Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பறக்கும் புலிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் நடைபெற்றுவரும் போரில் புதிய பரிமாணமொன்று ஏற்பட்டுள்ளது. இதுவரை தரையிலும் கடலிலும் மட்டுமே முனைப்புப் பெற்றிருந்த போர், வான்புலிகளின் வருகையுடன் புதியதொரு தளத்திற்குள் செல்கிறது. இதன் மூலம் உள்நாட்டுப் போரில் பெரும் திருப்பங்களும் அதிர்ச்சிகரமான சம்பவங்களும் நிகழும் நிலைமை உருவாகியுள்ளது.

வான் புலிகளின் தோற்றம் 1998 காலப் பகுதியில் உருவானது. அதற்குப் பல வருடங்களுக்கு முன்பே வான் புலிகள் பற்றிய சிந்தனை புலிகளிடம் ஆழ வேரூன்றியிருந்த போதும் 1990 களின் பிற்பகுதியிலேயே அது முனைப்புப் பெற்று 2000 இன் முற் பகுதியில் முழு அளவில் உதயமானது.

கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீதான புலிகளின் வான் வழித் தாக்குதலுடன் `பறக்கும் புலிகள்' பற்றி முழு உலகமும் அறிந்துள்ளது. உலகிலுள்ள விடுதலைப் போராட்ட அமைப்புகளில் விடுதலைப் புலிகளிடம் மட்டுமே முப்படைகளுமுள்ளது. கட்டுநாயக்காவில் இடம்பெற்ற தாக்குதலுடன் ஈழப் போராட்டத்தில் வான் புலிகளும் களமிறங்கியுள்ளது.

கெரில்லா அமைப்பிலிருந்து இன்று மரபு வழிப் படையணியாகவும் புலிகள் மாற்றம் பெற்றுள்ளனர். மரபு வழிப் படையணி ஒன்றைப் பொறுத்தவரை அதற்கு விமானப் படையென்பது மிகவும் முக்கியமானது. தற்காலப் போர்களில் விமானப் படைகளால் பாரிய சேதங்களை ஏற்படுத்த முடிகிறதோ இல்லையோ, வலுமிக்க விமானப் படையணியானது தரைப் படையினருக்கு மிகப் பெரும் மனோபலத்தை ஏற்படுத்தும் சக்தியாக விளங்குகிறது.

வான் புலிகள் இன்று வன்னி பெருநிலப்பரப்பிலேயே தளம் அமைத்துள்ளனர்.கிளிநொச்சி இரணைமடுவிலும் தற்போது முல்லைத் தீவு புதுக்குடியிருப்பு பகுதியிலும் புலிகளின் விமான ஓடு பாதைகளுள்ளன. 2004 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இரணைமடு பகுதியில் விமான ஓடு பாதையிருப்பதை விமானப் படையினர் அவதானித்தனர். அத்துடன், புலிகள் வசம் சில விமானங்களிருப்பதும் தெரியவந்தது.

புலிகளின் விமான ஓடுபாதை சாதாரண விமான ஓடு பாதைகளைப் போலன்றி, அமெரிக்காவின் இராட்சத துருப்புக் காவி விமானமான `ஹேர்குலிஸ்', விமானங்கள் கூடத் தரையிறங்கக் கூடிய அளவுக்கு விஸ்தீரணமானதென வர்ணிக்கப்பட்டதால், புலிகள் வசமிருக்கும் விமானங்கள் குறித்து அனைவருக்கும் குழப்பங்களேற்பட்டது.

புலிகள் இரணைமடுவில் அமைத்த பெரும் விமான ஓடு பாதையானது, புலிகள் வசம் எத்தகைய விமானங்களிருக்கின்றன என்பதை ஊகித்தறிய முடியாது செய்தது. மிகச் சாதாரண இலகு ரக விமானங்களுக்கும் ஹெலிகொப்டர்களுக்கும் இந்தப் பெரிய விமான ஓடு பாதை தேவையில்லை.

இலகு ரக விமானங்கள் மிகக் குறுகிய தூரம் ஓடிப் பறக்கக் கூடியவை என்பதாலும் புலிகளிடம் இலகு ரக விமானங்களே இருப்பதாகக் கருதப்பட்டதாலும் இரணைமடுவில் அவர்கள் அமைத்த மிகப் பெரிய ஓடு பாதை எதற்கென்ற கேள்வியும் எழுந்தது.

