Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ஆடத்­தெ­ரி­யா­தவன் மேடை கோணல் என்­றானாம்': ஜனா­தி­ப­தியின் இன்­னொரு குத்­துக்­க­ரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'ஆடத்­தெ­ரி­யா­தவன் மேடை கோணல் என்­றானாம்': ஜனா­தி­ப­தியின் இன்­னொரு குத்­துக்­க­ரணம்

 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவின் ஆகப் பிந்­திய குத்­துக் க­ரணம், 19 ஆவது திருத்தச்சட்­டத்­துக்கு எதி­ராகத் தூக்­கி­யி­ருக்­கின்ற போர்க்­கொடி தான்.

ஆடத்­தெ­ரி­யா­தவன் மேடை கோணல் என்­றானாம், என்­பது பழ­மொழி. 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன, 19 ஆவது திருத்­தச்­சட்­டத்தை இல்­லாமல் செய்ய வேண்டும் என்று வெளி­யிட்­டி­ருக்­கின்ற கருத்து, அந்தப் பழ­மொ­ழியைத் தான் நினை­வு­ப­டுத்­து­கி­றது.

maithiri.jpg

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இன்­னமும் அவ்­வப்­போது முட்டி மோதிக் கொண்­டி­ருக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, அவ­ருக்கு முன்­பா­கவே இந்தக் கருத்தை முதலில் வெளி­யிட்­டி­ருந்தார்.

தற்­போ­தைய அர­சாங்கம், கடந்த நான்­கரை ஆண்­டு­களில் சரி­யாகச் செயற்­ப­டாமல் இருந்தால், அதற்குக் காரணம், 19 ஆவது திருத்­தச்­சட்டம் தான் என்றும், இந்த திருத்­தச்­சட்டம் கொண்டு வரப்­ப­டாமல் இருந்­தி­ருந்தால், இன்னும் நன்­றாக இந்த அர­சாங்கம் செயற்­பட்­டி­ருக்கும் என்றும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

ஜனா­தி­பதி பத­வியில் அவ­ரது நாட்கள் எண்­ணப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்ற நிலையில் – அந்தப் பத­வியின், அந்­தத்தில் வந்து நின்று கொண்டே, இந்தக் கருத்தை அவர் வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

அவர் இவ்­வாறு கூறி­யி­ருப்­ப­தற்குக் காரணம், இந்த ஆட்­சியின் மீதுள்ள வெறுப்­பு­களில் இருந்து தப்­பிப்­பதும், தன் மீதான விமர்­ச­னங்­க­ளுக்கு பொறுப்­புக்­கூ­று­வதில் இருந்து தப்பிக் கொள்­வதும் தான்.

மஹிந்த ராஜபக் ஷ கொண்டு வந்த 18 ஆவது திருத்­தச்­சட்டம் நாட்டில், சர்­வா­தி­கா­ரத்­த­னத்­தையும், மன்­ன­ராட்­சி­யையும் ஏற்­ப­டுத்­தி­ய­தாக கூறி­யுள்ள ஜனா­தி­ப­தியே, 19 ஆவது திருத்­தச்­சட்டம் கொண்டு வரப்­ப­டாமல் இருந்­தி­ருந்தால், நாடு இந்த நிலைக்கு வந்­தி­ருக்­காது என்று கூறி­யி­ருப்­பது வேடிக்கை.

18 ஆவது திருத்­தச்­சட்­டத்­தையும் விமர்­சித்துக் கொண்டே, 19 ஆவது திருத்தம் கொண்டு வரப்­ப­டாமல் இருந்­தி­ருந்தால். நன்­றாக இருந்­தி­ருக்கும் என்று கூறி­யி­ருப்­பதன் மூலம், 18 ஆவது திருத்­தச்­சட்­டத்தின் அதி­கா­ரங்­க­ளுக்கு அவர் ஏங்­கு­கிறார் என்­பது வெளிப்­பட்­டுள்­ளது.

