Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிருப்தியாளர்களை சமாளிக்க களத்தில் இறங்கிய ஜனாதிபதி..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிருப்தியாளர்களை சமாளிக்க களத்தில் இறங்கிய ஜனாதிபதி..

ரொபட்அன்டனி

  • ஆளும் கட்சிக்குள்ளேயே வலுத்துவந்த இருபதாவது திருத்தத்தின் சில ஏற்பாடுகள் மீதான எதிர்ப்பை இறுதி நேரத்தில் களத்தில் இறங்கிய ஜனாதிபதி சாமர்த்தியமான முறையில் முறியடித்து வெற்றியீட்டியிருக்கிறார்
     
  • எதிர்க்கட்சி மேலும் பலவீனமடைந்துள்ளதுடன் அதன் 8 உறுப்பினர்கள் அரசாங்கத்திற்குஆதரவாகவாக்களித்தனர்
     
  • சர்ச்சைகள் எதிர்ப்புக்கள் விமர்சனங்களுக்கு மத்தியில் இரட்டை குடியுரிமையுடையோர் தேர்தலில் போட்டியிடலாம் என்ற ஏற்பாடும் நிறைவேற்றம்

பல்வேறு சர்ச்சைகள் எதிர்ப்புகள், ஆதரவு, சாதக, பாதக, விமர்சனங்களுக்கு மத்தியில் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பில் மற்றுமொரு மைல்கல் அல்லது திருப்புமுனை பதிவாகியிருக்கின்றது. 

யாரும் எதிர்பார்க்காத வகையில் எதிர்த்தரப்பிலிருந்து 8 எம்.பி.க்களின் ஆதரவும் தற்போது அரசாங்கத்திற்கு கிடைத்திருக்கின்றது. அந்த அடிப்படையில் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக 156 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ள நிலையில் அதற்கு எதிராக 65 எம்.பி.களே வாக்களித்துள்ளனர்‌.  91 மேலதிக வாக்குகளினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் இருபதாவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான அரசாங்கத்துக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்த நிலையில் முதலாவது விடயமாக இந்த 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கின்றனர்.  

1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தற்போதைய இரண்டாவது குடியரசு அரசியலமைப்பில் தற்போது செய்யப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக இதுவரை 20 திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் இந்த 20ஆவது திருத்தம் சட்டமானது கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டத்தின் முக்கியமான விடயங்களை ரத்து செய்து மீண்டும் அதற்கு முன்னரான நிலைமைக்கு கொண்டு சென்றிருக்கிறது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி நாட்டின் பாராளுமன்றதேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான ஆளும்கூட்டணி 150 ஆசனங்களைப் பெற்று மூன்றில் இரண்டு பலத்துடன் அரசாங்கத்தை அமைத்தது. 

மூன்றிலிரண்டு பெரும்பான்மை

விகிதாசாரத் தேர்தல் முறைமையில் இவ்வாறு ஒரு வெற்றியை பெறுவது மிகவும் கடினமானது என்று கூறப்பட்டுவந்தநிலையில் அந்த சவாலை முறியடித்து ஆளும் கட்சி கூட்டணியாக 150 ஆசனங்களை பெற்றது. அதன் பின்னர் முதலாவது விடயமாக அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் இறுதி பகுதியில் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. 

http://cdn.virakesari.lk/uploads/medium/file/137129/01.jpg

செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி 20வது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் ஆரம்பத்திலிருந்து இதனை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பிரதான எதிர்க் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் மற்றும் ஏனைய பல்வேறு அமைப்புகளும் எதிர்த்தன. 

குறிப்பாக ஆளும் கட்சிக்குள்ளேயே இருபதாவது திருத்தச் சட்டம் தொடர்பில் அதிருப்தியான விமர்சன கருத்துக்கள் எதிர்ப்பு கருத்துக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தன. முக்கியமாக 20 ஆவது திருத்தச் சட்டமானது 19ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி இழந்திருந்த சகல அதிகாரங்களையும் மீண்டும் அவருக்கு கொடுப்பதாகவே கொண்டு வரப்பட்டிருக்கிறது. 

