Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாணத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களமும்  கட்சிகளின் நிலைவரமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாணத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களமும்  கட்சிகளின் நிலைவரமும்

வடக்கு மாகாணத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களமும்  கட்சிகளின் நிலைவரமும்

சண்முகவடிவேல்  

பாராளுமன்ற  தேர்தல் வடக்கு மாகாணத்தில் அதி தீவிரமான நிலையை எட்டிவருகிறது. ஆதீக்கம் செய்த தரப்பு தோல்வியை அடையும் நிலையில் தமிழ் மக்கள் கூட்டணி மூன்றுக்கு மேற்பட்ட ஆசனங்களை நோக்கி நகர்கிறது. நீதியரசர் தலைமையிலான அக்கூட்டணிக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவை பெறும் நிலை ஏற்பட்டுவருகிறது. வலிகாமம் பிரதேசத்திலும் வடமராட்சியிலும் விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கூட்டங்கள் அதனையே வெளிப்படுத்துகிறது. அதே நேரம் தேசிய மட்டத்தில் போட்டியிடும் கட்சிகளும் தேசிய கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளும் வடமாகாணத்தில் அதிக நெருக்கடியை நோக்கி பயணிக்கின்றன.

பொதுவெளியில் அல்லது தென் இலங்கையில் ஜனநாயகம் பற்றிய உரையாடலை முதன்மைப்படுத்தி வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் மையவாதக் கட்சியான தமிழரசுக் கட்சியும் தமக்கு அத்தகைய ஜனநாயகத்தினை குழிதோண்டிப் புதைத்ததன் விளைவாக மக்கள் மத்தியில் அதிக அச்சுறுத்தலுக்குள் தள்ளப்பட்டுள்ளது.முடிந்த வாரத்தில் புலி எதிர்ப்பு வாதியும் அவரது தோழரும் மிருசுவில் பகுதியில்  நடத்த முயன்று இடைவழியில் கூடியிருந்த மக்களிடம் நீங்கள் எமக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கூறி கூட்டத்தினை கைவிட்டு வந்ததிலிருந்து நிலமை தலைகீழாகிவருவதனை அவதானிக்க முடிகின்றது.  அவ்வாறே அரியாலைக்குள்ளும் ஒரு சம்பவம் இரு வேட்பாளருக்கும் ஏற்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. பொது வெளியில் ஒரு கூட்டத்தினை நடாத்த முடியாத நிலை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கடசியை பாராளுமன்றத்தில் தூக்கி நிறுத்த முயன்ற போது காணப்பட்ட ஒற்றுமையும் ஆலோசனையும்  தேர்தலில் காணமுடியாதுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினையில் மட்டுமல்ல தமிழ் மக்களுக்கான தேர்தலிலும் அத்தகைய ஒருமைப்பாடு இல்லாதுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. ஒரு கூட்டமைப்பினை விடுதலைப் புலிகள் உருவாக்கினார்கள் என்பதற்காக அதில் நிகழும் பிழைகளையும் தவறுகளையும் வஞ்சகமான சுயநல அரசியலையும் தமிழ் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இவர்கள் எப்படியெல்லாம் செயல் பட்டிருப்பார்கள் என்பது முக்கியமானது. விடுதலைப் புலிகள் தமது அமைப்புக்குள்ளேயே நிகழ்ந்த தவறுகளை எப்படிக் கையாண்டார்கள் என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே தெரிந்த விடயம். அத்தகைய பணியை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் மேற்கொள்ள அவர்கள் இல்லாத போது அதனை தமிழ் மக்களே கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை விடுதலைப் புலிகள் போல் தமிழ் மக்கள் செய்ய முடியாது. அதற்காகவே வாக்குச் சீட்டு உள்ளது.

wig 1

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய வங்குரோத்து நிலைக்கு யார் காரணம் என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். எந்த விடயம் ஆதிக்கம் செய்கிறது என்பதுவும் தமிழ் மக்களுக்கு தெரியும்.முக்கிய காரணம் அவர்களுக்குள் எழுந்துள்ள போட்டி. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை மீதிக் காலத்தில் எழுச்சி பெறாது எப்படி அழிப்பது என்பதற்கான போட்டியாகும். அது மட்டுமன்றி ஒரு கூட்டமைப்பாக அது செயல்பட முடியாது திண்டாடுகிறது. கடந்த இரு தசாப்த காலம் என்பது அதன் தலைமையிலும் பங்காளிக் கட்சிகளதும் பலவீனத்தை கோடிட்டுக் காட்டுகிறது. விடுதலைப் புலிகள் உருவாக்கியது என கூக்குரல் இடும் தரப்பினருக்கு தெரியவில்லை கூட்டமைப்பு புலிகளால் எடுத்துவந்த இலட்சியத்தினை எப்படிச் சிதைத்துள்ளார்கள் என்பது. அது மட்டுமல்ல அவர்கள் உருவாக்கும் போது அதில் அங்கம் பெற்றவர்கள் எப்படி பிரிந்து தனியன்களாகவும் மாற்று என்றும் செயல்பட வேண்டிய நிலைக்கு காரணமானவர்கள் கூட்டமைப்பினர் எனத் தம்மை அழைத்துக் கொள்வார்கள் என்று. வெளியே கூறிக் கொள்ளலாம் நாம் அவர்களை வெளியேற்றவில்லை தாமாகவே வெளியேறினார்கள் என்று. அதற்கான உண்மைக் காரணத்தை கூட்டமைப்பின் ஆதிக்கவாதிகள் சொல்லாது விட்டால் தமிழ் மக்களுக்கு தெரியாது என நினைக்கிறார்கள்.

