Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரியை மகிந்த உறுதிப்படுத்துவாரா? ஹரிம் பீரிஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரியை மகிந்த உறுதிப்படுத்துவாரா?

 

அக்டோபர் பிற்பகுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சர்ச்சைக்குரிய முறையில் பதவி நீக்கப்படுவதற்கு முன்னதாக இலங்கையில் அரசியல் விவாதத்தின் கவனம்  பொதுவில் அடுத்து நடைபெறவேண்டிய ( அடுத்த வருடம் இந்த நேரத்தில் அதற்கான அறிவிப்பு அனேகமாக  வெளியிடப்பட்டிருக்கும்) தேசியத் தேர்தலான ஜனாதிபதி தேர்தல் மீதே குவிந்திருந்தது.

mahinda_ranil.jpg

கடந்த பெப்ரவரியில் உள்ளூராட்சி தேர்தலில் பெருவெற்றியைப் பெற்றதைப் போன்று மீண்டும் சாதித்துக்காட்ட முடியும் என்ற நம்பிக்கையில் கூட்டு எதிரணியினர் மாகாணசபைத் தேர்தல்களைப் பற்றி ஆரவாரமாகப் பேசினார்கள். தங்களின் செல்வாக்கு பலவீனமாக உள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தவிர, ஏனைய மாகாணங்களில் தாங்கள் பெரும் செல்வாக்கைக் கொண்டிருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.ஆனால், பொதுவில் அரசியல் சமுதாயத்தின் கவனம் ஜனாதிபதி தேர்தல் அரசியலின்  மீதே இருந்தது. அதன் ஊக்கத்தில்தான் பிரதமர் பதவியில் மாற்றம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது போலும். இதை விக்கிரமசிங்கவே அரசியல் நெருக்கடியின் ஆரம்பக்கட்டத்தில் இந்திய செய்தியாளர் ஒருவருடனான நேர்காணலின் போது கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

 ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ராஜபக்சாக்களுக்கு இருக்கின்ற பிரச்சினை நன்கு தெரிந்ததே.மகிந்த ராஜபக்சவினால் மூன்றாவது தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியாது.அரசியலமைப்பு அதற்கு இடமளிக்காது. ஜனாதிபதி சிறிசேன இரண்டாவது பதவிக்காலத்தின் மீது கண்வைத்திருக்கிறார் என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது.ஆனால், ராஜபக்ச -- சிறிசேன கூட்டணியைப் பொறுத்தவரை வாக்காளர் செல்வாக்கில் ஆதிக்கம் செலுத்துவது மகிந்த ராஜபக்சவும் அவரது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுமே எனாபது வெட்டவெளிச்சமானது.

பெப்ரவரி உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் தேசியரீதியான வாக்குகளில்  சுமார் 45 சதவீதமானவை ராஜபக்ச அணிக்கே கிடைத்திருக்கிறது. சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெறுமனே 13 சதவீத வாக்குகளையே பெறக்கூடியதாக இருந்தது.அதனால், ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை மகிந்த ராஜபக்சவே தீர்மானிப்பார் என்பதில் சந்தேகமில்லை.அவர் தனது சகோதரர் கோதாபய ராயபக்சவை வேட்பாளராக நியமிப்பாரா அல்லது தனது மூத்த மகன் நாமல் நாட்டின் அதியுயர் பதவிக்கு போட்டியிடக்கூடிய வயதை அடையும்வரைக்கும்வரை --  2025 வரை மைத்திரியை ஜனாதிபதியாக்குவதற்கு விரும்புவாரா?

ஆனால், பிரதமர் பதவியில் மாற்றம் வந்த பிறகு ராஜபக்சவும் பொதுஜன பெரமுனவும் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்றே கோரிக்கை விடுத்துவருவதைக்காணக்கூடியதாக இருக்கிறது.வாக்காளரின் ஆதரவைப் பரீட்சிப்பதற்கான முக்கிய களமாக இப்போது ஜனாதிபதி தேர்தலை விடுத்து பாராளுமன்றத் தேர்தலை அவர்கள் நோக்குகிறார்கள்.அந்த தந்திரோபாயம் தேரதல் வெற்றியைப் பெற்றுத் தரக்கூடிய தலைவராக மகிந்த ராஜபக்சவை முன்னிறுத்துவதற்கு வழிவகுக்கும்.இதனால் 2019 பிற்பகுதியில் நடத்தப்படவேண்டியதாக இருக்கும் ஜனாதிபதி தேர்தல் அரசியல் ரீதியில் இரண்டாம்பட்ச முக்கியத்துக்கு அல்லது அதையும்விட குறைந்த முக்கியத்துக்கு தள்ளப்பட்டுவிடும். உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது நாட்டில் மிகப்பெரிய மக்கள் செல்வாக்குத் தளத்தைக்கொண்ட கட்சியாக தற்போது விளங்கும் பொதுஜன பெரமுனவுக்கு பாராளுமன்றத் தேர்தல் வாய்ப்பானதாகவும் இருக்கும். சுதந்திர கட்சியின் ஆதரவுடன் சேர்ந்து பொதுஜன பெரமுன பெரும்பான்மை  நாட்டில் பெரும்பான்மை ஆதரவைக்கொண்ட  கொண்ட கூட்டணியாக அது இருக்கும் எனலாம்.

