Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு வெளுக்குமா..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு வெளுக்குமா..?

July 20, 2020

10.png

லங்கையில் தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்ற ஒரு கருத்து தமிழர்களிடையே இருக்கிறது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் கலைஞருமான மு.கருணாநிதி யும் இதனையே சொல்லி தனது பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ள காரணம் தேடிக்கொண்டார். ஏன் உலகெங்கும் வாழும் தமிழிரிடையே கூட இந்த ஒற்றுமை இல்லை என்ற ஒரு கருத்து உண்டு. உலகில் எந்தவொரு இனமும் எல்லோரும் எதிர்பார்க்கும் இந்த ஒற்றுமையை அடையவில்லை என்பது ஒருபுறமிருக்க, இலங்கையில் தமிழர்களிடையே ஒற்றுமையை அரசியலில் மாத்திரம் எதிர்பார்ப்போர், மொழியைப் போல ஏனைய கலை, கலாசார, பண்பாட்டு இலக்கிய தளங்களில் ஒற்றுமையாக இணைந்து செயல்படுகின்றனரா அல்லது அதற்கான முயற்சிகளை எடுக்கின்றார்களா எனும் கேள்வியை முன்வைக்க வேண்டியுள்ளது. என்னவோ ஏனைய எல்லா விஷயத்திலும் ஒற்றுமையாக இயங்குவது போலவும் அரசியலில் மாத்திரந்தான் அந்த ஒற்றுமையைக் காணவில்லை என்பதுபோலத்தான் தமிழரின் ஒற்றுமைபற்றிய கோட்பாடு இருக்கிறது.

ஒற்றுமை எங்கெல்லாம் இல்லாமல் வேற்றுமையாகி நிற்கிறது என்றால் அதில் பிரதேசவாதமும் சாதியவாதமும் பிரதானமானது. அதைப்பற்றி இங்கு விரிவாக அவதானம் செலுத்தாவிட்டாலும் சுருக்கமாக சொல்லிக் கொண்டால் மலையகம் – யாழ்ப்பாண பிரதேச வாதம் பிரதானமானது. இதன் சாதாரண (உள்ளக) பேச்சு வழக்கு தோட்டக்காட்டான் – பனங்கொட்டையான் என விரவி கிடக்கிறது. உள்ளே ஊறிக்கிடப்பது அவ்வப்போது வெளிப்படுவதும் உண்டு. இதில் பிரதேசவாதம் மட்டுமல்ல சாதியவாதமும் கூட சேர்ந்தது. அது யாழ் மேலாதிக்க வாதத்தின் வழிவந்தது. அது தேவைப்பட்டால் “வடக்கத்தையான்” என்ற வார்த்தை கொண்டும் சுட்டப்படும். அது எப்படி வடக்கில் உள்ள தமிழர்கள் மத்தியில் உள்ள மலையகத்தவரை வடக்கத்தையான் என்கிறார்கள் என்றால் அவர்கள் கொண்டுள்ள இந்திய அடையாளத்தை உட்கருத்தாகக் கொண்டு உருவாகிறது. ஆனால், அதே இந்தியாவிடம் தான் தீர்வை நாடி நிற்பார்கள்.

 

அடுத்த பிரதேசவாதம் கிழக்கான் – யாழ்ப்பாணி. இதில் பிரதேசவாதம்தான் பிரதானம் என்றாலும் சாதியவாதமும் இல்லாமல் இல்லை. கிழக்கு என்று வரும்போது அதில் அவ்வளவாக திருகோணமலை இலக்காவதைவிட மட்டக்களப்பே அடங்கும் . அம்பாறையில் கணிசமாக தமிழர்கள் வாழ்ந்த போதும் அது முஸ்லிம் மாவட்டம் என்ற நிலைக்கு சென்றுவிட்டது. எனவே இப்போதைக்கு பிரதேசவாத பிரிவில் உச்சம் பெற்று இருப்பது மட்டக்களப்பான் – யாழ்ப்பாணத்தான் விரிசல்.

