Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

25,000 வீடமைப்பு திட்டத்திற்கு அனுமதி… ஆனால் பணமில்லை… டக்ளசினுடையதா, சுவாமிநாதனுடையதா அடுத்த குழப்பம் ஆரம்பிக்கலாம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

25,000 வீடமைப்பு திட்டத்திற்கு அனுமதி… ஆனால் பணமில்லை… டக்ளசினுடையதா, சுவாமிநாதனுடையதா அடுத்த குழப்பம் ஆரம்பிக்கலாம்!

December 17, 2018
01ee-696x392.jpg

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் இன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. மாலை 3 மணி தொடக்கம் 5 மணிவரை இடம்பெற்ற இந்த கூட்டம், வழக்கமான கூட்டங்களில் ஒன்றாகவே முடிவடைந்தது. செயலணியின் முன்னைய கூட்டங்களில் தீர்மானிக்கப்பட்டதைபோல, டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னதாக வடக்கு, கிழக்கில் தனியார் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாது என்பதை உணர முடிந்ததாக, இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட பல எம்.பிக்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான விசேட செயலணியின் கடந்த கூட்டங்களில் ஆராயப்பட்ட, திட்டமிடப்பட்ட விசயங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டவை எவை, அவற்றின் முன்னேற்றம் என்ன என்பது குறித்து ஆராயப்பட்டது. அத்துடன், வடக்கு கிழக்கில் மீள இயங்க வைக்கப்பட வேண்டிய தொழிற்சாலைகள் குறித்தும் முன்னர் ஆராயப்பட்டிருந்தது. இயங்காமலிருக்கும் தொழிற்சாலைகளை மீள இயங்க வைக்க தேவையான நடவடிக்கைகள் பற்றிய அறிக்கை தயாரிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. அந்தக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

வடக்கு கிழக்கு வீடமைப்பு குறித்து ஆராயப்பட்டது. இதன்போது, ஈ.பி.டி.பியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா- வடக்கு மீள்குடியேற்ற அமைச்சராக தான் பதவியேற்ற குறுகிய நாளில் 25,000 வீடமைப்பு திட்டம் குறித்த திட்டமொன்றை தயாரித்திருந்ததாகவும், அதன்படி வீடமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் கோரினார்.

ஜனாதிபதி அதற்கு சம்மதம் தெரிவித்தார். எனினும், தற்போது அரசிடம் நிதியில்லாததால், வரும் ஜனவரி மாதத்தின் பின்னர் நிதி ஒதுக்கீடு செய்து, திட்டத்தை ஆரமபிக்கலாம் என்றார்.

 

டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக பதவி வகித்தபோது, கையிலெடுத்த வீடமைப்பு திட்ட வரைபு முன்னைய மீள்குடியேற்ற அமைச்சின் திட்டம்.

நில விடுவிப்பு குறித்து ஆராயப்பட்ட போது, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் தலா 25,000 ஏக்கர் நிலத்தை விடுவித்துள்ளதாக இராணுவத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. கூட்டமைப்பின் எம்.பிக்கள் பலரும் அது குறித்து ஆட்செபணை தெரிவித்து பேசியிருந்தனர். கிழக்கு காணி விவகாரங்கள் குறித்து யோகேஸ்வரன் பேசினார். கிளிநொச்சி காணி விவகாரம் குறித்து சிறிதரன் பேசினார்.  “25,000 ஏக்கர் காணி விடுவித்ததாக கூறப்படுகிறது. கிளிநொச்சியில் எங்கெங்கு காணி விடுவிக்கப்பட்டது என்ற விபரத்தை இராணுவம் கூற வேண்டும்“ என வலியுறுத்தினார். ஆனால், அப்படி தனியான விபரத்தை இராணுவம் வெளியிடவில்லை.

ஏற்கனவே ஆளுனர் தலைமையில் நடந்த கூட்டத்திலும் இதே கோரிக்கையை முன்வைத்தும் பலன் கிடைக்கவில்லையென சிறிதரன் குறிப்பிட்டார். இதையடுத்து, கிளிநொச்சி காணி விவகாரம் குறித்து உடனடியாக கூட்டத்தை கூட்டி, விபரமான அறிக்கையை தனக்கு தரும்படி ஆளுனரிடம் உத்தரவிட்டார் ஜனாதிபதி.