ஆனால், ராஜபக்சவின் அரசியல் திட்டத்தின் தேர்தல் பலவீனத்தை ஒரு ஜனாதிபதி தேரதல் அம்பலப்படுத்தும்.அதாவது அந்த திட்டம் பெருமளவுக்கு சிங்கள தேசியவாத செய்தியைக்கொண்டதாக சிங்கள வாக்குத் தளத்தையே கவருவதாக இருக்கிறது.இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் மத்தியில் போதுமான ஆதரவை ராஜபக்சாக்கள்  பெறத்தவறுகிறார்கள்.அதனால் எப்போதுமே ஜனாதிபதி தேர்தல்களில் அவர்களின் முயற்சிகள் சிக்கலானவையாக அமைந்துவிடுகின்றன. 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் நடந்து அதுவே.2005 ஜனாதிபதி தேரதலிலும் மகிந்த ராஜபக்ச மிகக்குறுகிய பெரும்பான்மை வாக்குகளுடனேயே வெற்றியடையக்கூடியதாக இருந்தது.ஜனாதிபதி சிறிசேனவின் சுதந்திர கட்சி ஆதரவாளர்கள் இதை குறிப்பாக சுட்டிக்காட்டுகிறார்கள்.அதாவது சிறுபான்மைச் சமூகங்கள் மத்தியில் சிறிசேனவுக்கு ஆதரவு இருக்கிறது.அந்தச் சமூகங்களின் தலைவர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவராக அவர் இருப்பதால் சிங்களவர் அல்லாத சமூகங்களிடமிருந்து குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெறுவதற்கான வாய்ப்பைக்கொண்டவராகவும் இருக்கிறார்.

       ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் பிரச்சினை இருக்கிறது.அவர்களது வேட்பாளர் தேர்தலில் வெற்றிபெறவேண்டுமானால், கட்சிக்கு வெளியில் இருந்து ஜே.வி.பி. மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் உள்ளார்ந்தமான ஆதரவு தேவை.இத்தகைய ஆதரவு 2015 தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளராக சிறிசேன போட்டியிட்டபோது கிடைத்தது.ஐக்கிய தேசிய கட்சியின் நீண்டகாலத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசியல் உயர் வர்க்கத்துக்கு ஏற்புடையவராக இருப்பாரா? வாக்காளர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெறக்கூடிய ஒரு ஜனாதிபதி வேட்பாளராக அவர் விளங்குவாரா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

      அதேவேளை, புதிய ராஜபக்ச அரசாங்கம் போதுமான பாராளுமன்ற ஆதரவு இல்லாமல் ஒப்பீட்டளவில் நெருக்கடிக்குள்ளேயே இருக்கிறது.தங்களுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஒரேயளவு ஆசனங்களே பெரும்பாலும் (101) பாராளுமன்றத்தில் இருப்பதாக கூட்டு எதிரணி/ பொதுஜன முன்னணியினர் சுட்டிக்காட்டுகிறார்கள்.எஞ்சிய ஆசனங்கள் ஜே.வி.பி.யிடமும் தமிழ் தேசிய கூட்டமைப்பிடமும் இருக்கின்றன.ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்படுவதற்கு முன்பிருந்த நிலைவரத்தை பாராளுமன்றத்தில் பேணுவதற்கு இவ்விரு கட்சிகளினதும் பலம் உதவுகிறது.குறிப்பாக ராஜபக்ச மீண்டும் நிறைவேற்று அதிகார பதவிக்கு திரும்புவதை எதிர்ப்பதில் ஜே.வி.பி.முன்னணி பாத்திரமொன்றை வகித்துக்கொண்டிருக்கிறது.இதை தினேஷ் குணவர்தன அண்மையசெய்தியாளர் மகாநாடொன்றில் சுட்டிக்காட்டினார்.மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ( மீண்டும்) நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றில் தோற்கடிக்கப்பட்டாலும்  ஐக்கிய தேசிய கட்சியும் கூட சிறுபான்மை அரசாங்கம் ஒன்றையே அமைக்கவேண்டியிருக்கும்.குறுகிய காலஅரசாங்கமொன்றில் கனிஷ்ட பங்காளிகளாகுவதற்கு ஜே.வி.பி.யோ கூட்டமைப்போ முனவரப்போவதில்லை என்று குணவர்தன கூறினார்.

