Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்றுத் தலைமை குறித்து தீர்மானிக்க வேண்டியவர்கள் தமிழ் மக்களே

Featured Replies

மாற்றுத் தலைமை குறித்து  தீர்மானிக்க வேண்டியவர்கள்  தமிழ் மக்களே

 
vikkines-2-600x382.jpg
 
 
 

 

 

வடக்குக் கிழக்கு அரசியலில் பரபரப்பான திருப்பங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உருவாகி வருகின்றன. வடக்குக் கிழக்கு அபிவிருத்திக்கான அரசதலைவர் செயலணி தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்குமிடையே இடம்பெற்ற கடிதப் பரிமாற்றம் இதற்குப் பிள்ளையார் சுழியை இட்டு வைத்துள்ளது.

விக்னேஸ்வரன் கூட்டமைப்பிலிருந்து விலகி மாற்றுத் தலைமையொன்றை உருவாக்கும் முயற்சிகளை ஆரம்பித்துள்ளார் என்று நம்பிக்கை யான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னோடியாகவே தமிழ் மக்கள் பேரவையின் அவசரக் கூட்டம் இடம்பெறவுள்ளது. விக்னேஸ்வரன் பேர வையின் இணைத் தலைவர் என்பது குறிப்பி டத்தக்கது.

தமிழ்மக்கள் பேரவையில்

அங்கம் வகிப்போரில் பெருமளவானோர் கூட்டமைப்புக்கு எதிரானவர்களே
தமிழ் மக்கள் பேரவையில் கூட்டமைப்புக்கு எதிரான வர்களே அதிக அளவில் அங்கம் வகிக்கின்றனர். அரசியலில் பங்குபற்றாமை பேரவையின் முதன்மைக் கோட்பாடுகளில் ஒன்றாக உள்ளது. ஆனால், அது கடைப்பிடிக்கப்படுவதாகத் தெரியவில்லை.

விக்னேஸ்வரன் தமது அரசியலின் தலையாய துருப்புச் சீட்டாக மக்கள் பேரவையைப் பயன்படுத்தி வருகின்றார். கூட்டமைப்பினுள் இருந்து கொண்டு பேரவை ஊடாக அதற்கு எதிரான நடவடிக்கையிலும் அவர் ஈடுபட்டுள்ளார். தற்போதுகூட, தமது அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்காகப் பேரவை ஊடாகவே காய்களை நகர்த்தி வருகிறார்.

வடக்கிலிருந்து படையினரை விலக்கிக் கொள்ளு மாறு வடக்கு மாகாண முதலமைச்சர் என்ற வகையில் விக்னேஸ்வரன் பல தடவைகள் வேண்டு கோள் விடுத்து வந்துள்ளபோதிலும், சாதகமான பயன் எதுவும் கிட்டவில்லை. வடக்கிலிருந்து படைகள் முற்றாக விலக்கிக் கொள்ளப்படுவதை படையினர் ஒருபோதுமே விரும்பமாட்டார்கள்.

இதைச் செய்வதற்கான துணிவும் அரசிடம் கிடையாது. தற்போது படையினரின் பங்களிப்புடன் பல திட்டங்கள் வடக்கில் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வடக்குக் கிழக்கின் அபிவிருத்தி தொடர்பான அரசதலைவர் செயலணியிலும் படையினரின் பிரசன்னம் இடம்பெறுமென்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது. இதன் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் அங்கம் வகிப்பதை கூட்டமைப்புக்கு எதிரான வர்கள் விமர்சித்து வருகின்றனர்.

