Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் சூதாட்டத்தில் பலிக்­க­டாக்­க­ளாகும் அப்­பா­விகள்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் சூதாட்டத்தில் பலிக்­க­டாக்­க­ளாகும் அப்­பா­விகள்...

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் பிரச்­சினை 10 ஆண்­டு­களைத் தாண்­டியும், எந்த முடிவும் இன்றித் தொட­ரு­வதைப் போலவே, இதனை வைத்து அர­சியல் நடத்­து­கின்ற போக்கும் தொடர்ந்து கொண்டு தான் இருக்­கி­றது.

இலங்­கையில் காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான போராட்­டங்கள் முதலில் தொடங்­கப்­பட்­டது வடக்கில் அல்ல. தெற்கில் தான்.

1971 ஜே.வி.பி கிளர்ச்­சியின் போதும், 1987- 1990 வரை­யான இரண்­டா­வது ஜே.வி.பி கிளர்ச்­சியின் போதும், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்கை இலட்­சத்­துக்கும் அதிகம்.

அப்­போது இரண்டு தரப்­பு­களும் தமக்கு எதி­ரிகள் எனக் கண்­ட­வர்­க­ளையும், சந்­தேகம் கொண்­ட­வர்­க­ளையும், காணாமல் ஆக்­கு­வதும், வீதி­களில் ரயர்கள் போட்டு எரிப்­பதும், மின்­கம்­பங்­களில் கட்டி கொல்­வதும் வழக்கம்.

பிரதி பொலிஸ்மா அதி­ப­ராக இருந்த பிரே­ம­தாச உடு­கம்­பொல, சந்­தேக நபர்­களை விசா­ரிக்கும் போது, காதுக்குள் ரெனோல்ட் பேனாவை அறைந்து கொலை செய்­த­தாக கூட குற்­றச்­சாட்­டுகள் உள்­ளன.

virakesari.jpg

கொடூ­ர­மாக கொல்­லப்­பட்ட ஆயி­ரக்­க­ணக்­கான ஜே.வி.பி.யினரும், சந்­தேக நபர்­களும், அப்­பாவி பொது­மக்­களும் இன்­னமும் காணா­மல்­போனோர் பட்­டி­ய­லி­லேயே இருக்­கின்­றனர்.

அன்­னையர் முன்­னணி என்ற பெயரில், காணா­மல்­போன தமது பிள்­ளை­க­ளுக்­காக முன்னர் தென்­ப­குதி தாய்மார் போராட்­டங்­களில் ஈடு­பட்­டனர். அந்த அமைப்­புக்கு மஹிந்த ராஜபக் ஷ, மங்­கள சம­ர­வீர போன்ற பல அர­சி­யல்­வா­தி­களின் ஆத­ரவும் அப்­போது இருந்­தது.

பின்னர் காலப்­போக்கில் அன்­னையர் முன்­னணி காணா­மல்­போ­னது.

முதலில் சுதந்­திரக் கட்சி ஆட்­சியில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் பற்றி மறந்து போனது, பின்னர், ஐ.தே.க ஆட்­சியில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் பிரச்­சி­னையும் காணா­ம­லே­போ­னது.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காக போராட்­டங்­களை நடத்­தி­ய­வர்கள் காலப்­போக்கில் வலு­வி­ழந்து போக, அந்தப் போராட்­டங்கள் நீர்த்துப் போயின.

இன்­றைய நிலையில் ஜே.வி.பி கிளர்ச்­சி­களின் போது தெற்கில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் பற்­றிய எந்த கரி­ச­னையும் இல்­லாத நிலையே காணப்­ப­டு­கி­றது. ஜே.வி.பியும் இது­பற்றிக் கரி­சனை கொண்­ட­தில்லை.

அதற்குப் பின்னர், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் பிரச்­சினை பூதா­கா­ர­மா­கி­யது யாழ்ப்­பா­ணத்தில் தான்.

1996ஆம் ஆண்டு யாழ்ப்­பாணக் குடா­நாடு படை­யி­னரின் கையில் வந்த பின்னர், சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவின் ஆட்­சிக்­கா­லத்தில், பெரு­ம­ள­வி­லான இளை­ஞர்கள் கைது செய்­யப்­பட்டு, கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்­டனர்.

சுற்­றி­வ­ளைப்­பு­களில் கைது செய்­யப்­பட்டு கொண்டு செல்­லப்­பட்ட நூற்­றுக்­க­ணக்­கான இளை­ஞர்கள், செம்­ம­ணியில் புதைக்­கப்­பட்­ட­தாக குற்­றச்­சாட்­டுகள் உள்­ளன.

அவ்­வாறு புதைக்­கப்­பட்­ட­வர்கள் சிலரின் எலும்­புக்­கூ­டுகள் மீட்­கப்­பட்ட போதும் காணாமல் ஆக்­கப்­பட்­ட­தாக கூறப்­படும் சுமார் 600 பேரின் கதி இன்­னமும் தெரி­யாது.

