Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"இறுதியில் மைத்திரியின் ஆதரவு கோத்தாவிற்கே..!": கட்சி மாறிய எஸ்.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"இறுதியில் மைத்திரியின் ஆதரவு கோத்தாவிற்கே..!": கட்சி மாறிய எஸ்.பி

 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால இறுதித் தரு­ணத்தில் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­ப­ய­வுக்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்­குவார். அத்­துடன் மஹிந்த தலை­மை­யி­லான பரந்­து­பட்ட கூட்­ட­ணியில் இணை­வதே சுதந்­தி­ரக்­கட்­சிக்­குள்ள ஒரே தெரி­வா­கு­மென அக்­கட்­சி­யி­லி­ருந்து வெளி­யேறி பொது­ஜன பெர­மு­னவில் இணைந்­துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸா நா­யக்க தெரி­வித்தார்.

கேள்வி:- பொது­ஜன பெர­மு­னவில் திடீ­ரென இணைந்­த­மைக்­கான காரணம் என்ன? 

பதில்:- வர­லாற்­றினை எடுத்துப் பார்க்­கின்­ற­போது, ஐ.தே.கவின் சர்­வா­தி­கா­ரத்­திற்கு எதி­ராக கூட்­ட­ணிகள் அமை­கின்­ற­போது சுதந்­தி­ரக்­கட்சி தலைமை வழங்­கி­யுள்­ளது. தற்­போது சுதந்­தி­ரக்­கட்சி பொது­ஜன பெர­மு­ன­வாக உள்­ளது. 

ஆகவே, சர்­வா­தி­கார ஐ.தே.வை வீட்­டுக்கு அனுப்­பு­வ­தற்­காக அனைத்து சக்­தி­க­ளையும் ஓர­ணியில் திரட்டி முதற்­கட்­ட­மாக கோத்­தா­ப­ய­வுக்கு வலு­வான ஆணை­யுடன் நாட்டின் தலை­மைத்­து­வத்தை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­காக இந்த மாற்­ற­மாகும். கொள்கை அடிப்­ப­டையில் அது எமது கட­மை­யு­மாகும். எமது தாய்­வீட்­டுக்கு வந்­த­தைப்­போன்று உணர்­கின்றோம். 

virakesari.jpg

கேள்வி:- உங்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டப்­போ­வ­தாக அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் உங்­க­ளது பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரிமை கேள்­விக்­கு­றி­யா­கின்­றதே?

பதில்:- எனது உறுப்­பு­ரி­மைக்கு எந்­த­ வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை. மஹிந்த ராஜ­பக்ஷ பொது­ஜன பெர­மு­னவின் தலை­வ­ராக உள்ளார். மேலும் எமக்கு தேசிய பட்­டியல் உறுப்­பு­ரி­மையை வழங்­கி­யது மஹிந்த ராஜ­ப­க் ஷவே. ஆகவே அந்த விட­யத்தில் குழப்­ப­ம­டைய வேண்­டி­ய­தில்லை. மேலும் எந்­த­வி­த­மான தரு­ணங்­க­ளையும் எதிர்­கொள்­வ­தற்கு நான் தயா­ரா­கவே இருக்­கின்றேன். 

கேள்வி:- கோத்­தா­ப­ய­வுக்கு எதி­ராக பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களும் விமர்­ச­னங்­களும் உள்ள நிலையில் ஆட்­சிப்­பொ­றுப்பை ஏற்­பது சாத்­தி­ய­மா­குமா? 

பதில்:- நாட்டின் நிலை­மை­களை பார்க்­கின்­ற­போது எதிர்­கால சிந்­த­னையும் நிரு­வா­கத்­தி­றமை, தேசிய பாது­காப்பு உள்­ளிட்ட அனு­ப­வங்­களைக் கொண்ட வலு­வான தலை­மைத்­துவம் அவ­சி­ய­மா­கின்­றது. கோத்­தா­பய, யுத்­தத்­தின்­போதும் அதற்கு பின்­ன­ரான காலத்தில் அபி­வி­ருத்திச் செயற்­பா­டு­க­ளின்­போதும் செயற்­பாட்டு ரீதி­யாக தன்னை நிரூ­பித்­துள்ளார். ஆகவே விமர்­ச­னங்­க­ளுக்கு அப்பால் அனைத்­தின மக்­களும் அவரை ஆத­ரிப்­பார்கள்.

