Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் அம்மாச்சி உணவகங்களை இலக்கு வைத்து அமைக்கப்படுகின்றதா மதுபானசாலைகள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் அம்மாச்சி உணவகங்களை இலக்கு வைத்து அமைக்கப்படுகின்றதா மதுபானசாலைகள்?

பழையன புகுதலும் புதியன புகுதலும்  இயல்புதான். அந் நிலையில் இன்றைய பரபரப்பான சூழலிலே  உணவிற்கும் அந்நிலை வரும்போது தான் நம் சமூகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தினை, சாமை என சிறுசிறு தானியங்கள்  ஆதிக்கம் செலுத்திய காலமும் உண்டு. இத் தானியங்கள் நம் நாட்டு நிலத்தில் எம் மக்களுக்காக  விளைவிக்கப்பட்டவையாகும். பின்னர்  அரிசியின் வருகை ஏற்பட்டது. இதனால் சிறுதானியங்கள் அழிவை நோக்கி மெல்ல நகர்ந்தது. இதனால்  அசைவ உணவுகளில் ஆடு, நாட்டுக்கோழி ,மீன்  என உண்டு கழித்த மக்கள்  இன்று  வெளிநாடுகளிலிருந்து  வரும்  இரசாயனங்கலந்த உணவுகளிற்கு அடிமையாகும் நிலை உருவாகியிருக்கின்றது.

thumb_large_Ammchi.jpg

நூடில்ஸ் , பீட்சா,  ஃப்ரைட் ரைஸ் என  பல அந்நிய நாட்டு உணவு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு அவற்றிற்கு நம் சமூகம் அடிமையாகும் நிலைக்கு  தள்ளப்பட்டிருக்கின்றது. இவ் உணவுகளை  எப்போதாவது  உண்ணலாம் அதில் தவறில்லை.  ஆனால் இளம் தலைமுறையினர் அடிக்கடி  இவ் துரித உணவுகளை உண்பதால் அதுவே எதிர்காலத்தில் அத்தியவசிய உணவாக மாறிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. 

நாகரீகம் எனும் பெயரில்  நம்  இளம்  சமுதாயத்தினர் மசாலா நாட்டத்திற்கு அடிமையாகி கண்ட கண்ட வேளைகளில் கண்ட கண்ட துரித உணவுகளை உள்ளே தள்ளி  குடலையும் , உடலையும்  கெடுத்து கொள்கின்றார்களே தவிர அவ் உணவுகளால்  ஏற்படும் பாதிப்புகள் பற்றியோ அவற்றிற்குள் புகுத்தப்படும்  அரசியல்  பற்றியோ யாரும் சிந்திப்பதில்லை.

மக்களை சுவைக்கு அடிமையாக்கி  அந்நிய நாட்டு உணவுகளை  அத்தியவசிய உணவாக மாற்றுவதுதான் அந்நியநாட்டு நிறுவனங்களின் வேலை. இதனால் தான் பாரம்பரிய உணவகங்களை  அழித்து நம்  எதிர்கால சந்ததியை குறிவைத்தும், சந்தையை குறிவைத்துமே இன்று துரித உணவகங்கள்  துளிர்விடும் அபரித  நிலை காணப்படுகின்றது.  

துரித உணவகங்களில் பரிமாறப்படும்  வேக உணவை உண்பதால்  அது எமது உடலுக்குள்ளும் வேகமாக சென்று  பல விதமான  நோய்களை  வாடகையின்றி குடியிருக்க செய்கின்றது. காரணம் சரியான உடல் உழைப்பு இல்லை, சரியான  உணவுத் தேர்வு இன்மை ஆகும்.  நம் சமுதாயம் சத்துக்கள் நிறைந்த வாழ்கைக்கு  ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகளை விரட்டி விட்டு " மினி சைஸ் சாண்ட்விச், பீட்சா , ஃப்ரைட் ரைஸ்..... " என  பல துரித உணவினை வகை வகையாக சிறியவர் முதல் பெரியவர்கள் வரை உண்கிறார்கள். 

