Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் எவ்வாறு வானூர்திகளையும் வானோடிகளையும் பெற்றனர்: கொழும்பு ஊடகம்.

Featured Replies

விடுதலைப் புலிகள் எவ்வாறு வானூர்திகளையும் வானோடிகளையும் பெற்றனர்: கொழும்பு ஊடகம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இரு இலகு ரக வானூர்திகளை 2005 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் இருந்து பெற்றுக்கொண்டதாக சிறிலங்காவின் புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளதாக கொழும்பு வார ஏடொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இது தொடர்பாக பாதுகாப்புத் துறையினரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை அடுத்து காலம் சென்ற வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவை இரகசியக் கடிதம் மூலம் எச்சரிக்கை செய்திருந்தார்.

அத்தகவல்களின் படி, விடுதலைப் புலிகள் இடைத்தரகர்கள் மூலம் 3 இலகுரக வானூர்திகளை பெற்றுள்ளனர் எனவும், அதில் இரு வானூர்திகள் கொள்கலன்களுக்குள் பொதி செய்யப்பட்டு ஜகத்தாவில் இருந்து கப்பலில் ஏற்றப்பட இருந்தன எனவும் கூறப்பட்டது. இத்தகவல் கிடைத்த உடன், இந்தோனேசியா அதிகாரிகள் விழிப்பு நிலைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால் கொள்கலன்கள் மாயமாக மறைந்து விட்டன.

அவை விடுதலைப் புலிகளின் கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டு வடகிழக்கு கடற்பகுதியில் வைத்து முல்லைத்தீவு கரைக்கு மாற்றப்பட்டது என பின்னர் அறியப்பட்டது. அதுவரை விடுதலைப் புலிகளிடம் ஒரு சிறிய வானூர்தியும், ஒரு றொபின்சன் ஆர்-44 ரக உலங்குவானூர்தியுமே இருந்தன. பின்னர் இந்த இலகுரக வானூர்தி நொருங்கியிருந்தது.

இரு இலகுரக வானூர்திகளும் கிடைத்த பின்னர் சங்கர் என அழைக்கப்படும் வி.சொர்ணலிங்கம் வான்படையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவருடன் 1995 ஆம் ஆண்டு பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளில் வானோடிகளாக பயிற்சி பெற்ற சில வானோடிகளும் இணைந்து கொண்டனர்.

இரணைமடுக் குளத்திற்கு அண்மையில் வானூர்தி ஓடுபாதை அமைக்கப்பட்டதுடன் வானூர்திகளை பராமரிப்பதற்கு தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. இதற்கு தமிழ் புத்திஜீவிகள் உதவியிருந்தனர்.

சிறிலங்காவின் ஆளில்லாத உளவு வானூர்தி விடுதலைப் புலிகளின் இரு வானூர்திகளின் புகைப்படங்களை எடுத்தவுடன் அதனை அடையாளம் காண்பதற்கு அமெரிக்காவின் உதவிகள் நாடப்பட்டன. பின்னர் அவை செக்கோலாவாஸ்க்கியா நாட்டின் தயாரிப்பான Zlin - 143 பயிற்சி வானூர்திகள் என அடையாளம் காணப்பட்டன.

விடுதலைப் புலிகளினால் கட்டுநாயக்க தாக்குதலின் பின்னர் வெளியிடப்பட்ட புகைப்படங்களில் இருந்து வான்படை நிபுணர்களும், வெளிநாட்டு வானூர்திப் போக்குவரத்து நிபுணர்களின் உதவியுடன் இது மேலும் உறுதிப்படுத்தப்பட்டது.

முன்னர் விடுதலைப் புலிகளிடம் இரு இலகுரக வானூர்திகள் இருப்பதாக அறியப்பட்டது. ஆனால் இந்தியாவிற்கு பயிற்சிக்காக சென்ற சிறிலங்கா வான்படையினருக்கு விடுதலைப் புலிகளிடம் 5 இலகுரக வானூர்திகள் இருப்பதாக இந்தியா தெரிவித்திருந்தது.

மேலும் அந்த விமானங்கள் 15,000 அடி உயரத்திற்கும் 200 நொட்ஸ் வேகத்திலும் பறக்கக்கூடியவை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Puthinam-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேறு நாடுகளின் உதவிகள் இன்றி வான்படை அமைத்த விடுதலைப் புலிகள்: கொழும்பு ஊடகம்

வேறு நாடுகளின் உதவிகள் இன்றி தமிழீழ விடுதலைப் புலிகள் வான்படையை அமைத்திருப்பதால் அவர்கள் வேறுபட்டுள்ளனர் என்று கொழும்பு ஊடகம் ஒன்று தனது வார ஏட்டின் பாதுகாப்பு நிலவர ஆய்வுப் பத்தியில் குறிப்பிட்டுள்ளது.

அதன் சில பகுதிகள் வருமாறு:

விடுதலைப் புலிகளுக்கு ஏன் வான்படை அவசியம்? அவர்களின் பலம் என்ன? அரசாங்கத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? என்பவை தான் இன்றைய கேள்விகள்.

சிறிலங்கா வான்படையினர் மீதான எதிர்த் தாக்குதல்களுக்கே விடுதலைப் புலிகளுக்கு வான்படை அவசியமானது. சிறிலங்கா வான்படையின் அண்மைக்காலமான வான் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது விடுதலைப் புலிகளுக்கு அவசியமானது.