கூட்டமைப்பால் தாம் புறக்கணிக்கப்பட்டால் தமக்கு அனுதாப அலை பெருகுமென
வடக்கு முதலமைச்சர்  கணக்குப் போடுகிறார்

கூட்டமைப்புடனான உறவில் விரிசல் ஏற்பட்டுத் தற்போது பெரும் பிளவு ஏற்பட் டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. கூட்டமைப்பு தம்மை விலக்கி வைத்தால், தமக்கு ஆதரவு பெருகுமென விக்னேஸ்வ ரன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

தமிழ் நாட்டில் கருணாநிதியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.இராமச்சந்திரனுக்கு நடந்ததைப் போன்று தமக்கும் மக்களின் ஆதரவு பன்மடங்கு அதிக ரிக்குமென்ற அவரது எதிர்பார்ப்பை கூட்ட மைப்பின் தலைமை தனது இராஜ தந்திரத்தினால் முறியடித்து விட்டது. தற்போது வேறு வழி யல்லா மல் மாற்றுத்தலைமை என்ற கோசத்துடன் கூட்ட மைப்பி லிருந்து விலகி நிற்க முதலமைச்சர் தயாராகி வருகிறார்.

தற்போது பல காரணங்களால் பலமிழந்து நிற்கும் விக்னேஸ்வரனுக்கு, முண்டு கொடுப்பது தமக்குப் பயன்தராது என்பதை கஜேந்திரகுமார் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் நன்கறி வார்கள்.அத்துடன், மாற்றுத் தலைமை வகிப்ப தற்கு விக்னேஸ்வரன் பொருத்தமான ஒருவரல்ல என்பதும், அவரை முற்றுமுழுதாக நம்பமுடியாது என்பதையும், அவர்கள் புரிந்து கொண்டி ருப்பார்கள். கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு அவர் புரிந்த துரோகங்களை அவர்கள் மறந்தி ருக்கவும் மாட்டார்கள். அந்த அளவுக்கு சூழ்நிலை நன்கு மாறிவிட்டது.

அரசியல் தீர்வு குறித்து சாதகமான பயன் கிடைக்காவிடினும், அதற்கான
அழுத்தங்கள் பல ரூபங்களில் தொடரவே செய்கின்றன

தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கவேண்டு மென்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. நாடு சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து தமிழர்க ளுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்ப தற்கான முயற்சிகள் இடம்பெற்ற போதிலும், அது இன்னமும் சாத்தியமாகவில்லை. இது தொடர்பாகப் பல போராட்டங்கள் இடம்பெற்று விட்டன.

தற்போதும் கூட்டமைப்பு அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கான முயற்சிகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டுவருகின்றது. அரசுக்கு காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அரசதலைவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தபோது, இந்த ஆண்டுக்குள் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டுமென கூட்டமைப்பின் உறுப்பினரான மாவை சேனாதி ராசா வற்புறுத்திக் கேட்டுக்கொண்டமை நினை விருக்கலாம்.

இந்த வேளையில், சம்பந்தன் கூறியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வடக்குக் கிழக்கின் அபிவிருத்திக்கான செயலணியில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பதால், அரசியல் தீர்வு பின்தள்ளப்பட வாய்ப்பில்லை என அவர் கூறியுள்ளார்.புளொட் அமைப்பின் தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பி னருமான சித்தார்த்தனும் இதே கருத்தைக் கூறியுள்ளார். ஆனால் விக்னேஸ்வரன் உள் மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு வௌியில் வேறு எதையோ கூறுவது நியாயமானதாகத் தெரியவில்லை.

தமிழ் அரசியல்வாதிகள் வீரவசனங்களை உணர்ச்சி பொங்கப் பேசுவதும், மற்றவர்களின் உணர்வுகளைக் கிளறி விடுவதும் , தொன்று தொட்டு இடம்பெற்று வருகின்ற விடயங்களாகும். இதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நாமறிவோம். மாற்றுத் தலைமைக்கு எவருமே ஆசைப்படலாம். ஆனால் மக்கள் தான் அதை முடிவு செய்ய வேண்டும்.

https://newuthayan.com/story/14/மாற்றுத்-தலைமை-குறித்து-தீர்மானிக்க-வேண்டியவர்கள்-தமிழ்-மக்களே.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.