இரா­ணுவ நெருக்­க­டி­க­ளுக்கும் மத்­தியில், தமது பிள்­ளை­களைத் தேடித் திரிந்த பெற்­றோர்­களைக் கொண்டு, காணா­மல்­போ­னோரின் பெற்றோர் பாது­கா­வலர் அமைப்பு என்ற பெயரில் ஒரு அமைப்பு யாழ்ப்­பா­ணத்தில் தொடங்­கப்­பட்­டது.

அவ்­வா­றான ஒரு அமைப்பை தொடங்­கு­மாறு தானே ஆலோ­சனை கூறி­ய­தா­கவும், அந்த அமைப்பை உரு­வாக்­கி­ய­தா­கவும் டக்ளஸ் தேவானந்தா கூறி­யி­ருந்தார்.

இந்த அமைப்பு பல்­வேறு போராட்­டங்­களை நடத்­திய போதும், எந்த பயனும் கிட்­ட­வில்லை. காலப்­போக்கில் அந்த அமைப்பு பெரும்­பாலும் செய­லற்றுப் போனது.

2009 இல் போர் முடி­வுக்கு வந்த பின்னர், படை­யி­ன­ரிடம் சர­ண­டைந்து அல்­லது கைய­ளிக்­கப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வு­களும், போர்க்­கா­லத்தில் கடத்­தப்­பட்டும், கைது செய்­யப்­பட்டும் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வு­களும் இணைந்தும், புதிய அமைப்­பு­களை உரு­வாக்­கினர்.

மாவட்­டங்கள் தோறும் இந்த அமைப்­புகள் உரு­வாக்­கப்­பட்­டன. பல்­வேறு போராட்­டங்கள், வடக்கு, கிழக்­கிலும், கொழும்­பிலும் நடத்­தப்­பட்­டன. பல நாடு­களின் இரா­ஜ­தந்­திர தூத­ர­கங்­களும், இந்தப் போராட்­டங்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்­தன. பல உள்­நாட்டு, வெளி­நாட்டு அர­ச­சார்­பற்ற அமைப்­பு­களும் ஆத­ரவு கொடுத்­தன. அர­சியல் கட்­சி­களும் ஆத­ரவு அளித்­தன.

ஜெனீவா வரைக்கும் இந்தப் பிரச்­சினை கொண்டு செல்­லப்­பட்­டது. ஜெனீவா கூட்­டத்­தொ­டர்­களின் பக்க அமர்­வு­க­ளுக்கும் சென்ற, காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் தாய்மார் பலரும் தமது நிலையை விளக்கிக் கூறினர்.

ஆனால்,கடை­சியில் எந்தப் பதிலும் அவர்­க­ளுக்கு இன்று வரை கிடைக்­க­வில்லை.

காணாமல் போனோ­ருக்­கான பணி­யகம் அமைக்­கப்­பட்­டது.

அதன் மூலம் தீர்வு பெற்றுத் தரப்­படும் என்று கூறப்­பட்­டது, அந்தப் பணி­யகம் அமைக்­கப்­பட்ட பின்னர் பல அமர்­வுகள் நடத்­தப்­பட்­டன. அறிக்­கைகள் தயா­ரிக்­கப்­பட்­டன.

ஆனாலும், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களைக் கண்­ட­றி­வ­தற்­கான விசா­ர­ணை­க­ளையோ, தேடு­தல்­க­ளையோ அந்த அமைப்பு ஆரம்­பிக்­க­வில்லை.

அதை­விட, கடந்த பல மாதங்­க­ளாக இந்த அமைப்பு என்ன செய்து கொண்­டி­ருக்­கி­றது, என்­பதே யாருக்கும் தெரி­யாத நிலை காணப்­ப­டு­கி­றது.

ஆனால், பல நூறு நாட்­க­ளாக காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள் வவு­னியா, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, திரு­கோ­ண­மலை மாவட்­டங்­களில் போராட்­டங்­களை நடத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள். அவர்­களின் பிரச்­சி­னைகள் கண்­டு­கொள்­ளப்­ப­டாமல், கவ­னிக்­கப்­ப­டாமல் போய்க் கொண்­டி­ருக்­கி­றது.

இவ்­வா­றான போராட்­டங்­களில் ஈடு­பட்ட பலர், கடந்த 10 ஆண்­டு­களில் இறந்து போய் விட்­டனர். இன்னும் பலர் நட­மாட முடி­யாமல் இருக்­கின்­றனர். வேறு பலர் இந்தப் போராட்­டங்­களால் எதுவும் நடக்கப் போவ­தில்லை என்று முடிவு செய்து விட்டு, இருக்­கின்ற தமது பிள்­ளை­க­ளையோ, பேரப் பிள்­ளை­க­ளையோ வளர்த்து ஆளாக்­குவோம் என்று முடிவு செய்து விட்­டனர்.

