Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்­ட­மைப்பை இல்­லாமல் ஆக்­குதல்

Featured Replies

கூட்­ட­மைப்பை இல்­லாமல் ஆக்­குதல்

02-24dc34a4590ac94f0ca950bdd7ed4b9855d6146a.jpg

 

-கபில்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை விடு­தலைப் புலி­களின் இன்­னொரு வடி­வ­மாக, அழிக்­கப்­பட்டு விட்ட ஒரு இரா­ணுவ அமைப்பின் அர­சியல் எச்­ச­மா­கவே பார்க்­கின்ற போக்கு, இப்­போது வரை தென்­னி­லங்­கையில் இருக்­கி­றது.

விடு­தலைப் புலி­களின் கொள்­கையை- அவர்­களின் தனி­நாட்டுக் கோரிக்­கையை, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முன்­னெ­டுத்துச் சென்று விடுமோ என்­பது தான், சிங்­களத் தேசி­ய­வாத சக்­திகள் முன்­பாக இருக்­கின்ற பிரச்­சினை 

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை இல்­லாமல் ஆக்­குதல் என்­பது, ஒரு பரந்­து­பட்ட அர­சியல் நிகழ்ச்சி நிர­லாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றதா என்ற சந்­தேகம் பர­வ­லாக ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை இல்­லாமல் ஆக்­கு­வ­தற்கு யார் முயற்­சிக்­கி­றார்கள்- ஏன் அவ்­வாறு அவர்கள் முயற்­சிக்க வேண்டும் என்­பதை அறிந்து கொள்­ளாமல் இத்­த­கை­ய­தொரு சந்­தேகம் குறித்து எந்த கேள்­வி­யையும் எழுப்­பு­வதில் அர்த்­த­மில்லை.

இன்­றைய நிலையில் யார் விரும்­பி­னாலும் சரி, விரும்­பா­விட்­டாலும் சரி, தமிழ் மக்­களின் அர­சியல் பிர­தி­நி­தி­க­ளாக பார்க்­கப்­ப­டு­வது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தான்.

பாரா­ளு­மன்­றத்­திலும், வடக்கு மாகா­ண­ச­பை­யிலும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கொண்­டி­ருக்­கின்ற அர­சியல் பலம் இந்த தகை­மையைக் கூட்­ட­மைப்­புக்குக் கொடுத்­தி­ருக்­கி­றது.

தமிழ் மக்­களின் அர­சியல் பிர­தி­நி­தி­க­ளாக மாத்­தி­ர­மன்றி, விடு­தலைப் புலி­களால் உரு­வாக்­கப்­பட்ட, அவர்­களால் ஏற்றுக் கொள்­ளப்­பட்டு ஆசீர்­வ­திக்­கப்­பட்ட ஒரு அர­சியல் அமைப்­பா­கவும் கூட்­ட­மைப்பு இருப்­பது தான் இதன் முக்­கி­ய­மான தகைமை எனலாம்.

2009ஆம் ஆண்டு விடு­தலைப் புலிகள் இயக்கம் தோற்­க­டிக்­கப்­பட்ட பின்னர், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தான், தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­க­ளாக மாறி­யது.

விடு­தலைப் புலிகள் இயக்கம் பல­மாக இருந்த போது கூட, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இருந்­தது. அவர்­க­ளுக்குப் பின்­னரும் அது இருக்­கி­றது. ஆனால் இனி­மேலும் அதே நிலையில் இருக்­குமா என்­பது தான் கேள்வி.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை விடு­தலைப் புலி­களின் பதில் அமைப்­பா­கவே, மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் பார்த்து வந்­தது. சிங்­களத் தேசி­ய­வாத சக்­திகள் அனைத்­துமே அதே பார்­வையைத் தான் கொண்­டி­ருக்­கின்­றன. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை விடு­தலைப் புலி­களின் இன்­னொரு வடி­வ­மாக, அழிக்­கப்­பட்டு விட்ட ஒரு இரா­ணுவ அமைப்பின் அர­சியல் எச்­ச­மா­கவே பார்க்­கின்ற போக்கு, இப்­போது வரை தென்­னி­லங்­கையில் இருக்­கி­றது.

