Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'கருணா குழுவின் அராஜகங்களை சிறிலங்கா அரசு விசாரிக்கவோ- நிறுத்தவோ முயற்சிக்கவில்லை': மனித உரிமைகள் காப்பகம் சாடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'கருணா குழுவின் அராஜகங்களை சிறிலங்கா அரசு விசாரிக்கவோ- நிறுத்தவோ முயற்சிக்கவில்லை': மனித உரிமைகள் காப்பகம் சாடல்

[வியாழக்கிழமை, 29 மார்ச் 2007, 18:05 ஈழம்] [க.திருக்குமார்]

"சிறிலங்கா அரசாங்கத்தின் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினரின் சிறார் படைச் சேர்ப்பையும், கடத்தல்களையும் விசாரணைகள் செய்வதாக அரசாங்கம் உறுதியளித்திருந்த போதும், அரசாங்கத் தரப்பு செயற்திறனுள்ள நடவடிக்கைகள் எதனையும் இதுவரை எடுக்கவில்லை என்பதுடன் கருணா குழுவினரின் கடத்தல்களும் தொடர்கின்றன."

மேற்கண்டவாறு இன்று வியாழக்கிழமை தெரிவித்திருக்கும் நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், விடுதலைப் புலிகளும் தொடர்ந்து சிறார்களை படையில் சேர்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் காப்பகத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"சிறிலங்காவின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கருணா குழுவினரின் அரசியல் அலுவலகங்களுக்கு தாக்குதல் துப்பாக்கிகளுடன் 17 வயது நிரம்பிய சிறார்கள் காவல் கடமையில் இருந்ததை மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடந்த பெப்ரவரி மாதம் அவதானித்துள்ளது. சிறிலங்காப் படையினரும், காவல்துறையினரும் அந்த வழிகளால் நடந்தும் வாகனங்களிலும் செல்வதுண்டு. ஆனால் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை.

கருணா குழுவின் தலைவரான கருணாவின் சொந்த ஊரான கிரானில் உள்ள கருணா குழுவினரின் காரியாலயத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்ததின் வாழைச்சேனை, முறக்கொட்டாஞ்சேனை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அலுவலகங்களுக்கும் துப்பாக்கிகளுடன் சிறார்கள் காவல் கடமையில் ஈடுபட்டு வருவதை எமது அமைப்பு அவதானித்துள்ளது. இந்த காரியாலயங்கள் சிறிலங்கா இராணுவ முகாம்கள் உள்ள வீதிகளில் எதிர்ப்புறமே உள்ளன.

தமது முகாமுக்கு எதிர்ப்புறம் உள்ள வீதியில் சிறார்கள் ஆயுதங்களுடன் நிற்பதனை அவதானித்த பின்னரும் படையினர் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இந்த துஸ்ப்பிரயோகங்களை அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வரும் என்பதை நம்பவது கடினமாக உள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்திய தலைவர் பிராட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்காப் படையினரின் ஆதரவுடன் கருணா குழுவினர், சிறார்களை படையில் பயன்படுத்துவது முன்னரை விட தற்போது அதிகரித்துள்ளது.

சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் அதிகாரிகள் எல்லோரும் கருணா குழுவினரின் கடத்தல்கள் தொடர்பாகவும், அதில் படையினரின் தொடர்புகள் குறித்தும் விசாரணைகளை நடத்துவதாக மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர். ஆனால் இன்று வரை அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கப்படவில்லை.

யுனிசெஃப்பின் தகவல்களின் படி கருணா குழுவினரால் கடந்த மூன்று மாதங்களில் 45 சிறார்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பரில் 10 ஜனவரியில் 24, பெப்ரவரியில் 11 சிறார்ககள் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் முகாம்களில் இருந்து கடத்தப்பட்ட 03 சிறார்களும் அடங்குவார்கள்.

எனினும் உண்மையான எண்ணிக்கை இதனை விட அதிகமானது. ஏனெனில் பல பெற்றோர்கள் முறைப்பாடுகளை செய்வதற்கு அச்சமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கையில் கருணா குழுவினரால் பலவந்தமாக கடத்தப்பட்ட 17 வயதிற்கும் மேற்பட்டவர்களின் விபரங்கள் சேர்க்கப்படவில்லை.

