Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒட்டுக் குழுக்களை அடக்குமாறு சிறீலங்காவிற்கு அமெரிக்கா அழுத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் 08-05-2007 19:30 மணி தமிழீழம் [தாயகன்]

ஒட்டுக் குழுக்களை அடக்குமாறு சிறீலங்காவிற்கு அமெரிக்கா அழுத்தம்

அமெரிக்காவின் மத்திய-தெற்காசிய இராஜாங்க அமைச்சின் உதவிச் செயலாளர் றிச்சட் பௌச்சர் மூன்று நாட்கள் பயணமாக இன்று மதியம் சிறீலங்கா சென்றுள்ளார்.

அமெரிக்க அரசின் முக்கிய செய்தி ஒன்றுடனேயே றிச்சட் பௌச்சர் கொழும்பு சென்றிருப்பதாக, அமெரிக்க இராஜாங்க அமைச்சை ஆதாரம் காட்டி முன்னரே தகவல் வெளியாகியிருந்தது.

சிறீலங்கா படைகளின் மனித உரிமை மீறல்கள், மற்றும் இராணுவ துணைக் குழுக்களாக இயங்கும் ஒட்டுக் குழுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் போன்ற முக்கிய செய்திகளையே றிச்சட் பௌச்சர் தாங்கிச் சென்றிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களின் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை என்பதை இந்தப் பயணத்தில் அவர் வலியுறுத்த இருப்பதாக, பெயர் குறிப்பிட விரும்பாத இராஜாங்க அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ, மற்றும் அமைச்சர்கள் சிலரைச் சந்தித்துப் பேசும் றிச்சட் பௌச்சர், அடுத்த சில தினங்களில் யாழ் குடாநாட்டிற்குச் சென்று, ஊடகர் சந்திப்பொன்றையும் நிகழ்த்த இருக்கின்றார்.

கடந்த வருடம் நவம்பர் மாத் சிறீலங்காவிற்குச் சென்ற அமெரிக்காவின் மத்திய-தெற்காசிய இராஜாங்க அமைச்சின் உதவிச் செயலாளர் றிச்சட் பௌச்சர், இலங்கையின் இனப் பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது எனவும், தனது பயணத்தை உதாசினம் செய்த இரண்டு தரப்பினரும் போரில் ஆர்வம்காட்டி அதனை ஆழமாக முன்னெடுத்துச் செல்வதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

பிரித்தானிய அரசாங்கம், சிறீலங்காவிற்கான 3 மில்லயன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இடை நிறுத்துவதாக கடந்த வாரம் அறிவித்துள்ள நிலையில் றிச்சட் பௌச்சரின் கொழும்பிற்கான பயணம் அமைந்துள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தம் வெறும் தாளில் மட்டுமே இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது பற்றி ஆராய வேண்டி இருப்பதாக, சிறீலங்கா அரச தரப்பில் நேற்று கூறப்பட்ட நிலையில், இன்;றைய றிச்சட் பௌச்சரின் பயணம் முக்கியத்துவம் பெறுகின்றது.

கருணா ஒட்டுக் குழுவினர் சிறுவர்களைக் கடத்திச் சென்று படையில் இணைப்பதாகவும், படுகொலைகளைப் புரிந்து வருவதாகவும், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு, மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பன ஏற்கனவே தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவு

  • 3 weeks later...

கருணா ஒட்டுக்குழுக்கும், ஈபிடிபி ஒட்டுக்குழுக்கும் ஆயுதங்களை வைத்திருக்க சிங்கள அரசாங்கம் அனுமதி வழங்கவில்லையாம்! - சிங்கள வெளியுறவுக் கோமாளி போகல்லாகம

சிறீலங்காவில் கருணா ஒட்டுக்குழுவினரோ அல்லது ஒட்டுக்குழு ஈபிடிபியினரோ ஆயுதங்களை வைத்திருப்பதற்கு சிறீலங்கா சிங்கள அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என சிறீலங்காவுக்கான வெளியுறவு அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நெருப்புக்கு கருத்துக் கூறிய லண்டனின் பிரபல உண்டியல் வர்த்தகரும், லண்டனின் முன்னனிக் கட்சிகளில் ஒன்றான 'ஈழபதீஸ்வரர் உண்டியல் காங்கரஸின்' தலைவருமான இராஜசிங்கம் ஜெயதேவன் அவர்கள், "முழுப் பூசனிக்காயை, ஒரு பிடி சோற்றினுள் மறைக்க முற்பட்ட செயல்" போன்றதென கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் யுத்த முன்னெடுப்பால் இடப்பெயர்வுக்கு உள்ளாகி மக்களை மீளவும் குடியேற்றுகின்ற நடவடிக்கை தொடர்ப்பில் வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாட்டிலேயே நேற்று சிங்கள அமைச்சர் போகல்லாகம இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்றங்கள் வலுக்கட்டாயமாக இடம்பெறவில்லை எனத் தெரிவித்து போகல்லாகம பொதுமக்களின் சுயவிருப்பிலேயே மீள் குடியேற்றங்கள் நடப்பதாகத் தெரிவித்தார்.

மீள்குடியேற்றங்கள் செய்யப்பட்ட மக்களுக்கு நூறு வீதமாக பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதேநேரம் அவர்களுக்ககான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.