சிறிலங்கா வான்படையை அசைவற்றதாக்குவதற்காக 1990-களில் விடுதலைப் புலிகள் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகளை கொள்வனவு செய்திருந்தனர். பின்னர் சிறிலங்கா வான்படையினரால் ராடார்கள்இ நவீன தொழில்நுட்பமுடைய வானூர்தி பாதுகாப்பு தொகுதிகள் கொள்வனவு செய்யப்பட்டன. இதன் பின்னர் வான்வழித் தாக்குதல் நடத்துவது தான் விடுதலைப் புலிகளின் ஒரே தெரிவாக இருந்தது.

மேலும் வெளி உலகின் பார்வையில் ஒரு முழு தேசத்திற்குரிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கும் விடுதலைப் புலிகளுக்கு வான்படை அவசியமானது. 1998 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் வானூர்திகள் முள்ளியவளையில் மாவீரர் நாள் நிகழ்வின் போது மலர்தூவி முதற்பறப்பை மேற்கொண்டிருந்தனர்.

மேலும் 2000 ஆம் ஆண்டை வான்படை ஆண்டாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர். ஏனைய தரமான படைக் கட்டமைப்புக்களை போல அவர்கள் தரைப்படைஇ கடற்படைஇ வான்படைஇ புலனாய்வுப்பரிவுஇ ஆட்டிலறி படைப்பிரிவுஇ சிறப்பு படையணிகள் போன்றவற்றை தற்போது கொண்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் தமது இந்த வான்படையை பயன்படுத்தி அவர்களுக்கு தேவையான அவசரமான விநியோகங்களை பெற்றுக்கொள்ளவும்இ கடுமையாக காயமடைந்த தமது உறுப்பினர்களை கொண்டு செல்லவும் முடியும். போர் நிறுத்த காலத்தில் கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையை சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்வதில் அவர்களுக்கு அதிக சிரமங்கள் இருக்கவில்லை. ஆனால் போர் நடைபெறும் போது இது சாத்தியமற்றது. எனினும் வான்படை இருப்பின் அவர்களால் தமது தளபதிகளை கொண்டு செல்லமுடியும்.

விடுதலைப் புலிகளின் வான்படையின் பலத்தை அறிவது கடினமானது. கேணல் சங்கரே 1995 ஆம் ஆண்டில் இருந்து அதனை வடிவமைத்திருந்தார். ஆளில்லாத உளவு வானூர்தி மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 3இ600 அடி நீளமான வானூர்தி ஓடுபாதை உள்ளது அறியப்பட்டுள்ளது. அது நடுத்தர சரக்கு வானூர்தியான ஹெக்கூல் சி-130 வானூர்திகள் தரையிறங்குவதற்கு போதுமானது.

சிறிலங்காவின் ஆளில்லாத உளவு வானூர்தி எடுத்த புகைப்படங்களில் இருந்து செக்கோலாவாஸ்க்கியா நாட்டின் தயாரிப்பான ணுடin - 143 பயிற்சி வானூர்திகளே விடுதலைப் புலிகளிடம் உள்ளாக இனம் காணப்பட்டது. இதில் அமெரிக்காவின் உதவி பெறப்பட்டது.

மற்றைய வானூர்தி சுவிற்சர்லாந்து நாட்டுத் தயாரிப்பான Pடடையவரள Pஊ 7 பயிற்சி வானூர்தி ஆகும். அவை 350 மைல் தூர வீச்சுடன் 240 கி.மீ வேகத்தில் பறக்கக் கூடியவை. மேலும் 1இ040 கிலோ நிறையையும் காவிச் செல்லக்கூடியவை என்பதுடன் அவர்களிடம் பிரான்ஸ்இ பிரித்தானியா ஆகிய நாடுகளில் பயிற்சி பெற்ற போதியளவு வானோடிகளும் உள்ளனர்.

தற்போதைய வினாக்கள் என்னவெனில் சிறிலங்கா அரசாங்கம் இதனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது என்பதே. எனவே கீழ்வரும் கோள்விகளுக்கு நாட்டின் பாதுகாப்பிற்கு பொறுப்பானவர் விடைகளைக் காண வேண்டும்.

- நாட்டின் எந்த இலக்கையும் தாக்கும் நிலையில் விடுதலைப் புலிகள் உள்ளனரா? அப்படியானால் எது மிகவும் உயர்ந்தரக இலக்கு? அதனை எப்படிப் பாதுகாக்கப் போகின்றீர்கள்?

- கொழும்பில் உள்ள உயர்ந்த கட்டடங்கள்இ பொருளாதார மையங்கள்இ அரசியல் தலைமைகள் மீது தற்கொலைத் தாக்குதலுக்கு சாத்தியங்கள் உள்ளனவா?

- வானில் இருந்து தாக்குதல்களுக்கு சிறிலங்கா வான்படை பயிற்றுவிக்ப்பட்டுள்ளதா? அது சிறிலங்காவின் வரலாற்றில் முன்னர் நடைபெறவில்லை.

- விடுதலைப் புலிகளால் ஆயுதங்களை வானூர்தி மூலம் கடத்த முடியுமா? எப்படி அதனை எதிர்கொள்வது? அண்டைய நாடுகள் இதற்கு உதவுமா?

- கடத்திச் செல்லப்படும் வானூர்திகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தரையிறங்கும் சாத்தியங்கள் உண்டா? விடுதலைப் புலிகளுக்கு வானூர்திகளை கடத்திய வரலாறு இல்லை எனினும் இதனை மறுக்க முடியாது.

- இந்தியாவின் பாதுகாப்பு ஓழுங்குகள் என்ன? இந்த புதிய அச்சுறுத்தல்களை இரு நாடுகளும் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன?

இவ்வாறு அந்த பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=31319

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.