Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூதூர் நலன்புரி நிலையத்தில் 6 தமிழ் இளைஞர்கள் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூதூர் நலன்புரி நிலையத்தில் 6 தமிழ் இளைஞர்கள் கைது [வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2007, 15:12 ஈழம்] [செ.விசுவநாதன்]

மூதூர் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த 6 தமிழ் இளைஞர்களை சிறிலங்கா இராணுவம் கைது செய்துள்ளது.

திருகோணமலை மாவட்டம் மூதூரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் இளைஞர்கள் தங்கியிருந்த போது கடந்த மார்ச் 31 ஆம் நாள் நள்ளிரவு இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைக்காக இளைஞர்களை அழைத்துச் செல்வதாக அவர்களின் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டிருந்த போதும் இன்னமும் எவரும் விடுவிக்கப்படவில்லை. இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணையத்திடம் இளைஞர்களின் பெற்றோர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டோர் விவரம்:

அருள்நாயகம் யோசப் யேசுதாசன் (வயது 25)

செபஸ்தியான் யோசப் செயதீபன் (வயது 28)

புஸ்பராஜா புஸ்காந்தன் (வயது 20)

முகராசா முரளி (வயது 22)

பிரகாஸ் சிறிபிரகாசம் (வயது 28)

செல்வநாயகம் அமல்ராஜ் (வயது 25).

மூதூர் பிரதேசத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து திருகோணமலை நகரில் உள்ள நலன்புரி நிலையங்களில் அப்பகுதி மக்கள் அகதிகளாகத் தஞ்சமடைந்திருந்தனர். சிலர் மூதூர் நகருக்கு மீளத் திரும்பினர். பெரும்பாலானோர் பாதுகாப்புக்காக கத்தோலிக்கத் தேவாலயங்களில் தங்கி வருகின்றனர்.

இதனிடையே மூதூர் கங்குவெளி பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரான முனுசாமி காளிராசா (வயது 34), கடந்த மார்ச் 28 ஆம் நாள் உந்துருளியில் வந்த இரு நபர்களால் கடத்திச் செல்லப்பட்டார். கண்கள் கட்டப்பட்ட நிலையில் தெகியத்தகண்டிய எனும் சிங்கள கிராமத்தை நோக்கி அவர் கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலைமை குறித்து எதுவித தகவலும் தெரியவில்லை.

மேலும் கிண்ணியா சிறிலங்கா காவல்துறை பிரதேசம் ஆலங்கேனி பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் 2 பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களும் விடுவிக்கப்படவில்லை. அப்பகுதியில் கடந்த வாரம் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டோரில் ஒருவர் அன்புவழிபுரத்தைச் சேர்ந்தவர். மற்றொருவர் உப்புவெளி பிரதேசம் லிங்கநகரைச் சேர்ந்தவர். அடையாளம் தெரியாத நபர்களால் கடந்த ஏப்ரல் 2 ஆம் நாள் இருவரும் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டனர்.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.