Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆங்கிலப் புத்தாண்டில் இந்து ஆலய வழிபாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலப் புத்தாண்டில் இந்து ஆலய வழிபாடு

500 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட கிரிகோரியன் காலண்டர் முறைப்படி ஆண்டின் முதல் நாள்ஜனவரி 1 என்று நிர்ணயிக்கப்பட்டது.

இந்நாள் உலகம் முழுவதும் உள்ள மக்களால் இன, நிற, மத, மொழி வேறுபாடில்லாமல் பிரமாண்டமானவாணவேடிக்கைகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டு கடினவாழ்வு கழிந்து மகிழ்ச்சிநிரம்பிய புதிய வாழ்வுக்கு வாய்ப்பு உருவாவதாக ஓர் நம்பிக்கையை உருவகமாக ஏற்படுத்துகின்றது. எனவேதான் இந்நாள் கொண்டாட்டத்துக்கு உரியதாகின்றது.

தமிழர்களும் வரலாறுகளினதும் பாரம்பரியங்களினதும் குழப்பங்களால் தை முதல்நாளா, சித்திரை முதல்நாளாதமிழ்ப்புத்தாண்டு என்ற சர்ச்சைகளுக்குள் சிக்காமல் தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு இரண்டையும்சூரியனுக்கு பொங்கல் படைத்துக் கொண்டாடுவதுடன் யாதும் ஊரே யாவரும் கேளிர் என ஆங்கிலப்புத்தாண்டையும் ஒரு முக்கிய பண்டிகைநாளாக கடந்த சில தசாப்தங்களாகக் கொண்டாடி வருகின்றனர்.

ஒருசாரர் மேற்கத்தையப் பாணியைப் பின்பற்றி மதுவருந்தி கேளிக்கை கொண்டாங்களில் ஈடுபடுவதும் நள்ளிரவு12.00 மணிக்கு கடிகாரமுள் திரும்பும்போது வெடிகள் கொளுத்தி ஆராவரிப்பதுமாக புத்தாண்டைவரவேற்கின்றனர். இன்னொரு சாரார், புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு வேளையிலும்,  ஜனவரி முதலாம் நாளிலும்விஷேட வழிபாட்டுக்கெனத் திறக்கப்பட்டிருக்கும் ஆலயங்களில் இறைவழிபாட்டில் ஈடுபட்டு, புதிய ஆண்டுதமக்கு நன்மைகள் நிறைந்த ஆண்டாக அமையவேண்டுமென அர்ச்சனைகளும் செய்து ஒரு இந்து/சைவ சமயபண்டிகை நாளாகக் கொண்டாடுகின்றனர். 

இத்தகைய கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களுக்குப் பொதுவானது. வட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வதியும் தமிழர்களும் கடுங்குளிரையும் பனிப்பொழிவுகளையும் பொருட்படுத்தாது நள்ளிரவுவிஷேட பூஜைகளுக்குச் செல்வதும், வர்த்தக நிறுவனங்களின் விளம்பரத்திற்கென இலவசமாகக்கொடுக்கப்படும் ஆங்கிலப் புது நாட்காட்டிகளை வாங்கிவருவதும் ஒரு வழமையாகிவிட்டது.

ஆயினும், தீவிர இந்துமத நம்பிக்கையாளர்களின் கருத்துக்களின்படி, நள்ளிரவில் கடவுள் தரிசனத்துடன்பூஜைகள் செய்வது வேத நாகரிகத்திற்கும், ஆகம விதிகளுக்கும், இந்து கலாச்சாரத்திற்கும் விரோதமானசெயலாகும். ஆலயங்கள் திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி முதல் அர்த்தஜாமப் பூஜைவரை ஆறுகாலப்பூஜைகள் செய்யும் காலங்கள், அபிஷேகங்கள், அலங்காரங்கள், அர்ச்சனைகள், நைவேத்யங்கள், ஆராதனைகள், சன்னிதிகள் சாத்துதல் ஆகியவை முடிந்து கோவில் மூடுதல் வரை ஆகமங்களில் தெளிவாகநடைமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆகமவிதிகளின்படி, அர்த்தஜாமப் பூஜை முடிந்தவுடன் சன்னிதிகளைச்சாத்தி கோவில்களை மூடியபின் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில்தான் கோவில்களும் சன்னிதிகளும்திறக்கப்பட வேண்டும். வைகுண்ட ஏகாதசி, மகா சிவராத்திரி போன்ற குறிப்பிட்ட விஷேட தினங்களில் மட்டுமேகோவில்களும், சன்னிதிகளும் இரவு நேரங்களில் திறந்து பூஜைகள் நடத்தப்படும். மற்றைய தினங்களில்நடுநிசிகளில் கோவில்கள் திறந்து பூஜைகள் நடத்துவது ஆகம விதிகளுக்கு முரணானது.