அதே போல நோய்களும் வயது வேறுபாடின்றி  எம்முள் ஒட்டிக் கொள்கின்றது. இந் நிலையினை குறைப்பதனூடாக வாழ்வாதாரத்தில் பின்னோக்கி இருக்கும் பெண்தலைமைத்துவ குடும்பங்களினை உயர்த்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது தான் அம்மாச்சி உணவகம். இவ் உணவகம் 

அழிவடைந்துவரும்  பாரம்பரிய உணவுகளை பாதுகாப்பதோடு மட்டுமன்றி நம் முன்னோர்களின் ஆரோக்கிமாக வாழ்வதற்கு 

IMG_20200609_114144.jpg

உண்டு களித்த உணவுகளை நம் எதிர்கால சந்ததியினருக்கு  தெரியப்படுத்துவதோடு உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த  உணவுகளை  மிக குறைந்த  விலையில்  மக்களுக்கு பரிமாறும் வகையிலும்  உருவான  உணவகம் தான் அம்மாச்சி உணவகம்.

இன்று ஆடம்பரம் எனும் பெயரில் பல  உணவகங்கள் உணவுகளை  வியாபாரமாக மட்டும் பெருமளவில் முன்னெடுக்கின்றது. இதனால்  இந்  நிலையில்  எம் சமூகம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற நோக்கோடு ஆரோக்கியமான உணவுகளை வழங்கும் உணவகமாகவும்  வடக்கின் பாரம்பரிய  உணவுகளை பாதுகாத்து எதிர்கால தலைமுறையினருக்கு அறிமுகம் செய்யும் உணவகமாக   உருவாகி  இருக்கும்  உணவகமாகவே  அம்மாச்சி உணவகம்  இருக்கின்றது. 

இவ் உணவகங்கள் ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகளை  மட்டும் வழங்கவில்லை. மாறாக பெண்களின்  வாழ்வாதாரத்திற்கும் பங்களிப்பு செய்யும் வகையிலும்,  அவர்களின்  வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்தும்  வகையிலுமே  இலங்கை அரசாங்கத்தின்

மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்  ஐரோப்பிய நிதிப்பங்களிப்புடனே நிறுவப்பட்ட உணவகமாகும். 

எடுத்துக்காட்டாக  வவுனியா மாவட்டத்தில்  குறித்த பிரதேசத்தின் விவசாய அடிப்படையிலான மகளீர் கழகங்களை சேர்ந்த 36 பெண்கள் தொழில்வாய்ப்பினை பெற்றுள்ளதோடு சுமார் 300 விவசாயிகளும் பயன்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகத்தில்  வெவ்வேறு தானியங்கள், பச்சை இலைகள், பருப்பு வகைகள், கிழங்கு வகைகள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த மரக்கறி வகைள்  என உணவுகளை செயற்கை நிறமூட்டிகளோ அல்லது செயற்கை சுவையூட்டிகளோ சேர்க்கப்படாமல்  உணவுகள் உடனுக்குடன் தயாரித்து   குறைந்த விலையில்  லாபநோக்கமற்று  நுகர்வோருக்கு வழங்கப்படுகின்றது.

இந் நிலையில் வவுனியா மாவட்டத்தில்  இளைய தலைமுறையினரும் , ஏனையவர்களும் தம் ஆரோக்கியத்தினை பேண  துரித உணவுகளில் இருந்து மெல்ல விடுபட்டு   பாரம்பரிய உணவுகளை நோக்கி மெதுவாக நகர்ந்து  கொண்டிருக்கின்றார்கள் . இந் நிலையில் இவ் பாரம்பரிய  உணவகங்களை  திட்டமிட்டபடி அழிவுப்பதைக்குள்  கொண்டுவந்து  நம் சமூகத்தை  சீர்குலைக்கும் நோக்கோடு இன்று வவுனியாவில் அம்மாச்சி உணவகங்கள்  இலக்கு வைத்து  மதுபான சாலைகளும் அமைக்கப்படுகின்றது. இவ்வாறு அமைக்கப்படுவதன் தந்திரம் என்ன?  திட்டமிட்டு நம் தலைமுறையினரை சீர்குலைக்கும் செயலா? என்பது எல்லோராலும் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றே.