 

வரலாற்றுமுதல் கொண்டே இத்தகைய உள்முறுகல் இருந்தாலும் அண்மைக்காலமாக அந்த பிரதேசவாதமே தமது அரசியலின் அடிப்படை என கிழக்கில் ஒலிக்கத் தொடங்குகிறது. கிழக்கு அரசியல் பிரமுகரான முன்னாள் அமைச்சர் செல்லையா ராஜதுரையை ஒருமுறை சிவாஜிலிங்கம் இந்த பிரதேசவாத, சாதியவாத வசைச் சொல் கொண்டு திட்டித்தீர்த்தபோது அவர் பேசும் “தமிழ்த்தேசியத்தின்” நேர்மை குறித்த கேள்வி எழுந்தது. பின்னர் அவர்சார்ந்த அரசியல் அணி சார்ந்தும் எழுந்தது.

வடக்கு கிழக்குப் பகுதிகளில் ஆயுதப்போராட்டத்திற்கு அடித்தளமிட்டது அவர்கள் ஜனநாயக அரசியலாக முன்னெடுத்த தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல்தான். வட்டுக்கோட்டைத் தீர்மானம் அதற்கு வழிவகுத்தது. இடையே இந்திய தலையீட்டுடன் “இணைந்த வடகிழக்கு மாகாண சபை” என்ற ஒரு இலக்கு எட்டப்பட்டு அதன் தலைமையகமாக திருகோணமலையும் தலைவராக வரதராஜபெருமாளும் செயற்பட்ட நிலையில் விடுதலைப் புலிகள் அதனை விரும்பாதநிலையில் வடகிழக்கு மாகாண சபை செயலிழந்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட தென்னிலங்கை அரசு பின்னர் அதன் பிணைப்பையும் சட்டரீதியாக பிரித்துப் போட்டது.

 

ஜனநாயக அரசியல் அணி முன்வைத்த தனிநாட்டு கோரிக்கையை அடைய ஆயுதமேந்திய குழுவே மீண்டும் சிதறிக்கிடந்த கட்சிகள் இயக்கங்களை தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக ஜனநாயக அரசியலிலும் ஒருங்கிணைத்தது. ஆக பயணத்தை தொடங்கிய இடத்திற்கே வந்து நின்றது வடக்கு – கிழக்கு தமிழர் அரசியல்.

அதே நேரம் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவுகள் மத்தியில் பிரதேசவாத முகம் காட்டிய கருணா, பிள்ளையான் பிளவு இன்றைய ஜனநாயக அரசியல் சூழலில் அடிப்படையான வேறுபாட்டைக் கொண்டு இயங்கும் அரசியல் செல்நெறியை நிரந்தரமாக்கி வருவதாக தெரிகிறது. யாழ். ஆதிக்க சக்திகளால் தீர்மானிக்கப்பட்டதாக தமது தலைமை இருக்கக் கூடாது என கிழக்குத் தமிழர் அரசியல் கட்டமைப்பு உருவெடுக்கிறது.

 

அத்தகைய ஒரு அரசியல் கூட்டமைப்பை உருவாக்க அகில இலங்கை தமிழர் மகாசபை எனும் அரசியல் கட்சி முயன்றபோதும் அது சாத்தியமாகாத நிலையில் இப்போது அந்த கட்சியின் சின்னத்தில் கருணா அம்மான் எனும் விநாயகமூர்த்தி முரளிதரனே முகம் காட்டுகிறார். அந்த கட்சியின் தலைவர் கலாநிதி.விக்னேஸ்வரன். ஆனால் , அவரது முகத்தை மக்கள் மறந்துபோனதாகவே தெரிகிறது. குணசேகரம் சங்கரின் பெயரை கருணாவே ஒரு சில இடங்களில் உச்சரித்தார். மற்றபடி அது கருணா கட்சி என்ற ஆகிவிட்டது.

மறுபுறம் பிள்ளையான் எனப்படும் எஸ்.சந்திரகாந்தன் தனிக்கட்சி தொடங்கி ஏற்கனவே மாகாண முதலமைச்சராக இருந்து பல அபிவிருத்திகளைச் செய்து, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் கணிசமான முன்னேற்றம் காட்டியுள்ள நிலையில் இப்போது சிறையில் இருந்தவாறே பொதுத்தேர்தலில் போட்டி இடுகிறார். கருணாவும் பிள்ளையானும் ஒரே அணியாக பிரபாகரனிடம் இருந்து பிரிந்து வந்தாலும் இந்த தேர்தலில் கருணா கப்பல் சின்னத்திலும் பிள்ளையான் படகு சின்னத்திலும் பிரிந்தே பயணம் செய்கின்றனர்.

