Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சார்க் மாநாட்டில் பிரச்சாரப்படுத்த திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 29-03-2007 12:25 மணி தமிழீழம் [செந்தமிழ்]

வான் புலிகள் பிரச்சனை சார்க் மாநாட்டில் பிரச்சாரப்படுத்த திட்டம்

நாளை தொடக்கம் எதிர்வரும் புதன்கிழமைவரை இடம்பெறும் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்புக் கவுன்சிலின் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் வான்படையால் தெற்காசியப்பிராந்தியத்திற்

Edited by கறுப்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி நாளை புதுடில்லி பயணம் - சார்க் உச்சி மகாநாட்டு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பல நாடுகளின் பிரதிநிதிகளுடன் முக்கிய பேச்சுவார்த்தை

[01 - April - 2007]

-ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்-

பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) 14 ஆவது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஒன்று கூடும் தெற்காசியத் தலைவர்கள் பிராந்தியத்தின் வர்த்தகத்துறையை மேம்படுத்துவது தொடர்பான பொதுவான நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கலந்தாராய இருக்கின்ற அதேசமயம் சார்க் அமைப்பின் உறுப்புநாடுகளுடன் மாத்திரமல்லாது அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் இராஜதந்திரியின் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை இலங்கை பயன்படுத்திக்கொள்ளுமென அறிய வருகிறது.

நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமையும் அடுத்த நாளும் இடம்பெறவிருக்கும் சார்க் உச்சி மாநாட்டில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மாலைதீவு ஆகிய உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் ஆப்கானிஸ்தானும் புதிதாக இணைந்து கொள்கின்றது.

அத்துடன் அமெரிக்காவின் உதவி வெளிவிவகார அமைச்சர் ரிச்சர்ட் பௌச்சரும் , ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் அசோ தாரோவும் சீன வெளிவிவகார அமைச்சர் லீ சாவோஸிங்கும் அவதானிகளாக கலந்து கொள்கின்றனர்.

உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாளை திங்கட்கிழமை புதுடில்லிக்கு விஜயம் மேற்கொள்ளும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருடன் இரு தரப்பு பேச்சு வார்த்தைகளை (சார்க் உச்சி மாநாட்டுக்கு புறம்பாக ) மேற்கொள்ள விருப்பதுடன் அமெரிக்க, ஜப்பான், சீன, வெளிவிவகார அமைச்சர்களுடன் கலந்துரையாடலை மேற்கொள்ளவிருப்பதாக நியூஸ் வின்ட் பிரஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

உச்சி மாநாட்டில் முக்கியமான பல பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். ஆதலால், இந்தச் சந்தர்ப்பத்தை ஜனாதிபதி பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்று இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரியை மேற்கோள் காட்டி நியூஸ்வின்ட் பிரஸ் தெரிவித்தது.

அதேசமயம் சார்க் அங்கத்துவ நாடுகள் ஒவ்வொன்றுமே உள்நாட்டில் நெருக்கடிகளை எதிர்கொள்வதால் அமைப்பின் முன்னேற்றம் தொடர்பாக உண்மையான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து மேற்கொள்வது சாத்தியமற்றது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது இவ்வாறிருக்க பயங்கரவாத ஒழிப்பு மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதைத் தடுப்பது போன்ற இரு பிரதான விடயங்களும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும் 14 ஆவது சார்க் உச்சி மாநாட்டில் ஆராயப்படும் முக்கிய விடயங்களாக அமையுமென வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹண தெரிவித்தார்.

புதுடில்லியில் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள 14 ஆவது சார்க் மாநாட்டிற்கான நிகழ்ச்சி நிரலை தெற்காசிய நாடுகளுக்கான செயலாளர் நாயகம் ஆசிர்வாதம் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நிறைவு செய்துள்ளனர்.

இந்நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் சார்க் பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை ஒழித்தல், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதைத் தடைசெய்தல், வறுமை ஒழிப்பு, சார்க் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் அமுலாக்கம் மற்றும் பிராந்திய பொருளாதார சமூக அபிவிருத்தி குறித்தும் ஆராய்ந்து முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

சார்க் வெளிவிவகார அமைச்சு செயலாளர்கள் பங்கு கொண்ட முக்கிய கூட்டமொன்று நேற்று சனிக்கிழமை நடைபெற்றுள்ளது.