கேள்வி:- பொது­ஜன பெர­மு­னவில் நீங்கள் இணைந்­தமை சுதந்­தி­ரக்­கட்­சியின் பொரு­ளாளர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­ட­மையின் எதி­ரொ­லி­யாக கொள்ள முடி­யுமா?  

பதில்:- பொது­ஜன பெர­மு­னவின் தேசிய மாநாட்டில் நான் பங்­கு­பற்­றி­யி­ருந்தேன். என்­னுடன் மேலும் சில சுதந்­தி­ரக்­கட்­சியின் உறுப்­பி­னர்­களும் பங்­கெ­டுத்­தி­ருந்­தார்கள். பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கோத்­தா­பய ராஜ­பக் ஷ அறி­விக்­கப்­பட்­டதும் வாழ்த்து தெரி­விக்­கவே அங்கு சென்றேன். நான் அங்கு செல்லும் போது பத­வி­யைத்­து­றந்து விட்­டுத்தான் சென்­றி­ருந்தேன். அது­மட்­டு­மன்றி நானும், டிலானும், சரத் அமு­னு­க­மவும் எமது பத­வி­க­ளுக்கு புதி­ய­வர்­களை நிய­மிக்­கு­மாறும் கூறி­யி­ருந்தோம். அதன் பின்னர் நடை­பெற்ற மத்­திய குழு கூட்­டத்தில் புதிய நிய­ம­னங்கள் வழங்­கப்­பட்­டன. 

கேள்வி:- தேசிய மாநாட்டில் பங்­கேற்­பது குறித்த விட­யத்­தினை சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­வ­ரான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தீர்­களா? 

பதில்:- ஆம், ஜனா­தி­பதி வெளி­நாட்டில் இருந்­த­மையால் நான் அவ­ருடன் தொலை­பேசி ஊடாக கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தேன். அதன்­போது, தேசிய மாநாட்டில் பங்­கேற்க வேண்டாம் என்றும் தான் இலங்கை வந்­ததும் நேரில் சந்­திப்­ப­தா­கவும் அது­வ­ரையில் பொறு­மை­யாக இருக்­கு­மாறும் கூறினார். அச்­ச­ம­யத்தில், ஐக்­கிய தேசியக் கட்­சியின் கொள்­கை­ க­ளுக்கு எதி­ரான, இட­து­சா­ரித்­துவ கொள்­கை­களைப் பின்­பற்­று­கின்ற, எம்­முடன் இணைந்து பணி­யாற்­றிய தரப்­பி­னரின் முக்­கிய நிகழ்வில் பங்­கேற்­பதில் தவ­றில்லை என்று கூறினேன். 

மேலும் சுதந்­தி­ரக்­கட்சி பொது­ஜன பெர­மு­ன­வுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி வரு­கின்­றது. ஆகவே, நாம் ஏற்­க­னவே ஒன்­றாக இருந்­த­வர்கள். எதிர்­கா­லத்தில் ஒரு­மைப்­படப் போகின்­ற­வர்கள். அவ்­வா­றான நிலையில் இந்த மாநாட்டில் பங்­கேற்று ஜனா­தி­பதி வேட்­பாளர் அறி­விக்­கப்­ப­டு­கின்­போது அவரை அருகில் இருந்து வாழ்த்­து­வதில் தவ­றில்லை என்று எடுத்­து­ரைத்தேன். அத்­துடன் கலந்­து­ரை­யாடல் நிறை­வுக்கு வந்­தி­ருந்­தது. 

கேள்வி:- நீங்கள் உள்­ளிட்­ட­வர்கள் அமைச்­சுப்­ப­த­வியை துறந்த காலம்­முதல் பொது­ஜன பெர­மு­னவும், சுதந்­தி­ரக்­கட்­சியும் இணை­ய­வேண்டும் என்று கூறி­னாலும் தற்­போது வரையில் அது சாத்­தி­யப்­ப­டாது செல்­கின்­றதே? 

