Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்பார்க்கப்பட்டவற்றை நிறைவேற்றும் மஹிந்த அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்க்கப்பட்டவற்றை

நிறைவேற்றும் மஹிந்த அரசு `

இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சினையை இராணுவத் திமிர்த்தனத்தோடும், பௌத்த சிங்கள மேலாண்மைச் செருக்கோடும் அணுகி வந்த மஹிந்த ராஜபக்ஷ அரசு, அதன் மூலம் நாட்டை எவ்வாறு குட்டிச்சுவராக்கியுள்ளது என்பதை நாடாளுமன்றத்தில் வார்த்தைக்கு வார்த்தை பிய்த்து உதறி அம்பலப்படுத்தி இருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.

ஒரு புறம் அமைதி வழித் தீர்வு என்று வாயால் கூறிக்கொண்டு, மறுபுறம் இராணுவத் தீர்வை நாடும் மஹிந்த அரசின் இரட்டை வேடம் சர்வதேச ரீதியிலும் இப்போது அம்பலமாகிவிட்டது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் மஹிந்தரின் இரட்டை வேட தந்திரோபாய அணுகுமுறை தோற்றுப்போகும் நிலையில், இலங்கை இப்போது சர்வதேச ஆதரவையும் முற்றாக இழந்து விட்டது. என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கின்றார் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க.

ரணிலின் உரை ஊடாக இப்போது வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களின் சாராம்சம் இவைதான்:

* பேச்சு மூலமான அரசியல் தீர்வு என்று பேசிக்கொண்டு புலிகளை நிர்மூலமாக்கும் இராணுவ அணுகுமுறையிலும் அரசு தீவிரமாக ஈடுபடுகின்றது.

* இந்த அணுகுமுறையால் பேச்சு மூலமான அரசியல் தீர்வு முயற்சிகளும் குழம்பிவிட்டன. கட்டுநாயக்கா மீதான வான் வழித் தாக்குதலுடன் இராணுவத் தீர்வுப் போக்கும் சவாலுக்குள்ளாகி விட்டது.

* இந்த முரண்பாடான கொள்கைப் போக்குக்காக மஹிந்த அரசு, இலங்கை மக்களுக்கு மட்டுமல்ல, சர்வதேச சமூகத்துக்கே விளக்கமும் பதிலும் தரவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

* சட்டத்துக்கு முரணான அரசின் செயற்பாடு பெரும் அடக்குமுறையாகியுள்ளது. இதனால் இப்போது இலங்கை அரசு மனித உரிமைகள் மீறலுக்காக ஜெனிவாவில் ஐ. நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் முன்னால் கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளது.

*மொத்தத்தில் சர்வதேச சமூகத்தின் ஆதரவை அரசு இழந்துவிட்டது என்பது தெளிவு.

*"வடக்கு கிழக்கு பிரச்சினையைப் பேச்சு மூலம் தீர்க்கத் தயார். அதற்கான கதவுகள் திறந்தே உள்ளன'' என்று எந்நேரமும் அரசு கூறுவதோடு சரி. அதற்கு அப்பால் அமைதி முயற்சிகளுக்கு உறுதியான நடவடிக்கை எதனையும் அரசு எடுப்பதேயில்லை.

*இந்த அரசின் செயற்பாடு மக்களை ஒன்றிணைக்கவில்லை. மாறாகப் பிரித்து வைத்திருக்கின்றது.

இவ்வளவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணிலின் நாடாளுமன்ற உரையில் தெறித்த கருத்துகள். கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தென்னிலங்கைச் சிங்களம் தனது தலைமையைத் தானே தெரிவு செய்யட்டும், அதில் தமிழர் தாயகம் தலையிடத் தேவையில்லை எனத் தெரிவித்து, அந்தத் தேர்தலை தமிழர் தாயக வாக்காளர்கள் பகிஷ்கரிப்பதற்கான ஒரு கோரிக்கையை விடுதலைப் புலிகள் முன்வைத்திருந்தனர்.

சிங்கள பௌத்த தீவிரவாதிகளின் முழு ஆதரவோடு களத்தில் நின்ற மஹிந்த ராஜபக்ஷ சொற்ப வாக்கு வித்தியாசத்தில் ஜனாதிபதியாகவும், ரணில் விக்கிரமசிங்க தோற்கடிக்கப்படவும் இந்தப் பகிஷ்கரிப்பே பிரதான காரணமாக அமைந்தது என்பது வெள்ளிடைமலை.

தங்களது இறுதி இலட்சியத்தில் திடமாகவும் உறுதியாகவும் அர்ப்பணிப்போடும் உள்ள விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை எந்த விடயமும் அந்த இலக்கை நோக்கியதாகவே அசைய வேண்டும் நகரவேண்டும் என்பதே அவாவாக இருந்து வருகின்றது எனக் கருதலாம். இலங்கை ஜனாதிபதித் தேர்தலும் அதன் முடிவும் கூட இதற்கு விதிவிலக்காக அமையக்கூடாது என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு எனலாம்.

தமிழரின் உரிமைப் போராட்ட சக்திகளைப் பொறுத்தவரை, தென்னிலங்கைக்குத் தலைவராக மஹிந்தர் வருவது தங்களுக்கு என்னென்ன வகைகளில் சாதகமான விளைவுகளைத் தரும் என அச்சக்திகள் எதிர்பார்த்தனவோ, அவை எல்லாம் ஒப்பேறி வருகின்றன என்பதே இன்றைய யதார்த்தமாகி உள்ளது.

அப்படி அவை இடம்பெற்று வருகின்றன என்பதை ரணிலின் உரை மிகத் தெளிவாக உறுதிப்படுத்தி இருக்கின்றது.

வெளிப்பேச்சுக்கு அமைதி முயற்சிகள் குறித்துப் பிரஸ்தாபித்துக் கொண்டு, போர்த் தீவிரத்தில் அரசு ஈடுபடுவதும், அதனால் சர்வதேச ஆதரவை அது முற்றாக இழந்து, மனித உரிமை மீறல்களுக்காகக் குற்றவாளிக் கூண்டில் நிற்பதும், நாட்டு மக்களை ஐக்கியப்பட வைப்பதற்குப் பதிலாக அது மேலும் பிரிந்து நிற்பதும் இவ்வாறு எதிர்பார்க்கப்பட்ட எதிர்வு கூறப்பட்ட விடயங்களாகும்.

தனது பேரினவாதப் போக்கால் கொடூரமாக நடந்துகொண்டு, அதனால் சர்வதேச ஆதரவை இழந்து, தனிமைப்பட்டு, அந்நியப்பட்டு, தனக்குத்தானே மண்வாரிப் போட்டுக் கொண்டு தடுமாறுகிறது கொழும்பு

எது எதிர்பார்க்கப்பட்டதோ, அது நல்லபடியாக நடந்தேறுகின்றது என்று புலிகள் திருப்திப்படுவார்கள் என நம்பலாம்.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.