Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று காஸ்மீர். நாளை அயோத்தி. ஆர். எஸ்.எஸ். கனவு நிறைவேறியது !

Featured Replies

பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரின் நிலை இனி என்னவாக இருக்கும்? - விளக்குகிறார் ஏ.ஜி.நூரணி

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமைகளைப் பறிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த உத்தரவு மற்றும் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்குவதற்கான மசோதா மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியது.

மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், 61 வாக்குகள் எதிராகவும் பதிவாகியிருந்தன.

இது தொடர்பாக அரசமைப்புச்சட்ட வல்லுநரும், அரசியல் பகுப்பாய்வாளர் மற்றும் வரலாற்று ஆய்வாளருமான ஏ.ஜி.நூரணியிடம் பிபிசி இந்தி சேவை செய்தியாளர் இக்பால் அகமது பேசினார்.

A G Noorani

கேள்வி: நரேந்திர மோதி அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு உங்கள் எதிர்வினை என்ன?

பதில்: இதுவொரு சட்டவிரோத நடவடிக்கை. இது ஒரு மோசடிக்கு நிகரான செயல். ஷேக் அப்துல்லாவுக்கு என்ன நடந்ததோ அதேதான் இப்போது நடந்துள்ளது. (ஷேக் அப்துல்லா காஷ்மீரின் முதல் பிரதமர். அப்போது காஷ்மீர் தலைவர் அப்படிதான் அழைக்கப்படுவார்) அவர் ஆகஸ்ட் 8ஆம் தேதி 1953ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். நேரு எடுத்த நடவடிக்கை அது. ஒரு ராணுவ நடவடிக்கை மூலம் அப்துல்லாவை கைது செய்துவிட்டு, பக்‌ஷு குலாம் முகம்மதுவை பிரதமராக நியமித்தார். அதேதான் இப்போதும் நடக்கிறது. அதனால்தான் காஷ்மீர் தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேள்வி: நரேந்திர மோதியின் இந்த நடவடிக்கைக்குப் பின் முற்றாக சட்டப்பிரிவு 370-ஐ ரத்து ஆகுமா?

பதில்: இது சட்டவிரோதமானது மற்றும் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான முடிவு. சட்டப்பிரிவு 370 மிகத்தெளிவாக உள்ளது. அதை யாராலும் முடிவுக்கு கொண்டு வர முடியாது. அதனை அரசமைப்பு பேரவையால் மட்டும்தான் முடிவுக்கு கொண்டுவர முடியும். ஆனால், 1956ம் ஆண்டு அரசமைப்பு பேரவை கலைந்துவிட்டது. ஆனால், மோதி அரசு 370ஐ முடிவுக்கு கொண்டுவர எதை எதையோ செய்கிறது. இரண்டு முன்னாள் அமைச்சர்கள் தெளிவாக சொல்லிவிட்டனர். 370ஐ ரத்து செய்வது, காஷ்மீருக்கு இந்தியாவுடனான உறவை ரத்து செய்வதாக அர்த்தம் என்றனர். காஷ்மீரை இரண்டாக பிரிப்பது ஜன சங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் கனவு. அதனை இப்போது நிறைவேற்றிவிட்டனர்.

கேள்வி: காஷ்மீர் தொடர்பான ஐ.நாவின் முன்மொழிவில் அரசின் முடிவானது ஏதேனும் தாக்கத்தை செலுத்துமா?

பதில்: இல்லை. அதில் எந்த தாக்கத்தையும் செலுத்தாது.

கேள்வி: ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டப்பேரவை, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரும் இந்தியாவின் பகுதி என ஏகமானதாக ஒரு முடிவை எடுத்தது. மோதி இன்று எடுத்துள்ள நடவடிக்கை அதில் ஏதேனும் தாக்கம் ஏற்படுத்துமா?

பதில்: சட்டப்பேரவை எடுத்த முடிவு சட்டபூர்வமானதாக இருக்கலாம். ஆனால், கள நிலவரம் வேறு. உங்களிடம் உள்ளதை நீங்கள் வைத்து கொள்ளுங்கள், எங்களிடம் உள்ளதை நாங்கள் வைத்து கொள்கிறோம் என நேருவே கூறி இருந்தார்.

கேள்வி: அரசியல் ரீதியாக என்ன சாதிக்க விரும்புகிறது இந்த அரசு?

பதில்: மிகவும் தெளிவாக தெரிகிறது. ஓர் இந்து ராஷ்ட்ராவை பா.ஜ.க ஏற்படுத்த முயல்கிறது.

