Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"படுமுட்டாள்தனமான நடவடிக்கை!' பல தரப்பிலும் இப்படித்தான் விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-06-09

"படுமுட்டாள்தனமான நடவடிக்கை!' பல தரப்பிலும் இப்படித்தான் விமர்சனம்

கொழும்பு தங்குமிட விடுதிகளில் இருந்து ஈழத் தமிழர் களைப் பலவந்தமாக வெளியேற்றும் இலங்கைப் பாதுகாப் புத் தரப்பினரின் அடாவடித் தனமான நடவடிக்கைக்கு எதி ராக உயர்நீதிமன்றமே இடைக்காலத் தடை விதித்து விட்டிருக் கின்றது.

இவ்விவகாரத்தில் தமிழருக்கு ஆதரவான பச்சாதாப உணர்வு இனம், மொழி, மதம் கடந்து இலங்கைத்தீவு முழு வதும் ஒரே சமயத்தில் பீறிட்டுப் பிறந்திருப்பதையும் உணர முடிகின்றது.

இத்தகைய நடவடிக்கையை எடுப்பதற்கு அரசின் பாதுகாப்புத்துறை மேற்கொண்ட தீர்மானம் குறித்து இலங்கை யின் எந்தத் தரப்பிலிருந்தும் எந்தப் பக்கத்திலிருந்தும் எந்தத் தலைவர்களிடமிருந்தும் வந்த ஒரே கணிப்பு இது தான்: ""இது ஒரு முட்டாள் தனமான முடிவு'' என்பதே அது.

அரசுக்கு ஆதரவாக இதுவரை செயற்பட்ட ஜே.வி.பியில் தொடங்கி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, பிரதான எதிர்க்கட்சியான ஐ. தே. கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புளொட் என சகல கட்சிகளினதும் தலைவர்களும் வீ. ஆனந்த சங்கரி போன்றோரும் கூட இந்த நடவடிக்கையை ஒரே சொல் லில் "முட்டாள் தனமான நடவடிக்கை' என்றே விமர்சித் திருக்கின்றார்கள்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வக்கில்லாத கொழும்பு அரசு, கூட்டுக் குற்றப் பொறுப்பாக முழுத் தமிழினம் மீதும் அதைச் சுமத்தி, ஓர் இன ஒழிப்பு நட வடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானித்தமை படு முட்டாள் தனம் என்பதில் இரண்டு கருத்துகளுக்கு இடமிருக்க முடியாது என்பது தெளிவு.

அதுவும் காலையில் நாடாளுமன்றம் கூடவிருக்கையில் முதல்நாள் இரவு இத்தகைய கொடூரத்தை மேற்கொள்ளத் தீர் மானித்த பாதுகாப்பு அதிகாரிகள் நிச்சயமாக புத்தி சாதுரிய மற்றவர்கள்தான்.

ஏற்கனவே, புறக்கோட்டைப் பகுதி விடுதி உரிமையாளர்களை அழைத்து, அந்த விடுதிகளில் தங்கியுள்ள தமிழர் களை அப்புறப்படுத்த வேண்டும் என்று வாயளவில் பொலிஸார் எச்சரித்த போதே அதற்குக் கடும் எதிர்ப்புத் திரண்டு எழுந் தது. அதைக் கண்டு, தமது கடும் நிலைப்பாட்டிலிருந்து பின் வாங்கி புதுக்கதை விளக்கம் அவிழ்த்து விட வேண்டிய வர்களானார்கள் பொலிஸார். அப்போதே சரியான பாடத்தைப் படித்து நிலைமையை ஊகித்தறிந்திருக்க வேண்டும் பாது காப்புத் தரப்பினர். தவறிவிட்டார்கள்.

நிலைமையைப் புரிந்துகொள்ளும் சாதுரியமற்ற அதி காரிகளை உயர்மட்டத்தில் அரவணைத்துக்கொண்டிருப் பதன் பலனை அதிபர் மஹிந்தரின் நிர்வாகம் இப்போது அனுப விக்கின்றது.

பௌத்த சிங்களப் பேரினவாதக்கட்சி என அடையா ளப்படுத்தப்பட்ட ஜே. வி. பியே இன்று அதற்கு வெளியே வந்து நின்று கொண்டு, மஹிந்தரின் அரசை நோக்கிக் குற் றச்சாட்டு விரலை நீட்டி, இன ஒதுக்கலை மேற்கொள்ளும் கொடூர அரசு இது என விமர்சிக்கும் விநோத நிலைமை.

சர்வாதிகாரி ஹிட்லரின் இனவெறிப் போக்கோடு மஹிந் தரின் ஆட்சி நிர்வாகத்தை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒப்பிடும் அளவுக்கு விபரீதம்.

