Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டக்களப்பு-கொழும்பு புகையிரத தண்டவாளத்தைக் கழற்றிய படையினர்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மட்டக்களப்பு-கொழும்பு புகையிரத தண்டவாளத்தைக் கழற்றிய படையினர்!

http://www.alaikal.com

வெளிவரும் உண்மைத் தகவல்கள்.

மட்டக்களப்பிலிருந்து “சன்யு”

கடந்த புதன்கிழமை காலை 6.30 மணியளவில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு

நோக்கிப் புறப்பட்ட புகையிரதம் வாழைச்சேனை-புணானைப் பிரதேசத்தில் தடம்புரண்டது.

இதில் மூன்று பெட்டிகள் தடம்புரண்டதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தின்போது ஒரு

பொலிஸ் உத்தியோகஸ்தர் மற்றும் குழந்தை உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் மூவர் பொலனறுவை வைத்தியசாலையிலும் ஒருவர் வாழைச்சேனை ஆஸ்பத்திரியிலும்

அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் புகையிரதம் மீது கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒரு தகவலும் அமுக்கவெடித்

தாக்குதல் நடத்தப்பட்டதாக மற்றொரு தகவலும் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் இவை

ஊடகத் தகவல் மையத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட பரப்புரைகளென்று தற்பொழுது தெரியவந்துள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மியான்குளம் வாகனேரி பிரதேசத்திலுள்ள 121ஆவது

பிரிகேட் படைமுகாமுக்கு பின்புறத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மட்டக்களப்பு புகையிரத நிலைய உயரதிகாரி ஒருவரை தொடர்புகொண்டபோது-

அதிகாலை 5.30க்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்நு புறப்பட்ட மேற்படி புகையிரதம்

7மணியளவில் புணானைப் பிரதேசத்தை நெருங்கியபோது தடம்புரண்டது. அது தொடர்பாக தமது பொறியியற்

பிரிவினர் ஆராய்ந்தபோது எந்தவொரு வெடித்தாக்குதலும் நடத்தப்படவில்லை என்றும் மாறாக

தண்டவாளம் கழற்றப்பட்டிருந்ததாகவும் அதனாலேயே புகையிரதம் தடம்புரண்டதாகவும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் சம்பவ

தினத்துக்கு முதல்நாள் மாலை தமது பொறியியற் பிரிவினர் மேற்படி புகையிரத தண்டவாளத்தை

செப்பனிட்டதால் தண்டவாளம் தானாகக் கழறுவதற்கு சாத்தியங்கள் இல்லை என்றும் அவ்வாறு அவர்கள்

செப்பனிட்டுக் கொண்டிருந்த போது- 121 ஆவது பிரிகேட் படைமுகாமிலிருந்து அவ்வழியால் ரோந்து

சென்ற படையினர் சிலர் “ மட்டக்களப்பிலிருந்து இனி எந்தப் புகையிரதமும் கொழும்புக்குச்

செல்லக்கூடாது என்றும், தமிழ் மக்கள் எவரும் கொழும்புக்கு போக முடியாது, போகவும்

விடமாட்டோம்” என்று அச்சுறுத்திவிட்டுச் சென்றதாகத் தெரிவித்தார்.

121ஆவது பிரிகேட் படைமுகாமுக்கும் 127ஆவது பிரிகேட் படைமுகாமுக்கும் இடைப்பட்ட சனநடமாட்டமற்ற

பிரதேசத்திலே தண்டவாளப் பாதை கழற்றப்பட்டிருந்ததாகவும் இது நிச்சயமாக படையினருடைய செயலே

என்று தான் நம்புவதாக பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி தெரிவித்தார்.

மேற்படி புகையிரதத்தில் பயணம் செய்து காயங்களின்றி உயிர்தப்பிய மற்றுமொரு பயணியுடன்

தொடர்பு கொண்டபோது-

அதிகாலை 5.30 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து –கொழும்பு நோக்கி சுமார் 100 பயணிகளுடன் தமது

பயணத்தை ஆரம்பித்ததாகவும் சுமார் 7 மணியளவில் புணானைப் பிரதேசத்தில் வைத்து குலுக்கலுடன்

புகையிரதம் தடம் புரண்டதாகவும். அதேவைளை அரைவாசிப் பயணிகள் குதித்து உயிர் தப்பியதாகவும்.

எஞ்சியோரை புகையிரத பெட்டிக்குள்ளிருந்து தாம் பாதுகாப்பாக மீட்டெடுத்ததாகவும் அவ்வாறு குதித்து

உயிர்தப்பியவர்களில் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூவர் குதித்தபோது 121ஆவது

படைமுகாமின் பின்புற வேலிக்குள் விழுந்ததாகவும் அவ்வாறு அவர்கள் விழுந்தபோது அங்கு படையினரால்

புதைத்து வைக்கப்பட்டிருந்த மிதிவெடிகள் வெடித்ததாகவும் அதனாலேயே அவர்கள் படுகாயமடைந்ததாகத்

தெரிவித்தார்.

திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தால் பயணிகள் செய்வதறியாது சன

நடமாட்டமற்ற அந்தப்பிரதேசத்தில் அழுது கதறியபோதும் அருகிலிருந்த இரண்டு படைமுகாம்களிலிருந்த

படையினர்கள் எவரும் உதவிக்கு வராமல் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் சிறிது

நேரத்தின் பின்பே சற்றுத் தூரத்திலிருந்த கிராமத்திலிருந்து வந்த சிங்கள மக்கள் தமக்கு

உதவியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தென் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் அவற்றைப் பெரிது படுத்தி ஊடகங்கள்

மூலமாகப் பிரச்சாரம் செய்யும் அரசாங்கம்- தமிழ் பிரதேசத்தில் தமிழர்களுக்க வேண்டுமென்றே

செய்யப்பட்ட இந்த சதிமுயற்சியை மூடி மறைத்து இது பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட

குண்டுத்தாக்குதல் என்று பரப்புரை செய்து வழமைபோல மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றியுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நடந்த உண்மைகளை எங்கு சென்று கூறமுடியும். வுழமை போல

வாய்மூடி மௌனிகளாய்த்தான் இருக்க வேண்டும். மீறி ஆட்சேபம் தெரிவித்தால் மறுநாள் ஆற்றிலோ,

குளத்திலோ அல்லது ஏதேனும் புதரிலோ அவர்களுடைய உயிரற்ற உடலைத்தான் பார்க்கமுடியும்!

இச்சம்பவத்தில் 3 புகையிரத பெட்டிகள் நேதமடைந்துள்ளதுடன் அவை பிரதான பாதையிலிருந்து

வலகியுள்ளன. இதனால் மட்டக்களப்பு-கொழும்புக்குரிய புகையிரத சேவைகள் மறு அறிவித்தல் வரை

இடைநிறுத்தப்பட்டு பொலநறுவையிலிருந்தே வேறு இடங்களுக்கான சேவைகள் இடம்பெற்று வருகின்றன.

மட்டக்களப்பிலிருந்து “சன்யு”

http://www.alaikal.com/index.php?option=co...9&Itemid=34

bathicalosan.jpg

bathicalosan1.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.