பதில்:- ஐக்­கிய தேசியக் கட்­சி­யு­ட­னான கூட்டில் சுதந்­தி­ரக்­கட்சி தொடர்ந்தும் இருக்­கு­மாயின் மக்­க­ளி­டத்­தி­லி­ருந்து முற்­றாக அந்­நி­யப்­ப­டுத்­தப்­பட்­டு­விடும் ஆபத்­துள்­ள­மையை நாம் அறிந்­தி­ருந்தோம். அதன் கார­ண­மா­கவே ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு எதி­ரான 

சக்­தி­யொன்றை ஒருங்­கி­ணைக்கும் செயற்­பாட்டில் ஈடு­பட்­டி­ருந்தோம். 

அதற்­க­மைய ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­யொன்றை கொண்­டு­வந்­தி­ருந்தோம். இதற்கு ஆரம்­பத்­தி­லி­ருந்து ஜனா­தி­பதி மைத்­திரி ஆத­ர­வ­ளித்­த­போதும் வாக்­கெ­டுப்பு நடை­பெறும் தரு­ணத்தில் அதில் எம்மை பங்­கேற்க வேண்டாம் என்று கூறினார். 

அந்த தீர்­மா­னத்­தினை நாம் எதிர்த்தோம். அமைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள் உள்­ளிட்ட 16 பேர் பத­வி­களை துறந்து அர­சி­லி­ருந்து வெளி­யே­றினோம். வாக்­கெ­டுப்­பிலும் பங்­கேற்றோம். பின்னர் கட்­சியில் தொடர்ச்­சி­யாக அங்கம் வகித்­துக்­கொண்டு ரணிலை வெளி­யேற்றி ஜனா­தி­பதி மைத்­திரி தலை­மை­யி­லான அர­சாங்­கத்­தினை ஸ்தாபிப்­ப­தற்கு முயற்­சி­களை எடுத்தோம். பலர் அவ்­வாறு செய்ய முடி­யாது என்று தான் கூறி­னார்கள். 

இருப்­பினும் மிக கடி­ன­மான அந்த பணியை முயற்­சித்­துப்­பார்த்தோம். எனது வீட்டில் தான் மைத்­தி­ரி­பா­லவும், மஹிந்­தவும் சந்­திப்­புக்­களை நடத்தி கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டு ஆட்­சியை மாற்­றி­னார்கள். இருப்­பினும் அந்த அர­சாங்­கத்­தினை தொடர்ந்தும் தக்­க­வைப்­பதில் எம்மால் வெற்­றி­பெற்­றி­ருக்க முடி­ய­வில்லை.

ஆனால் அந்த முயற்­சியின் பல­னாக பல நன்மைகள் கிடைத்­துள்­ளன. எதிர்க்­கட்­சித்­த­லைவர் பதவி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு கிடைத்­துள்­ளது. பொது­ஜன பெர­மு­ன­வுடன் பல தரப்­பட்ட அணிகள் இணைந்­துள்­ளன. சுதந்­தி­ரக்­கட்­சி­யு­ட­னான கலந்­து­ரை­யா­டல்கள் தொடர்ந்தும் இடம்­பெ­று­கின்­றன. 

கேள்வி:- கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெ­று­கின்­ற­னவே தவிர செயற்­பாட்டு ரீதி­யான கூட்­டி­ணைவு சாத்­தி­யப்­ப­ட­வில்­லை­யல்­லவா? 

பதில்:- அதற்கு கார­ணங்கள் உள்­ளன. சுதந்­தி­ரக்­கட்­சியில் சிலர் சஜித்­துடன் தொங்­கு­வ­தற்கும், சிலர் கரு­வுடன் தொங்­கு­வ­தற்கும், இன்னும் சிலர் ரணி­லுடன் தொங்­கு­வ­தற்கும் சிந்­திக்­கின்­றார்கள். இதன் கார­ண­மா­கத்தான் பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைந்து பரந்­து­பட்ட கூட்­ட­ணியை ஏற்­ப­டுத்தும் சூழல் தாம­தப்­பட்­டுக்­கொண்டு செல்கின்றது. 