19 ஆவது திருத்­தச்­சட்­டத்­தினால் தான், இரட்டை அதி­கார மையம் தோன்­றி­ய­தாக மக்கள் கரு­து­கின்­றனர் என பழியை மக்­களின் மீது போட்டு, நாட்டின் உறு­தி­யற்ற நிலைக்கு அதுவே காரணம் என்றும் முடித்­தி­ருக்­கிறார். அதா­வது ஆட்­சி­யா­ளர்­களில் தவ­றில்லை, ஆளும் முறையில் – அதா­வது ஆட்­சியைத் தீர்­மா­னிக்­கின்ற அர­சி­ய­ல­மைப்பில் தான் தவறு என்று முழுப் பழி­யையும் அர­சி­ய­ல­மைப்பின் மீது போட்­டி­ருக்­கிறார் ஜனா­தி­பதி.

நிறை­வேற்று அதி­கா­ரத்­துக்கு எதி­ராக குரல் கொடுத்து, நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி பத­வி­யையே இல்­லாமல் ஒழிப்பேன் என்று சூளு­ரைத்து, அதனை மக்­க­ளிடம் கொண்டு சென்று வாக்­கு­களைப் பெற்று ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வான மைத்­தி­ரி­பால சிறி­சேன இப்­போது, ஒற்றைத் தலை­மையின் கீழ் இருப்­பதே, நாட்­டுக்கு நல்­லது என்று கூறி­யி­ருக்­கிறார்.

முன்பு ஜனா­தி­ப­தி­யாக இருந்த சந்­தி­ரிகா குமா­ர­துங்க நிறை­வேற்று அதி­கா­ரத்தை முழு­மை­யாக அனு­ப­வித்­தவர். அவர், ஆட்­சியில் இருந்து வில­கிய பின்னர், அதற்­கெ­தி­ராக குரல் எழுப்­பு­கிறார்.  ஆனால், நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிப்­பதே தனது வாழ்நாள் இலட்­சியம் என்று ஆட்­சியில் அமர்ந்த மைத்­தி­ரி­பால சிறி­சே­னவோ, மீண்டும் அதே நிறை­வேற்று அதி­கா­ரத்தை தக்க வைத்துக் கொள்ள எத்­த­னிக்­கிறார்.

சந்­தி­ரிகா குமா­ர­துங்க, மஹிந்த ராஜபக் ஷ, மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகியோர், ஜனா­தி­பதித் தேர்­தல்­களின் போது, நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிப்­ப­தாகத் தான் வாக்­கு­றுதி கொடுத்­தனர். இவர்­களில் யாருமே, இந்த வாக்­கு­று­தியை தமது ஆட்­சிக்­கா­லத்தில் நிறை­வேற்­றி­ய­தில்லை.

சந்­தி­ரிகா நிறை­வேற்று அதி­கா­ரத்தை இழக்­காமல், பார்த்துக் கொண்டார். ஆனால், தனக்­கான அதி­கா­ரங்­களை அதி­க­ரிக்க முனை­ய­வில்லை. எனினும், பதவி வில­கிய பின்னர் அதற்­கெ­தி­ராக குரல் கொடுக்­கிறார்.

மஹிந்த ராஜபக் ஷவோ, நிறை­வேற்று அதி­கா­ரத்தை குறைப்­ப­தற்குப் பதி­லாக, தனக்­கான அதி­கா­ரங்­களை பெருக்கிக் கொண்டார்.

மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது அதி­கா­ரங்­களில் குறிப்­பிட்ட சில­வற்றை 19 ஆவது திருத்­தச்­சட்­டத்தின் மூலம் இழப்­ப­தற்கு துணிந்தார். நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழித்து விட்டே பத­வியில் இருந்து வில­குவேன், நான் தான் நிறை­வேற்று அதி­கா­ரத்தில் இருக்கும் கடைசி ஜனா­தி­பதி என்­றெல்லாம் கூறி விட்டு இப்­போது குத்­துக்­க­ரணம் அடித்து நிற்­கிறார்.

