Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்கொலைதாரியின் எச்சங்களை அகற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG_4865.jpg

தற்கொலைதாரியின் எச்சங்களை அகற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

கள்ளியங்காட்டில் புதைக்கப்பட்டுள்ள தற்கொலைதாரியின் எச்சங்களை அங்கிருந்து அகற்றுவதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வது என மட்டக்களப்பு மாநகர சபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் விசேட அமர்வு இன்று(புதன்கிழமை) மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.

இந்த அமர்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் க.சித்திரவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாநகர முதல்வரின் தலைமையுரையுடன் விசேட அமர்வு ஆரம்பமானது.

குறித்த குண்டுதாரியின் எச்சங்களை மாநகரசபையின் எந்த அனுமதியும் பெறப்படாமல் மாநகரசபையின் அதிகாரத்திற்குட்பட்ட இந்து மயானத்தில் புதைத்ததற்கு கண்டனம் தெரிவித்த மாநகர முதல்வர்,

குறித்த மனித எச்சங்களை அங்கிருந்து அகற்றுவதற்கு பொலிஸ் நிலையத்தில் எழுத்துமூலம் முறைப்பாட்டினை செய்து அதன் ஊடாக நீதிமன்ற கட்டளையினைப்பெற்று குறித்த எச்சங்களை அகற்றுவது தொடர்பான பிரேரணையை நிறைவேற்றுவதற்கு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது கள்ளியங்காட்டில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியின் தலை உள்ளிட்ட எச்சங்கள் புதைக்கப்பட்டதற்கு மாநகரசபை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர்.

அத்துடன் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பொலிஸார் நடாத்திய தாக்குதல்கள் குறித்தும் உறுப்பினர்கள் சிலர் உரையாற்றினர்.

இதன்போது மாநகரசபை உறுப்பினர்களில் பலர், குறித்த தற்கொலைதாரியின் எச்சங்களை இந்துமயானத்தில் புதைத்ததற்கு எதிரான கருத்துகளை முன்வைத்ததுடன் நேற்றை ஆர்ப்பாட்டம் தொடர்பாகவும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.

இதேநேரம் இந்த அமர்வின்போது மாநகரசபை உறுப்பினர் வே.தவராஜா உரையாற்ற முற்பட்டபோது சுயேட்சை குழுவின் மாநகரசபை உறுப்பினர் திலிப்குமார் குறுக்கிட்டதை தொடர்ந்து மாநகரசபை உறுப்பினர்களிடையே கடுமையான வாய்தர்க்கம் ஏற்பட்டது.

அதனையடுத்து மாநகரசபை முதல்வர் மற்றும் உறுப்பினர்களின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ந.திலிப்குமார், ஈபிடிபி கட்சியை சேர்ந்த சிவானந்தராஜா,தமிழர் விடுதலைக்கூட்டணியை சேர்ந்த வ.குபேரன் ஆகியோர் சபையினை விட்டு வெளியேறிச்சென்றனர்.

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக மாநகரசபையின் அனுமதியில்லாது இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட முஸ்லிம் பயங்கரவாதியின் உடல் எச்சங்களை சட்ட நடவடிக்கை ஊடாக மீண்டும் அதனை தோண்டியெடுத்து வேறு இடங்களில் புதைப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் இதன்போது தீர்மானத்தினை தெரிவித்தார்.

http://athavannews.com/தற்கொலைதாரியின்-எச்சங்க/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.