அரசில் அங்கம் வகிக்கும் இ. தொ. கா., ஸ்ரீலங்கா முஸ் லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகியன மேலக மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற் றுடன் சேர்ந்து "இனக்கொடூர அரசு' என்று அரசுத் தலைமைக்கு நாமம் சூட்டும் கேவலம்.

இதுவரை சிங்கள அரசுகளின் தமிழ்த் தேசிய விரோதப் போக்குக்கு முட்டுக் கொடுத்து வந்த ஆனந்தசங்கரி, "புளொட்' கட்சி போன்ற தரப்புகள் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் மஹிந்த அரசைக் கேவலத்துடன் பார்த்துச் சீறும் பரிதாபம்.

சர்வதேச தொண்டர் அமைப்புகள், ஐ. நா. செயலணி கள், மனித உரிமைகள் இயக்கங்கள் மற்றும் இராஜதந்திரி கள், சர்வதேசப் பிரமுகர்கள் என சர்வதேச மட்டத்தில் கொழும்பு அரசை இன ஒதுக்கல் நிர்வாகமாகக் கணிக்கும் ஏளனம்.

ஆக, பௌத்த சிங்களப் பேரினவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும், அரசுப் பங்காளிக் கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் (அது கூட இப்பத்தி எழுதப்படும் இக் கணம் வரையே) இவ்விடயத்தில் கொஞ்சம் பொறுமை காத்து, அரசுத் தலைமைக்கு நெருக்கடி தராமல் ஒதுங்கி நிற்கின் றன. ஏனைய எல்லாத்தரப்புகளும் அரசுத் தலைமை மீது பாயும் நிலைமையை இந்த நடவடிக்கை ஏற்படுத்தி விட் டது. அதுவும் கொடூர இன ஒதுக்கல் குற்றச்சாட்டுடன்.

பாதுகாப்புத் தலைமையின் இந்த இன ஒதுக்கல் கொடூரப் போக்கு சிரேஷ்ட அமைச்சர்கள் பலரையே சினத்துக்குள் ஆழ்த்திவிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. இந்த முட்டாள் தனமான முடிவுக்கு ஆதரவளிக்கவோ, அதை நியாயப்படுத் தவோ பல அமைச்சர்கள் முன்வரவேயில்லை என்பதும் குறிப் பிட்டுக் கூறத்தக்கது.

ஆக அமைச்சர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளமைபோல

1983 ஜூலைக் கலவரத்தினால் ஏற்பட்ட கெட்ட பெயரை விட மோசமான அபகீர்த்தியை, பாதுகாப்புத் தரப் பின் இந்த இன ஒதுக்கல் நடவடிக்கை ஒரே இரவில் ஏற்படுத்தி விட்டது என்பதுதான் உண்மை. 1983 ஜூலைக் கலவர நிலையை விட மோசமான அவப் பெயரை கொழும்பு அர சுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது இந்தப் படு முட்டாள் தனமான நடவடிக்கை.

இந்தச் செயற்பாடுகள் மீண்டும் ஒரு விவகாரத்தை உறு திப்படுத்தியிருக்கின்றன. இந்த அரசுத் தலைமை ஆட்சி அதிகாரத்துக்கு ஏன் வரவேண்டும் எனத் தமிழர் தரப்பு எதிர் பார்த்ததோ அது ஒழுங்காகவே அரங்கேறுகின்றது என்பது தான் அந்த அம்சம்.

மீண்டும் கூறுகிறோம். எது நடக்க வேண்டுமோ, அது நன் றாகவே நடக்கின்றது. அதை வழிப்படுத்துபவர்கள் கனத்த "பாராட்டுக்கு' உரியவர்கள்!

நன்றி - உதயன்

Posted on : 2007-06-09

"படுமுட்டாள்தனமான நடவடிக்கை!' பல தரப்பிலும் இப்படித்தான் விமர்சனம்

இந்தச் செயற்பாடுகள் மீண்டும் ஒரு விவகாரத்தை உறு திப்படுத்தியிருக்கின்றன. இந்த அரசுத் தலைமை ஆட்சி அதிகாரத்துக்கு ஏன் வரவேண்டும் எனத் தமிழர் தரப்பு எதிர் பார்த்ததோ அது ஒழுங்காகவே அரங்கேறுகின்றது என்பது தான் அந்த அம்சம்.

மீண்டும் கூறுகிறோம். எது நடக்க வேண்டுமோ, அது நன் றாகவே நடக்கின்றது. அதை வழிப்படுத்துபவர்கள் கனத்த "பாராட்டுக்கு' உரியவர்கள்!

நன்றி - உதயன்

பலே...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.