 

காணி விடுவிப்பு குறித்த ஒவ்வொரு திட்டமும், செயற்பாடு நடைபெறுகிறது என்ற குறிப்பின் கீழேயே உள்ளது. அப்படியென்ன செயற்பாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என சுமந்திரன் கேள்வியெழுப்பினார்.

காணி விடுவிப்பு குறித்து தற்போதைய நிலைமையை அறிக்கையாக அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்கும்படி ஜனாதிபதி அதிகாரிகளையும், இராணுவ அதிகாரிகளையும் பணித்தார். இதனால், டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னதாக காணி விடுவிப்பு பூரணமடைய வாய்ப்பில்லையென்றே தெரிகிறது.

தொழிற்சாலைகளை பற்றிய பேச்சு ஆரம்பித்தபோது, பரந்தன் இரசாயன தொழிற்சாலை பற்றி சிறிதரன் கேள்வியெழுப்பினார். “பரந்தனில் இரசாயன தொழிற்சாலை இயங்குகிறதா இல்லையா?“ என கேள்வியெழுப்பினார். சம்பந்தப்பட்ட அதிகாரி அதற்கு நேரடியாக பதிலளிக்காமல், மழுப்பலாக பதிலளித்துக் கொண்டிருந்தார்.

இறுதியான ஜனாதிபதியிடம் அந்த கேள்வியை சிறிதரன் வினவ, “நாடாளுமன்ற உறுப்பினரின் கேள்விக்கு என்ன விடை?“ என ஜனாதிபதி கேட்டார்.

இயங்கவில்லையென அதிகாரி பதிலளித்தார். அப்படியானால், பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனம் என்ற குறிப்பிடப்பட்ட வாகனங்கள் கொழும்பில் பயணிப்பதை சுட்டிக்காட்டிய சிறிதரன், யுத்தம் முடிந்து இத்தனை வருடமாகியும் ஏன் தொழிற்சாலைகள் வடக்கிற்கு வரவில்லையென கேள்வியெழுப்பினார்.

இதன்போது குறுக்கிட்ட டக்ளஸ் தேவானந்தா- “கொழும்பில் இயங்குவதை நினைத்தாவது நீங்கள் சந்தோசப்பட வேண்டும். இவ்வளவு நெருக்கடிக்குள்ளும் அது இயங்குகிறது. இந்தியாவிலிருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, பிளீச்சிங் பவுடர் அங்கு தயாரிக்கப்படுகிறது“ என்றார்.

அதை என் வடக்கில் செய்ய முடியாதென சிறிதரன் கேள்வியெழுப்பினார்.

மாவை சேனாதிராசா பேச தொடங்கிய போது, உள்ளூர் கூட்டங்கள் என நினைத்தாரோ என்னவோ விடயத்திற்கு அப்பால்- வழக்கமான தனது பாணியில் நீண்டநேரம் நீட்டி முழங்கினார். அது கூட்டத்திலிருந்த பலரை கொட்டாவி வைக்க வைத்தது. எப்போது நிறுத்தப் போகிறீர்கள் என்பதை போல இரா.சம்பந்தன் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், மாவை விடவில்லை. ஒரு பிடி பிடித்தார்.

இன்றைய கூட்டத்தில் 26 விடயதானங்கள் ஆராய திட்டமிடப்பட்டிருந்தாலும், 13 விடயங்களே ஆராயப்பட்டன. 5 மணிக்கு சுதந்திரக்கட்சியினருடன் கலந்துரையாடல் இருப்பதால், ஜனாதிபதி கூட்டத்தை முடித்தார்.

ஜனாதிபதி செயலணியின் இன்றைய கூட்டமும், வழக்கமான கூட்டமொன்றாகவே முடிந்தது.

25,000 வீடமைப்பு திட்டம், சுவாமிநாதன் அமைச்சராக இருந்தபோது தயாரிக்கப்பட்டது, டக்ளஸ் தேவானந்தா அதை உரிமைகோருகிறார் என்ற அபிப்பிராயம் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருப்பதாக தெரிகிறது. இன்றைய கூட்டத்தில் இது குறித்து வெளிப்படையாக பேசாவிட்டாலும், எதிர்வரும் கூட்டங்களில் அதை கூட்டமைப்பினர் பேசலாமென தெரிகிறது.

 

http://www.pagetamil.com/28596/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.