Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சிஏஏ இந்து - முஸ்லிம் பிரச்சனை அல்ல": என். ராம்

Featured Replies

சிஏஏ சட்டத்தை இந்து - முஸ்லிம் விவகாரமாகப் பார்க்கக்கூடாது என சென்னையில் அச்சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட கூட்டத்தில் பேசிய தலைவர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரம் கையை மீறிப் போய்க்கொண்டிருப்பதாகவும் எச்சரித்தனர்.

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக குடியுரிமை பாதுகாப்பு மாநாடு என்ற தலைப்பில் மிகப் பெரிய பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தி ஹிந்து குழுமத்தின் தலைவர் என். ராம், பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுப் பேசினர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதாக இருந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், உடல்நலக் குறைவின் காரணமாக வரவில்லை.

சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் துவக்கத்தில் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து இந்தியாவில் 70 சதவீத மாநிலங்கள் போராடிவருவதாகக் குறிப்பிட்டார்.

"இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் ஆட்சியாளர்களால் சுடப்பட்டதோடு, சிறையில் அடைக்கப்பட்டனர். உத்தரப்பிரதேச முதல்வர் மிகக் கொடூரமாக நடந்துகொண்டார். சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை சிறையில் அடைத்தார்" என்று பேசிய நாராயணசாமி, தென் மாநிலங்களில் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மு.க. ஸ்டாலின், பினராயி விஜயன் உள்ளிட்டோர் மேற்கொண்ட நடவடிக்கைகளை சுட்டிக்காட்டினார்.

புதுச்சேரி, தில்லி ஆகிய மாநிலங்களுக்குச் சட்டப்பேரவையிருந்தும் தங்களைக் கட்டுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் முயல்வதாகவும் ஆனால் தாங்கள் அதைக் கேட்கப்போவதில்லையென்றும் நாராயணசாமி தெரிவித்தார்.

இந்தச் சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர முடிவெடுத்தபோது, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தனக்கு ஒரு ரகசிய கடிதத்தைக் கொடுத்தனுப்பியதாகவும் ஆனால், தான் அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படிக்காமலேயே தீர்மானத்தை நிறைவேற்றியதாகவும் தெரிவித்த நாராயணசாமி, ஆட்சியே போனாலும் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பதை ஏற்க மாட்டோம் என்று கூறினார்.

புதுச்சேரி பகுதியில் இஸ்லாமியர் ஒருவர் முருகனுக்குக் கோவில் கட்டியிருப்பதைச் சுட்டிக்காட்டிய நாராயணசாமி, தங்களுக்கு மதங்களைப் பற்றி யாரும் சொல்லித்தரத் தேவையில்லை என்றார்.

மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்ளேயே எதிர்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் பிஹாரில் இதனை செயல்படுத்தப்போவதில்லை என அம்மாநில முதல்வர் அறிவித்த பிறகும், அங்கு துணை முதல்வர் பதவியில் பா.ஜ.க நீடிப்பதாகவும் குறிப்பிட்டார் அவர்.

தமிழ்நாடு, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் தில்லியில் செய்ததைப் போல மதக்கலவரம் செய்ய முடியாது என்றாலும் வட மாநிலங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமெனக் கூறினார் நாராயணசாமி.

இதற்குப் பிறகு பேசிய தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், இந்தியா முழுவதுமே மக்கள் அச்சத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டார். "கடந்த சில நாட்களாக தில்லியில் நடப்பதைப் பார்த்தால், அங்கே யார் கையில் அதிகாரம் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. அரசை, காவல்துறையை இயக்குவது யார்? தலைநகரம் வன்முறையாளர்கள் கையில் இருக்கிறதா, அமித் ஷா கையில் இருக்கிறதா?" என்று கேள்வியெழுப்பின மு.க. ஸ்டாலின், தலைநகருக்கே இந்த நிலையென்றால் மற்ற நகரங்களின் கதி என்னவாகுமெனக் கேள்வியெழுப்பினார்.