கருணாவை விட பிள்ளையானில் பல முற்போக்கு அம்சங்கள் தெரிவதை மறுப்பதற்கில்லை. ஆனால் , இருவரினதும் இலக்கு யாழ் . மையவாத அரசியல் தலைமைக்கு எதிராக கிழக்குத் தமிழ்த் தலைமையை உருவாக்குவது என்ற நிலைப்பாடாக இருந்தபோதும் இரு அணிகளுமே அதைவிட அதிகமாக முஸ்லிம் விரோத நிலைப்பாட்டையும் பிரசாரத்தையும் முன்னெடுப்பதில் ஒற்றுமை காட்டுவதாகவே தெரிகிறது. எனவே இரு அணிகளும் தமது நிலைப்பாட்டில் திசை மாறுகின்றனவா எனும் அவதானிப்பைச் செய்யவேண்டி உள்ளது. அதேநேரம், இருவருமே ஆளும் மகிந்த அணி ஆதரவாளர்கள்.

இதற்கிடையே கடந்த தேர்தலில் தமிழ்த்தேசியம் பேசிவந்த வியாழேந்திரன் இதே யாழ் மையவாத எதிர்ப்பு காரணத்தைக் காட்டி நேரடியாக ஆளும் மகிந்த அணியின் களத்தில் இறங்கி உள்ளார். அவரிடமும் முஸ்லிம் எதிர்ப்பு நிலை. மறுபுறம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கிழக்குத் தமிழரையும் அரவணைத்துச் செல்லும் போக்கைக் காட்டும். அதேவேளை முஸ்லிம் எதிர்ப்பு நிலையையும் வேட்பாளர்கள் ஊடாக வெளிப்படுத்தாமல் இல்லை. குறிப்பாக அம்பாறையில் கோடீஸ்வரன் அதில் அதிகமாகவே நிற்கிறார்.

வடக்கா கிழக்கா என இரண்டும் கெட்ட நிலையில் நிற்கும் திருகோணமலையில் சம்பந்தன் இந்த முறையும் களம் கண்டு இருப்பது நகைச்சுவையாகவும் பார்க்கப்படுகிறது. உட்கார்ந்த இடத்தில் அவர் பிரசாரம் செய்து வெற்றிபெறும் நம்பிக்கை காட்டுவது இன்னும் தமிழ்த்தேசிய ஆதரவு நிலைப்பாட்டில்தான் திருமலை மக்கள் இருக்கிறார்களா? எனும் கேள்வியை எழுப்ப யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியும், முன்னாள் இணைந்த வடகிழக்கின் முதலமைச்சர் வரதராஜபெருமாளும் ஆளும் ராஜபக்‌ஷ அணியின் ஆதரவாளர்களாக அங்கே களம் இறங்கி உள்ளார்கள்.

அங்கே மட்டக்களப்பு அம்பாறை அளவுக்கு எதிர் முஸ்லிம் நிலைப்பாடு இல்லை எனலாம். இதற்கிடையே வடக்கில் புதிதாக உருவான புதிய கூட்டணியான “தமிழ் மக்கள் தேசிய கூட்டணி” யும் முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் கிழக்கிலும் களம் இறங்குகிறது.

எனவே திருமலை, மட்டக்களப்பு , திகாமடுல்ல எனும் மூன்று மாவட்டங்களிலும் மொத்தத்தில் மூன்று அணிகளாக தமிழ்த்தேசிய ஆதரவு , முஸ்லிம் எதிர்ப்பு, ராஜபக்‌ஷ ஆதரவு என்ற நிலைகளைக் கடந்தே கிழக்குத் தமிழர் அரசியல் மயப்படவேண்டி இருக்கிறது.

கிழக்கு வெளுக்குமா ?

 

 

http://thinakkural.lk/article/56495

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.