Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரா­ணுவ சின்­னங்­களும் நல்­லி­ணக்­கத்தின் தேவையும்

Featured Replies

இரா­ணுவ சின்­னங்­களும் நல்­லி­ணக்­கத்தின் தேவையும்

 

வடக்கில் உள்ள இரா­ணுவச் சின்­னங்­களை அகற்­று­மாறு வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் கோரிக்கை விடுத்­துள்­ளமை தென்­ப­கு­தியில் பெரும் எதிர்ப்­ப­லை­களை உரு­வாக்­கி­யுள்­ளது. பல்­வேறு தரப்­பி­னரும் முத­ல­மைச்­சரின் கோரிக்கை தொடர்பில் தமது விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரு­கின்­றனர்.

வடக்கில் அமைக்­கப்­பட்­டுள்ள இரா­ணு­வச்­சின்­னங்கள் சிங்­கள மேலா­திக்­கத்தை எடுத்­துக்­காட்­டு­வ­தாக இருப்­பதால் அவை எமது நல்­லெண்­ணத்­திற்கும் சமா­தா­னத்­திற்கும் இடை­யூ­றாக உள்­ளன. இதனால் அதனை அகற்­றினால் கூடி­ய­ள­வான சமா­தான சூழலை ஏற்­ப­டுத்த முடியும் என்று வடக்கு முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். இது குறித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன­விற்கும் அவர் கடி­தத்­தினை அனுப்­பி­வைத்­துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரி­வித்­துள்ள விக்­கி­னேஸ்­வரன் இரா­ணுவச் சின்­னங்­களைப் பார்த்­த­வுடன் எமது மக்­க­ளுக்கு ஆத்­திரம் வரு­கின்­றது. அந்­தக்­கா­லத்தில் எவ்­வா­றான சூழல் நில­வி­யது என்­பது நினை­விற்கு வரு­கின்­றது. எனவே இத்­த­கைய இரா­ணுவச் சின்­னங்கள் அகற்­றப்­ப­டு­வதன் மூலமே நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடியும். வடக்­கி­லுள்ள மக்­க­ளி­னது உரி­மைகள் அனைத்­தையும் அர­சாங்கம் தம்­மிடம் வைத்­துக்­கொண்டும் அவர்­க­ளது பிர­தி­நி­தி­க­ளாக இரா­ணு­வத்­தி­னரை இங்கே வைத்­துக்­கொண்டும் நல்­லி­ணக்கம் நல்­லெண்ணம் பற்றிப் பேசு­வது எம்மை தொடர்ந்தும் ஆக்­கி­ர­மிப்­புக்குள் வைத்­தி­ருக்­கின்ற மன­நி­லை­யையே எடுத்­துக்­காட்­டு­கின்­றது என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இது­போன்றே நேற்று முன்­தினம் ஐரோப்­பிய ஆசிய நாடு­களைச் சேர்ந்த பல­து­றை­க­ளிலும் பாண்­டித்­தியம் பெற்ற குழு­வி­னரை முத­ல­மைச்சர் சந்­தித்து பேசி­ய­போது வடக்­கையும் கிழக்­கையும் தமது ஆதிக்­கத்தின் கீழேயே எப்­போதும் வைத்­தி­ருக்­க­வேண்டும் என்ற மன­நி­லையில் தெற்கில் உள்­ள­வர்கள் நடந்­து­கொண்டால் இந்­த­நாட்டில் எக்­கா­லத்­திலும் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடி­யாது என்றும் முத­ல­மைச்சர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

வடக்­கி­லி­ருந்து இரா­ணு­வச்­சின்­னங்­களை அகற்றும் முத­ல­மைச்­சரின் கோரிக்­கைக்கு தென்­ப­கு­தியில் பெரும் எதிர்ப்­புக்கள் தெரி­விக்­கப்­பட்டு வரும் நிலையில் பொது எதி­ர­ணி­யா­னது இந்த விடயம் தொடர்பில் போர்க்­கொடி தூக்­கி­யி­ருக்­கின்­றது. பொது எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான விமல் வீர­வன்ச வடக்கில் மீண்டும் புலி­களை உரு­வாக்கும் வாய்ப்பை அர­சாங்கம் உரு­வாக்கி வரு­கின்­றது. இரா­ணு­வத்தை வெளி­யேற்றும் அழுத்­தங்­களை விக்­கி­னேஸ்­வரன் கொடுத்து வரு­கின்றார். சமஷ்டி அர­சியல் அமைப்பை உரு­வாக்கும் நகர்­வு­களை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு முன்­னெ­டுத்து வரு­கின்­றது. இவர்கள் தமது இலக்­கை ­நோக்கி சரி­யாக பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர். ஆட்­சி­யா­ளர்கள் வடக்­கிற்கும் சர்­வ­தே­சத்­திற்கும் அஞ்சி நாட்டை பங்­கு­போடும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளனர் என்று குற்­றம்­சாட்­டி­யி­ருக்­கின்றார்.

