Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் பயிற்சி பெற்றதை ஏற்றுக் கொள்ளுங்கள் – முஸ்லிம் பிள்ளைகளுக்கு அச்சுறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பயிற்சி பெற்றதை ஏற்றுக் கொள்ளுங்கள் – முஸ்லிம் பிள்ளைகளுக்கு அச்சுறுத்தல்

May 21, 2020

 

Supreme-Court.jpg

மூன்று முஸ்லிம் பிள்ளைகளிடமிருந்து கட்டாயப்படுத்தி ஆதாரங்களை பெற்றதாக காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது . அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவில் அல் சுஹ்ரியா அரபுக் கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தங்களது முஸ்லிம் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தங்களை காவல்துறை அதிகாரிகள் என அழைத்துக்கொண்டு ஒரு குழு பெற்றோரிடமிருந்து  பிள்ளைகளை தனியாகப் பிரித்து தவறான தகவல்களைக் கொண்ட ஆவணங்களில் கையெழுத்திடுமாறு அச்சுறுத்தியுள்ளனர்.

எங்களிடம் ஒரு நகல் பிரதி  கிடைத்துள்ளது. அது  13 வயது  சிறுவன் மனுவில்  கூறியது, ஏப்ரல் 26 மற்றும் ஏப்ரல் 28 ஆகிய திகதிகளில் என்னை தெரியாத இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். சிறுவனின் பாதுகாப்பு கருதி  அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை.

மனுவில், குடும்பத்தின் பொருளாதார கஸ்டம்  காரணமாக பாடசாலை கல்வியை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த சிறுவர்களின் வறுமை நிலையை பயன்படுத்தி அப்பகுதியில் உள்ள சிலர் தவறான விடயங்களுக்கு சிறுவர்களை ஈடுபடுத்த முயன்றுள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில்,  புணர்வாழ்வு தேவைப்படும் சிறுவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ஒரு கல்வி நிறுவனம் முன்வந்துள்ளதாக அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளி  உறுப்பினர் பிள்ளை யின் தந்தைக்கு தெரிவித்துள்ளார்.

அதன்படி, அல்-ஜுஹ்ரியா அரபு பாடசாலையில் அனுமதிக்கப்பட்ட பிள்ளைகள் இஸ்லாம், கணிதம், ஆங்கிலம் மற்றும் கணனி ஆகியவற்றைப் படித்து,பாடசாலை விடுமுறை நாட்களில் வீடு திரும்பியுள்ளனர்.

அவர் வீட்டில் இருந்தபோது, சி.ஐ.டி எனப்படும் ஒரு குழு வீட்டிற்கு வந்து தன்னை  விசாரித்ததாக சிறுவன்  தனது மனுவில் கூறியுள்ளார்.

ஆயுத பயிற்சி

குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) என அடையாளம் காட்டிக் கொண்டு அந்த பிள்ளைகளிடம், பாடசாலையில் ஆயுத பயிற்சி வழங்கப்பட்டதா என்று கேட்டுள்ளனர்  அதற்கு சிறுவர்கள்  இல்லை என்று பதிலளித்துள்ளனர்.

அவர்கள் தெரியாத ஒருவரின்  புகைப்படத்தை காட்டி அவர் பாடசாலையில் கல்வி கற்பாரா அல்லது அங்கு கற்பிப்பாரா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

தனது பாடசாலை நாட்களில் தனக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களைத் தவிர வேறு யாரையும் தனக்குத் தெரியாது என்று பிள்ளை ஒப்புக்கொண்ட போதிலும் கிரிமினல் துப்பறியும் நபர்கள் என்று அழைக்கப்படும் குழு அறிக்கைகளை ஏற்கும்படி பிள்ளை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுதாரரை அடையாளம் காண முடியவில்லை

உண்மையாகவே மனுதாரரை அறியாத மக்கள், தீவிரவாத மற்றும் வன்முறைக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்யவும் கற்பிக்கவும் தான் பள்ளிக்கு வருவதாக மனுதாரர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அழுத்தம் விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குற்ற விசாரணைத்துறை என அழைக்கப்படும் ஒரு குழு, பிள்ளையை விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக பெற்றோருக்கு அறிவித்திருந்தது. கைது செய்து பிள்ளையை எங்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பது குறித்து அவர்களுக்கு அறிவிக்கப்படவில்லை இதனால் பெற்றோர்கள் தங்கள் 13 வயதுபிள்ளையை அவர்களுடன் செல்ல அனுமதிக்கவில்லை.