எனினும் இந்துக் கோவில்கள் பெரும்பாலும் வருமானத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்ட அறங்காவல்சபைகளினதும், தனியாரினதும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதனால், ஆகம விதிகளைப் புறந்தள்ளி நள்ளிரவில்பூஜைகள் செய்யும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றன. மதநம்பிக்கையுள்ள மக்களும் இந்த ஆகமவிதிமீறல்களைப் புரிந்துகொள்ளாமல் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கும் நடுநிசி நேரத்தில் கோவில்களுக்குதிரளாக வந்து, பக்தர்கூட்டத்தினுள் இடிபட்டு கடவுள் தரிசனம் செய்கின்றனர். அத்துடன் ஜனவரி முதலாம் நாள்புனிதமாக்கப்பட்டு மாமிச உணவுகள் விலக்கப்பட்ட நாளாகவும் மாற்றமடைந்துள்ளது.

ஆங்கிலப் புத்தாண்டாகிய ஜனவரி முதலாம்நாளை ஒரு பண்டிகை நாளாகக் கருத தீவிர இந்துமதநம்பிக்கையாளர்கள் விரும்பாவிட்டாலும், மக்களின் பக்தியுணர்வையும், மத நம்பிக்கைகளையும் வைத்துவருமானம் ஈட்டும் கோயில் நிர்வாகங்கள் பல வருடங்களாக ஆங்கிலப்புத்தாண்டை முக்கியமான புனிதநாளெனஊக்குவித்து வருவதால், இப்படியான பண்பாட்டு மாற்றம், இந்துக்களினதும்/சைவர்களினதும் பாரம்பரியஅடையாளங்களில் ஒன்றாக உருவாகியுள்ளது.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதால் ஆங்கிலப் புத்தாண்டையும் பண்டிகைநாளாக உள்வாங்கி, புத்தாண்டில்எல்லோரும் வளமுடன் இன்புற்று வாழ வாழ்த்துக்கள்💫

 

 

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இந்துக் கோவில்கள் பெரும்பாலும் வருமானத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்ட அறங்காவல்சபைகளினதும், தனியாரினதும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதனால், ஆகம விதிகளைப் புறந்தள்ளி நள்ளிரவில்பூஜைகள் செய்யும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றன.

‘பெரும்பாலும்’ என்ற வார்த்தை தேவையில்லாமல் இதற்குள் புகுந்திருக்கிறது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

கோவில்களுக்கு கடவுள் வருகிறாரோ இல்லையோ வருமானம் கண்டிப்பாக வரவேணும்😌

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

‘பெரும்பாலும்’ என்ற வார்த்தை தேவையில்லாமல் இதற்குள் புகுந்திருக்கிறது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

கோவில்களுக்கு கடவுள் வருகிறாரோ இல்லையோ வருமானம் கண்டிப்பாக வரவேணும்😌

புள்ளிவிபரங்கள் இல்லாமல் உறுதியாகக் கூறமுடியாதல்லவா! 

வருமானம் வராமல்விட்டால் கடவுளும் ஓடிப்போய்விடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

வருமானம் வராமல்விட்டால் கடவுளும் ஓடிப்போய்விடுவார்.

காசேதான் கடவுளடா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.