இதனால், ஆயி­ரக்­க­ணக்­கா­னோரின் பங்­க­ளிப்­புடன் தொடங்­கப்­பட்ட காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான போராட்டம், இப்­போது வெறும், 10, 15 பேர் வந்­தாலே பெரிய விடயம் என்ற நிலைக்கு சுருங்கிப் போய் விட்­டது.

நீண்­ட­கா­ல­மாக இழு­ப­றிப்­பட்டு போனதால் சோர்ந்து போய், இந்தப் போராட்­டங்­களில் இருந்து பலரும் அந்­நி­யப்­பட்டுப் போன­தாக கூற முடி­யாது.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான போராட்­டங்கள். அர­சியல் மயப்­ப­டுத்­தப்­பட்டு, அலைக்­க­ழிக்­கப்­பட்­ட­தாலும் கூட பலர் விரக்­தியில் வெளி­யே­றினர் என்­பதே உண்மை.

யாழ்ப்­பா­ணத்தில் சில ஆண்­டு­க­ளுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மே தினப் பேர­ணியின் போது, முற்­ற­வெ­ளியில் சம்­பந்தன், சுமந்­தி­ரனின் உரு­வ­பொம்­மை­களை காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள் எரித்­தனர்.

அது, ஈ.பி.ஆர்.எல்.எவ்.வுக்கும், கூட்­ட­மைப்பு தலை­மைக்கும் இடை­யி­லான விரிசல் அதெி­க­ரித்­தி­ருந்த சூழலில் நிகழ்ந்த ஒன்று. அந்தச் சம்­ப­வத்­துக்குப் பின்னர், அனந்­தியும் கூட்­ட­மைப்பு தலை­மை­யுடன் முரண்­படத் தொடங்­கினர்.

அது­போன்றே, கடந்த வாரம் யாழ்ப்­பா­ணத்தில் தமிழ் அரசுக் கட்­சியின் 16 ஆவது மாநாடு நடந்து கொண்­டி­ருந்த போது, மண்­ட­பத்­துக்கு வெளியே வவு­னி­யாவில் இருந்து வந்த காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள் ஒரு போராட்­டத்தை நடத்­தினர். கூட்­ட­மைப்பு தலை­வர்­களை வசை­மாரி பொழிந்­தனர். கோசம் போட்­டனர்.

ஆனால் தமிழ் அரசு கட்­சியின் மாநாட்டில் பங்­கேற்ற ஒரு தலைவர் கூட அவர்­களைத் திரும்பிப் பார்க்­க­வு­மில்லை. ஏன் என்று கேட்­க­வு­மில்லை. போராட்டம் நடத்­திய தம்மை கண்­டு­கொள்­ளாமல், தலை­வர்கள் சென்ற போதும் அவர்கள் வசை­மாரி பொழிந்­தனர்.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் பிரச்­சி­னைக்கும் அர­சியல் கைதி­களின் பிரச்­சி­னைக்கும் தீர்வு காண்­ப­தாக வாக்­கு­றுதி கொடுத்து, பத­விக்கு வந்­ததால் தான், கூட்­ட­மைப்­பி­ன­ரிடம் தாம் கேள்­வியை எழுப்­பு­வ­தாக அவர்கள் கூறினர்.

தாங்­களே வாக்­க­ளித்து தெரிவு செய்­த­வர்கள் என்­பதால், கேள்வி கேட்­ப­தற்கு உரிமை உள்­ளது என்றும் கூறினர். ஆனால் இதே காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வு­களின் அமைப்பு, 2015இல் தேர்­தலை புறக்­க­ணிப்­ப­தாக, அறிக்கை வெளி­யிட்­டது நினைவில் இருக்­கலாம்.

தாங்கள் யாருக்கும் வாக்­க­ளிக்­க­மாட்டோம் என்று கூறி­ய­வர்­களே இன்று தாம் வாக்­க­ளித்து தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­க­ளிடம் நீதி கேட்­ப­தாக கூறி­யது வேடிக்கை.

காணாமல் ஆக்­க­கப்­பட்­ட­வர்­களைக் கண்­ட­றியும் போராட்டம் எந்­த­ள­வுக்கு அர­சியல் மயப்­ப­டு­த­தப்­பட்­டுள்­ளது என்­ப­தற்கு, இந்தப் போராட்­டமே உதா­ரணம்.