இவ்­வாறு முத­ல­மைச்­சரின் கருத்­துக்கு எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்டு வரும் நிலையில் அவ­ரது கூற்­றினை ஆத­ரித்து தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் கருத்து தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

வடக்­கி­லி­ருந்து இரா­ணுவ யுத்த சின்­னங்கள் அகற்­றப்­ப­ட­வேண்டும். இரா­ணு­வத்­தினர் வேறு நாடொன்­றுக்கு எதி­ராக யுத்தம் செய்­ய­வில்லை. இதனால் இரா­ணுவச் சின்­னங்­களை அகற்­று­வதன் மூலமே நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடியும். ஜே.வி.பி.க்கு எதி­ராக இரா­ணு­வத்­தினர் யுத்தம் புரிந்­தனர். ஆனால் தென்­ப­கு­தியில் இரா­ணுவ வெற்­றிச்­சின்­னங்கள் அமைக்­கப்­ப­ட­வில்லை. அதே­போன்றே வடக்­கிலும் அந்த சின்­னங்கள் இருப்­பது தேவை­யற்­றது என்று அமைச்சர் மனோ கணேசன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இந்த விவ­காரம் தொடர்பில் நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­விடம் ஊட­க­விய­லா­ளர்கள் கருத்து கேட்­ட­போது நாட்டில் எமது சகோ­த­ரர்கள் பிரி­வொன்­று­ட­னேயே நாம் யுத்தம் செய்­துள்ளோம். இதனால் யுத்த நினை­வுச்­சின்­னங்கள் தொடர்­பான பிரச்­சி­னைகள் குறித்து பேசிக்­கொண்­டி­ருக்­காது சக­லரும் ஒற்­று­மை­யாக வாழக்­கூ­டிய வகையில் அபி­வி­ருத்தி அடைந்த நாட்டை உரு­வாக்க ஒன்­று­ப­ட­வேண்டும் என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கு இத­னைக்­கூ­று­வ­தற்­கான உரிமை உள்­ளது. அதன்­மூலம் நாடு பிள­வு­ப­டு­கின்­றது என கூற முடி­யாது. நினை­வுத்­தூ­பி­களை அமைப்­ப­தற்கு நாங்கள் வெளி­நாட்டு இரா­ணு­வத்­துடன் யுத்தம் செய்­ய­வில்லை. இங்கு நடந்­தது வெளி­நாட்டு இரா­ணு­வத்தை தோற்­க­டித்த யுத்தம் அல்ல. எமது நாட்டின் எமது சகோ­த­ரர்கள் பிரி­வொன்­று­ட­னேயே நாம் யுத்தம் செய்தோம். இப்­போது யுத்தம் முடிந்­து­விட்­டது. யுத்தம் தொடர்­பான நினை­வுத்­தூ­பி­களை அமைத்­துக்­கொண்­டி­ருப்­ப­தற்கு நேர­மில்லை. நாம் எல்­லோரும் ஒன்­றி­ணைந்து நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான நேரமே இது­வாகும் என்றும் அமைச்சர் மங்­கள சம­ர­வீர சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

உண்­மை­யி­லேயே அமைச்­சர்கள் கூறு­வதைப் போன்று எமது நாட்டில் மூன்று தசாப்­த­காலம் நடை­பெற்ற யுத்தம் என்­பது அந்­நி­ய­நாட்­டு­ட­னான யுத்­த­மல்ல. தமது உரி­மை­களை நிலை­நி­றுத்­திக்­கொள்­வ­தற்­காக தமிழ் இளை­ஞர்கள் ஆயு­த­மேந்தி போரா­டி­னார்கள். இந்தப் போராட்­டத்­திற்கு கார­ண­மாக அமைந்த விட­யங்­க­ளுக்கு தற்­போது தீர்­வு­கா­ணப்­ப­ட­வேண்டும். அவ்­வா­றான தீர்வு காணப்­ப­ட­வேண்­டு­மானால் நாட்டில் நல்­லி­ணக்கம் என்­பது அவ­சி­ய­மா­ன­தாகும்.

உண்­மை­யான நல்­லி­ணக்கம் ஏற்­ப­ட­வேண்­டு­மானால் கொடூர யுத்த வடுக்­க­ளி­லி­ருந்து பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்கள் மீள் எழ­வேண்­டி­யது இன்­றி­ய­மை­யா­த­தாகும். யுத்­தத்தில் உயிர்­க­ளையும் உடைமைக­ளையும் இழந்த தமிழ் மக்கள் இன்றும் அந்த யுத்­த­ வ­டுக்­க­ளி­லி­ருந்து மீள முடி­யாது. தமது வாழ்­வா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது பெரும் சோகத்­து­ட­னேயே வாழ்ந்து வரு­கின்­றனர்.