மத்திய அரசைப் பொறுத்தவரை, இந்தப் போராட்டங்களின் பின்னால் உள்ள உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல், எதிர்க்கட்சிகள் இந்தப் போராட்டத்தின் பின்னால் இருப்பதாகக் குற்றம்சாட்டிய ஸ்டாலின், பொதுவுடமை சித்தாந்தம், தேசிய சித்தாந்தம், திராவிட சித்தாந்தம் என பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்டவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஒன்றுகூடியிருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

மோதி அரசு பல விவகாரங்களில் தோல்வியடைந்திருப்பதாகவும் அரசியல் செய்ய வேண்டுமென்றால், மோதி அரசு தோல்வியடைந்த பல விஷயங்களை வைத்து அரசியல் செய்ய முடியுமென்று கூறிய மு.க. ஸ்டாலின், பல நாடுகள் குடியுரிமையை வழங்க சட்டம் தீட்டியிருக்கும் நிலையில், இந்திய அரசு குடியுரிமையைப் பறிக்க சட்டம் இயற்றியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்தச் சட்டத்தால் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், இந்துக்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும் இந்துக்களைப் பாதுகாக்க அவதாரம் எடுத்ததாகக் கூறியவர்கள் இப்போது எங்கே போனார்கள் என்றும் கேள்வியெழுப்பிய ஸ்டாலின், தமிழக முதல்வரையும் கடுமையாகச் சாடினார்.

இந்தச் சட்டத்தால் யாரும் பாதிக்கப்படப்போவதில்லை என்று சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பிய தமிழக முதல்வர், தற்போது என்பிஆர் தொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பது ஏன் எனக் கேள்வியெழுப்பினார். இந்தச் சட்டத்தை எதிர்த்தால், சிறை செல்ல வேண்டியிருக்கும் என்ற அச்சத்தாலேயே இதனை முதல்வரும் துணை முதல்வரும் ஆதரிப்பதாகக் கூறினார்.

 

இதற்குப் பிறகு, பேசிய தி ஹிந்து குழுமத்தின் தலைவர் என். ராம் சிஏஏ சட்டம், என்பிஆர், என்சிஆர் ஆகியவை செயல்படும் விதம் குறித்து விரிவாகப் பேசினார். "பலரும் சொல்வதைப்போல, மத்திய அரசு தன் தோல்விகளிலிருந்து திசை திருப்புவதற்கான விஷயமாகப் பார்க்கக்கூடாது. மத்திய அரசு நல்ல நிலையில் இல்லை என்பது உண்மைதான். ஆனால், இந்தக் கலவரத்தில் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். நாட்டின் நிலை சரியில்லை. இது எல்லாவற்றுக்கும் பிரதமர், உள்துறை அமைச்சர், அவர்களை ஆதரித்த கட்சிகள்தான் பொறுப்பு" என்றார் என். ராம்.

இந்த விவகாரத்தில் எல்லா விஷயங்களுமே கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டன; விவகாரம் இவ்வளவு பெரிதாகுமென எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்ட ராம், போராட்டத்தில் அமைதியாக ஈடுபட்டுவரும் இஸ்லாமியப் பெண்களைச் சுட்டிக்காட்டிப் பாராட்டினார்.

இந்த விவகாரத்தை இந்து - முஸ்லிம் பிரச்சனையாக பார்க்கக்கூடாது என்றும் இது இந்தியாவையே பாதிக்கும் விஷயமென்றும் குறிப்பிட்ட ராம், சிஏஏ சட்டம் இந்திய அரசியல் சாஸனத்தின் 14வது பிரிவுக்கு விரோதமானதென்று குறிப்பிட்டார்.

இது ஏதோ யதேச்சையான விவகாரமில்லையென்றும் 1989ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே இந்த விவகாரம் இடம்பெற்றிருப்பதாகவும் குடியுரிமை திருத்தச் சட்டம் - என்பிஆர் - என்சிஆர் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றும் சுட்டிக்காட்டிய அவர், தடுப்பு முகாம்கள் இல்லையென அரசு சொல்வது பொய் என்றார்.

அசாமில் தடுப்பு முகாம்கள் செயல்பட்டு வருவதாகவும் கர்நாடகத்தில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும் இது போன்ற முகாம்களை ஏற்படுத்தும்படி எல்லா மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார்.

கடைசியாக நடிகர் ரஜினிகாந்திற்கு வேண்டுகோள் விடுத்த என். ராம், இந்த விவகாரம் குறித்து ரஜினி எவ்வளவு தெரிந்துகொண்டிருப்பார் எனத் தெரியவில்லையென்றும், ஆனால், அவர் இம்மாதிரி சக்திகளை ஆதரிக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம்., இஸ்லாமியக் கட்சிகள், மதத் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

https://www.bbc.com/tamil/india-51654743

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.