விடு­தலைப் புலி­களின் கொள்­கையை- அவர்­களின் தனி­நாட்டுக் கோரிக்­கையை, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முன்­னெ­டுத்துச் சென்று விடுமோ என்­பது தான், சிங்­களத் தேசி­ய­வாத சக்­திகள் முன்­பாக இருக்­கின்ற பிரச்­சினை.

சமஷ்­டியை கோரி­னாலும் சரி, அதி­காரப் பகிர்வை வலி­யு­றுத்­தி­னாலும் சரி, அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்தைக் கோரி­னாலும் சரி, எதனைக் கூட்­ட­மைப்பு முன்­னெ­டுத்­தாலும், பிர­பா­க­ரனால் ஆயுதப் போராட்­டத்தின் மூலம் முடி­யாது போன ஈழத்தை, சம்­பந்தன் அர­சியல் ரீதி­யாக அடைய முயற்­சிக்­கிறார் என்ற குற்­றச்­சாட்டு கூறப்­ப­டு­வது வழக்கம்.

உண்­மையில், விடு­தலைப் புலி­களின் கொள்­கைக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் கொள்­கைக்கும் எந்த ஒற்­று­மையும் கிடை­யாது. 

புலிகள் விட்டுச் சென்ற கொள்­கையை முன்­னெ­டுத்துச் செல்லும் நோக்­கமும் அதற்குக் கிடை­யாது.

அதை­விட, சிங்­களத் தேசி­ய­வா­திகள் அஞ்­சு­கின்­றதைப் போல, எந்தக் காரி­யத்­தையும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு செய்து விடவும் இல்லை.

ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை ஒரு பயங்­க­ர­மான பூத­மாக உரு­வ­கப்­ப­டுத்­து­வதில் சிங்­கள பௌத்த பேரி­ன­வாத சக்­திகள் கவனம் செலுத்தி வரு­கின்­றன.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை உடைப்­பது, அதற்குள் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­து­வது எல்­லாமே, ஒருங்­கி­ணைந்த ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

விடு­தலைப் புலி­களால் நேர­டி­யா­கவோ மறை­மு­க­மா­கவோ உரு­வாக்­கப்­பட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தொடர்ந்தும், தமிழ் மக்­களின் அர­சியல் பிர­தி­நி­தி­க­ளாக இருப்­பது சிங்­கள பௌத்த பேரி­ன­வாக அர­சியல் சக்­தி­க­ளுக்கு ஒரு இடைஞ்­ச­லான விட­ய­மா­கவே இருக்­கி­றது.

கூட்­ட­மைப்பின் கொள்­கையும் செயற்­பா­டு­களும், சிங்­கள பௌத்த பேரி­ன­வாத அர­சியல் சக்­தி­க­ளுக்கு இடை­யூ­றாக இல்­லா­விட்­டாலும், அவர்கள் அழிக்க விரும்­பு­வது, விடு­தலைப் புலி­களின் வழி வந்த அர­சி­யலைத் தான்.

எந்த இடத்­திலும் விடு­தலைப் புலி­களின் அடை­யாளம் இருந்து விடக் கூடாது என்­பது தான் அவர்­களின் கொள்கை, நோக்கம். அவர்­களே அவ்­வப்­போது விடு­தலைப் புலி­களை நினை­வு­ப­டுத்திக் கொள்­கி­றார்கள் என்­பது வேறு விடயம்.

தமிழர் தரப்பில் யாரும், விடு­தலைப் புலிகள் பற்­றியோ, அவர்­களின் காலத்தைப் பற்­றியோ பேசி விட்டால், அது சிங்­கள பெளத்த பேரி­ன­வா­தி­க­ளுக்கு கோபத்­தையும் எரிச்­ச­லையும் ஏற்­ப­டுத்­து­கி­றது.

அப்­ப­டி­யான நிலையில், விடு­தலைப் புலி­களால் உரு­வாக்­கப்­பட்ட அல்­லது அவர்­களின் அர­சியல் பிர­தி­நி­தி­க­ளாக இயங்­கிய – தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, தொடர்ந்தும் அதே தளத்­துடன் செயற்­ப­டு­வது தான் அவர்­க­ளுக்குக் கோபம்.