தனது பத­விக்­காலம் எப்­போது முடி­கி­றது என்று உச்­ச­நீ­தி­மன்­றத்­திடம் கேள்வி எழுப்­பி­னாரோ, அப்­போதே ஜனா­தி­ப­தியின் அதி­கார மோகம் வெளிப்­பட்டு விட்­டது,

அதற்குப் பின்னர், ஆட்­சிக்­க­விழ்ப்பின் போதும், அதற்குப் பின்னர், அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணாக அவர் நடந்து கொண்ட பல்­வேறு சந்­தர்ப்­பங்­க­ளிலும், மஹிந்த ராஜபக் ஷவைப் போன்றும், ஜே.ஆரைப் போன்றும் நடந்து கொள்ள முற்­ப­டு­வ­தாக விமர்­ச­னங்கள் எழுந்­தி­ருந்­தன.

இப்­போது அவர், 18 ஆவது, 19 ஆவது திருத்­தச்­சட்­டங்­களின் மீது முன்­வைத்­தி­ருக்­கின்ற விமர்­ச­னங்கள், ஜே.ஆர் காலத்து, அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்­தையே அவர் மேன்­மை­யா­ன­தாக கரு­து­கிறார் என்­பதை புரிந்து கொள்ள முடி­கி­றது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன், இணைந்து செயற்­பட முடி­யாமல் போன­தற்­கான பழியை அர­சி­ய­ல­மைப்பின் மீது போட அவர் முனை­கிறார். 19 ஆவது திருத்­தச்­சட்டம், ஜனா­தி­ப­திக்­கான அதி­கா­ரங்­களைக் குறைத்­தி­ருந்­தது.

அந்த அதி­காரக் குறைப்பே, தற்­போ­தைய ஆட்­சியின் குறை­பா­டு­க­ளுக்கு என்று அவர் நியா­யப்­ப­டுத்திக் கொள்­வதன் மூலம், தமது எல்லா தவ­று­க­ளையும், அர­சி­ய­ல­மைப்பின் மீது போட்டு விட்டு தப்­பிக்க முனை­கிறார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இவ்­வாறு பழியை அடுத்­தவர் மீது போட்டுத் தப்­பிக்க முனை­வது இதுதான் முதல்­முறை என்­றில்லை. 

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்­குதல் விட­யத்­திலும் அவர் தனக்குக் கீழ் இருந்த பாது­காப்பு அதி­கா­ரி­களின் மீது தான் பழியைப் போட்டார். தனக்கு எது­வுமே தெரி­யாது என்று நிரூ­பிக்க முனைந்தார். 

பாது­காப்பு விட­யத்தில் அவர் நிறை­வேற்று அதி­கா­ரங்­களை முழு­மை­யா­கவே பயன்­ப­டுத்­தினார். பாது­காப்புச் சபையை தன் விருப்­புக்கு ஏற்ப மாற்­றி­ய­மைத்தார். தான் விரும்­பிய போதே பாது­காப்புச் சபைக் கூட்­டங்­களை நடத்­தினார். 

அதில் பங்­கேற்­ப­வர்­க­ளையும் தானே தீர்­மா­னித்தார். பிர­த­ரையும், பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­ச­ரையும், பொலிஸ் மா அதி­ப­ரையும் கூட அந்தக் கூட்­டங்­களில் இருந்து விலக்கி வைத்தார்.

இவ்­வ­ள­வையும் செய்யும் நிறை­வேற்று அதி­கா­ரத்தைக் கொண்­டி­ருந்த ஜனா­தி­ப­திக்கு, ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தல்­களை தடுக்­கின்ற  வல்­லமை இருக்­க­வில்லை. இருக்கும் அதி­கா­ரங்­களைக் கொண்டே, நாட்டின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த முடி­யாத- உறு­திப்­ப­டுத்த தெரி­யாத ஒரு­வ­ரா­கவே மைத்­தி­ரி­பால சிறி­சேன இருந்தார்.

அப்­ப­டிப்­பட்ட நிலையில் ஜனா­தி­பதி, 19 ஆவது திருத்­தச்­சட்­டத்­தினால் தான் இந்த நிலை என்றும், ஒற்றை அதி­கார மையமே இருக்க வேண்டும் என்றும் கூறி­யி­ருப்­பது வேடிக்கை.

அதி­கா­ரங்­களை எங்கு - எப்­படிப் பயன்­ப­டுத்த வேண்டும் என்­பதை தீர்­மா­னிக்கும் சரி­யான தலைமை தான் முக்­கி­ய­மா­னது, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அந்த விட­யத்தில் சரி­யாகச் செயற்­பட்­டி­ருக்­க­வில்லை. 

