கம் முன்­னெ­டுத்துச் செல்­லப்­படும் என்று கூறப்­பட்­டது.

அதற்குப் பின்னர், ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் குழப்பம் வந்த போதும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்டு வரப்­பட்ட போதும், அர­சாங்கம் மறு­சீ­ர­மைக்­கப்­பட்டு, புதிய மூலோ­பா­யத்­துடன் அர­சாங்கம் முன்­னெ­டுக்­கப்­படும் என்று கூறப்­பட்­டது.

ஆனால் இது­வ­ரையில் என்ன நடந்­தி­ருக்­கி­றது?

அமைச்­ச­ரவை மாற்­றத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தவோ, அர­சாங்­கத்தின் செயற்­திட்­டத்தை வகுக்­கவோ முடி­யாத நிலையில் இரண்டு கட்­சி­களும் இருக்­கின்­றன.

அமைச்­ச­ரவை முழு­மை­யாக மாற்­றி­ய­மைக்­கப்­படும் என்று நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை விவா­திக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னரே கூறப்­பட்­டது. ஆனால் அதனைச் செய்ய முடி­யாத நிலை அர­சாங்­கத்­துக்கு நீடிக்­கி­றது,

அதற்குப் பின்னர் புது­வ­ருடம், கொமன்வெல்த் மாநாடு என்று இழுத்­த­டிக்­கப்­பட்டு இன்­னமும் அமைச்­ச­ரவை மாற்றம் நடக்­க­வில்லை. ஜனா­தி­பதி லண்­டனில் இருக்கும் போதே, அமைச்­சர்­க­ளுக்­கான துறை­களை ஒதுக்கும் பணிகள் நடந்­தன.

ஆனால் அவர் நாடு திரும்பி பல நாட்­க­ளா­கியும் அமைச்­ச­ரவை மாற்றம் எப்­போது என்­பது உறு­தி­யாகத் தெரி­ய­வில்லை. இந்த இழு­ப­றி­யினால், அரச நிர்­வாகம் சீர்­கு­லையத் தொடங்­கி­யி­ருக்­கி­றது. புதிய திட்­ட­மி­டல்­களும், நடை­மு­றைப்­ப­டுத்­தல்­களும் கேள்­விக்­குள்­ளாகிப் போய் நிற்­கின்­றன.

அர­சாங்­கத்தின் புதிய கொள்கைத் திட்டம் என்­ன­வாக இருக்கும் என்று தெரி­யாமல் எந்தத் திட்­டத்­தையும் முன்­னெ­டுப்­பதில் அதி­கா­ரிகள் குழப்­ப­ம­டைந்­தி­ருக்­கி­றார்கள்.

இந்த நிலை நீடித்துக் கொண்­டி­ருக்கும் போது, அமெ­ரிக்க டொல­ருக்கு எதி­ரான இலங்கை ரூபாவின் பெறு­மதி தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரு­கி­றது. பொரு­ளா­தாரம் ஆட்டம் கண்டு விட்­டது.

சீனாவின் கடன்­பொ­றியால் தான், நாடு தள்­ளா­டு­கி­றது என்று கூறி வந்த அர­சாங்கம், அதற்குக் கார­ண­மான அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கு குத்­த­கைக்கு கொடுத்த பின்­னரும், பொரு­ளா­தாரம் நிமிர்­வ­தற்­கான அறி­கு­றிகள் தென்­ப­ட­வில்லை.

இலங்கை ரூபாவின் பெறு­மதி வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், வெளி­நாட்டுக் கடன் தானா­கவே, அதி­க­ரித்துக் கொண்­டி­ருக்­கி­றது.

கடந்த வாரத்தில், அமெ­ரிக்க டொல­ருக்­கான இலங்கை ரூபாவின் பெறு­மதி சுமார் 1.58 ரூபா­வினால் வீழ்ச்சி அடைந்­ததால், இலங்­கையின் வெளி­நாட்டுக் கடன் 47 பில்­லியன் ரூபா­வினால் அதி­க­ரித்­துள்­ளது என்று முன்னாள் மத்­திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கூறி­யி­ருக்­கிறார்.

அர­சியல் உறு­திப்­பாடு இல்­லாத சூழலும், அரச நிர்­வா­கத்தில் உள்ள தளம்­ப­லான நிலை­மையும், பொரு­ளா­தா­ரத்தில் பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றது.

டொல­ருக்கு எதி­ரான இலங்கை ரூபாவின் பெறு­மதி வீழ்ச்சி ஒவ்­வொரு கட்­டத்­திலும் பாதிப்பை ஏற்­ப­டுத்தக் கூடி­யது. இறக்­கு­மதிப் பொரு­ளா­தா­ரத்தைக் கொண்ட இலங்கை போன்­ற­தொரு நாட்டின் எல்லாப் பொருட்கள், சேவை­க­ளிலும் இது தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும்.

இறக்­கு­மதி செய்­யப்­படும் எல்லாப் பொருட்­களின் விலைகளும் அதி­க­ரிக்கும் போது, பண­வீக்­கமும் உயரும்.

முன்­னைய அர­சாங்கம் தோல்வி கண்­ட­மைக்கு, பொரு­ளா­தார ரீதி­யாக காணப்­பட்ட நெருக்­க­டி­களும் ஒரு காரணம்.