ஆளும்கட்சிக்குள்ளே வலுத்த எதிர்ப்பு

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் இந்த சட்டமூலத்தை எதிர்த்தது அதுமட்டுமன்றி ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கின்ற விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய, மற்றும் வாசுதேவ நாணயக்கார, விஜேதாஸ ராஜபக்ஷ, விதுர விக்ரமநாயக்க உள்ளிட்ட ஆளும் கட்சியின் முக்கியபாராளுமன்றஉறுப்பினர்களே இதனை எதிர்த்து வந்தனர். 

அதாவது பாராளுமன்றத்தை ஒருவருடத்தில் கலைப்பதற்கான அதிகாரம், கணக்காய்வு ஆணைக்குழு விவகாரம், அவசர சட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள ஏற்பாடு மற்றும் இரட்டை குடியுரிமை உடையோர் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு ஆளும் கட்சியிலிருந்து இந்தஅதிருப்தியாளர்கள்கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். 

நீதிமன்ற தீர்ப்பு

இந்த சூழலில் எதிர்க் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இருபதாவது திருத்தத்தை கடுமையாக எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தன‌. 39 மனுக்கள் இது தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதன்படி வழக்குகளை விசாரித்த ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழு அந்த தீர்ப்பை சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பியிருந்தது. அதில் 4 பிரிவுகளில் மாற்றம் செய்யாவிடின் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும் என்ற விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் சுதாகரித்துக் கொண்ட அரசாங்கம் உடனடியாக அவற்றில் திருத்தங்களை செய்து 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதாக அறிவித்தது. எனினும் இரட்டைக்குடியுரிமை உடையோர் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற ஏற்பாடு தொடர்பில் உயர் நீதிமன்றம் எந்த கருத்தையும் வெளியிடவில்லை. 

அரசின் பிடிவாதம்

அந்த வகையில் அரசாங்கமானது அந்த சரத்தை உள்ளடக்க வேண்டும் அதனை நீக்க முடியாது என்பதில் பிடிவாதமாக இருந்தது. எனினும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, விஜயதாச ராஜபக்ச, விதுர விக்ரமநாயக்க உள்ளிட்ட ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் இரட்டை குடியுரிமை உடையோர் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற ஏற்பாடு நீக்கப்பட வேண்டும் என்பதில் தொடர்ச்சியாக உறுதியாக இருந்ததுடன் அதனைவலியுறுத்தி வந்தனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இந்த இரட்டைகுடியுரிமை உடையோருக்கானஏற்பாடு விடயத்தில் அதிருப்தியான நிலைப்பாட்டை வெளிக்காட்டி இருந்தது. 

இறுதி தருணங்கள்

இந்த நிலையில் ஆளும் கட்சிக்குள்ளேயே 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு வந்துவிடுமா என்ற ஒரு நிலை கடந்த புதன்கிழமை இரவு வரை நீடித்தது. இதற்கிடையில் ஆளும் கட்சியினர் எதிர்த்தரப்பின் ஒரு சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது வாக்கெடுப்பின்போது காண முடிந்தது‌. 

எப்படி இருப்பினும் ஆளும் கட்சியின் ஒரு சில முக்கியஸ்தர்கள் இதனை தொடர்ந்து எதிர்த்து வந்ததால் இறுதியாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச களத்தில் இறங்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அவர் கடந்த புதன்கிழமை இரவு ஆளும் கட்சியில் இருக்கின்ற குறித்த அதிருப்தியாளர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, விஜயதாச ராஜபக்ச, வாசுதேவ நாணயக்கார, விதுர விக்ரமநாயக்க உள்ளிட்ட தரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். 

