Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா வைரஸ் காரணமாக செயற்படும் நாடாளுமன்றம் இல்லாத நிலையில் இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் காரணமாக செயற்படும் நாடாளுமன்றம் இல்லாத நிலையில் இலங்கை

  • டி.டபில்யூ

இலங்கை செவ்வாய்கிழமை கொரோனா வைரசிஸ் முடக்கலை தளர்த்தியது, கொழும்பு கம்பஹாவில் ஊரடங்குகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் நடவடிக்கை தொடர்பில் மீண்டும் கவனம் திரும்பியுள்ளது.

இலங்கை தற்போது ராஜபக்சவின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்துவதற்கான நாடாளுமன்றம இல்லாமல் செயற்படுகின்றது. அரசமைப்பு செயற்பாட்டாளர்கள் கூடிய விரைவில் தேர்தல் இடம்பெறவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Parliament-SL-2-2-300x113.jpgகடந்த நவம்பரில் ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் இலகுவாக வெற்றிபெற்றார், எதிர்கட்சியினர் பெரும்பான்மையாக காணப்பட்ட நாடாளுமன்றத்துடன் தனது ஜனாதிபதி பொறுப்பை ஏற்றார்.
இலங்கையின் அரசமைப்பு அனுமதித்துள்ள படி அவர் மார்ச் இரண்டாம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்ததுடன் ஏப்பிரல் 25 ம் திகதி தேர்தலிற்கு அழைப்பு விடுத்தார்.

இலங்கையின் ஆட்சமுறையின்படி ஜனாதிபதி பிரதமரை நியமிக்கின்றார் அவர்கள்இருவரும் இணைந்து நிறைவேற்று அதிகாரத்தை பகிர்ந்துகொள்கின்றனர்.

2019 தேர்தலின் பின்னர் ராஜபக்ச சகோதரர்களே இரு பதவிகளிலும் உள்ளனர், தேர்தலில் அவர்களிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் அவர்கள் இலங்கையில் தங்கள் அரசியல் அதிகாரத்தை உறுதிசெய்துகொள்வார்கள்.mahinda-gota-2-300x169.jpg

ஆகஸ்ட் வரை தேர்தல் இல்லை?
எனினும் கொரோனா வைரஸ் இந்த நடவடிக்கைகளை குழப்பத்திற்குள் தள்ளியுள்ளது.தேர்தல்கள் ஜூன் 20 ம் திகதிவரை பிற்போடப்பட்டுள்ளன. வைரஸ் பரவல் அதிகரித்தால் தேர்தல் மீண்டும் பிற்போடப்படலாம் என்ற கரிசனை காணப்படுகின்றது.

election-commision-2.jpg
அரசமைப்பு அனுமதியளித்துள்ளதன் காரணமாக நாடாளுமன்றத்தை கலைத்தமை தொடர்பில் எந்த சர்ச்சையும் இல்லை என்கின்றார் இலங்கையை சேர்ந்த அரசமைப்பு நிபுணர் அசங்க வெலிகம.
எனினும் இந்த அதிகாரத்தை பயன்படுத்துவது தொடர்பில் முக்கியமான விதிமுறைகள் உள்ளன என குறிப்பிடும் அவர் மூன்று மாதத்திற்குள் தேர்தல் இடம்பெறவேண்டும் புதிய நாடாளுமன்றம் கூட்டப்படவேண்டும் என தெரிவிக்கின்றார்.

நாடாளுமன்றம் இல்லாத காலத்தை கூடியளவிற்கு கடுமையாக கட்டுப்படுத்துவதற்காகவே அரசமைப்பு ஏற்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜீன் 20 ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனினும் இந்த திகதி என்பது அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள மூன்று மாதகாலத்தை கடந்தது.

ஆகஸ்ட் வரை நாடாளுமன்றத்திற்கு தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளதால் நிலைமை மேலும் குழப்பமானதாக மாறியுள்ளது என்கின்றார் அசங்க வெலிகல asanga1-300x168.jpg

புதிய திகதியில் தேர்தலை நடத்த முடியாது என கடந்த வாரம் அறிவித்துள்ளது,தேர்தலை நடத்துவதால் வாக்காளர்களிற்கு பாதிப்பில்லை என சுகாதார அதிகாரிகள் அறிவித்து பத்து வாரத்தின் பின்னரே தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை இதுவரை 1500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் பத்துபேர் உயிரிழந்துள்ளனர்,இலங்கை வைரசினை கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளது,எனினும் நோயாளிகளின் துல்லியமான எண்ணிக்கையை கணிப்பிடும் விதத்தில் போதியளவு சோதனைகள் இடம்பெறவில்லை என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜபக்ச அதிகாரத்தை பலப்படுத்துகின்றார்

gotabaya-may-29-300x169.jpg

கொரோனா வைரஸ் முடக்கல் நிலையால் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடம் காரணமாக,அமைச்சுகளின் முக்கிய பதவிகளிற்கு இராணுவ அதிகாரிகளை நியமித்துள்ளதன் மூலம் ராஜபக்ச தனது பிடியை பலப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்றம் இல்லாத நிலையில் ,இலங்கையின் கொரோனா வைரசிற்கு எதிரான நடவடிக்கையை ராஜபக்ச தலைமையிலான நிறைவேற்று அதிகாரமும் படையினரும் முன்னெடுக்கின்றனர்.

பெரும்பான்மையினரை கவர்வதை அடிப்படையாக வைத்த தனது நடவடிக்கைளை ஜனாதிபதி வலுப்படுத்தியுள்ளார் என தெரிவிக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்ணான்டோ நாடு கொரோனா வைரசிற்கு எதிராக போராடும் வேளையில் மாற்றுக்கருத்துடையவர்களிற்கு எதிரான ஒடுக்குமுறைகள் அதிகரித்துள்ளன எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லீம்கள் வெறுப்புணர்வை எதிர்கொள்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இதேவேளை ராஜபக்ச வேறு அமைச்சுகளை சேர்ந்த பல்வேறு திணைக்களங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள் அதிகளவிற்கு அரசமைப்பு ரீதியானவை என்பதை விட அரசியல் ரீதியிலானவை என தெரிவிக்கின்றார் அசங்கவெலிகல.
அரசாங்கம் தான் அரசமைப்பு குறித்து அதிகம் கவலைப்படவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது என்கின்றார் அவர்.

அதிகாரங்களை மத்தியில் குவிப்பது பாதுகாப்பை பலப்படுத்துவது ஆகிய வாக்குறுதிகளை முன்வைத்தே ராஜபக்ச தேர்தலில் பிரச்சாரம் செய்தார்.

முழு விவரிப்பும் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முதல் தேர்தல்வரை என்கின்றார் புலனாய்வு ஆய்வாளர் தருன் நாயர்.

கோத்தபாய ராஜபக்ச வலுவான தலைமைத்துவம் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் தெரிசு செய்யப்பட்டார் என குறிப்பிடும் அவர் சிங்கள பௌத்தர்கள் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தவராக அவரை பார்க்கின்றனர் எனவும் தருண் நாயர் தெரிவிக்கின்றார்.

ஆட்சியின் மீதான தனது பிடியை வலுப்படுத்துவதற்காக அவர் தனது இராணுவரீதியிலான ஈர்ப்பினை பபயன்படுத்த முயலும் நோக்கத்துடன் அவர் காணப்படுகின்றார் எனவும் நாயர் தெரிவிக்கின்றார்.

http://thinakkural.lk/article/44082

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.