Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதித் தேர்தலுக்கு தாயராகும் காலத்தை அறிவித்தார் தேசப்பிரிய

Featured Replies

செப்டெம்பர் மாதம் மூன்றாம் வாரமளவில் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராக வேண்டும். ஆனால் அன்றைய தினம் வரையில் ஜனாதிபதித் தேர்தல் தான் நடத்தப்படும் என்று உறுதியாகக் கூற முடியாது என்று தெரிவித்த சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, சட்டத்திற்கமைய மாகாண சபைத் தேர்தலே நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

mahinda_desapiriya.jpg

தேர்தல்கள் ஆணைக்குழுவில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த மஹிந்த தேசப்பிரிய தெரிவித்ததாவது :  

சட்டத்திற்கமைய மாகாண சபைத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும். மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகவே இருக்கிறது. 

அத்தோடு செப்டெம்பர் மாதம் மூன்றாவது வாரத்திலிருந்து ஜனாதிபதித் தேர்தலுக்கு ஆயத்தமாக முடியும். எனினும் அது வரையில் ஜனாதிபதித் தேர்தல் தான் இடம்பெறும் என்று உறுதியாகக் கூற முடியாது. 

எவ்வாறிருப்பினும் எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதியிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் அதற்கு முன்னதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தேர்தலை நடத்த முடியும். 

இவற்றை விடவும் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கும் எந்த சந்தர்ப்பத்திலும் நாம் தயாராகவே இருக்கின்றோம். எந்த சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றத்தைக் களைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்ல முடியும். ஆனால் அவ்வாறு இடம்பெறாது என்ற நம்பிக்கை இருக்கிறது. 

அதனால் தான் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஆவணங்களையும் இரண்டு முறைமையிலும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக ஆவணங்களையும் தயாரித்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/62566

  • தொடங்கியவர்

செல்லுபடியாகும் வாக்குகளில் 50% பெறுபவரே வெற்றி

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் மூவர் அல்லது அதற்கு அதிகமானவர்கள் போட்டியிடுவார்களேயானால் செல்லுபடியாகும் வாக்குகளில் 50 வீதமான வாக்குகளை வெற்றிபெறும் வேட்பாளர் பெற்றுக்கொள்ளுவது அவசியமென தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அவரது முகநூலில் அவர் இந்த விடயங்களை தெளிவுபடுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக செல்லுபடியாகும் வாக்குகளிலிருந்து ஐம்பது வீதத்தை ஒருவர் பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு 50 வீத வாக்குகளை எவரும் பெறமுடியாத விடத்து மேற்கொள்ளப்படும் தீர்மானம் தொடர்பில் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு தேர்தல்கள்

ஆணைக்குழுவின் தலைவர் பதிலளிக்ைகயிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதற்கு தாம் இவ்வாறு பதிலளித்ததாகவும், அவர் தமது முகநூலில் தெரிவித்துள்ளார்.

முகநூலில் அது தொடர்பான கேள்வியும் பதிலும் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் செல்லுப்படியாகும் வாக்குகளில் 50 சதவீதத்தை பெற்றுக் கொள்வதற்கு எந்த வேட்பாளர்களினாலும் முடியாது போனால், மீண்டும் தேர்தல் நடத்தப்படுமா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்,

அவ்வாறு மீண்டும் வாக்களிப்புக்கான அவசியம் கிடையாது. மூன்று வேட்பாளர் அல்லது அதற்கு அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டால் மட்டுமே செல்லுப்படியாகும் வாக்குகளிலிருந்து 50 வீதத்தை பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியமுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் போது, வாக்காளர்கள் தமது விருப்பப்படி விருப்பு வாக்குகளை வேட்பாளருக்கு 1, 2, 3 என்ற இலக்கத்தை பிரயோகித்து விருப்பு வாக்கை அளிக்க முடியும்.

ஒரு வேட்பாளருக்கு மட்டுமே விருப்பு வாக்கு அளிக்க வேண்டுமானால் 1 என்ற இலக்கத்தை மட்டும் பிரயோகிக்க முடியும் அல்லது வழமை போன்று (X) எதிரே வாக்களிக்க முடியும். A, B, C, D, E என ஐந்து வேட்பாளர்கள் போட்டியிட்டால் அனைத்து செல்லுப்படியான வாக்குகளில் நூறு என நாம் கிரகித்துக் கொண்டால், அதன் போது அந்த வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட வாக்குகளை A = 40, B = 35, C = 15, D = 6, E = 4 என இந்த முறைப்படியே தெரிவு செய்யப்பட்டால், A மற்றும் B முதல் இரண்டு பேராவார்கள். ஏனைய C, D, E ஆகியோர் போட்டியிலிருந்து நீக்கப்படுவர்.

முதல் மட்டும் இரண்டாவது இடங்களை பெற்றுக் கொள்ளும் A மற்றும் B ஆகியோரின் வாக்குச் சீட்டில் புள்ளடியிடப்பட்டுள்ள விருப்பு வாக்கு தொடர்பில் கவனம் செலுத்தப்படமாட்டாது. அதனையடுத்து, 15 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ள C என்பவரின் வாக்குச் சீட்டு அனைத்தும் கவனத்தில் கொள்ளப்படும். C என்பவருக்காக புள்ளடியிட்டுள்ள வாக்குகள் அன்றி ஏனையவை கவனத்தில் கொள்ளப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.thinakaran.lk/2019/08/14/உள்நாடு/38687/செல்லுபடியாகும்-வாக்குகளில்-50-பெறுபவரே-வெற்றி

Edited by ampanai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.