தனக்­கான அதி­கா­ரங்­களை தெளி­வாக வரை­ய­றுத்துக் கொண்டு, நாட்டை நிர்­வ­கித்­தி­ருந்தால், ஈஸ்டர் ஞாயிறு அனர்த்­தங்­களைக் கூட அவர் தவிர்த்­தி­ருக்­கலாம்.

அங்­கு­மிங்­கு­மாக அதி­கா­ரங்­களை இழுத்துப் பிடித்து, நல்­லாட்சி என்று கூறி அமைக்­கப்­பட்ட அர­சாங்­கத்தை எதுவும் செய்ய முடி­யாத நிலைக்குக் கொண்டு வந்­தவர் ஜனா­தி­பதி.

அவர் எல்லா தவ­று­க­ளையும் இப்­போது அர­சி­ய­ல­மைப்பின் மீது போட்டு, தான் நல்ல பிள்­ளை­யாக வெளி­யே­றலாம் என்று எத்­த­னிக்­கிறார். 

சந்­தி­ரிகா, மஹிந்த போன்ற முன்­னைய ஜனா­தி­ப­திகள் அதி­கா­ரத்­துக்கு வந்த பின்னர், நிறை­வேற்று அதி­கா­ரத்தை தக்க வைக்க எந்­த­ள­வுக்கு முயன்­ற­னரோ, அவர்­களை விட தான் எந்­த­வ­கை­யிலும் குறைந்­த­வ­ரில்லை என்­பதை, உறுதி செய்­தி­ருக்­கிறார் மைத்­தி­ரி­பால சிறி­சேன.

மஹிந்­தவும், சந்­தி­ரி­காவும், தமது கட்­சியின் பெரும்­பான்மை பலத்­துடன் ஆட்­சியில் இருந்­த­வர்கள் என்­பதால், அவர்­க­ளுக்கு நிறை­வேற்று அதி­கா­ரத்தை தக்­க­வைப்­பது கடி­ன­மாக இருக்­க­வில்லை.

ஆனால், மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆட்­சிக்கு வந்­ததோ, ஐ.தே.க.வின் துணை­யுடன். அவ­ரது கட்­சிக்கும் பல­மில்லை. இப்­ப­டி­யான நிலையில் அவரால், தனது அதி­கா­ரத்தை வலுப்­ப­டுத்த முடி­ய­வில்லை.

ஒரு­வேளை, மஹிந்­த­வுக்கு இருந்­தது போன்ற மூன்றில் இரண்டு தனிப் பெரும்­பான்மை பலம் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு இருந்­தி­ருந்தால், அவர் இப்­போது, 20 ஆவது திருத்தச் சட்­டத்தைக் கொண்டு வந்து 18 ஆவது திருத்­தச்­சட்­டத்தை விட மோசமான ஒன்றையே கொண்டு வந்திருக்கக் கூடும்.

தான்தோன்றித்தனமாகச் செயற்படும், வகையிலான அதிகாரங்களை ஒழிக்கவே 19 ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டது. சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட பல சாதகமான, ஜனநாயக பூர்வமான விடயங்களை இதன் மூலம் தான் சாதிக்க முடிந்தது. 

இந்தநிலையில், தமது தவறுகளை நியாயப்படுத்தவும், பலவீனங்களை மறைக்கவும், 19 ஆவது திருத்தச்சட்டத்தின் மீது பழியைப் போடுவது நியாயமற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வரும் போது, உள்நாட்டிலும், உலகளாவிய ரீதியிலும், எந்தளவுக்கு உயர்ந்த நிலையில் மதிக்கப்பட்டாரோ, அந்த நிலையில் அவர் பதவியில் இருந்து விலகிச் செல்லப் போவதில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

அவரது பெயரையும் புகழையும் கெடுத்துக் கொள்வதற்கு வேறு யாரும் வரத் தேவையில்லை, அவரே அதனை செய்து கொள்ளுவார் என்பதை, கடந்த ஒரு ஆண்டு காலத்தில் அவரே நிரூபித்து விட்டார்.   


சத்ரியன்

 

https://www.virakesari.lk/article/59417

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.