இந்த நிலை­மை­களை முறி­ய­டித்து சுதந்­தி­ரக்­கட்­சி­யையும், பொது­ஜன பெர­மு­ன­வையும் ஒன்­றி­ணைப்­ப­தற்கு நான் உள்­ளிட்­ட­வர்கள் பல முயற்­சி­களை எடுத்­தி­ருந்தோம். இருப்­பினும் தாம­தப்­ப­டுத்­தல்கள் ஓய்ந்­த­பா­டில்லை. அவ்­வா­றான நிலை­மையில் தான் நாம் தீர்க்­க­மான முடி­வொன்­றுக்கு செல்ல வேண்­டிய சூழ­லுக்குள் தள்­ளப்­பட்டோம். எமது முடிவின் மூல­மா­வது சுதந்­தி­ரக்­கட்சி பொது­ஜன பெர­மு­ன­ வுடன் இணை­வதன் முக்­கி­யத்­து­வத்­தினை உணர்த்­து­வதே எமது நோக்­க­மாக உள்­ளது. 

கேள்வி:- சுதந்­தி­ரக்­கட்­சியின் தனித்­து­வத்­தினை பாது­காத்துக் கொண்டு தான் பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைந்­து­கொள்­ள­வேண்டும் என்று பொதுச் 

செ­ய­லாளர் கூறி­யுள்­ளாரே? 

பதில்:- தேசிய மாநாட்டில் பங்­கேற்­கா­த­வர்கள் அன்­றைய தினம் கோத்­தா­பய வழங்­கிய இராப்­போ­சன விருந்­து­ப­சா­ரத்­திற்கு வந்­தி­ருந்­தார்கள். கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர், கூட்­ட­ணியின் பொதுச்­செ­ய­லாளர் என அனை­வரும் வந்­தார்­களே. அவ்­வாறு வர­மு­டியும் என்றால் ஏன் தேசிய மாநாட்டில் பங்­கேற்க முடி­யாது. அர­சியல் யதார்த்­தத்­தினை புரிந்­து­கொள்­ளா­த­வர்­களால் எப்­படி கட்­சியைப் பாது­காக்க முடியும்.

கேள்வி:- சுதந்­தி­ரக்­கட்­சியில் நீண்­ட­ கா­ல­மாக செயற்­பட்டு வரு­வ­தோடு சிரேஷ்­டத்­து­வத்­தி­னையும் கொண்­டி­ருக்கும் உங்­க­ளைப்­போன்­ற­வர்கள் அதி­லி­ருந்து வெளி­யே­று­வதால் அக்­கட்­சிக்கு மேலும் நெருக்­க­டி­யான நிலை­மைகள் அல்லவா எழப்போகின்றன? 

பதில்:- நான் ஆரம்பத்திலிருந்து சுதந்திரக்கட்சியைச் சார்ந்தவன். சந்திரிகாவின் தீர்மானங்களால் அன்று கட்சியை விட்டு வெளியேறியிருந்தாலும் சொற்பகாலத்தில் மீண்டும் எனது கட்சிக்கே திரும்பி விட்டேன். தற்போது மிகுந்த கவலையுடன் அக்கட்சியிலிருந்து வெளியேறுகின்றேன். ஆனால் சுதந்திரக்கட்சியின் பெரும்பான்மை தற்போது பொதுஜன பெரமுனவில் தான் இருக்கின்றது. பெயர் வேறுபட்டாலும் உண்மையான சுதந்திரக்கட்சியில் தான் நான் இணைந்துள்ளேன். சுதந்திரக்கட்சியினர் நிபந்தனைகளை கைவிட்டு பொதுஜன பெரமுனவுடன் இணைய வேண்டும். அதுவே அவர்களுக்குள்ள ஒரே தெரிவாகும். 

கேள்வி:- ஐ.தே.கவிலிருந்து சஜித் வெளியேறினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடன் இணைவார் என்று கூறப்படுகின்ற நிலையில் மஹிந்த அணியுடன் இணைவார் என்ற நம்பிக்கை உங்களுக்கு இன்னமும் உள்ளதா? 

பதில்:- அவையெல்லாம் அனுமானங்களே. ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன இறுதியில் கோத்தாபயவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதோடு பொதுஜன பெரமுனவுடன் இணைந்து மஹிந்த ராஜபக் ஷவுடன் பரந்துபட்ட கூட்டணியை ஏற்படுத்துவார்.

நேர்­காணல்:- ஆர்.ராம்

 

https://www.virakesari.lk/article/63809

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.