Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வான் புலிகளின் தாக்குதலால் பிரசார உத்தியில் தடுமாற்றம்.

Featured Replies

வான் புலிகளின் தாக்குதலால் பிரசார உத்தியில் தடுமாற்றம்.

விடுதலைப்புலிகளின் "வான் புலிகள்' படையணி நடத்திய முதலாவது விமானத்தாக்குதல் பற்றிய செய்தியை தகவலை எவ்வாறு கையாள்வது என்பதில் அரசுத் தலைமைக்கு மிகுந்த நெருக்கடி இருப்பதை அவதானிக்க முடிகின்றது. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தடுமாறும் விடயமாகிவிட்டது.

இது நாடு தேசிய இனப்பிரச்சினையில் சிக்கிச் சீரழிந்து போயிருக்கின்றது இவ்விடயத்துக்கு விரைந்து நீதியான நியாயமான நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய ஸ்திரமான ஒரு தீர்வைக் காண்பதற்காகப் பாரபட்சமற்ற முறையில் செயற்படவேண்டிய அரசுத் தலைமை அதை விடுத்து அதற்கு முரணாக தனது வாக்கு வங்கியான தென்பகுதி பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளை அரவணைத்து அவற்றுக்கு விருப்பமான பிடித்தமான காரியங்களை முன்னெடுப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றது.

நாட்டை உலுப்பும் தேசியப் பிரச்சினையான இனச்சிக்கலுக்கு முடிவு கட்டும் ஒரு தீர்வைக் காண்பதை விட பௌத்த சிங்களப் பேரினவாத சக்தி களைத் திருப்திப்படுத்தி, அவர்களின் ஆதரவைத் தன்பக்கம் தக்கவைத்து, உறுதிப்படுத்துவதில் மட்டுமே அரசுத்தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அணியினரும் சிரத்தையாக இருக்கின்றார்கள். அவர்களது அண்மைக்கால அரசியல், ராஜதந்திர மற்றும் இராணுவக் காய் நகர்த்தல்கள் எல்லாம் அத னையே இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது துலாம்பரம்.

கடந்த பல மாதங்களாகக் கிழக்கின் பல படை நடவடிக்கைகளையும், இராணுவ முன் நகர்வுகளையும் மேற்கொண்டு, தமிழர் தாயகத்தில் பல பிரதேசங்களை ஆக்கிரமித்து, அவற்றைப் பெரும் இராணுவ வெற்றிகளாகத் தென்னிலங்கைச் சிங்கள மக்களுக்குக் காட்டி, அவர்கள் மத்தியில் ஆரவார வரவேற்பையும், ஆட்சித்திறன் பற்றிய பாராட்டுக்களையும் பெற்று வந்தது மஹிந்தரின் அரசுத்தலைமை. தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையை, விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் முற்றாக அடக்கி ஒடுக்குவதன் மூலம் ஜனாதிபதி மஹிந்தர் தீர்த்துக்கொள்வார் என்ற அசட்டு நம்பிக்கையை தென்னிலங்கைச் சிங்களத்தின் மனதில் வேரூன்ற வைத்தது இந்த அரசு.

புலிகள் இனிமேல் செல்லாக்காசு, அவர்கள் தொலைந்த சக்தி என்றெல்லாம் கூட படம் போட்டுக்காட்டும் வேலையும் நடந்தது. ஆனால் அத்தகைய கருத்துருவாக்கங்களுக்கு அடிபோல இடிபோல வந்திறங்கியிருக்கிறது புலிகளின் விமானத்தாக்குதல். ஒருபுறம் தென்னிலங்கையில் இதுவரை கட்டி எழுப்பப்பட்டுவந்த இராணுவத்தீர்வு நம்பிக்கைக் கோட்டையை அது தகர்த்துவிட, மறுபுறம் இனி என்ன என்பது பற்றிய ஒரு பயப்பிராந்தியையும் அச்சத்தையும் கூட இந்நடவடிக்கை கிளப்பிவிட்டிருக்கின்றது.

ஐ. தே. கட்சியிலிருந்து அரசுப்பக்கம் அணி தாவி அமைச்சர் பதவியைப் பெற்றுக்கொண்ட ராஜித சேனாரட்ன கூறுகின்றமைபோல, புலிகளின் இந்த வான் தாக்குதலை ஒரு மிகச்சிறிய அற்பமான விடயமாக காட்டி ஒதுக்கிவிடுவது அப்படி ஒன்றும் சிரமமான காரியமே அல்ல. அவ்வாறு பிரசாரப்படுத்தி சிங்கள மக்களை நம்ப வைத்து, அதன்மூலம் அரசுப் படைகளின் இராணுவ வெற்றி தொடர்பாக தெற்கில் நிலவிவந்த அதீத நம்பிக்கைக் கனவைச் சிதறடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். அது, அரசாலும் அதன் தந்திரோபாயப் பிரசார இயந்திரங்களாலும் இலகுவாக மேற்கொள்ளக்கூடிய விடயமே.