இதேநேரம் மாற்று என தம்மை அழைத்துக் கொண்டு அதன் ஊடாக வலுவான அரசியல் கலாசாரத்தை ஆரம்பித்துள்ளார் நீதியரசர் விக்னேஸ்வரன். அவர் ஐந்து கட்சிகளை ஒன்றிணைத்து ஓர் உடன்பாட்டை வரைந்து அதன் கீழ் அனைவரையும் ஒன்றிணைத்து ஆரோக்கியமாக முரண்பாடோ குழிபறிப்போ இன்றி பயணிக்கின்றார். அது மட்டுமல்ல தனது தோழமைக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட துணிச்சலுடன் முன்வந்ததுடன் எல்லோரையும் அரவணைத்து பயணிக்கின்றார். அத்துடன் வடக்கையும் கிழக்கையும் ஒருங்கு சேர பயணிக்கும் தமிழ் மக்களது நீண்ட அபிலாசைக்குள் இயங்கும் அணியாக தம்மை வடிவமைத்து செயல்படுவது வியப்பாக உள்ளது.

வேறு எந்தத் தரப்பு குறிப்பிட்டாலும் மாற்று அணி என்பது விக்னேஸ்வரன் தலைமையிலான அணி என்பதற்கு அதிக உள்ளடக்கங்கள் அவ்வணியிடம் காணப்படுகிறது. வேறுபட்ட சக்திகளை ஒன்றிணைத்திருகிறது. வேறுபட்ட ஆளுமைகளை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.வெற்றி பெறும் பெண் வேட்பாளர்களை தனிப்பட்ட நலனுக்கு அப்பால் களத்தில் நிறுத்தியுள்ள அணியாகவும் விளங்குகிறது.ஏனைய கட்சிகள் தமது பிரதான வேட்பாளர்களின் வெற்றிக்காக மட்டுமே பெண்களை நிறுத்துகின்ற சந்தர்ப்பத்தில் பெண் தலைமைத்துவத்தினை முதன்மைப்படுத்திக் கொண்டு தமிழ் மக்கள் கூட்டணி பெண் வேட்பாளர்களை வடக்கு கிழக்கில் நிறுத்தியுள்ளது. வெளிப்படையாக மக்களிடம் நிதி கோரும் ஐரோப்பிய நாடுகள் போன்று செயல்படும் விக்னேஸ்வரன் தமது வேட்பாளர்களது சொத்து விபரத்தையும் காட்டிவருவது அதன் சிறந்த அரசியல் கலாசார பண்பினைக் காட்டுகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினராக இருந்தாலும் சரி- வேறு தரப்பினராக இருந்தாலும் சரி அவர்கள் விருப்பு வாக்குக்காக தமக்குள்ளே சண்டையிட ஆரம்பித்துள்ளனர்.காட்டிக் கொடுப்புகளையும் குழிபறிப்புகளையும் பார்க்கும் போது இவர்களிடமிருந்து தமிழ் மக்கள் ஏதாவது பெற முடியுமா என்பது கேள்விக்குரியதாகவே தெரிகிறது. பிற கட்சிகளை குற்றம்சாட்டும் மாற்று அணி என தம்மை தாமே அழைத்துக் கொள்ளும் கட்சியினர் போடும் சண்டை அவர்களது கொள்கை வழித் தோன்றல்கள் என்பதன்  போலித்தனத்தை வெளிப்படுத்துகிறது. இவர்களிடம் காணப்படும் கொள்கை பற்றுதல் கட்சிக்கானதா ? தமிழ் மக்களுக்கானதா? அல்லது விருப்பு வாக்குகளுக்கானதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியைப் பொறுத்தவரை உடன்பாட்டுடனும் நட்புடனும் புரிந்துணர்வுடனும் செயல்படுகின்றனர். தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படும் போக்கு அவ்வணியிடம் காணப்படுகிறது.

எனவே தமிழ் மக்கள் கூட்டணியினரே மாற்று அணியாகவும் தெளிவான கொள்கை உறுதிப்பாடு உடையவர்களாகவும் காணப்படுவதுடன் கட்டுக் கோப்புடனும் ஒழுங்குடனும் பயணிக்கின்றனர். அவர்களது தலைமையிடம் காணப்படும் உண்மையும் அரசியல் அபிலாசையும் அவ்வணிக்கு மூன்றுக்கு மேற்பட்ட ஆசனத்தை கொடுக்கும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஏறக்குறைய யாழ்ப்பாணத் தேர்தல்’ மாவட்டதிலேயே மூன்று ஆசனம் கிடைக்குமாயின் வடக்கு கிழக்கில் அதிக ஆசனத்திற்கு அவ்வணிக்கு வாய்ப்புண்டு. மக்கள் சரியானதை தேர்தெடுக்கும் திறன் உடையவர்கள் என்பது தேர்தலுக்கு பின்பாவது ஏனைய தரப்புக்கள் புரிந்து கொள்வார்கள்.

 

http://www.samakalam.com/செய்திகள்/வடக்கு-மாகாணத்தில்-சூடு/

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் சமகாலம் இணையத்தளப் பத்திரிகை இந்திய ஆதரவுப்பத்திரிகை என் காரணம் இதேஎ பத்திரிகை சம்பந்தன் இந்தியாவை ஒதுக்கி ரணிலுடன் அரசியல் செய்ததி இன்னுமொரு கட்டுரையில் விபரிக்கிறது. தவிர விக்கியரை இப்போது இயக்குவது இந்தியா என்பது அனைவர்க்கும் தெரிந்தவிடையம்.

அதன் ஒரு பகுதியாகவே சென்னையில்  நடிகர் ரஜனியுடனான சந்திப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.