Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருவேளை உணவுக்காக அங்கலாய்க்கும் மக்களுக்கு அரசாங்கம் அளிக்கப்போகும் பதில் என்ன ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை உணவுக்காக அங்கலாய்க்கும் மக்களுக்கு அரசாங்கம் அளிக்கப்போகும் பதில் என்ன ?

(ஆர்.ராம்)

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை ஒரு சிறிய நிலப்பரப்பாக இருக்கின்றபோதும் அது முகங்கொடுக்காத அனர்த்தங்களும் இல்லை. அவசர நிலைகளும் இல்லை.

article01_new.jpg

மழை, வெள்ளம், சூறாவளி, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் அவ்வப்போது நிகழ்வதும் உள்நாட்டுப் போர், தீவிரவாதம், இன முரண்பாடுகள், கலவரங்கள், தொற்று மற்றும் தொற்றா நோய்கள், பொருளாதார சரிவுகள், பரிய விபத்துக்கள் என அவசர நிலைமைகள் ஏற்படுவதும் தொடர்கதையாகத் தான் இருக்கின்றது.

இந்தப்பின்னணியில் சீனாவின் வுஹானில் ஏற்றெடுத்த கண்ணுக்குத்தெரியாத கொரோனா எனப்படும் விலங்கிலிருந்து வெளியான வீரியமிக்க வைரஸ் கிருமிக்கும், மனிதனுக்கும் இடையிலான போராட்டம் கண்டம் விட்டு கண்டம் சென்று உலகளாவிய ரீதியில் அதியுச்சமடைந்துள்ள நிலையில் இலங்கையும் அதன் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கின்றது.

முதற்கோணல்

ஆம், ஜனவரி 26ஆம் திகதி இலங்கையில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சீன பெண் அடையாளம் காணப்பட்டிருந்தபோதும் அவர் குணமடைந்து நாடுதிரும்பிய நிலையில் அதுபற்றி கரிசனைகள் இறைமையுள்ள அரசாங்கத்திடம் முறையாக காணப்பட்டிருந்ததா என்பது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் தற்போதும் நீடித்துக்கொண்டிருக்கின்றன.

இவ்வாறிருக்க மார்ச் 11இல் இத்தாலி நாட்டுப்பிரஜைகளுக்கு சுற்றுலா வழிகாட்டியாக செயற்பட்ட நபருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து முக்கிய மருத்துவர்கள் கொரோனா தாக்கம் பற்றி ஆழ்ந்த கவனத்தினைச் செலுத்தி ஆட்சியாளர்களுக்கு அறிவுரைக் செய்திருந்தார்கள். உடனடியாக நாட்டின் வாயில்களை அடைக்கவேண்டியமை உட்பட எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பான அவசியத்தினை வலியுறுத்தினார்கள்.

இத்தாலியில் கொரோனாவின் தாக்கம் வீரியம் பெற்றிருப்பதும், அங்கிருந்து வந்த  பெருமளவானவர்கள் நீர்கொழும்பு, புத்தளம் பகுதிகளில் இருக்கின்றார்கள் என்பதும் அரச புலனாய்வுப் பிரிவினரால் அடுத்த நிமிடமே ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் அனைத்து தகவல்களும் பெறப்பட்டும் அடுத்தகட்டமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் சற்றே தாமதமாகியது.

ஒரு இலக்கு நோக்கிய செயற்பாடு என்ற கோசத்துடன் நாட்டின் தலைமைப்பொறுப்பேற்றையேற்று உடனடித்தீர்மானங்களுடன் அதிரடியான நடவடிக்கைளை விரைந்து எடுத்துவரும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியிலும் தாமதங்கள் ஏற்பட்டமை ஆச்சரியமாகத்தான் உள்ளது.

ஆனால், அந்த தாமதத்திற்கு காரணங்கள் இல்லாமலும் இல்லை. மார்ச் 19ஆம் திகதி 9ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கலின் இறுதிநாள். வேட்பு மனுத்தாக்கல் நிறைவுவடையும் வரையில் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை தள்ளிப்போட வேண்டிய இக்கட்டான கட்டத்திற்கு நாட்டின் தலைவர் தள்ளப்பட்டரா இல்லை கொரோனாவின் பாரதூரம் அறிந்தும் நடவடிக்கைகளை தள்ளிப்போட்டாரா என்பதற்கு தற்போது வரையில் விடை காணப்படவில்லை.