சம்­பந்தன், சுமந்­தி­ரனின் உரு­வ­பொம்­மை­களை எரிப்­பது, கட்­டி­யி­ழுத்து செருப்பு மாலை அணி­விப்­பது, அமெ­ரிக்க, ஐரோப்­பிய ஒன்­றிய கொடி­க­ளுடன் போராட்டம் நடத்­து­வது தான்- இந்த அமைப்­பி­னது வேலைத் திட்­ட­மாக மாறி­யி­ருக்­கி­றது,

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் பிரச்­சி­னைக்கும் கூட்­ட­மைப்­புக்கும் எந்த வகை­யிலும் தொடர்பு இல்லை. அதற்குப் பதி­ல­ளிக்கும் கடப்­பாடும் அவர்­க­ளுக்கு இல்லை.

காணாமல் ஆக்­கப்­பட்ட போது, ஆட்­சியில் இருந்த மஹிந்­த­வி­டமோ கோத்­தா­பய ராஜபக் ஷவி­டமோ நீதி கேட்டுப் போராடும் துணிச்சல் இப்­போதும் கூட யாருக்கும் கிடை­யாது.

மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும், ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும், சம்­பந்­த­னுக்கும், சுமந்­தி­ர­னுக்கும் எதி­ராக போராட்டம் நடத்­தி­ய­வர்கள் யாருமே, வடக்கு வந்த மஹிந்­த­வுக்கு எதி­ராக ஒரு­போதும் போராட்­டங்­களை நடத்­தி­ய­தில்லை.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­தற்கு பொறுப்­பாக இருந்­த­வர்கள் மீது கோபமோ அவர்­க­ளிடம் கேள்வி எழுப்பும் துணிவோ இல்­லாமல், அத­னுடன் தொடர்­பு­ப­டா­த­வர்­க­ளிடம் போய், காணாமல் போன­வர்­களை கண்­ட­றிந்து தரு­மாறு, போராட்­டங்­களை நடத்­து­வது எந்த வகையில் நியா­ய­மா­னது என்ற வாதமும் உள்­ளது.

இங்கு பிரச்­சி­னைக்­கு­ரிய விடயம் என்­ன­வென்றால், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வு­களை தவ­றாக வழி­ந­டத்தும் அர­சியல் தரப்­புகள் தான். பாதிக்­கப்­பட்ட அப்­பாவித் தாய்­மார்­களை அவர்கள் தமது சுய­லாப அர­சி­ய­லுக்­காக பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இதனைப் புரிந்து கொள்­ளாத அப்­பாவித் தாய்­மார்­களின் கண்­ணீ­ரையும், கத­ற­லையும், வாக்­கு­க­ளாக மாற்­று­வ­தற்கு பல்­வேறு தரப்புகளும் முயன்று கொண்டிருக்கின்றன. கூட்டமைப்பும் அதற்கு விதிவிலக்காக இருந்ததில்லை.

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை என்பது இலகுவில் தீர்க்கப்பட முடியாத ஒன்று. பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு, தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது நன்றாகவே தெரியும். ஆனால், அதனை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாராக இல்லாத நிலையிலேயே இருக்கிறார்கள்.

எய்தவன் இருக்க அம்பை நோவது போல, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தாம் நீதி கேட்க வேண்டிய இடத்தில் நீதியைக் கேட்காமல், தவறான இடத்தில் போய் நீதியைக் கேட்பது ஒருபோதும் பிரச்சினையை தீர்க்காது.

இது இந்தப் போராட்டத்தை மேலும் பலவீனப்படுத்தும். அந்நியப்படுத்தும். அதனைத் தான் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பலரும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் சூதாட்டத்தில் தாம் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளாமலேயே - வீதிகளின் அழுது புரண்டு கண்ணீரை சிந்துவதற்காக, அப்பாவி தாய்மார், அலைக்கழிக்கப்படுகிறார்கள். இது அவர்களின் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டதை விட, பரிதாபமான நிலை.

 

https://www.virakesari.lk/article/59934

  • கருத்துக்கள உறவுகள்

தென்பகுதியில் ஆயுதகிடங்கு வெடித்தபோது எவ்வளவு வேகமாக அரசு செயற்பட்டு நட்டஈடு/நிவாரணங்கள் வழங்கியது!

காணமற்போனோருக்கும் ஒரு தீர்வை அரசு முயன்றால் வழங்கலாம், அவர்களுக்கு என்ன நடந்தது யாரால் நடந்தது என்பதை வெளிப்படுத்தி வழங்கப்படும் நிவாரணமானது அவர்களின் குடும்பங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமளவு வழங்க வேண்டும்.

இவை எதற்கும் குரல் கொடுக்காமல்/நெருக்கடி கொடுக்காமல் அரசை கண்ணை மூடி ஆதரிப்பதனாலேயே த.தே.கூட்டமைப்பை/தமிழரசுக் கட்சியை மக்கள் தூற்றுகின்றனர். இது கூட புரியாமல் வெள்ளையடிக்கினம்! தேர்தல் வருவதாலயா இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.