கேள்வி: அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடுக்க முடியுமா?

பதில்: முடியும். ஆனால், நீதிமன்றம் எத்தகைய நடவடிக்கையை எடுக்கும் என்று தெரியாது. ஆனால், ஒன்றை மட்டும் என்னால் கூற முடியும் அரசின் திட்டம் அயோத்தி தொடர்பானதாக இருக்கும்.

கேள்வி: இந்த விவகாரம் தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

பதில்: இது சட்டவிரோதமானது. ஏமாற்று செயல். காஷ்மீரிகளை மட்டும் ஏமாற்றவில்லை. ஒட்டுமொத்த இந்தியாவையே அவர்கள் ஏமாற்றி இருக்கிறார்கள். கடந்த இரண்டு வாரமாக ஏதேதோ பொய் சொன்னார்கள். அரசு நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. இனி அரசு கூறுவதை யாரும் நம்பமாட்டார்கள்.

https://www.bbc.com/tamil/india-49238966

 

காஷ்மீர்: பாஜக கொண்டு வந்த சட்டத்திருத்தம் - உச்ச நீதிமன்றத்தால் உடைக்க முடியுமா?

இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ல் மாற்றம் கொண்டு வந்துள்ளது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியுமா? என்று சட்ட வல்லுநர்களிடம் கேள்வி எழுப்பினோம். அவர்கள் இதில் இரு வேறு கருத்துகளை தெரிவித்தனர்.

முன்னாள் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் மற்றும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், "உச்சநீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்கு தொடுக்க முடியாது" என்றார்.

"சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ- வில் மாற்றம் கொண்டு வரும் அரசின் முடிவானது நிர்வாகத் துறையின் வரையரையின்கீழ் வருகிறது. இதனை எதிர்த்து வழக்கு தொடுக்க முடியுமென நான் நினைக்கவில்லை. நீதிமன்றம் இதுகுறித்து விசாரிக்க முடியாது" என்றார்.

தற்காலிக ஏற்பாட்டில்தான் அரசு மாற்றம் கொண்டுவந்துள்ளது என விளக்கிய அவர், "ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கும் அனைத்து அடிப்படை உரிமைகளுக்கான பலன்களும் கிடைக்கும்," என்கிறார்.

"அதுமட்டுமல்ல இனி அனைவருக்கும் சமமான வசதிகள் கிடைக்கும்," என்று சிங் பிபிசியின் நீதிமன்ற செய்தியாளர் சுசித்ராவிடம் தெரிவித்தார்.

  • தொடங்கியவர்

இந்த கருத்தில் முரண்படும் முன்னாள் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் மற்றும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.சி. கெளசிக், "நிச்சயம் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும்," என்கிறார்.

"பாதிப்புக்கு உள்ளானதாக கருதும் தரப்பு இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும். ஆனால், யார் அல்லது எந்த அமைப்பு இந்தச் சூழலில் வழக்கு தொடுப்பார்கள் என என்னால் கூறமுடியாது. ஆனால், பின்னர் வழக்கு தொடுக்கலாம்" என்று பிபிசியிடம் தெரிவிக்கிறார் கெளசிக்.

எந்த உத்தரவினாலாவது யாராவது பாதிக்கப்பட்டால், அவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம். அரசமைப்புச் சட்டம் இதுகுறித்து தெளிவாக கூறுகிறது என்கிறார்.

பா.ஜ.கவின் முடிவை வரவேற்கிறார் கெளசிக். ஆனால், இதனை எப்போது நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் வழக்கறிஞராக இருந்த காலத்தில் அவரிடம் பணியாற்றிய சர்வதேச வழக்கறிஞர் சூரத் சிங், "இது வரலாற்று சிறப்புமிக்க நாள். 1950ஆம் ஆண்டிலிருந்து நிகழ்த்த முடியாத ஒரு விஷயம், இப்போது நிகழ்ந்திருக்கிறது," என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்கு தொடுக்க முடியுமா என்பது குறித்து பேச மறுத்த அவர், இதன் நேர்மறையான விஷயங்களை பேசலாம் என்றார்.

https://www.bbc.com/tamil/india-49241886

  • தொடங்கியவர்
We congratulate the government for this bold initiative which was very much necessary in national interest including the state of Jammu & Kashmir.
 
Everyone should welcome this notwithstanding any personal interests or political differences
 
Mohan Bhagwat
Suresh (Bhayyaji) Joshi
2_04_36_31_Jammu-and-Kashmir_1_H@@IGHT_277_W@@IDTH_500.jpg
 
1158315257057558528

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.