Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொரோனா வைரஸால் இலங்கையில் உண்டாகியுள்ள அரசியல் குழப்பம்

Featured Replies

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், கோவிட்-19 தொற்றின் பரவலால் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் மார்ச் 2ஆம் தேதி ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷவினால் கலைக்கப்பட்டதுடன், ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வேட்பு மனுத் தாக்கல் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பித்திருந்தது.

எனினும், மார்ச் மாதம் 11ஆம் தேதி இலங்கையின் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்.

இதையடுத்து, வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்த பின்னணியில் மார்ச் 20ஆம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.

இந்த நிலையில், ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி வரையான ஒரு மாதம் தொடர் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

ஏப்ரல் 20ஆம் தேதி ஊரடங்கை அரசாங்கம் கட்டுப்பாடுகளுடன் தளர்த்திய நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு அன்றைய தினம் சுகாதார பிரிவினர், பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்தி தேர்தலுக்கான அறிவிப்பை விடுத்தது.

இதன்படி, ஜுன் மாதம் 20ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்காக அறிவிப்பு விடுக்கப்பட்டது.

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம், ஜுன் மாதம் 2ஆம் தேதிக்கு முன்னர் புதிய நாடாளுமன்றம் கட்டாயம் கூடியாக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அந்த தேதியை தாண்டியே நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ளது.

1981ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம், நாடு இதற்கு முன்னர் எதிர்கொள்ளாத பிரச்சனையொன்றை எதிர்கொள்ளுமாக இருந்தால், தேர்தல் தேதியை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழு வசமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ரத்னஜீவன் ஹுல் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இந்த நிலையிலேயே தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை

நாடு எதிர்கொண்டுள்ள ஸ்திரமற்ற நிலைமைக்கு மத்தியில் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அண்மையில் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டிருந்தன.

இலங்கையில் தற்போதைய சூழ்நிலையில் கோவிட்-19 தொற்று காரணமாக நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தங்களது பாதுகாப்பை பொருட்படுத்தாது அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் சுகாதார ஊழியர்களின் அர்ப்பணிப்பு, அரசியல் தீர்மானங்களினால் வீணாகி போகக்கூடாது என அவர்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான சூழல் ஏற்பட சாத்தியம் கிடையாது என நியாயமாக தீர்மானிக்க முடியும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஏனைய நாடுகளை போலவே எமது நாடும் நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை, நீதித்துறை என்ற தனித்துவமான மூன்று அதிகாரங்களை கொண்ட நிறுவனங்களால் ஆளப்படுகின்றது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்தை நிலைநாட்டுவதற்கு இந்த மூன்று துறைகளும் இன்றியமையாதது என எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

நாடு இதற்கு முன்னர் சந்திக்காத சவாலொன்றை எதிர்கொண்டுள்ள இந்த தருணத்தில், குறித்த மூன்று துறைகளினதும் செயற்பாடுகள் ஏனைய சந்தர்ப்பங்களை விடவும் தற்போது அத்தியாவசியமானவை என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதி அரசியலமைப்பின் 70(7) உறுப்புரிமையின் பிரகாரம், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டாக ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

 

 

நாடாளுமன்றத்தை கூட்ட முடியாது - ஜனாதிபதி

கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீளக் கூட்ட முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகள் கூட்டறிக்கை விட்டமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 70(7) சரத்தின் கீழ் செயற்படுவதற்கான தேவை ஏற்படவில்லை என ஜனாதிபதி அறிவிக்குமாறு தனக்கு அறிவுறுத்தல் விடுத்ததாக ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்திருந்தார்.

அலரிமாளிகை கூட்டத்தை நிராகரிக்கும் எதிர்க்கட்சிகள்

நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சனைக்கு மத்தியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரதமரின் செயலாளர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

இதன்படி, பிரதமரின் அலுவல்பூர்வ இல்லமான அலரி மாளிகையில் எதிர்வரும் 4ஆம் தேதி முற்பகல் 10 மணிக்கு கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தை ஜனாதிபதியினால் கூட்டுவதற்கான அதிகாரம் காணப்படுகின்ற நிலையில், நாடாளுமன்றத்தை கூட்டாது அலரி மாளிகையில் தனியாக கூட்டத்தை ஏற்பாடு செய்கின்றமை தவறானது என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

இதற்கமைய, அலரி மாளிகை கூட்டத்தில் தாம் கலந்து கொள்ள போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி கடிதமொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

 

அரசியலமைப்புக்கு அமைய நடவடிக்கைகளை எடுக்காததன் ஊடாக அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெளிவூட்டுகின்றமை எந்தவித பயனும் கிடையாது என தாம் நம்புவதாகவும் இந்த கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக இந்த பிரச்சனையை எதிர்கொள்வதற்கான பொது பொறிமுறையொன்றை தயாரிக்குமாறு தமது கட்சி உள்ளிட்ட பலர் கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில், அவ்வாறான ஒன்றை தயாரிப்பதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்காத பின்னணியில் அனைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துள்ளமை பயனற்றது எனவும் அந்த கட்சி கூறுகின்றது.

பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக் கொள்வதற்காக இந்த கூட்டம் கூட்டப்படும் என்றால், அதற்கு சரியான நடவடிக்கைகளை மக்கள் விடுதலை முன்னணி பட்டியலிட்டுள்ளது.

01.அரசியலமைப்பின் பிரகாரம், அவசர நிலைமையாக கருத்திற்கொண்டு பாராளுமன்றத்தை ஜனாதிபதி கூட்ட வேண்டும்.

02.இவ்வாறான நிலைமையில் முன்னெடுக்கப்பட்ட வேண்டிய அரசியலமைப்பு ரீதியிலான நடவடிக்கைகள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

 

ஐக்கிய மக்கள் சக்தி நிராகரிப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் எதிர்வரும் 4ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ள போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டாரவின் கையெழுத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது அணி உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து அனுப்பிய கடிதத்தை ஜனாதிபதி கவனத்திற் கொள்ளாது நிராகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சி, நிற பேதமின்றி இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியே அந்த கடிதத்தை தாம் அனுப்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

அலரிமாளிகை கூட்டம் நிச்சயம் நடைபெறும் - பிரதமர் உறுதி

யார் வந்தாலும், வராவிட்டாலும் தீர்மானிக்கப்பட்ட விதத்தில் கூட்டம் நடத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த உறுதியை வழங்கியுள்ளார்.

இந்த பிரச்சனைக்கு சிலர் வராதவிடத்து, அவர்கள் மக்கள் பிரச்சனைகளை பேச விருப்பமில்லாதவர்கள் என எண்ணம் வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-52513989

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.