ஆனால், எதற்காக கொரோனாவுக்கு எதிராக விரைந்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தள்ளிப்போடப்பட்டனவோ அந்த இலக்கு வெற்றிகொள்ளப்பட்டுள்ளது. அதாவது, நடவடிக்கைகள் தொடர்பான உத்தரவுகள் தள்ளிப்போடப்பட்டமையால் தான் ஐக்கிய தேசியக் கட்சி ரணில் அணி, சஜித் அணி இரண்டாக பிளவுபட்டு வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கின்றது. இதனால் பொதுஜனபெரமுனவுக்கு நெருக்கடிகளை அளிக்குமளவுக்கு பாராளுமன்ற தேர்தல்களம் இருக்கப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது.

Pic03.jpg

 

திட்டமில்லாத செயற்பாடுகள்

இவ்வாறிருக்கு வேட்புமனுத் தாக்கல் செய்து சொற்ப மணிநேரத்திலேயே புத்தளம், நீர்கொழும்பு பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த நிலைமை மறுநாள் நாடெங்கும் அமுலானது. மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டார்கள். நாட்டின் வாயில்களான விமான நிலையங்களும், துறைமுகங்களும் மூடப்பட்டன.

மருத்துவத்திற்காக, வியாபாரத்திற்காக, தொழிலுக்காகவென தமது சொந்த இடங்களிலிருந்து பிறிதொரு பிரதேசதங்களுக்குச் சென்றவர்களெல்லாம் அங்காங்கே முடக்கப்பட்டார்கள். அடுத்த நாள் உணவுத்தேவையை பூர்த்தி செய்வதற்கு திட்டமே இட்டிருக்காத பொதுமக்கள் முதல் அன்றாட சம்பளம் பெறும் கூலித்தொழிலாளர்கள், அரச, தனியார் தொழில் துறையினர் என அவைரும் வீட்டிற்குள்ளேயே அமர்த்தப்பட்டார்கள்.

ஒருநாள் இரண்டு நாள் என்று ஆரம்பித்த ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தது. அவ்வப்போது சொற்ப மணித்தியாலங்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டன. அடுத்து ஊரடங்கு எப்போது அமுலாகும் என்ற வரையறைகூட முறையாக இல்லாமையினால் அச்சமடைந்த பொதுமக்கள் கிடைத்த இடைவெளித்தருணங்களில் எல்லாம் திரளாக கூடினார்கள்.

பொருட்களையும், சேவைகளையும் பெறுவதற்காக அலைமோதினார்கள். ஈற்றில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக நீடிக்கப்பட்டு வந்த ஊரடங்கு ஒருசில மணிநேரம் தளர்த்தப்படுவதால் உரிய பலனை எட்டாது போகும் அபாயத்தினையே ஏற்படுத்தியது. அத்துடன் கொரோனா தொற்று பரவலின் அபாயமும் அதிகரித்தது.

பொதுமக்கள் இவ்வாறு பெருவாரியாக திரள்வதற்கு ஆட்சியாளர்களே காரணமாகின்றனர். முற்கூட்டிய அறிவிப்புக்களைச் செய்திருந்தால் தமக்கான தேவைகளை நிவர்த்திசெய்யும் வகையிலான முன்னேற்பாடுகளை அவர்களால்செய்திருக்க முடியும். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது வெளிப்படையானது.

இதனைவிடவும், நடுத்தரவர்க்கமும், மேற்தட்டுவர்க்கமும் நிதிப்புழக்கம் இருந்தமையால் தமது தேவைகளை நிறைவேற்ற போராடிக்கொண்டிருந்தார்கள். ஆனால் மற்றொரு வர்க்கத்தினர் பெருவீதிகளையும், விழாக்கோலம் பூண்டிருந்த வர்த்தக நிலையங்களையும் வேடிக்கை பார்த்தவாறு இருந்தார்கள். அவர்கள் அன்றாடம் வருமானம் ஈட்டுவோர்.