       ஆனால், ஜே.வி.பி.யும் கூட்டமைப்பும் எடுத்திருக்கும் அரசியல் நிலைப்பாடு கோட்பாட்டின் அடிப்படையிலானது.அதனால்  அவர்கள் தற்போதைய  நெருக்கடியில் அரசியல் நெறிமுறையைப் பின்பற்றுகின்றவர்களாக ஒரு மதிப்புமிக்க அந்தஸ்தை தமதாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அக்டோபர் 26 க்கு முன்னர் இருந்த நிலைவரம் மீதான அவர்களின் பற்றுறுதி அல்லது பிரதமராக விக்கிரமசிங்கவையே கருதும் நிலைப்பாடு 2015 ஆகஸ்ட் பொதுத்தேர்தல் மக்கள் ஆணையின் மீதான நம்பிக்கையின் விளைவானது.அந்த தேரதலில் பாராளுமன்றத்தில் கூடுதல் ஆசனங்களைக்கைப்பற்றிய தனிக்கடசியாக ஐக்கிய தேஞிய கட்சியே வந்தது.மேலும் 2015ஜனாதிபதி தேர்தலில் மக்கள் மகிந்த ராஜபக்சவை நிராகரித்தார்கள்.அவரது ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள், அதிகார துஷ்பிரயோகம்,ஆகியவற்றையே சிறிசேனவைப் பொதுவேட்பாளராக நிறுத்திய எதிரணியினர் பிரசாரங்களில் பிரதானமாக மக்கள் முன் கொண்டுசென்றனர்.அதனால் மக்கள் ஆணையின் கோட்பாடுகளின் பிரகாரம் நோக்குகையில், 2015 ஆம் ஆண்டில் இரு தடவைகள் ( ஜனாதிபதி தேர்தலிலும் பிரதமர் வேட்பாளராக பொதுத் தேர்தலிலும்) தோற்கடிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்கு சிறிசேனவுக்கு எந்த அடிப்படையுமே கிடையாது.

     ஒரு வெள்ளிக்கிழமை இரவுப் பிரதமர் நியமனம், பாராளுமன்றம் இடைநிறுத்தம், பாராளுமன்றத்தைக் கலைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி, அதை இடைநிறுத்தி உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு, அதைத் தொடர்ந்து பாராளுமன்றம் கூட்டப்பட்ட பிறகு சபைக்குள் அரங்கேறிய ராஜபக்ச அணியின்  அமளிதுமளிகள், அரசாங்க ஊடக நிறுவனங்களை முற்றுகையிட்டுப் பொறுப்பேற்றுக்கொண்ட கும்பல்களின் அடாவடித்தனங்கள், ராஜபக்சவின் முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற முக்கியமான குற்றச்செயல்கள் தொடர்பாக விசாரணை செய்துவந்த இரகசிய பொலிஸ் அதிகாரியின் இடமாற்றம் ( பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது) என்று தொடர்ச்சியாக இடம்பெற்ற சம்பவங்கள் எந்தக்கட்சியையும்சாராமல் நடுநிலையில் இருந்துகொண்டு அவ்வப்போதைய நிகழ்வுப்போக்குகளை அடிப்படையாக வைத்து வாக்களிக்கின்ற மக்கள் பிரிவினர்( மிதக்கும் வாக்குகள்) 2015 ஆம் ஆண்டில் ராஜபக்ச ஆட்சியைத் தூக்கியெறிய வைத்த காரணிகளை மீண்டும் சிந்தித்துப்பார்க்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஜனாதிபதி தேர்தல் வரை பலவீனமான ஒரு ராஜபக்ச அரசாங்கம் நீடிப்பதென்பது பொதுஜன பெரமுன/ சுதந்திர கட்சி கூட்டுக்கு உள்சவால்களையும் ஏற்படுத்தும் ஆபத்தும் இருக்கிறது.

 

http://www.virakesari.lk/article/45122

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.