Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கால­அ­வ­கா­சம் வழங்­கு­வ­தால்- நீதி கிடைத்து விடுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கால­அ­வ­கா­சம் வழங்­கு­வ­தால்- நீதி கிடைத்து விடுமா?

பதிவேற்றிய காலம்: Mar 13, 2019

இலங்­கைக்­குக் கால அவ­கா­சம் வழங்­கு­வது தொடர்­பா­கக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள விளக்­கம் ஏற்­றுக் கொள்­ளத்­தக்­க­தா­கத் தென்­ப­ட­வில்லை. கால­அ­வ­கா­சம் வழங்­கி­னால்­தான் பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் இலங்கை மீதான கண்­கா­ணிப்பு நீடித்­தி­ருக்­கு­ மெ­னக் கூறப்­ப­டு­வ­தை­ யும் ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை.

போர் ஓய்ந்து பத்து ஆண்­டு­கள் நிறை­வ­டை­கின்ற நிலை­யில் ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­க­ளுக்­குப் பொறுப்­புக் கூறு­வ­தி­ லி­ருந்து இலங்கை நழுவி வரு­வ­தையே காண முடி­கின்­றது. ஒவ்­வொரு கூட்­டத் தொட­ரி­லும் கால அவ­கா­சம் வழங்­கு­வது வாடிக்­கை­யா­கவே மாறி­விட்­டது. நடப்­புக் கூட்­டத் தொட­ரி­லும் பிரிட்­டன் தலை­மை­யில் நிறை­வேற்­றப்­ப­ட­வுள்ள தீர்­மா­னத்­தில் இலங்­கைக்கு இரண்டு வரு­டங்­கள் கால அவ­கா­சம் வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக நம்­ப­க­மா­கத் தெரிய வரு­கின்­றது. கூட்­ட­மைப்­புக்­குள் இலங்­கைக்­குக் கால அவ­கா­சம் வழங்­கப்­ப­டு­வது தொடர்­பாக முரண்­பாடு தோன்­றி­யுள்­ள­தை­யும் அவ­தா­னிக்க முடி­கின்­றது.

 

போர்க்குற்றம் என்பது
ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதொன்று
இறு­திப் போரின்­போது போர்க்­குற்­றங்­க­ளும் மனித உரிமை மீறல்­க­ளும் இடம்­பெற்­றமை தொடர்­பாக உரிய ஆதா­ரங்­க­ளு­டன் பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் கவ­னத்­துக்கு ஏற்­க­னவே கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. இவை தொடர்­பாக ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் கூட்­டத் தொடர்­க­ளில் ஆரா­யப்­பட்டு இலங்­கைக்கு எதி­ரான தீர்­மா­னங்­க­ளும் நிறை­வேற்றி வைக்­கப்­பட்­டன. ஆனால் இலங்கை இது தொடர்­பாக அலட்­டிக் கொள்­ள­வே­யில்லை. அரச தலை­வர் உள்­ளிட்ட தென்­ப­குதி அர­சி­யல்­வா­தி­கள் படை­யி­னர் மீதான எந்த விசா­ர­ணை­ யும் இடம்­பெ­று­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்­லை­யெ­னக் கூறி வந்­த­னர். பாதிக்­கப்­பட்ட தமி­ழர்­கள் தொடர்­பாக இவர்­கள் சிறி­தும் அக்­கறை காட்­ட­வில்லை.

முன்­னாள் அரச தலை­வ­ரான சந்­தி­ரிகா அம்­மை­யார் முன்­னாள் இரா­ணு­வத் தள­ப­தி­யான சரத் பொன்­சேகா, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோர் போர்க் குற்­றங்­கள் இடம்­பெற்­றதை உறுதி செய்­த­னர். போர்க்­குற்­றங்­கள் இடம்­பெற்­ற­தற்கு இதை­விட வேறு ஆதா­ரங்­கள் தேவை­யில்லை. சரத்­பொன்­சே­காவை அழைத்து விசா­ர­ணை­ களை மேற்­கொண்­டால் குற்­றச் செயல்­க­ளின் பின்­ன­ணி­யில் இருந்­த­வர்­கள் தொடர்­பான விவ­ரங்­க­ ளைத் துல்­லி­ய­மாக அறிந்­து­கொள்ள முடி­யும்.