முற்கூட்டிய அறிவிப்பு வழங்கினாலே அவர்களால் தமது அன்றாட வாழ்வுக்கான தயார்ப்படுத்தலை செய்வதற்கு இயலாத நிலையில் உள்ளவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பமே வழங்கப்பட்டிருக்காத நிலையில் அவர்களால் வயிற்றில் பசியுடன் வேடிக்கை மட்டும்தானே பார்க்க முடியும்.

ஆக, இந்த விடயத்தில் மக்கள் ஆணை பெற்றவர்களும் சரி, அரச இயந்திரமும் சரி முற்றுமுழுதாக அடிமட்டதரப்பு முதல் நாட்டின் எந்தவொரு பிரஜை தொடர்பிலும் கரிசணை கொண்டிருக்கவில்லை என்பது அப்பட்டமாக புலப்படுகின்றது. இது மாற்றத்தினை ஏற்படுத்த முனைவதாய் கூறி ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஜனாதிபதி கோத்தபாயவின் நிருவாக பலவீனத்தினையும் வெளிப்படுத்தியுள்ளது.

நடைமுறைக்குவராத அறிவிப்புக்கள்

இவையொருபுறமிருக்கையில், ஜனாதிபதி கோத்தபாய பொதுமக்களை மையப்படுத்தி அவசரண நிவாரண அறிவிப்புக்களை வெளியிடலானார். நாட்டுகாற்றிய விசேட உரையில் பருப்பு, ரின் மீன் ஆகியவற்றுக்கான விலைக் குறைப்புடன் ஆரம்பித்த அவருடைய நிவாரண அறிவிப்புக்கள் அதன் பின்னர் இருதடவைகள் வெளியாகின. குறிப்பாக, வங்கிகடன்களை மீள வலிப்பதை பிற்போடுதல், சமுர்த்தி பயனாளிகளுக்கு முற்பணம், உலர் உணவு பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடு என்று பட்டியல் நீண்டு கொண்டு செல்கின்றன.

ஆனால் இந்த அறிவிப்புக்கள் எவ்வளவு தூரம் நடைமுறைச்சாத்தியமாகின என்பதை முதலில் அவதானிக்க வேண்யது அவசியமாகின்றது. “ஒருபானை சோற்றுக்கு ஒருசோறே பதம்” என்பது போன்று ஒருகிலோ பருப்பினை 65ரூபாவிற்கும் ரின்மீனொன்றை 100ரூபாவிற்கும் விற்பனை செய்ய வேண்டும் என்ற ஜனாதிபதியின் அறிவிப்பு இற்றைவரையில் நாட்டின் உள்ள எந்தவொரு வர்த்தக நிலையங்களிலும் அமுலக்கப்படவே இல்லை.

அதேபோன்று, சமுர்த்தி முற்பணம் பத்தாயிரம் ரூபாவென்று அறிவிக்கப்பட்டபோதும் தற்போது ஐயாயிரம் ரூபாவாக மாற்றப்பட்டுள்ளது. வங்கிக்கடன்கள் மீளப்பெறுவது பிற்போடுமாறு அறிவுறுத்தப்பட்டாலும் கடன்பெற்றவர்களின் கணக்குகளில் உள்ள எஞ்சிய நிலுவைகள் அனைத்தும் “உறை” நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதனைவிடவும் நிர்ணய விலைகளை கடைப்பிடிக்குமாறும், பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லையென்றும் அமைச்சரவை பேச்சாளர்கள் வார்த்தைக்கு வார்த்தை கூறுகின்றனர்.

ஆனால் ஊரடங்கு நேரத்தில் அனுமதியுடன் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலைகள் இரண்டு மூன்று மடங்காக உள்ளது. அதனை விட கீரைவகைகள் முதல் அனைத்து உள்ளுர் உற்பத்திப்பொருட்களின் விலைகளும் கிடுகிடுவென அதிகரித்தாகிவிட்டது.

இவ்வாறான விலைகூடிய விற்பனைகள் தொடர்பில் கண்காணிப்பற்ற நிலைமையே நீடித்துக் கொண்டிருக்கின்றது. இவ்விதமாக ஒவ்வொரு விடயங்களையும் சுட்டிக்காட் முடியும். அறிவிப்புக்கள் விடுத்தாலும் கள நிலைமைகளின் யதார்த்தம் இவ்வாறு தான் இருக்கின்றது.

