Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலிக்கு இடம்மாறுமா கன்னியாகுமாரி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காலிக்கு இடம்மாறுமா கன்னியாகுமாரி?

-சி.இதயச்சந்திரன்-

வான் புலிகளின் தாக்குதல்கள் தொடரும் பொழுது புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழீழ செயற்பாட்டாளர்கள் மீதான தனிநபர் சார்ந்த கைதுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. இது பிரான்ஸில் ஆரம்பமாகி அமெரிக்கா, அவுஸ்திரேலியாவென நீட்சியுறுகிறது.

புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் தடை விதிக்கப்பட்டு தற்போது முதன்மையான செயற்பாட்டு நபர்கள் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர்.

பாதிக்கப்பட்ட தாயக உறவுகளின் அவல நிலையை நீக்குவதற்காக திரட்டப்பட்ட நிதி, விடுதலைப் புலிகளைச் சென்றடைவதாக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டை முன்வைத்தே இக்கைதுகள் இடம்பெறுகின்றன.

இவ்வகையான கைதுகளின் பின்புல அரசியலில், பேச்சுவார்த்தை மேடைக்கு தமிழர் தரப்பினை நகர்த்துவதற்கான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகவே கருத வேண்டும். தனிநபர் கைதுகளை மேற்குலகம் கையாளும் அதேவேளை, பக்கத்து நாடான இந்தியாவும் தன் பங்கிற்கு, தமிழக மீனவர் கடத்தல் விவகாரத்தை கையிலெடுத்து, மேலதிக அழுத்தங்களை தமிழகத் தரப்பின் மீது செலுத்த முற்பட்டது.

இங்கு இந்தியாவின் அதிரடி நகர்வுகளே, பாரிய திருப்பங்களை ஏற்படுத்தக்கூடிய சாத்தியப்பாடுகளை தாங்கி நிற்கிறது. வான் புலிகளின் கொலன்னாவ, முத்துராஜவெல மீதான விமானத் தாக்குதல் எதிர்மறையாக இந்திய உள்நுழைவிற்கான வாசலைத் திறக்குமென்று ஊகிக்கக் கூடியதாகவுள்ளது.

தனது பொருளாதார முதலீடுகளைப் பாதுகாக்க, இவ்வகையான நேரடித் தலையீட்டை இந்தியா மேற்கொள்ளும் போது, ஏனைய பிராந்திய நலன் பேண விழையும் சக்திகள், தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்த முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்படலாம்.

கொலன்னாவையில் இந்திய முதலீடு குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி வெளியிட்ட நலனடிப்படையில் அமைந்த கருத்து இங்கு முதன்மை பெறுகிறது. வேறொருவரும் உட்புக முன்பாக, தமது நுழைவினை, முதலீட்டு நலன்பேணல் அடிப்படையில் மேற்கொள்வது இலகுவாக இருக்கும்.

இலங்கையில் இந்தியாவின் பாரிய முதலீட்டு மையங்களில் ஒன்றாக திருமலை சீனன் குடாவிலுள்ள நிலத்தடி எண்ணெய் சேமிப்புக்குதங்களும் அமைகின்றன. சீனன்குடா குதங்கள், ஆசியப் பிராந்தியத்தின் எண்ணெய் விநியோக மையமாக அமையும் வாய்ப்புண்டு.

மத்திய கிழக்கில் காணப்படும் அரசியல் ஸ்திரமற்ற நிலை, எண்ணெய் சந்தையின் விலை ஏற்ற இறக்கங்களை சடுதியாக மாற்றமடையச் செய்கின்றது.

ஆசியாவிற்கான கடல்வழி விநியோகப் பாதையில் தடைகள் ஏற்படும் போது, வளர்ச்சியுறும் நாடுகளின் பொருளாதார நிலைமைகள் தேக்கமுறலாம். நீண்ட நோக்குப் பார்வையில் திருமலை எண்ணெய்க் கிணறுகளின் பங்களிப்பு, இந்தியாவின் பிராந்திய பொருளாதார ஆளுமைக்கு வலுச் சேர்க்கும் வகையில் துணை புரிகிறது.

ஆகவே, திருமலை, கொலன்னாவ, கொழும்புத்துறைமுக மையங்களின் பாதுகாப்பிற்கு, முதலீட்டு நலன்சார் அடிப்படையில், தனது இராணுவத்தை நேரடியாக நிலை கொள்ளச் செய்ய இந்தியா சில நகர்வை மேற்கொள்ளலாம். அவ்வகையான நகர்வை, தமிழர் நலனிற்கு எதிவை தொன்றாகக் கருத முடியாதெனவும் விளக்கங்கள் முன்வைக்கப்படும். பொருளாதார, இராணுவ கேந்திர மையங்களில், இந்திய இராணுவ பாதுகாப்பு தேவையானதொன்றாகவும் அரசினால் ஏற்றுக் கொள்ளப்படும்.