வடக்கு மாகாணத்தின் கேந்திர மையமாக விளங்கும் வவுனியாவில் மட்டும் ஏன் ? மது கடைகள் அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை இலக்கு வைத்து நிறுவப்படுகின்றது . நம்  தமிழ் சமூகத்தின்  கலாசாரத்தையும்,  மக்களின் இயல்பு வாழ்க்கையையிலும் பாதிப்பினை உண்டு பண்ணி இளம் சந்ததியினரை  சீரழிக்கும் வகையிலையே  இவ்  மதுகடைகள் பாரம்பரிய அம்மாச்சி உணவகத்தை  அண்மித்து அமைக்கப்படுகின்றது. இவ்வாறு பாரம்பரிய உணவினை வழங்கும் அம்மாச்சி உணவகத்தை  மதுபானசாலைகள் இலக்கு வைப்பதற்கான காரணம் என்ன?  அரசியல் தந்திரமா? இல்லை  நம் சமூகத்தினரை வேறு திசைக்கு தள்ளி அநாதரவாய் அந்தரிக்க செய்யப்படும் திட்டமிட்ட செயலா? எல்லோராலும்  உற்றுநோக்க வேண்டிய விடயமாகும்.

IMG_20200609_113946.jpg

எடுத்துக்காட்டாக  வவுனியா மாவட்டத்தில்  ஓமந்தை பிரதேசத்தில் அம்மாச்சி பாரம்பரிய உணவகம் அமைக்கப்பட்டது.  ஆரம்பித்த சிறிது நாட்களில்  அம்மாச்சி உணவகத்தினை அண்மித்தே  மதுபானசாலை ஒன்றும் திறக்கப்பட்டது. அதே போன்று வவுனியா புதிய பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்னர் பயணிகளின்  நலன் கருதி அம்மாச்சி உணவகம் அமைக்கப்பட்டது . அமைக்கப்பட்டு  சிறிது  காலத்தின் பின்பே அவ் உணவகத்தை அண்மித்து புதிதாக  மதுபானசாலை அமைக்கப்பட்டிருக்கின்றது. 

இவ்வாறு  அமைக்கப்படுகின்ற  பாரம்பரிய  அம்மாச்சி உணவகத்தை அண்மித்து மதுபானசாலை கடைகள் அமைக்கப்படுவது   ஏன்? நம் இளம் சந்ததியை திசைதிருப்புகின்ற  செயற்பாடா?  இவ்விடயம் ஆராயப்படவேண்டிய ஒன்றே! 

ஆகவே இவ் விடயத்தினை நம் சமுதாயம்  எல்லோரும் கவனத்தில் கொள்ளவேண்டும். அழிவடைந்து வரும் நம் தமிழரின் பாரம்பரியத்தை பாதுகாப்பது  மிக அவசியமானதாகும். அதே போல நம் சந்ததியினரின் நீண்ட தேக ஆரோக்கியத்திற்கு  பாரம்பரிய உணவும்  அவசியமான ஒன்றாகும். என்பதனை எல்லோரும் உணர்ந்து  வவுனியாவில்  பாரம்பரிய உணவகத்தை  அழிவடைய  செய்ய அதனை அண்மித்து  நிறுவப்படுகின்ற மதுபான கடைகளை மூடுவதற்காகவும், எம் பாரம்பரியத்தினை பேணி  இனி துளிர்விட்டு வரும் நம்தலைமுறைக்கு வழிவிட  மதுபான கடைகளுக்கு  எதிராக ஒன்று திரண்டு நம்  கலாசார அடையாளமாக விளங்கும் அம்மாச்சி உணவகத்தினை பாதுகாப்போம்.
 

https://www.virakesari.lk/article/83998

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.