மேலும் ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தரப்பினரின் மக்களுக்கான நிவாரண அறிவிப்புக்கள் அரசியல் நோக்கில் விடுக்கப்படுகின்றனவா இல்லை விடுக்கப்படும் அறிவிப்புக்களை அதிகாரிகள் அலட்சியம் செய்கின்றார்களா என்ற கேள்விகளும் எழுக்கின்றன. 

இதனைவிடவும், அன்றாட வருமானத்தில் வாழ்வியலை நகர்த்திக்கொண்டிருந்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், தோட்டத்தொழிலாளர்கள், முன்னாள் போராளிகள், கூலித்தொழிலாளர்கள் இன்று பட்டினியால் வாடும் நிலையில் உள்ளார்கள்.

கொரோனா பரவலை கட்டப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோத்தபாய தலைமையிலான விசேட செயலணியும், சுகாதார துறையின் அனைத்து தரப்பினரும், இராணுவத்தினரும் கூட்டுப்பொறுப்புடன் முன்னெடுக்கும் செயற்பாடுகளும், ஒத்துழைப்புக்களும் அளப்பரியவை. வரவேற்புக்கும், பாராட்டுதல்களுக்கும் உரியவை.

கொரோனவைத் தடுக்க சமுக அக்கறையுடன் அரசாங்கம் இறுக்கமாக நகர்த்தும் திட்டங்களால் உலகநாடுகளுடன் ஒப்பிடுகையில் இழப்புக்களும், தொற்றுப் பரவலும் கட்டுக்குள் வந்துள்ளது. உலக சுகாதார நிறுவனமே பாராட்டுமளவிற்கு அரசாங்கம் செயற்பட்டுள்ளது, செயற்பட்டக்கொண்டிருக்கின்றது. இவை அனைத்தும் நாட்டுப் பிரஜைகளின் நன்மைக்கே என்ற விடயத்தில் மாற்றுக்கருத்திற்கு இல்லை.

ஆனால் அன்றாடம் வயிற்றுப்பசியை போக்குவதற்காக, தாம் உண்ணாது விட்டாலும் தமது பிள்ளைகளுக்காவது ஒருவேளை உணவை வழங்க வேண்டும் என்று அங்கலாக்கும் உறவுகளுக்கு அரசாங்கம் அளிக்கப்போகும் பதில் என்ன? தனவந்தர்களும், அரசியல், சிவில் தரப்பினர்களும் அள்ளிவழங்கினாலும் இத்தகையவர்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்து விடமுடியாது. ஒருநாள் இரண்டு நாள் அல்ல நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களை நோக்கி நெருங்கிக்கொண்டிருக்கின்றன என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையைப் பொறுத்தவரையில் 20இலட்சம் வரையிலானவர்கள் வறுமைக்கோட்டுக்கு உட்பட்வர்கள் என்ற அடிப்படையில் சமுர்த்தி நிவாரத்தினைப் பெற்றுக்கொண்டிருகின்றார்கள். அதனைவிட நாட்டின் வறுமை வீதமானது 4.1ஆக காணப்படுகின்றது. ஆகவே வறுமைக் கோட்டிற்கு உட்பட்டவர்கள், குறைந்த நடுத்தர வருமாணத்தினர் உள்ளிட்டவர்களின் நிலைமைகள் வார்த்தைகளால் விவகரிக்க வேண்டியதில்லை. அதுபற்றிய பட்டறிவும், புரிதலும் தற்போதைய தலைவர்களுக்கு நன்றாகவே உள்ளது.

அந்த அடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றி ஈற்றில் வாழ்க்கையை நகர்த்த முடியாது விபரீதமான முடிவுகளை எடுப்பதற்கோ பட்டினியால் தம் இன்னுயிர்களை மாய்க்கும் நிலைக்கோ கொண்டு செல்லாது இருப்பதும் இறைமையுடள்ள ஆட்சியாளர்களின் பொறுப்பே.

 

https://www.virakesari.lk/article/79300

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.