Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதித் தமிழர் விவகாரத்தை அரசு கையாண்ட இலட்சணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதித் தமிழர் விவகாரத்தை அரசு கையாண்ட இலட்சணம்

[10 - June - 2007]

இலங்கையின் இன்றைய நெருக்கடி நிலைவரத்தை கையாளுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் கடைப்பிடித்து வருகின்ற அணுகுமுறையின் இலட்சணத்தை உலகிற்கு தெளிவாக வெளிக்காட்டுவதாக கொழும்பு தனியார் விடுதிகளில் இருந்து வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவமும் அதைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வுகளும் அமைந்திருக்கின்றன.

தங்களது அத்தியாவசிய அலுவல்களைக் கவனிப்பதற்காக வடக்கு, கிழக்கிலிருந்து பலத்த சிரமங்களுக்கு மத்தியில் கொழும்புக்கு வந்து தங்கியிருந்த தழிழர்களை விடுதிகளில் இருந்து வெளியேற்றிய பொலிஸாரின் செயலை உள்நாட்டிலும் வெளியுலகிலும் நியாயபூர்வமாகச் சிந்திக்கக்கூடிய சகல தரப்பினருமே கடுமையாகக் கண்டித்தனர். இன நெருக்கடியை பொறுத்தவரை குறைந்த பட்சமேனும் நியாய பூர்வமாகச் சிந்திக்கத் தவறுகின்ற ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) கூட இந்த விடயத்தில் அரசாங்கத்தை கண்டனம் செய்யத் தவறவில்லை.

கௌதம புத்தரின் போதனைகளின் வழி நடப்பதாகக் கூறிக்கொள்ளும் பௌத்த பிக்குமாரின் அரசியல் கட்சியான ஜாதிக ஹெல உறுமய மாத்திரமே விடுதிகளிலிருந்து அப்பாவித் தமிழர்கள் அநியாயமாக வெளியேற்றப்பட்ட செயலை இன்னமும் கூட கண்டனம் செய்வதற்கு மனமில்லாமல் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் வெள்ளவத்தை,புறக்கோட்டை மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் அமைந்திருக்கும் தனியார் விடுதிகளை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு தங்கியிருந்த தமிழர்களை வயோதிபர்கள், பெண்கள், குழந்தைகள்,நோயாளிகள் என்று எந்தவிதமான வேறுபாடுமின்றி வெளியேற்றி பஸ்களில் ஏற்றி தலைநகரிலிருந்து அப்புறப்படுத்திய செய்தி பரவத் தொடங்கிய உடனடியாகவே அந்த நடவடிக்கைக்கு எதிராக கண்டனக் குரல்களும் கிளம்பத் தொடங்கின. கொழும்பு வாழ் தமிழர்கள் கலக்கமடைந்தனர்.

அன்றைய தினம் அரசாங்கத் தரப்பில் இருந்து பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் குரல் தரவல்ல அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல பொலிஸாரின் நடவடிக்கையை நியாயப்படுத்தியே கருத்துத் தெரிவித்திருந்தார். கொழும்பு விடுதிகளில் தங்கியிருக்கும் தமிழர்களில் சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்வதற்கு விருப்பத்தை தெரிவித்தவர்களை இலவசமாக போக்குவரத்து வசதி வழங்கி அரசாங்கம் கூட்டிச் செல்கிறது என்று அவர் பாராளுமன்றத்தில் கூறியிருந்தார். நிலைவரத்தின் பாரதூரத்தன்மையை உணரக் கூடிய நிலையில் அரசாங்கம் இருக்கவில்லை என்பது தெளிவானது.

மறுநாள் வெள்ளிக்கிழமை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலனைக்கு எடுத்த உயர் நீதிமன்றம் கொழும்பு விடுதிகளில் தமிழர்கள் தங்கியிருப்பதைத் தடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை மீது இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்தது. தமிழர்கள் தலைநகருக்குள் பிரவேசிப்பதையோ அல்லது அங்குள்ள எந்தவொரு விடுதியிலும் அவர்கள் தங்குவதையோ தடுக்கக் கூடாது என்று பொலிஸ்மா அதிபருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ மற்றும் 8 பிரதிவாதிகளுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது. மனு தொடர்பான விசாரணை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதன் பிறகுதான் இந்தச் சர்ச்சை தொடர்பில் ஜனாதிபதி ராஜபக்‌ஷவிடமிருந்து பிரதிபலிப்பு வெளிப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. பஸ்களில் வவுனியாவுக்கு கொண்டுசெல்லப்பட்ட தமிழர்கள் ஜனாதிபதியின் உத்தரவின்பேரில் மீண்டும் வெள்ளிக்கிழமை கொழும்புக்கு அழைத்துவரப்பட்டனர். விடுதிகளிலிருந்து தமிழர்களை வெளியேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் உடனடி அறிக்கையொன்றை தனக்குச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ராஜபக்‌ஷ பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டதாக ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கக்கூட

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.