இதற்கு இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹெண தலைமை தாங்கியுள்ளார்.

அத்துடன், சார்க் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கு கொள்ளும் மற்றுமொரு மாநாடு நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இம் மாநாட்டிற்கு இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம பங்கு கொள்வார்.

இதேவேளை, புதுடில்லியில் நடைபெறும் சார்க் மாநாட்டில் பங்கு கொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான குழுவினர் நாளை திங்கட்கிழமை இந்தியாவுக்கு பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சார்க் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹுஸைன் பைலா கூறுகையில்;

இம்முறை சார்க் மாநாட்டில் பயங்கரவாத ஒழிப்பு பிரதானமான விடயமாக ஆராயப்படும். 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் நடைபெறும் இம்மாநாட்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இலங்கை பயங்கரவாதப் பிரச்சினை குறித்து முக்கிய உரையொன்றை ஆற்றவுள்ளார்.

அத்துடன் பிராந்திய நாட்டுத் தலைவர்களையும் சந்தித்து முக்கிய கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார் என்றார்

தினக்குரல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயன்தராத பாதையை சார்க் அமைப்பு கைவிடுமா?

[01 - April - 2007] [Font Size - A - A - A]

பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) 14 ஆவது உச்சிமகாநாடு நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை இந்தியத்தலைநகர் புதுடில்லியில் ஆரம்பமாகவிருக்கிறது. உலக ஜனத்தொகையின் ஐந்தில் ஒரு பங்கினர் வாழும் தெற்காசியா உலகின் வறிய பிராந்தியங்களில் ஒன்றாகும். இப்பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியையும் வர்த்தகத்தையும் துரிதப்படுத்துவதை நோக்காகக் கொண்டு 22 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட சார்க் அமைப்பில் 8 ஆவது உறுப்பு நாடாக ஆப்கானிஸ்தான் புதுடில்லி மகா நாட்டில் இணைந்து கொள்கிறது. ஏனைய சார்க் உச்சிமகாநாடுகளை விட இத்தடவை மகாநாட்டுக்கு இன்னொரு முக்கியத்துவமும் இருக்கிறது. அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் அவதானிகள் அந்தஸ்தில் முதற்தடவையாக பங்கேற்கவிருக்கிறார்கள்.

இதுவரை இந்தியா, பாகிஸ்தான் பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் அங்கம் வகித்துவரும் சார்க் அமைப்பு அதன் வரலாற்றில் சாதித்தது என்ன? இக்கேள்விக்கு பதில் அளிக்கின்ற விடயத்தில் தெற்காசிய அதிகாரிகள் `நேர்மையாகவே' நடந்து கொண்டிருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும், வெறுமனே கூடிப்பேசும் அரங்குகளாக மட்டுப்படுத்தப்பட்டவையாகவே சார்க் மகாநாடுகள் அமைந்திருந்தன என்பதை மிகுந்த கண்ணியத்துடன் ஒப்புக்கொண்டிருக்கும் அதிகாரிகள் உருப்படியான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை நோக்கி சார்க் நகர வேண்டியிருக்கிறது என்று வலியுறுத்துகிறார்கள். வெறுமனே பிரச்சினைகளை ஆராய்வதை விடுத்து நடைமுறைப்படுத்தல் கட்டத்துக்கு சார்க் நகர வேண்டிய தருணம் இப்போது வந்து விட்டது என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் நேற்றைய தினம் தெரிவித்திருக்கும் கருத்து இந்தப் பிராந்திய அமைப்பின் இதுவரையான செயற்பாட்டு இலட்சணத்தைத் தெளிவாக உணர்த்தி நிற்கிறது.