இது உண்மையா அல்லது போலியா அல்லது திசைதிருப்பும் முயற்சியா என்றெல்லாம் அப்போது இலங்கைப் படையினரோ அல்லது அரசு தரப்போ ஆராயவில்லை. ஆனால், கட்டுநாயக்க விமானப் படைத் தளம் மீதான தாக்குதலையடுத்து இன்று இவை குறித்தெல்லாம் இலங்கை அரசும் படையினரும் மட்டுமல்ல, அண்டை நாடுகளும் ஆராயத் தொடங்கியுள்ளன.

புலிகளின் இரணைமடு ஓடு பாதை மீது கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இலங்கை விமானப் படை விமானங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தடவைகள் குண்டு வீசியதால் புலிகளின் விமான ஓடு பாதை முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக படைத் தரப்பு கூறி வந்தது.

இவ்வாறு அழிக்கப்பட்ட ஓடு பாதையை இரவோடிரவாக சீர்செய்து பயன்படுத்துவதென்பது சாத்தியமற்றது. இதனால், புலிகளின் விமானங்கள் ஓடு பாதைகளிலிருந்து புறப்படாது நீர் நிலைகளிலிருந்து புறப்படும் சீ-பிளேன்களா அல்லது `பீச்- கிராவ்ற்'ரா அல்லது குறுகிய ஓடுபாதையிலிருந்து புறப்படும் இலகுரக விமானமா என அறிய முடியாது அரசும் படைத்தரப்பும் திகைப்படைந்துள்ளன.

இதைவிட புலிகளின் விமானங்கள் அவர்களது சொந்தத் தயாரிப்பா அல்லது வெளிநாட்டுத் தயாரிப்பா என்பதையும் படையினரால் அறிய முடியாதுள்ளது. வெளிநாடுகளிலிருந்து உதிரிப் பாகங்களை கொண்டு வந்து இங்கு அவற்றைப் பொருத்தி புலிகள் விமானங்களைத் தயாரித்திருக்கலாமெனவும் கருதப்படுகிறது.

புலிகளின் விமானங்களை இதுவரை எவருமே நேரில் காணாததால் அது குறித்து ஊகங்களே வெளியிடப்படுகின்றன. அதேநேரம் கட்டுநாயக்கா விமானப் படைத் தளம் மீது அவை வீசிய குண்டுகளைப் பொறுத்து அவை எவ்வகை விமானங்கள் என்பதை அறியும் முயற்சியிலும் படைத்தரப்பு இறங்கியுள்ளது.

விமானக் குண்டு வீச்சு நடைபெற்ற போது ஏற்பட்ட சேதங்கள், நிலத்திலேற்பட்ட குழிகளை ஆராய்ந்த பின்பே, இங்கு வீசப்பட்ட குண்டுகள் புலிகளின் சொந்தத் தயாரிப்பா அல்லது விமானத் தாக்குதலுக்கான குண்டா என்பதை கூற முடியும். அத்துடன், விமானத் தளத்திற்கு ஏற்பட்ட சேதம் மற்றும் நிலத்தில் குழிகள் ஏதும் ஏற்பட்டிருந்தால், குண்டுகள் ஏற்படுத்திய தாக்கத்தை பொறுத்து குண்டின் நிறையையும் அதன் வகையையும் கணிப்பிட முடியும்.

புலிகளின் விமானங்கள் கொண்டு வந்து வீசிய குண்டுகள் பாரம் குறைந்தவை, ஏற்படுத்திய சேதங்களும் குறைவென்றால் தாக்குதல் நடத்த வந்த விமானம் இலகு ரக விமானமாயிருக்க வேண்டுமெனக் கருத முடியும்.

அத்துடன், இந்த விமானங்கள் மூன்று குண்டுகளையே வீசியுள்ளதாக படைத் தரப்பு கூறுவதால், அதற்கு மேல் அந்த விமானத்தால் குண்டுகளை எடுத்து வர முடியாதளவிற்கு அது ஒரு இலகு ரக விமானமாயிருந்திருக்கலாமெனவ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.