“பின்னர் மனுதாரர்கள் அதே நபர்களால் ஒரு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.மனுதாரர் அவர் இருக்கும் இடம் பற்றி அறிந்திருக்கவில்லை.மனுதாரருக்கு அவர்களின் உத்தரவுகளுக்கு இணங்குவதை தவிர வேறு வழியில்லை, ”என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

அறையில் வைத்து வீடியோ எடுக்கப்பட்டது

பிள்ளையை சம்பவ இடத்திலுள்ள ஒரு அறைக்கு அழைத்துச் சென்று மீண்டும் படங்களைக் காட்டியுள்ளனர், அவர் வீட்டில் சொன்னதை  போலவே அங்கும் , வீடியோவில் கூறியுள்ளார். பிள்ளைக்கு பள்ளியில் ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டதா என்று கேட்டதற்கு, முன்பு போலவே பிள்ளை அவ்வாறு இல்லையென்று மறுத்துவிட்டதாகவும், ஒரு கட்டத்தில் வீடியோ கமராவைப் பதிவு செய்வதை நிறுத்திவிட்டு பிள்ளையிடம் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது.

அந்தக் குழு பிள்ளையை ஆயுதப் பயிற்சி பெற்றதாக ஒப்புக் கொள்ளுமாறு அச்சுறுத்தியது. “புகைப்படங்களில் காட்டப்பட்டுள்ள நபர் பிரச்சாரம் செய்ததாகவும் ஆயுதப் பயிற்சி பெற்றோம் என்பதை அவரது சகாக்கள் ஒப்புக் கொண்டதாகவும் மனுதாரருக்கு அறிவிக்கப்பட்டது.உண்மையில் கற்பிக்கப்படாத அத்தகைய நபரைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று மனுதாரர் மறுத்துள்ளார்.

சட்டத்தரணி பிரபுதிகா திஸேரா தாக்கல் செய்த மனுவில், சுமார் 10 மணி நேரம் விசாரித்த பின்னர் பிள்ளைக்கு தனது கையொப்பத்தை ஒரு ஆவணத்தில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

“பின்னர் மனுதாரருக்கு ஒரு காகிதத்தில் கையெழுத்திட உத்தரவிடப்பட்டது, மேலும் கடிதத்தின் உள்ளடக்கங்கள் அல்லது அவரது கையொப்பத்திற்கான காரணம் குறித்து மனுதாரருக்கு அறிவிக்கப்படவில்லை அல்லது தெளிவுபடுத்தப்படவில்லை.”பின்னர் பிள்ளை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டது.

உத்தியோகபூர்வ ஆவணங்கள் எங்கே?

இந்த மனுவில், அரசியலமைப்பின் 11 வது பிரிவு உத்தரவாதம் அளித்தபடி சித்திரவதை அல்லது மனிதாபிமானமற்றமுறையில் நடத்தப்படக்கூடாது என்ற அடிப்படை உரிமையை மனுதாரர் தெறிவிக்கிறார்.சட்டத்தை அமுல்படுத்துவதற்கான அடிப்படை உரிமை மற்றும் சட்டத்தை சமமாக வைத்திருப்பது பற்றி பிரிவு 12 (1) ஆல் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.பிரிவு 13 (1) ஆல் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சட்டப்படி நடைமுறைக்கு வெளியே கைது செய்யப்படாமல் இருப்பதற்கும், கைது செய்வதற்கான காரணத்தைத் தெரிவிப்பதும் அடிப்படை உரிமை.பிரிவு 13 (2) ஆல் சான்றளிக்கப்பட்டுள்ளவாறு,கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவு இல்லாமல் தடுத்து வைக்க முடியாது.பிரிவு 14 (1) (இ) வில் கூறப்பட்டுள்ளவாறு இது அடிப்படை மத உரிமை மீறலாகும். பயிற்சி மற்றும் கற்பித்தல் காரணமாக பதிலளித்தவரின் உரிமைகள் மீறப்படுகின்றன.

அதன்படி, இந்த மனுவில், பிள்ளை நீதிமன்றத்திடம் கேட்பது ,கைது செய்தது  தடுப்புக்காவலில் வைத்த ஆவணம்,பலவந்தமாக அவர்கள் கையெழுத்து வாங்கிய கடிதத்தையும் மற்றும் வீடியோ பலவந்தமாக எடுத்த காட்சிகளையும் சமர்ப்பிக்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம்  உத்தரவிட வேண்டும்.

வழக்கறிஞர் பிரபுதிகா திசேரா தாக்கல் செய்த மனுக்கள் பதில் பொலிஸ் மா அதிபர்  சந்தன விக்ரமரத்ன, குற்றப் புலனாய்வுத் துறை பணிப்பாளர் எஸ்.எஸ்.பி டபில்யு. திலகரத்ன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பதிலளிக்க வேண்டியவர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

கடுமையான மனரீதியான உளைச்சலுக்கு ஆளான பிள்ளைக்கு நீதிமன்றத்தில் அவர் கோரும் இடைக்கால நிவாரணம் கிடைக்காவிட்டால், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதிப்பு ஏற்படும் என்று பயப்படுவதாகவும் அந்த மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிள்ளையின் பெற்றோரும் மனித உரிமைகள் ஆணைகுழுவில் புகார் அளித்துள்ளனர். #பயிற்சி  #முஸ்லிம் #அச்சுறுத்தல் #மனிதஉரிமைகள்ஆணைகுழு  #அடிப்படைஉரிமை

 

http://globaltamilnews.net/2020/143414/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.