ஆளுநரின் நியமனம்
சதிச் செயலா?
ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் கூட்­டத் தொட­ரில் அர­சின் சார்­பில் மூவ­ரைக் கொண்ட குழு­வொன்று செல்­ல­வுள்­ள­தாக அரச தலை­வர் கூறி­ யுள்­ளமை கவ­னத்­தில் கொள்­ளத்­தக்­கது. தமி­ழ­ரான வடக்கு ஆளு­நர் சுரேன் ராக­வன் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சரத் அமு­னு­கம, மகிந்த சம­ர­சிங்க ஆகிய மூவ­ருமே அந்­தக் குழு­வில் இடம்­பெற்­றுள்­ள­னர். வடக்கு ஆளு­ந­ரைத் தேர்ந்­தெ­டுத்­த­மைக்கு உள்­நோக்­கம் இருப்­ப­தா­கவே தெரி­கின்­றது. அவ­ரொரு தமி­ழர் என்­ப­தும் போர் இடம்­பெற்ற வடக்­கின் ஆளு­ந­ரா­கப் பதவி வகிக்­கி­றார் என்­ப­தும் குறிப்­பி­ டத்­தக்க அம்­சங்­க­ளா­கும். வெளி­நாட்டு அழுத்­த­மில்­லாத சூழ­லில் பிரச்­சி­னை க­ளுக்­குத் தீர்­வு­காண வேண்­டு­மென ஜெனி­வா­வில் வைத்து இவ­ரது வாயால் சொல்ல வைப்­பதே அரச தலை­வ­ரின் உள்­நோக்­க­மா­கும்.

ஆனால் ஜெனிவா அமர்­வில் போர்க்­குற்­றங்­கள் தொடர்­பா­கவோ அல்­லது தமி­ழர்­கள் எதிர்­கொண்ட பேர­ழிவு தொடர்­பா­கவே பேசு­வதை அரச தலை­வர் அறவே விரும்­ப­வில்­லை­ யென்­பது தெளி­வா­கத் தெரி­கின்­றது. ‘எமது பிரச்­சி­னை­களை நாமே பார்த்­துக் கொள்­ளு­கின்­றோம், பழை­ய­வற்றை எவ­ருமே கிளற வேண்­டாம்’ என்று அவர் கூறி­ய­தன் மூல­மாக அவ­ரது நோக்­கம் தெளி­வா­கவே தெரி­கின்­றது. போர் இடம்­பெற்று பத்து ஆண்­டு­கள் முடிவ­டைந்­தால் பழைய வடுக்­க­ளைக் கிள­று­வ­தன் மூல­மாக எவ்­வித பய­னு­மில்­லை­யெ­னக் கூறு­கின்ற அரச தலை­வர் இன்­ன­மும் இரண்டு ஆண்­டு­கள் கழிந்­து­விட்­டால் சக­ல­தை­யும் மறக்­கு­மாறு அறி­வுரை கூறு­வா­ரென எதிர்­பார்க்க முடி­யும்.

 

தமிழ்­மக்­க­ளின் ஏக பிர­தி­நி­தி­கள் என்ற வகை­யில் கூட்­ட­மைப்­பி­ன­ ருக்கு முக்­கி­ய­மான கட­மை­கள் உள்­ளன. புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பாக அவர்­கள் கொண்­டி­ருந்த நம்­பிக்கை தகர்ந்­து­போன நிலை­யில் மக்­க­ளுக்கு நம்­பிக்­கை­யூட்­டும் வகை­யில் செயற்­ப­ட­வேண்­டிய தேவை­யும் தற்­போது எழுந்­துள்­ளது. ஜெனி­வா­வில் இலங்­கைக்­குக் கால அவ­கா­சம் வழங்­கு­வ­தன் பின்­ன­ணி­யில் கூட்­ட­மைப்பு இருப்­ப­தாக மக்­கள் மத்­தி­யில் சந்­தே­கம் எழுந்­துள்ள நிலை­யில் அதை உறுதி செய்­வது போன்று சம்­பந்­தன் கருத்து வெளி­யிட்­டி­ருக்­கி­றார்.

ஐ.நா. தீர்­மா­னத்­தைக் குப்­பைத் தொட்­டி­யில் வீசா­மல் இருக்க வேண்­டு­மா­னால் இலங்­கைக்கு கால அவ­கா­சம் வழங்க­வேண்­டு­மென அவர் கூறி­யமை சரி­யா­கத் தெரி­ய­வில்லை. கால அவ­கா­சம் தொடர்ந்து வழங்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருந்­தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்­கவே மாட்­டாது. இலங்கை அரசு ஐ.நா. மட்­டு­மல்­லாது பன்­னாட்­டுச் சமூ­கத்­தை­யும் ஏமாற்­று­வ­தற்கு முயற்சி செய்­வதை நாம் முத­லில் புரிந்­து­கொள்ள வேண்­டும். அர­சின் கபட நோக்­கத்­தைப் புரிந்­து­கொண்டு அதை முறி­ய­டிப்­ப­தற்­கான முயற்­சி­களே கூட்­ட­மைப்­புக்கு இன்று தேவைப்­ப­டு­கின்­றது.

 

https://newuthayan.com/story/10/காலஅவகாசம்-வழங்குவ.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.