             

(இந்த அர­சாங்கம் பத­விக்கு வந்­ததும், சில பொருட்­களின் விலை­களைக் குறைத்து, மக்­களைக் கவர்ந்­தது. ஆனால் அந்தப் பொரு­ளா­தாரச் சலு­கைகள் நீடிக்­க­வில்லை. விலை­வாசி அதி­வே­க­மாக உயர்ந்­தது.

இந்தப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­பதில் அர­சாங்கம் கவனம் செலுத்­த­வில்லை.

இது மாத்­தி­ர­மல்ல, அமைச்­ச­ரவை மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வதில் இணக்கம் காணப்­ப­ட­வில்லை. இனப்­பி­ரச்­சினைத் தீர்வு, நல்­லி­ணக்கம் என்று அர­சாங்­கத்தின் முன்­பாக உள்ள கட­மை­களும், கடப்­பா­டு­களும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

இப்­படி எல்­லா­வற்­றையும் மறந்து விட்டு, இரண்டு பிர­தான கட்­சி­களும், தமது கட்­சி­க­ளுக்குள் தோன்­றி­யி­ருக்கும் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தி­லேயே கவனம் செலுத்­து­கின்­றன.

முதலில் ஐக்­கிய தேசியக் கட்சி மறு­சீ­ர­மைப்பு வேலை­களில் இறங்­கி­யது. இப்­போது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் மறு­சீ­ர­மைப்பு வேலை­களை முன்­னெ­டுக்க முடிவு செய்­தி­ருக்­கி­றது.

பிர­தான கட்­சி­களின் மறு­சீ­ர­மைப்­புகள் தேவைப்­படும் ஒன்று தான். ஆனால் அதற்­கான காலம் இதுவா என்­பது தான் கேள்வி.

ஏனென்றால், ஒரு முழு­மை­யான அமைச்­ச­ரவை மறு­சீ­ர­மைப்பை மேற்­கொள்­வ­தற்கு மூன்று மாதங்­க­ளாக இந்தக் கூட்டு அர­சாங்­கத்­தினால் முடி­ய­வில்லை. எஞ்­சிய காலத்­துக்கு அர­சாங்­கத்தை திற­மை­யாக முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்­கான மறு­சீ­ர­மைப்­பு­க­ளையும் மேற்­கொள்ள முடி­ய­வில்லை.

இப்­ப­டி­யான நிலையில், வெறும் உட்­கட்சி மறு­சீ­ர­மைப்­புகள் மட்டும் தான் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன.

இந்த உட்­கட்சி மறு­சீ­ர­மைப்­புகள், கட்­சி­க­ளுக்கும் கட்­சி­களின் தலை­மை­க­ளுக்கும் தான் தேவைப்­ப­டு­கி­றதே தவிர, நாட்டு மக்­க­ளுக்கு அல்ல. இதனை அர­சாங்­கத்தில் உள்­ள­வர்கள் எவரும் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை.

ஏனென்றால், அவர்­க­ளுக்கு கட்­சி­களின் தலை­மை­களும், அர­சாங்கப் பத­வி­களும் முக்­கியம். அதனை இழந்து விடாமல் பற்றிப் பிடித்துக் கொள்­வ­தற்கு எத­னை­யெல்லாம் செய்ய முடி­யுமோ அதனைச் செய்து கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இப்­ப­டி­யா­ன­தொரு நிலையில், இந்த அர­சாங்­கத்தின் முக்­கி­ய­மான கட­மை­யாக கூறப்­பட்ட தேசியப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­பதும், நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதும், அதி­கா­ரங்­களைப் பகிர்­வதும் முற்­றி­லு­மாக கேள்­விக்­குள்­ளாகி நிற்­கி­றது.

அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்தின் மூலம், இந்தப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணலாம் என்று கூறப்­பட்டு வந்த நிலையில், உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்குப் பின்னர், அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்தைப் பற்றி இப்­போது யாரும் பேசு­வ­தா­கவே இல்லை.

எல்­லாமே எல்­லோ­ருக்கும் மறந்து விட்­டது. நீண்­ட­காலப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வைப் பெற்றுத் தருவதாக கொடுத்த வாக்குறுதியை நம்பித் தான், தமிழ் மக்கள், ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தனர்.

ஜனாதிபதியை ஆட்சியில் அமர்த்திய மக்களின் நிலை இன்று கேள்விக்குறியாக நிற்கிறது.

சில மாற்றங்கள் நடந்திருந்தாலும் பிரதானமாக முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டிய – நிலையான அமைதியை ஏற்படுத்தக் கூடிய மாற்றங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.

உட்கட்சி குழப்பங்களை தீர்த்து, உட்கட்சி மறுசீரமைப்புகளை முடித்து விட்டு வருவதற்கிடையில் இந்த ஆண்டு கடந்து விடப் போகிறது.

அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் ஆண்டாக இருக்கப் போகின்ற நிலையில், தமிழ் மக்கள் எதிர்பார்த்த அரசியல் மாற்றங்கள், அதிகாரப் பகிர்வு, நிலையான அமைதி, நிரந்தரமானத் தீர்வு எல்லாமே வெறும் கனவாகத் தான் முடியப் போகிறது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-04-29#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.