ஆனால் அதில் இரண்டு சிக்கல்கள் உள்ளன. ஒன்று உண்மையிலேயே, உலகில் ஒரு கிளர்ச்சி அமைப்பிடம் சட்டரீதியான நாட்டுக்குரிய அந்தஸ்தைப் பெறாத ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்திடம் தனி விமானப்படையும், வான் வழித்தாக்குதல் ஆற்றலும் இருப்பது இலகுவில் அற்பமான விடயமாக ஒதுக்கித்தள்ளிவிட முடியாத தாகும். விபரீத விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வலிமை தம்மிடம் உள்ளது என்பதை வெளிப்படுத்தி, நிரூபித்துப் புலிகள் காட்டும்போது அதனை சுல பமாகப் புறமொதுக்கி விடமுடியாது.

அடுத்தது புலிகள் தம்மிடம் இந்த வலிமை இருப்பதை வெளிப்படுத்திய சூழலில், அதற்கு எதிராக சர்வதேசத்தைத் திரளவைத்து சர்வதேச உதவியுடன் அந்த ஆபத்தை எதிர்கொண்டு சமாளிப் பதாயின் அல்லது முறியடிப்பதாயின் புலிகளின் இந்த வலிமை பற்றிய நிதர்சனத்தை ஒப்புக்கொண்டு, அதனை சர்வதேசத்துக்கும் பகிரங்கப்படுத்த வேண்டி யது தவிர்க்கமுடியாதது. கிடைத்த இந்த சந்தர்ப்பத் தைப் பயன்படுத்தி, சர்வதேச சமூகத்தைப் புலிகளுக்கு எதிராக ஒன்றுபட வைத்துத் திருப்பிவிடவேண்டும் என்றால், தேவைப்படும் சமயத்தில் புலிகளின் வான் வழித்தாக்குதல் பலத்தை மிகைப்படுத்தியும் பிரசாரப்படுத்த வேண்டும் என்ற தந்திரமும் அரசுத் தலைமைக்குப் புரிகிறது.

ஒருபுறம் தென்னிலங்கைச் சிங்கள மக்கள் மத்தியில் "புலிகளின் வலுவை உடைத்து, முதுகை முறித்து, அவர்களின் பலத்தைக் குன்றச் செய்தாகி விட்டது' எனக் காட்டும் அரசியல் இலக்குடன் கூடிய முனைப்பு.

மறுபுறம், புலிகளின் வான்வழித்தாக்குதல் வலிமையை மிகைப்படுத்திக் காட்டி அதற்கு எதிரான சர்வதேச ஆதரவைத் திரட்டும் யதார்த்தத் திட்டம்.

இவற்றுக்கு நடுவிலேயே "இரண்டுங்கெட்டான்' போக்கில் விடயத்தைக் கையாளவேண்டிய சிக்கல் அரசுக்கு.

விடுதலைப் புலிகள் தமது இராணுவப் பலத்தை போரியல் சக்தியை வான் தாக்குதல் மூலம் மீண்டும் ஒரு தடவை நிரூபித்திருக்கின்றனர். கிழக்கில் நடைபெற்றுவரும் யுத்தத்தில் புலிகள் பின்வாங்கிச் சென்றதன்மூலம் சில பகுதிகளை அரசுப்படைகள் கைப்பற்றியிருந்தன. அதனை அரசு தனக்குக் கிடைத்த பெரு வெற்றியாகக் கொண்டாடியது. புலிகள் பலமிழந்து விட்டனர் என்று பறை சாற்றியது. புலிகளின் பின்வாங்கல்கள் யுத்த தந்தி ரோபாய நோக்கம் கொண்டவை என்பதை சம்பந் தப்பட்டோர் இப்போதாவது இனியாவது புரிந்து கொள்ளட்டும் என்று பிரபல இராணுவ விமர்சகர் இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டிருந்தமையும் இங்கு கவனிக்கப்படவேண்டியது.

யுத்தத்தின் போக்குப் பற்றிய உண்மைகளை மக்களுக்குத் தெரியாமல் தடுப்பதானால் அல்லது தவறான நம்பிக்கைகளை மக்களுக்கு ஊட்டுவதானால் ஒரு சமயத்தில் தங்களின் தவறான பிரசாரத்துக்கு தாங்களே இரையாகும் இக்கட்டு உருவாகலாம் என்பதை சம்பந்தப்பட்டோர் உணர்வது நல்லது.

-Uthayan-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.