ஆயினும் சராசரிச் சிங்கள மக்கள், அரசின் இந்திய ஆதரவு நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டால் 1971 இல் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளை சுமந்து நிற்கும் ஜே.வி.பி. நிச்சயமாகத் தனது எதிர்ப்புணர்வினை வெளிப்படுத்தியே தீரும்.

இப்படியான இராணுவ காய் நகர்த்தலை இந்தியா மேற்கொள்ளுமாயின் வேறு சில காரணிகளும் அதற்கு ஏதுவாக அமையும். ஏனெனில் ஜனாதிபதி மஹிந்த விரும்பினால் கூட சீனா, பாகிஸ்தான் நாடுகளிடம் நேரடித் தலையீட்டை உருவாக்கும்படி வேண்டுகோளை விடுக்காதவாறு இந்திய நகர்வு தடுத்து விடும்.

நான்காம் கட்ட ஈழப்போரில் தனது மறைமுகமாக பங்களிப்பை அம் மூன்று இடங்களில் இருந்தவாறே வழங்கும் சந்தர்ப்பம் உருவாக்கப்படும். அத்தோடு வடகிழக்கு மீதான இராணுவத் தாக்குதலை அரச படையோடு இணைந்து நெறிப்படுத்தும் சாத்தியமும் உண்டு. அதிநவீன தொழில்நுட்பம் நிறைந்த ஆயுத தளபாடங்களை வழங்கினால், அவையனைத்தும் ஒரு கட்டத்தில் எதிரியின் கைக்குச் செல்லும் அபாயமும் ஏற்படலாம்.

சாதகமற்ற பின் விளைவுகளைத் தவிர்ப்பதற்கு, ஏதோவொரு வகையில் நேரடிக் களமிறங்கலையே இந்தியா விரும்பும்.

டெல்லிக்கு அறிவூட்டல் வழங்கும் 'இந்து" பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கமொன்று, இந்நகர்விற்கான அத்திவாரக் கற்களை நட்டு வைத்துள்ளது.

தமிழகம் பற்றிக் கவலை கொள்ளாமல், ஸ்ரீலங்கா தொடர்பான இராஜரீக அணுகுமுறைகளை டெல்லித் தலைமையே உருவாக்க வேண்டுமெனவும் காட்டமாகத் தெரிவித்து, 83 இலிருந்து 90 வரை புலிகளின் தளமாகத் தமிழகம் பயன்பாடடைந்த நிலையை மறுபடியும் உருவாக்காமல் இறுக்கமான நிலையொன்றை எடுக்க வேண்டுமென 'இந்து" கூறுகிறது.

ஸ்ரீலங்காவை அடிபணிய வைக்க, தமிழ்ப்போராளிக் குழுக்களை இந்தியா பயன்படுத்திய விவகாரத்தை 'இந்து" மறந்து விட்டது போல் தெரிகிறது. அதாவது 'றோ" விற்குத் தெரியாமல், ஈழ விடுதலை இயக்கங்கள் தமிழ்நாட்டில் தளமமைத்து விட்டார்களென்று சொல்கிறது.

படித்த போராட்ட இயக்கமொன்றின் குண்டுத் தாக்குதலிற்கான பொருளாதார இலக்குகளைத் (கொலன்னாவ உட்பட) தெரிவு செய்து, 80 களில் வழங்கிய இந்திய வெளிநாட்டு உளவு ஸ்தாபனத்தின் செயற்பாடுகள் பற்றி 'இந்து" அறிந்தும் அறியாமலிருக்கலாம். சிலவேளை அறியாமலிருப்பது கூட பத்திரிகைத் தர்மத்தை காப்பாற்ற உதவும்.

தமிழக காவல்த்துறைத் தலைமை அதிகாரி முகர்ஜியின் தீர்ப்பினை, கலைஞர் வழிமொழிந்தவுடன், தமிழகம் பற்றி அதிகமாக இனி அலட்டிக் கொள்ளத் தேவையில்லையென்கிற தொனியே 'இந்துவின்" கருத்துக்களில் எதிரொலிக்கிறது. ஸ்ரீலங்காவை நோக்கிய பாதையில் இனித் தடைகள் இல்லை. நிலைமை கட்டுக்கடங்காமல் போக முன், புலி எதிர்ப்பு நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்து, மஹிந்தவுடன் கைகோர்க்கும்படி கொள்கை வகுப்பாளர்களும், தமிழின விரோத சக்திகளும் கூக்குரலிடத் தொடங்கியுள்ளன.