காணா­மல்­போன தமது பிள்­ளை­களை பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பெற்­றோர்கள் தேடி அலைந்து வரு­கின்­றனர். அங்­க­வீ­ன­மான தமது பிள்­ளை­களை வாழ வைப்­ப­தற்கு மக்கள் திண்­டா­டு­கின்­றார்கள். கண­வனை இழந்த 90 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட பெண்கள் தமது குடும்­பத்தை கொண்­டு­ந­டத்­து­வ­தற்­காக பெரும் கஷ்­டங்­களை அனு­ப­விக்­கின்­றனர். யுத்­தத்தின் போது கொல்­லப்­பட்ட தமது உற­வு­களை நினைத்து மக்கள் நாள்­தோறும் கண்ணீர் விடு­கின்­றார்கள். தமக்கு இழைக்­கப்­பட்ட அநி­யா­யங்­க­ளுக்கு விசா­ர­ணை­களின் மூலம் நீதி வழங்­கப்­ப­டுமா என்று அவர்கள் எதிர்­பார்த்து காத்­தி­ருக்­கின்­றார்கள்.

இவ்­வாறு யுத்­தப்­பா­திப்­புக்­குள்­ளான மக்கள் அந்த மன­நி­லை­யி­லி­ருந்து மாற முடி­யாது தவித்து வரு­கின்­றார்கள். இவ்­வா­றான நிலையில் வடக்கு, கிழக்கு பகு­தி­களில் யுத்த வெற்­றி­களை குறிக்கும் வகையில் இரா­ணு­வச்­சின்­னங்கள் அமைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­னது பாதிக்­கப்­பட்ட மக்­களை மேலும் கவ­லைக்­குட்­ப­டுத்தும் செயற்­பா­டா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது.

யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்­டு­வந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்க காலத்தில் வரு­டம்­தோறும் பெருந்­தொ­கை­யான பணத்தை செல­வ­ழித்து யுத்­த­வெற்­றிக்­கொண்­டாட்­டங்கள் நடத்­தப்­பட்டு வந்­தன. பெரும் தேசிய விழா­வாக இது நடத்­தப்­பட்­டது. யுத்­தத்தில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமது உற­வு­களை இழந்த தமிழ் மக்கள் அந்த உற­வு­களை நினை­வு­கூ­ரக்­கூட அனு­ம­திக்­காத அன்­றைய அர­சாங்கம் யுத்த வெற்றி விழாக்­களை கொண்­டா­டி­யது. அர­சாங்­கத்தின் இத்­த­கைய செயற்­பா­டுகள் தமிழ் மக்­களின் மனங்­களை மேலும் புண்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­தி­ருந்­தது.

ஆனாலும் நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து யுத்த வெற்­றிக்­கொண்­டாட்­டங்கள் நிறுத்­தப்­பட்­ட­துடன் போரில் உயி­ரி­ழந்த இரா­ணு­வத்தின் நினை­வு­கூரும் நிகழ்­வுகள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் இத்­த­கைய செயற்­பாடு உண்­மை­யி­லேயே வர­வேற்­கத்­தக்­க­தாகும். யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் மன­நி­லையை கருத்தில் கொண்டு யுத்த வெற்­றிக்­கொண்­டாட்­டங்கள் என்ற பெயரில் நிகழ்­வுகள் நடத்­தப்­ப­டு­வதை அர­சாங்கம் நிறுத்தியுள்ளது. அத்துடன் யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை முள்ளிவாய்க்காலில் நினைவுகூருவதற்கும் நல்லாட்சி அரசாங்கம் அனுமதி வழங்கியிருக்கின்றது.

அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் நல்லிணக்கத்திற்கு ஊன்றுகோலாக அமைந்துள்ளதை மறுப்பதற்கில்லை. தற்போதைய நிலையில் முழுமையான நல்லிணக்கம் ஏற்படுத்தவேண்டுமானால் வடக்கு, கிழக்கில் மக்கள் மயப்படுத்தப்பட்ட செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். அத்துடன் பொறுப்புக்கூறும் விடயத்திலும் உரிய வகையில் அரசாங்கம் செயற்படவேண்டும்.

யுத்த பாதிப்பு மனநிலையிலிருந்து தமிழ் மக்களை மீள் எழச் செய்யும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைய வேண்டியது இன்றியமையாததாக உள்ளது. வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் கருத்துக்களும் நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையில் உதித்ததாகவே அமைந்துள்ளன. எனவே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்­தும் வகை­யில் அரசாங்கமானது விசேட திட்டங்களை செயற்படுத்த வேண்டுமென்று வலியுறுத்த விரும்புகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-08-22#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.