Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 21 பேரை வெளியேறுமாறு அறிவுறுத்தல்

Featured Replies

வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 21 பேரை வெளியேறுமாறு அறிவுறுத்தல்

 

 
 

வவுனியா இராசேந்திரன்குளம் வன இலகாப்பகுதியில் சட்டவிரோதமாக காணி அபகரித்து குடியேறியுள்ளவர்களில் 21 பேரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளன. 

kani.jpg

இதையடுத்து மத்திய கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் அவசரக்கலந்துரையாடல் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை மாலை வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க  அதிபர் தலைமையில்  இடம்பெற்றுள்ளது.

வவுனியா இராசேந்திரன்குளம் பகுதியில் வனத்திணைக்களத்திற்கு உரித்தான ஒதுக்குகாடு 1921ஆம் ஆண்டு ஓதுக்கி எடுக்கப்பட்டுள்ளது. அதில் 3500 ஏக்கர் விக்ஸ்காடு, பாவற்குளம் போன்ற பகுதிகளில் வன இலகா பகுதிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் குடியேற்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

சூடுவெந்தபிலவு பகுதியில் சொற்ப நிலமே வன இலகாவினரின் கட்டுப்பாட்டிலிருந்து வருகின்றது. இதில் 50 ஹெக்டேர் விடுவிக்கப்பட்டு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பகுதிகள் இரண்டு பிரதேச செயலகப்பிரிவுகளுக்குள் வருகின்றன. வெங்கலச் செட்டிகுளம்பிரதேச செயலகப்பிரிவிற்கும், வவுனியா பிரதேச செயலகப்பிரிவிற்கும் என இரண்டு பிரதேச செயலகப்பிரிவுகளைக் கொண்டுள்ளது. 

சூடுவெந்தபிலவு பகுதியில்  கடந்த வருடம் தேக்கு மரம் நாட்டுவதற்குச்சென்ற வன இலகாவினரை அப்பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்கள் அனுமதிக்கவில்லை. பாவற்குளம் வைத்தியசாலைக்கு அருகிலுள்ள 6 ஆம் கட்ட வீட்டுத்திட்டம் பகுதியில் விவசாயம் மேற்கொள்வதற்காகத் தெரிவித்து சட்டவிரோதமான முறையில் வன இலகாவினரின் பகுதியில் குடியேறியுள்ள 21 பேரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு கொழும்பு, பத்தரமுல்ல வனப் பாதுகாவல் ஆணையாளர் நாயகத்தினால்  கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிசாத் பதியுதீனின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு அவரின் உதவியை நாடியுள்ளனர். 

அதற்கமைய கடந்த வெள்ளிக்கிழமை மாலை வவுனியா மாவட்ட  அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில்  இடம்பெற்ற அவசரக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக மாவட்ட  அரசாங்க அதிபர், உதவி  மாவட்ட செயலாளர், மேலதிக மாவட்ட வன உத்தியோகத்தர், உதவி மாவட்ட வன உத்தியோகத்தர், வவுனியா வட்ட வன உத்தியோகத்தர், வவுனியா, வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலாளர்கள், மாவட்ட கமநல உதவி ஆணையாளர், ஆகியோர் கலந்துகொண்டதுடன் அப்பகுதியை விடுவிப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அரச அதிகாரிகளுக்கு அமைச்சரினால் பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும்  4 ஆம்  திகதி அப்பகுதியைச் சென்று பார்வையிட்டு களப்பரிசோதனை செய்வதற்கு விஷேட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு காட்டுப்பிரதேசமாக காணப்பட்டு தற்போது காடுகள் அழிக்கப்பட்டு விவசாயம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்து வனத்திணைக்களத்திற்கு அச்சுறுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

வனத்திணைக்களத்திற்கு அமைச்சராக ஜனாதிபதியே காணப்படுகின்றார் இலங்கையில் 32 வீகிதாசாரத்தில் நிலப்பகுதிகளில் காடுகளை அதிகரிப்தற்கு பிரயச்சித்தம்  மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் காடுகள் அழிக்கப்பட்டு சட்டவிரோத குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு வருகின்றமைக்கு ஜனாதிபதி தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் இராசேந்திரன்குளம் பகுதியிலுள்ள பொதுக்கள் தெரிவிக்கின்றனர்.

http://www.virakesari.lk/article/41055

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.