ஜனாதிபதி கோத்தாவின் உணர்வுபூர்வ கோரிக்கை

இதன்போது ஜனாதிபதி ஒரு உணர்வுபூர்வமான உரையை இவர்கள் முன்னிலையில் நிகழ்த்தியிருக்கிறார். அங்கு ஜனாதிபதி உரையாற்றுகையில் இதுவரை காலமும் இந்த இரட்டை குடியுரிமை உடையோர் விவகாரம் தொடர்பில் பாரிய விவாதங்கள் இந்த நாட்டில் இருக்கவில்லை. எனினும் இம்முறை அந்த விவாதம் ஏற்பட்டிருக்கிறது. 19 ஆவது திருத்தச் சட்டத்தில் என்னை இலக்கு வைத்து இந்த இரட்டைக்குடியுரிமை உடையயோர் விடயத்தை கடந்த அரசாங்கம் கொண்டு வந்தது. இம்முறைஇருபதாவது திருத்தச் சட்டத்தில் அதனைஉள்ளடக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. எனவே இம்முறை 20 ஆவது திருத்தத்தில் அது ஒரு ஏற்பாடாக இருக்கட்டும். ஆனால் விரைவில் புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்படவுள்ள நிலையில் அதில் இரட்டைக்குடியுரிமை உடையோர் தேர்தலில் போட்டியிடமுடியாதவாறான ஒரு ஏற்பாட்டை  கொண்டுவருவதை உறுதிப்படுத்துகிறேன். எனவே இந்த எனது வேண்டுகோளை ஏற்று சகலரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார். 

நிலைப்பாட்டை மாற்றிய அதிருப்தியாளர்கள்

இந்த சூழலில் ஜனாதிபதியின் இந்த உருக்கமான கோரிக்கையை செவிமடுத்த குறித்த அதிருப்தியாளர்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்து புதிய அரசியலமைப்பில் இந்த ஏற்பாடு நீக்கப்படும் என்ற உறுதிமொழிக்கு அமைய 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்க தீர்மானித்தனர். 

அதன் அடிப்படையிலேயே கடந்த வியாழக்கிழமை இரவு வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது எதிர்பார்த்ததற்கும் அதிகமாக 156 வாக்குகளை பெற்று 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. 

இதன்போது பிரதானஎதிர்க்கட்சியானஐக்கிய மக்கள் சக்தி இதனை கடுமையாக எதிர்த்தது. எனினும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இடம்பெற்ற டயானா கமகே என்ற பாராளுமன்ற உறுப்பினர் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தார். 

ஆச்சரியம்

அதுமட்டுமின்றி 20 ஆவது திருத்தச் சட்டத்தின் 17ஆவது சத்தான இரட்டை குடியுரிமை உடையோர் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற விடயத்துக்கு எதிர்க்கட்சியினர் தனியான ஒரு வாக்கெடுப்பை கோரியநி‍லையில்சர்ச்சைக்கு பிறகு இது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அங்கு ஒரு ஆச்சரியமும் காத்திருந்தது. 20 ஆவதுதிருத்தம்மீதான வாக்கெடுப்பில்156 வாக்குகளை ஆதரவாக கிடைத்தது. 65 வாக்குகள் எதிராக கிடைத்தன. ஆனால் இரட்டைக்குடியுரிமை உடையயோர்ஏற்பாட்டுக்குதனித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 157 வாக்குகள் ஆதரவாகவும் 64 வாக்குகள் எதிராகவும் கிடைத்தன. 

இந்த நிலையிலேயே மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எதிர்க்கட்சியில் இருந்து எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். 

எதிர்த்தரப்பின் எட்டுப் பேர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை  சேர்ந்த நசீர் அஹமட்,ஹரிஸ் , தௌபீக், பைசல் காசிம் ஆகியோர் ஆதரவாகவாக்களித்தனர். ஆனால் கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீம் எதிர்த்து வாக்களித்தார். அதேபோன்று  ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து இஷாக்  ரஹ்மான்  தேசியப்பட்டியல் எம்.பி.யான  டயானா கமகே ஆகியோரும் தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து அரவிந்த குமாரும் முஸ்லிம்   கூட்டமைப்பை சேர்ந்த அலிசப்ரி ரஹீம் ஆகியோரும்  ஆதரவாகவாக்களித்தனர். 

20 ஆவதுதிருத்தத்துக்குஎதிராக ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசியக்கூட்டமைப்பு,ஜே.வி.பி.தமிழ் தேசிய மக்கள் முன்னணி,தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகியன வாக்களித்தன .

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் தலைவர் ரவூப் ஹக்கீமை தவிர ஏனையவர்கள் 20 க்குஆதரவாக வாக்களித்திருக்கின்றனர். அதேபோன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் க ரிசாத் பதியுதீன் ஆதரவாக வாக்களிக்கவில்லை.அவரது கட்சியில் இருவர் ஆதரவாக வாக்களித்துள்ளனர். 