புலி எதிர்ப்பு என்பதற்குமப்பால், முழுப் பிராந்தியத்தையும் தனது ஆளுமைக்குள் ஆட்படுத்தப்படுவதையே இந்தியாவின் மூலோபாயக் கருத்து நிலையாகக் கொள்ள முடியும்.

நால்வகைச் சக்திகளுடன் உறவாடும் ஸ்ரீலங்கா அரசின் தந்திர நகர்வுகளே, இந்தியா எதிர்கொள்ளும் பாரிய இராஜதந்திரச் சவாலாகவுள்ளது.

இந்நகர்வுகள் யாவும் விடுதலைப்புலிகளை மையப்படுத்தி அசைவதால், அதீத புலி எதிர்ப்பு வேடம் போட வேண்டிய நிர்ப்பந்தமும் இந்தியாவிற்கு உண்டு.

ஈழப் போராட்ட சக்திகளை அரவணைத்தபடியே, தனது உள்நுழைவினை மேற்கொண்டு அன்று இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை உருவாக்கினார்கள். முன்பு ஆதரவாக இருந்ததாகக் கருதப்படும் போராட்ட சக்திகள் இன்று சுயமாகத் தமது தாயக விடுதலையை நோக்கிச் செல்வதால், அச்சக்திகளை தனது எதிரியாக வெளிப்படுத்தி ஸ்ரீலங்காவுடன் இணைவினை ஏற்படுத்த முனைகிறது இந்தியா.

இவ்வகையான இரண்டு வௌ;வேறு கால கட்டங்களிலும் ஸ்ரீலங்காவைத் தனது ஆளுமைக்குள் கொண்டு வருவதென்பதே இந்தியாவின் குறியாக இருக்கிறது. நண்பர்கள் எதிரியாக மாற்றமடைந்தாலும், குறிக்கோளை அடையத் தடையாக இவை அமையவில்லையென்பதே இங்கு வெளிப்படுத்தப்படும் புதிய செய்தி.

எதிரியான நண்பரை வைத்தே புதிய ஒப்பந்தங்களையும் ஏற்படுத்தலாம். புதிய ஒப்பந்த உருவாக்கத்திற்கான தளத்தில், கிடப்பில் போடப்பட்டுள்ள 'பாதுகாப்பு ஒப்பந்தம்" மறுபடியும் தூசு தட்டி வெளிக்கொணரப்படலாம். அதைவிட நேரடிக் களமிறங்கலே தூரப் பார்வையினடிப்படையில் அனுகூலமானதொரு கள யதார்த்தத்தினை இந்தியாவிற்கு வழங்கும்.

ஒப்பந்தங்கள் கூட செயலற்றுப் போகலாம். இலங்கை இந்திய ஒப்பந்தம் போல. அதிகரிக்கும் விடுதலைப் புலிகளின் இராணுவப்படை வலு, நாட்டை இரு கூறாக்கும் நிலை நோக்கி நகர்வதால், தென்னிலங்கையில் கால் பதித்தலே, உள்ளே புக முனையும் வேற்றுச் சக்திகளின் நகர்வினைத் தடுக்கும்.

அதேவேளை, நாடு அழிவுநிலை நோக்கிச் செல்வதை தடுக்க வேண்டும்.

படையாட்சிக்குரிய சாதகமான சூழல் உருவாகும் அபாயத்தையும் எதிர்கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் பலமுனைகளிலிருந்து வெளிக்கிளம்பும் அஸ்திரங்களை எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான திரிசங்கு நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

புலி எதிர்ப்பு வன்ம உளவியல் சிக்கலிற்குள் அமிழ்ந்து போவதும், தமிழின அழிப்பினை மறைமுகமாக அங்கீகரிப்பது போன்று முனைப்புக் காட்டுவதும் இந்தியாவை பாரிய பொறி வலைக்குள் மாட்டி விடக்கூடிய நிர்ப்பந்தத்தினை ஏற்படுத்தலாம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேற்று நாட்டு இராணுவ சக்திகளின் நிலை கொள்ளலை ஏற்றுக் கொள்வாரா என்பது சந்தேகத்திற்குரியது. பிற நாட்டு உதவிகளை ஏற்று, தாமாகவே இப் போரினை முன்னின்று நடத்தி புலிகளை ஒழிக்க முடியுமென்கிற மேலாதிக்க கருத்து நிலையே மஹிந்த சிந்தனையின் மூலக் கருவாகும். புலிகளை அழிக்க, ஜே.ஆர். மேற்கொண்ட நரித்தந்திர நகர்வுகளை ஜனாதிபதி மஹிந்த கடைப்பிடிப்பாரா? இல்லையா? என்பதை அடுத்து வரும் மாதங்கள் தெளிவுபடுத்தும்.

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (06.05.07)

நன்றி தமிழ்நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.