கருணா குழுவினர் ஒரு டசின் சிறார்களை கடந்த டிசம்பரில் விடுவித்தாக யுனிசெஃப் தெரிவித்திருந்தது. எனினும் அவர்களில் 03 சிறார்கள் மீண்டும் கடத்தப்பட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் கருணா குழுவினரால் கடத்தப்பட்ட ஒரு சிறுவனினதும் இரு இளைஞர்களினதும் பெற்றோர்கள் எம்மிடம் முறையிட்டுள்ளனர்.

முதலாவது சம்பவத்தில் கடந்த ஜுலை மாதம் கருணா குழுவினர் ஒரு சிறுவனைக் கடத்தியுள்ளனர். பின்னர் அவரை வீட்டுக்கு சென்று வர அனுமதித்திருந்தனர். அதன் பின்னர் ஒரு வாரத்தில் மீண்டும் அந்த சிறுவனைக் கடத்திச் சென்றுள்ளனர். இரண்டாவது சந்தர்ப்பத்ததில் வெலிகந்தைக்கும் வாழைச்சேனைக்கும் இடையில் உள்ள ஏ-11 வீதியில் இரு இளைஞர்களை கருணா குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர்.

காபொலவில் உள்ள கருணா குழுவினரின் முகாமில் உறவினர்கள் முறைப்பாடுகளைச் செய்த போது, முறைப்பாடுகளை செய்ய வேண்டாம் எனவும் அல்லது விடுதலைப் புலிகள் கடத்திச் சென்று விட்டார்கள் என முறைப்பாடுகளை செய்யுமாறும் கருணா குழுவினர் பெற்றோரைப் பணித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளும் தொடர்ந்து சிறார்களைக் கடத்தி வருகின்றனர், யுனிசெஃப்பின் தகவல்களின் படி ஜனவரியில் 19, பெப்ரவரியில் 09 சிறார்கள் கடத்தப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்தவர்களின் முகாம்களில் இருந்தும் 04 பேரை விடுதலைப் புலிகள் கடத்தியுள்ளனர்.

விடுதலைப் புலிகள், சிறார்களை படையில் பயன்படுத்துவதை நாம் பல தடவைகள் கண்டித்துள்ளோம். எனவே அவர்கள் நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பதனால் ஐக்கிய நாடுகள் சபை அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இவ்வாறான சிறார் படைச் சேர்ப்பை மேற்கொண்டு வரும் போதும், அரசாங்க படையினர் கருணா குழுவினருடன் இணைந்து இந்தகைய கேவலமான தொழிலில் ஈடுபட்டு வருவது வெட்கக்கேடானது என அடம்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

கருணா குழுவினரின் சிறார் படைச்சேர்ப்பில் அரசாங்கப் படையினர் ஒத்துழைத்து வருவது தற்போது வெளிப்படை. அதற்கான வலுவான ஆதாரங்களும் உள்ளன. படையினர் பார்த்திருக்க ஆயுதங்கள் தாங்கிய கருணா குழுவினரின் உறுப்பினர்கள் மட்டக்களப்பு நகரில் நடமாடி வருகின்றனர்.

வாழைச்சேனையில் கருணா குழுவைச் சேர்ந்த ஜெயம் என்பவர் படையினரின் துருப்புக்காவி வாகனத்தை ஓட்டிச் சென்றதனை நாம் பெப்ரவரியில் அவதானித்துள்ளோம். மட்டக்களப்பில் காவல்துறையினருடன் இணைந்து கருணா குழுவினர் சுற்றுக்காவல் செல்வதனை மக்கள் அவதானித்துள்ளனர்.

பொலநறுவை மாவட்டத்தில் உள்ள வெலிகந்தை நகருக்கு வடமேற்காக 10 கி.மீ தொலைவில் 5 முகாம்களை கருணா குழுவினர் நிர்வகித்து வருகின்றனர். இது மட்டக்களப்பில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது.

வெலிகந்தையில் இராணுவத்தின் 23 ஆவது படையணியின் முகாம் உள்ளது. அந்தப்பகுதி அரசாங்கத்தின் உறுதியான கட்டுப்பாட்டில் உள்ள பகுதி. முத்துகல கிராமத்தில் உள்ள கருணா குழுவினரின் முகாம் சிறிலங்கா இராணுவ காவல் நிலைக்கு அண்மையில் உள்ளது.