புலி­களைப் போலவே, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பையும் இல்­லாமல் செய்து விட வேண்டும் என்­பது அவர்­களின் கனவு.

விடு­தலைப் புலி­களின் காலத்தில் உரு­வாக்­கப்­பட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை உடைத்து விட்டால், தமிழ்க் கட்­சிகள் உதி­ரி­க­ளாக்­கப்­பட்டு விடும். தமிழ்க் கட்­சி­க­ளோடு, சிங்­களத் தேசி­ய­வாதக் கட்­சி­களும் அந்த வெற்­றி­டத்தைப் பங்கு போட்டுக் கொள்ளும்.

அதற்குப் பின்னர், தமிழ் மக்­களின் அர­சியல் பிர­தி­நி­திகள் என்று யாரும் கை காட்­டப்­பட முடி­யாத நிலை தோற்­று­விக்­கப்­படும். அது தமிழ்த் தேசிய இனத்தின் உரி­மைக்­கான ஒட்­டு­மொத்த குரலை இல்­லாமல் செய்து விடும்.

சிங்­கள பெளத்த பேரி­ன­வாத சக்­தி­களைப் பொறுத்­த­வ­ரையில், தமிழர் தரப்பு- நிறு­வ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட ஒரு கட்­ட­மைப்­பாக இருப்­பதை விரும்­ப­வில்லை

விடு­தலைப் புலி­க­ளுடன் அதற்கு முற்­றுப்­புள்ளி வைத்து விடலாம் என்று அவர்கள் எதிர்­பார்த்­தார்கள். ஆனால் விடு­தலைப் புலி­க­ளுக்குப் பின்­னரும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஊடாக அந்தக் கட்­ட­மைப்பு தொடர்­வது அவர்­க­ளுக்கு இடை­யூ­றாக இருக்­கி­றது.

அதற்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நிறு­வ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட கட்­ட­மைப்­பாக இருக்­கி­றதா- அது எதனைச் சாதித்­தது என்­றெல்லாம் கேள்வி எழுப்ப வேண்­டி­ய­தில்லை. ஏனென்றால் கூட்­ட­மைப்பு அதனைச் செய்­ய­வில்லை.

ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு என்ற பெயர், ஒரு அர­சியல் பிர­தி­நி­தி­யாக நிலைத்­தி­ருக்­கி­றது. சர்­வ­தேச சமூ­கத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. 

நடை­முறை ரீதி­யாக இல்­லா­விட்­டாலும், கூட்­ட­மைப்பு ஒரு நிறு­வன ரீதி­யாக கட்­ட­மைக்­கப்­பட்ட வடி­வ­மாக – தமிழர் தரப்பின் அர­சியல் கட்­ட­மைப்­பாக தோற்றம் காட்­டு­கி­றது. வெளியில் இருந்தும் பார்க்­கப்­ப­டு­கி­றது.

அந்­த­நி­லையை முற்­றாக உடைத்து விடும் போது, ஏற்­ப­டக்­கூ­டிய சாதக நிலை சிங்­கள பௌத்த பேரி­ன­வாத சக்­தி­க­ளுக்கு துணை­யாக இருக்கும்.

எனவே அவர்கள் கூட்­ட­மைப்பை இல்­லாமல் செய்­வது தான் அவர்­களின் முதன்­மை­யான நோக்­க­மாக இருக்­கி­றது.

சிங்­கள பௌத்த பேரி­ன­வாத தரப்­பு­களில் மாத்­தி­ர­மன்றி, தமிழர் தரப்­புக்­குள்­ளேயும் கூட அதே சிந்­த­னை­யுடன் இயங்­கு­கின்ற தரப்­புகள் இருக்­கின்­றன.

அவ்­வாறு தமிழர் தரப்பில் உள்ள தரப்­பு­களில் கூட்­ட­மைப்­புக்குள் உள்ள- வெளியே உள்ள தரப்­பு­களும், உள்­ள­டங்­கி­யி­ருக்க வாய்ப்­புகள் உள்­ளன.

இவர்கள் கூட்­ட­மைப்பை புலி­களின் பதி­லிகள் என்ற நிலையில் இருந்து நீக்க எத்­த­னிக்­கி­றார்கள். அவர்கள் இரண்டு வகை­யா­ன­வர்கள்.

