Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதல்வர் பதில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதல்வர் பதில்!

spacer.png

 

சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை அனுமதிப்பதற்காக 260 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 20) நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அமைச்சர்கள், மருத்துவர்களுடன் கொரோனா வைரசைத் தடுப்பது தொடர்பாகப் பலமுறை ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றது. இந்நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையிலும், தமிழகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறப்பாகச் சிகிச்சை அளிக்கின்றனர். இதன் காரணமாக, இன்றைக்குக் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 54 சதவீதமாக அதிகரித்துள்ளது. சென்னை மாநகராட்சியும், சுகாதாரத் துறையும் இணைந்து எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது என வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகிறது" என்றார்.

 

கொரோனா பரவலைத் தடுக்கத் தான் ஊரடங்கு போடப்பட்டது என்று தெரிவித்த அவர், இதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். காய்ச்சலைக் கண்டறிவதற்காகச் சென்னையில் 300 மையங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மையங்களை 450 ஆக உயர்த்த முயற்சி எடுத்து வருகிறோம்.

சென்னையில் ஏன் மீண்டும் முழு ஊரடங்கு என்று பல கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். சாலையில் விபத்தைத் தடுக்க ஸ்பீட் பிரேக் போடுவதுபோல் கொரோனாவை தடுக்க முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் வைரஸ் பரவலைத் தடுக்க அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் வைரஸ் தொற்றைத் தடுக்க மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதல்களின் படி பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்த சூழலில் பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் அரசின் முயற்சிக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், கூடுதலாக கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் 83 பரிசோதனை மையங்கள் உள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமான பரிசோதனை மையங்கள் உள்ளன. சென்னையில் மட்டும் 17,500 படுக்கை வசதிகள் உள்ளன.

கொரோனாவால், பாதிக்கப்படுபவர்களில் 80 சதவிகிதம் பேருக்கு அறிகுறிகள் ஏதும் தெரிவதில்லை 20 சதவிகிதம் பேருக்கு மட்டுமே அறிகுறி தெரிகிறது அதிலும் 7 சதவீதம் பேருக்குத்தான் தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது என்றார்.

இதையடுத்து சென்னையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஊரடங்கை நீட்டிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று பதிலளித்துள்ளார்.

அமைச்சர் அன்பழகனுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு, "தனக்குப் பாதிப்பு இல்லை என்று அவரே சொல்லிவிட்டார்" என்று விளக்கம் அளித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இந்த வைரஸ் தொற்று எப்போது முழுமையாக ஒழியும் என்ற கேள்விக்கு, இறைவனுக்குத் தான் தெரியும் என்று பதில் அளித்த முதல்வர் இந்த நோயை தடுக்கத்தான் முடியும் ஒழிக்கவே முடியாது என்று உலக சுகாதார மையமே தெரிவித்து விட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


 

https://minnambalam.com/public/2020/06/20/46/Like-speed-break--full-curfew-to-eradicate-corona-tamilnadu-cm-edappadi-palanisami

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.