கருணா குழுவினர் மற்றும் விடுதலைப் புலிகளின் கடத்தல்கள் தொடர்பாக சுயாதீன அமைப்புக்களும் தகவல்களை தருகின்றன. கடந்த நவம்பரில் சிறிலங்காவிற்கு சென்றிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களும் ஆயுத மோதலுக்குமான சிறப்புப் பிரதிநிதியான அலன் றொக், கருணா குழுவினர், அரச படையினரின் ஆதரவுடன் சிறார்களைக் கடத்துவதாகவும், விடுதலைப் புலிகளும் சிறார்களைக் கடத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

கருணா குழுவினரின் சிறார் கடத்தல் தொடர்பாக "இணைந்த குற்றம்: அரசுடன் இணைந்து கருணா குழுவினரின் சிறார் கடத்தல்" என்னும் தலைப்பில் 100 பக்க அறிக்கையை கடந்த ஜனவரி நாம் அரசாங்கத்திடம் சமர்ப்பித்திருந்தோம்.

அதில் எவ்வாறு கருணா குழுவினர், அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறார்களை கடத்தி படை நடவடிக்கைகளில் பயன்படுத்துகின்றது என வரைபடங்கள், புகைப்படங்கள், விசாரணைகள், தரவுகள் என்பனவற்றின் மூலம் விளக்கப்பட்டுள்ளன.

விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு தமக்கு ஆதாரங்கள் தேவை என அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் முக்கியமான தரவுகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது என அடம்ஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைகள், எமது அறிக்கைகள் என்பவற்றை விட பல குடும்பங்கள் காவல்துறையில் சட்டப்படியான முறைப்பாடுகளை செய்துள்ளனர்.

கடந்த வருடம் கடத்தல்கள் காணாமல் போதல் தொடர்பாக ஆராய்வதற்கு மகிந்த ராஜபக்ச, தனிநபர் கொண்ட ஆணைக்குழுவை அமைத்திருந்தார். அந்த ஆணையாளர் கடந்த ஜனவரி மட்டக்களப்பிற்கு முதன்முறையாக வந்திருந்தார் ஆனால் இரு மாதங்களின் பின்னர் தனது திட்டமிட்ட பயணத்தை முன்னறிவித்தல்கள் இன்றி இரத்துச் செய்துவிட்டார்.

கடத்தப்பட்ட சிறார்களின் பெற்றோர்களுக்கு எழுந்தமானமாக தகவல்கள் கொடுக்கப்பட்டன. கூட்டம் நடைபெற்ற இடத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதி நிமிடத்தில் இடம் மாற்றப்பட்டது. சிலர் ஆணையாளரை சந்திக்கவே இல்லை. மேலும் ஆணையாளரின் அதிகாரிகள் தகவல்கள் கொடுக்கப்படுவதை தடுத்தும் உள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் இராணுவத்தினர் கருணா குழுவினால் கடத்தப்பட்ட சிறார்களின் பெற்றோரை விசாரணைகளுக்காக தமது முகாமுக்கு அழைத்திருந்தனர். அவர்களின் முறைப்பாடுகள் தொடர்பாக தகவல்களை கேட்டதுடன், அடையாளம் தெரியாத குழுவினரே சிறார்களை கடத்தியதாக கூறவேண்டும் எனவும் பெற்றோருக்கு அழுத்தங்களை கொடுத்துள்ளனர்.

பெப்ரவரி 9 ஆம் நாள் எமது அமைப்புடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட கருணா, இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்ததுடன், தமது அமைப்பில் 18 வயதிற்கு குறைந்தவர்கள் இல்லை எனவும் கூறினார். எனினும் பாதுகாப்புக் காரணங்களுக்காக தமது முகாம்களுக்கு திடீரென செல்வதற்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கருணா குழுவினரால் கடத்தப்பட்ட சிறார்கள் தொடர்பாக எமது அமைப்பு மார்ச் 19 ஆம் நாள் கருணா குழுவினருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது. ஆனால் இன்றுவரை (28.03.07) எமக்கு பதில் கிடைக்கவில்லை.

அரசாங்கத்தின் கேவலமான நடவடிக்கைகளுக்கு கருணா குழுவினர் உதவி வருகின்றனர். ஆனால் இந்த குழுவினர் சிறார்வர்களை கடத்தி தமது படைகளில் பயன்படுத்துவதை அரசாங்கம் நிறுத்த வேண்டிய தருணம் இதுவே என" அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

puthinam.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.