அர­சாங்­கத்தைப் போலவே, விடு­தலைப் புலி­களின் பெயரும் அடை­யா­ளமும் இல்­லாமல் போய் விட வேண்டும் என்று எதிர்­பார்ப்­ப­வர்கள் ஒரு வகை­யினர்.

விடு­தலைப் புலி­களால் உரு­வாக்­கப்­பட்­ட­வர்கள் என்ற பெயரை வைத்துக் கொண்டு, தம்மை அர­சி­யலில் தலை­யெ­டுக்க விடு­கி­றார்கள் இல்லை என்று எரிச்சல் கொண்­டுள்­ள­வர்கள் இன்­னொரு வகை­யினர்.

விடு­தலைப் புலிகள் இருந்­த­போது அவர்­களை வசை­பா­டி­ய­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் இப்­போது அவர்­களின் துதி பாடிக் கொண்­டி­ருக்­கி­றார்கள் அல்­லது அதற்குத் தயா­ராக இருக்­கி­றார்கள்.

அர­சி­ய­லுக்­காக அவ்­வாறு செய்­தாலும் உள்­ளூர இவர்­க­ளுக்கு விடு­தலைப் புலிகள் மீது வன்­மமும் கோபமும் இருக்­கி­றது. அதனை வெளிப்­ப­டுத்­தினால் தமது அர­சியல் எதிர்­காலம் பறிபோய் விடும் என்று அமைதி காக்­கி­றார்கள்.

அதே­வேளை, புலி­களின் அடை­யா­ளத்­துடன் கூட்­ட­மைப்பு இருக்கும் வரை, தமது சுய அடை­யா­ளத்­துடன் அர­சியல் செய்ய முடி­யாது என்ற கவ­லையும் கோபமும் இவர்­க­ளுக்கு இருக்­கி­றது. 

அதனால் எப்­ப­டி­யா­வது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை இல்­லாமல் செய்து விட வேண்டும் என்­பது இவர்­களின் நோக்கம். அதற்­காக உள்ளே இருந்தும் பணி­யாற்­று­கி­றார்கள். வெளியே இருந்தும் பணி­யாற்­று­கி­றார்கள். 

அது­போ­லவே, விடு­தலைப் புலி­களால் உரு­வாக்­கப்­பட்­ட­வர்கள் என்ற அடை­யா­ளத்தை வைத்துக் கொண்டு, கூட்­ட­மைப்பு அர­சியல் ஆதா­யங்­களை அடை­வதால் இன்­னொரு தரப்­பினர் எரிச்­ச­ல­டைந்து போயி­ருக்­கி­றார்கள்.

கூட்­ட­மைப்­பாக இருக்கும் வரை தான், இவர்­களால் தாக்குப் பிடிக்க முடியும், கூட்­ட­மைப்பை உடைத்து விட்டால், தாக்­குப்­பி­டிக்க முடியாது என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டு, அதனை உடைப்பதற்கு இவர்கள் பகீரதப் பிரயத்தனம் எடுக்கிறார்கள்.

இங்கு குறிப்பிட்ட இரண்டு தரப்பினர் எனும் போது, கட்சிகள் மாத்திரமன்றி தனிநபர்களும் உள்ளடக்கம்.  

இவ்வாறாக கூட்டமைப்பை உடைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுவதன் மூலம் ஆதாயங்களை அடைய சிங்கள பௌத்த அரசியல் சக்திகள் மாத்திரமன்றி தமிழர் தரப்பிலும் அரசியல் சக்திகள் செயற்படுகின்றன.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ளவர்களைப் பொறுத்தவரையில் இதனை சரியாக விளங்கிக் கொள்ளும் நிலையில் இருப்பதாக தெரியவில்லை. அவர்களில் பலருக்கும் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் இருப்பதும் அதற்கு ஒரு காரணம்.

இவ்வாறான நிலையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்தல் என்பது பொது நிகழ்ச்சி நிரலாக மாறி வருகின்றது. ஆனாலும், அதனை பொது நிகழ்ச்சி நிரல் ஒன்றின் கீழ் எதிர்கொள்ளும் நிலையில், கூட்டமைப்பு இருப்பதாகத் தெரியவேயில்லை.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-08-12#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.