 தற்போதைய நிலைமையில் பாராளுமன்றத்தில் 223 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியினதும் எமது மக்கள் சக்தியையும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை பாராளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்யவில்லை. எனவே தற்போது இருக்கின்ற 223 பேரில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை அரசாங்கம் 20 க்கு  பெற வேண்டியிருந்தது. 

அதன்படி 149 பேர் 20ஆவது திருத்தத்துக்கு ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தால் போதுமானது என்ற நிலைமையே காணப்பட்டது. ஆளுங்கட்சிக்கு தற்போது 150 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஆனால் சபாநாயகர் முதலாவது கட்டத்தில் வாக்களிக்க மாட்டார். அப்படியானாலும் அரசாங்கத்துக்கு 149 பேர் வாக்களித்து இருக்க வேண்டும். 

எனினும் எதிர்க்கட்சியின்எட்டு உறுப்பினர்களின் ஆதரவுடன் அரசாங்கத்துக்கு ஆதரவாக 156 வாக்குகளே கிடைத்தன. காரணம் சபாநாயகர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை‌. மைத்திரிபாலசிறிசேனகுறித்தவாக்கெடுப்புநேரத்தில்பாராளுமன்றத்துக்குசமூகமளிக்கவில்லை.  அப்படிப் பார்க்கும்போது எதிர்க்கட்சியின் 8 பேர் வாக்களித்திருக்காவிடின்அரசாங்கம் 20வது திருத்தத்தை நிறைவேற்றுவதில் நெருக்கடியை சந்தித்திருக்கும் என்று தோன்றுகிறது. 

மீண்டும் அதிகாரங்கள் 

எப்படி இருப்பினும் அரசாங்கம் தற்போது 20 ஆவது திருத்தத்தை மிகவும் வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறது. இதன் மூலம் ஜனாதிபதிக்கு அதிகளவான நிறைவேற்று அதிகாரங்கள் கிடைக்கின்றன. எனினும் ஆரம்பத்தில் ஒரு வருடத்தில் பாராளுமன்றத்தை கலைக்க முடியும் என்ற ஏற்பாடு தற்போது இரண்டு வருடங்களின் பின்னரே பாராளுமன்றத்தைப் ஜனாதிபதியினால் கலைக்க முடியும் என்ற வகையில் திருத்தப்பட்டிருக்கிறது. அதேபோன்று கணக்காய்வு விவகாரம்தொடர்பான இணக்கப்பாடு திருத்தமாக கொண்டு வரப்பட்டிருக்கிறது. 

மேலும்அவசர சட்ட மூலங்களை நிறைவேற்றுவதில்20 இல் முன்னர்காணப்பட்டஏற்பாட்டில் திருத்தம்செய்யப்பட்டுள்ளது. ஒரு இக்கட்டான நிலையில் மட்டும் அதனை செய்வதற்கான ஒரு ஏற்பாடு திருத்தமாக கொண்டு வரப்பட்டிருக்கிறது‌. 

இந்நிலையில் 20 ஆவது திருத்தத்தின் சில ஏற்பாடுகளை கடுமையாக எதிர்த்துவந்த ஆளும் கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள்  ஜனாதிபதியின் வாக்குறுதியின் அடிப்படையில் தற்போது அதற்கு ஆதரவளித்திருக்கின்றனர். 

அந்தவகையில் மீண்டும் தற்போது ஜனாதிபதியிடம் அதிகாரங்கள் சென்றிருக்கின்றன. எதிர்க்கட்சி மீண்டும் ஒருமுறை பலவீனமடைந்து இருக்கிறது. எதிர்க்கட்சியில் இருந்த 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்து இருக்கின்றனர். அப்படி பார்க்கும் போது அரசாங்கம் மேலும் பலமடைந்துள்ளதுடன் எதிர்க்கட்சி மேலும் பலவீனம் அடைந்திருக்கிறது. இந்நிலையில்ஆளும்எதிர்க்கட்சிகளின்அடுத்தகட்டநகர்வுஎவ்வாறுஇருக்கும்என்பதனைபொறுத்திருந்துபார்க்கலாம்.  

https://www.virakesari.lk/article/92914

 

Edited by கிருபன்

  • கிருபன் changed the title to அதிருப்தியாளர்களை சமாளிக்க களத்தில் இறங்கிய ஜனாதிபதி..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.