வருடாந்தம் உச்சிமகாநாடு நடத்தப்பட வேண்டும் என்று இணக்கம் காணப்பட்ட போதிலும், 22 வருடகால வரலாற்றில் சார்க் அமைப்பினால் ( புதுடில்லியில் ஆரம்பமாகவிருக்கும் மகாநாட்டுடன் சேர்த்து) 14 உச்சிமகாநாடுகளையே நடத்த முடிந்திருக்கிறது. சார்க் மகாநாடுகளில் உறுப்பு நாடுகளிடையேயான இருதரப்பு விவகாரங்களைக் கிளப்ப முடியாது என்ற நிபந்தனை இருக்கின்றபோதிலும், இருதரப்பு விவகாரங்கள் அந்த அமைப்பை ஒரு பணயக் கைதியாகவே வைத்திருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. குறிப்பாக, இரு பெரிய உறுப்பு நாடுகளான இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான தகராறுகள் சார்க் மகாநாடுகளை பல தடவைகள் ஒத்திவைக்க வேண்டிய நிலையைத் தோற்றுவித்திருந்தன. ஏனைய உறுப்பு நாடுகளுடன் இந்தியாவுக்கு இருக்கக்கூடிய சர்ச்சைகளும் சார்க் அமைப்பை பயனுறுதியுடைய ஒரு பிராந்திய அமைப்பாக வளர்ப்பதற்கு குந்தகமாக இருந்து வந்திருக்கின்றன. எந்தவொரு உறுப்பு நாடுமே தான் எதிர்நோக்குகின்ற நெருக்கடிகள் அல்லது இருதரப்பு தகராறுகளில் இருந்து விடுபட்டதாக சார்க் அமைப்பின் வளர்ச்சிக்கான தனது பங்களிப்பைப் பற்றி சிந்திக்கத் தயாராயில்லை.

1985 டிசம்பரில் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் முதலாவது சார்க் உச்சி மகாநாடு நடைபெற்றது. அதற்குப் பிறகு இந்தியாவில் ஏற்கனவே இரு தடவைகள் (1986 பெங்களூர், 1995 புதுடில்லி) உச்சிமகாநாடுகள் நடத்தப்பட்டன. நாளை மறுதினம் ஆரம்பமாகும் உச்சி மகாநாடு இந்தியாவில் மூன்றாவது தடவை நடைபெறுவதாகும். 13 உச்சிமகாநாடுகளினதும் பிரகடனங்களையும் வாசிக்கும்போது அவற்றின் நோக்கங்கள் செழிப்பானவையாகவே இருந்தன. ஆனால், அந்தப் பிரகடனங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தொடர் நடவடிக்கைகளில் மானசீகமான அக்கறை உறுப்பு நாடுகளினால் வெளிக்காட்டப்பட்டதாக இல்லை. இதற்கான பிரதான காரணம் சார்க் அமைப்பின் சகல உறுப்பு நாடுகளுமே ஏதோ ஒருவகையில் உள்நாட்டு கொந்தளிப்பை எதிர்நோக்குவதேயாகும். இதன் விளைவாக பிராந்தியத்தின் பொதுவான பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதற்கான கூட்டுச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்கமுடியாத நிலையில் அவை இருக்கின்றன. உச்சி மகாநாட்டுக்காக சந்திக்கக் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களையும் தங்கள் பிரச்சினைகள் குறித்து தனித்தனியாக அளவளாவுவதற்குப் பயன்படுத்துவதிலேயே சார்க் தலைவர்கள் அக்கறை காட்டுகிறார்கள்.

ஒட்டுமொத்தத்தில் இதுநாள் வரை சார்க் பயணம் செய்த பாதை ஆரோக்கியமான விளைபயன்களை தெற்காசியப் பிராந்திய மக்களுக்குத் தரவில்லை. புதுடில்லி விக்யான் பவனில் நாளை மறுதினம் சந்திக்கும் தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் பயன்தராத அந்தப் பாதையைக் கைவிடுவதற்கான தூரநோக்குடன் செயற்படுவார்களா? வெறும் உரைகள், உறுதிமொழிகள், அறிக்கைகள் மற்றும் பிரகடனங்களுடன் முடிவுற்ற முன்னைய 13 உச்சி மகாநாடுகளையும் போன்றதொரு மகாநாடாகவே இந்த மகாநாட்டையும் இத்தலைவர்கள் முடித்து வைத்து நாடு திரும்புவார்களா?

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.