Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களை அரச ஆதரவுடன் கருணா குழுவே படுகொலை செய்தது: கொழும்பு ஊடகம்.

Featured Replies

செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களை அரச ஆதரவுடன் கருணா குழுவே படுகொலை செய்தது: கொழும்பு ஊடகம்.

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவின் வழிநடத்தலில் இராணுவ ஆதரவுடன் செஞ்சிலுவைச் சங்கத்தின் இரு பணியாளர்களும் படுகொலை செய்யப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்ட சந்திரமோகன், சண்முகலிங்கம் ஆகிய இரண்டு செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களும் கொழும்பில் நடைபெற்ற பயிற்சிப்பட்டறையில் கலந்து கொள்வதற்காக தமது நான்கு நண்பர்களுடன் கடந்த மே மாதம் 30 ஆம் நாள் மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கு வந்திருந்தனர். பின்னர் அவர்கள் பயிற்சி பட்டறை முடிந்ததும் மீண்டும் மட்டக்களப்பு செல்வதற்காக ஜூன் 1 ஆம் நாள் மாலை 4.00 மணியளவில் கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்குச் சென்றனர்.

அவர்களது தொடரூந்து 7.15 மணிக்கே புறப்படுவதாக இருந்தது. தமது பயணச்சீட்டுக்களை கொள்வனவு செய்த அவர்கள் 4 ஆவது நடைபாதைக்கு நகர்ந்தனர். ஏறத்தாழ 4.45 மணியளவில் அவர்கள் தமது பயிற்சிப் பட்டறை தொடர்பாக உரையாடிக் கொண்டிருந்த போது 4 முதல் 5 பேர் அவர்களை அணுகி அவர்களின் அடையாள அட்டைகளை காண்பிக்குமாறு கேட்டனர்.

பணியாளர்கள், தமது செஞ்சிலுவைச் சங்கத்தின் உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளை காண்பித்தனர். ஆனால் அதனை நிராகரித்த விசாரணையாளர்கள் தேசிய அடையாள அட்டைகளை காண்பிக்குமாறு கோரியதுடன், பணியாளர்களை தனித்தனியாகவும் கூட்டமாகவும் விசாரணை செய்தனர். அதேசமயம் அங்கு பார்வையாளர்களின் கூட்டம் கூடிவிட்டது.

விசாரணையாளர்கள் சிங்களத்தில் சரளமாக பேசினர், தாம் சிறிலங்கா குற்றப்புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்கள் என தெரிவித்தனர். சந்திரமோகன், சண்முகலிங்கம் இருவரிடமும் மேலதிக தகவல்கள் தேவைப்படுவதாக தெரிவித்தனர். அவர்கள் இருவரையும் மேலதிக விசாரணைகளுக்காக காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்போவதாகவும் விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.

எனினும் அவர்களுக்கு சிங்களம் சரளமாக தெரியாது என்பதால் அவர்களுடன் மேலுமொரு பணியாளர் காவல் நிலையத்திற்கு வருவதாக தெரிவித்தார். அதற்கு விசாரணையாளர்கள் சம்மதிக்க மூவரும் தொடரூந்து நிலையத்தை விட்டு புறப்பட்டனர். சந்திரமோகனும், சண்முகலிங்கமும் தொடரூந்து நிலையத்திற்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை வானில் ஏற்றப்பட்டனர். அந்த வானின் கண்ணாடிகள் கறுப்பு நிறமானவை. மூன்றாவது பணியாளர் வானில் ஏற முற்பட்டபோது அவரை குற்றப்புலனாய்வுத் துறையினர் தள்ளிவிட்டதுடன், தம்மிடம் மொழிபெயர்ப்பாளர்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர். வானும் உடன் புறப்பட்டது.

தள்ளிவிடப்பட்ட பணியாளர் தன்னை சுதாகரித்துக் கொண்டு எழுந்து வானின் பதிவு இலக்கத்தை எழுத முற்பட்டார். உடனடியான வான் நிறுத்தப்பட்டது, வானில் இருந்து இறங்கிய நபர் பணியாளரின் பேனாவை பிடுங்கி எறிந்தார். தாங்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் என மீண்டும் கூறினார்.

எனினும் பணியாளர், வான் மீண்டும் புறப்படும் முன்னர் இலக்கத்தை எழுதிவிட்டார். அதன் இலக்கம் 252-6432. பின்னர் அவர் தனது ஏனைய நண்பர்களை சந்தித்து நிலைமையை கூறியதுடன் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமை அலுவலகத்திற்கும் தொலைபேசியில் தகவலை தெரிவித்தனர்.

கொண்டு செல்லப்படும் இருவரும் குறுகிய நேரத்தில் வந்துவிடுவார்கள் நீங்கள் தொடரூந்து நிலையத்திற்கு செல்லுங்கள் என குற்றப்புலனாய்வு பிரிவினர் ஏனைய 4 பணியாளர்களுக்கும் கூறியிருந்தனர். எனினும் மட்டக்களப்பு தொடரூந்து புறப்பட்ட போது இருவர் மட்டுமே அதில் சென்றனர், ஏனைய இருவரும் செல்லவில்லை.

பின்னர் மட்டக்களப்பிற்குச் செல்லாத இருவரும் சந்திரமோகனையும், சண்முகலிங்கத்தையும் பார்ப்பதற்காக கோட்டை காவல் நிலையத்திற்கு சென்றனர், ஆனால் தாம் யாரையும் கைது செய்யவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர். அதன் பின்னர் சம்பவம் தொடர்பாக அங்கு முறைப்பாடு செய்யப்பட்டது.

மறுநாள் ஜூன் 2 ஆம் நாள் இரத்தினபுரியில் இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சக்தி தொலைக்காட்சி தெரிவித்தாக செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் மட்டக்களப்பு செஞ்சிலுவைச் சங்கத் தலைவருக்கு தெரிவித்தனர். பின்னர் அவை சந்திரமோகன் மற்றும் சண்முகலிங்கம் ஆகியோரது சடலங்கள் என அடையாளம் காணப்பட்டன.

கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு அருகில் இராணுவ சோதனைச் சாவடி உள்ளது, மேலும் கொழும்பிற்கும் இரத்தினபுரிக்கும் இடையில் பல சோதனைச் சாவடிகள் உள்ளன. எனவே இராணுவத்தினரின் ஆதரவின்றி எந்த ஒரு குழுவினரும் சடலங்களையோ அல்லது சந்தேகத்திற்கு இடமானவர்களையோ கொண்டு செல்வது சாத்தியமற்றது.

சந்திரமோகனையும், சண்முகலிங்கத்தையும் குற்றப் புலனாய்வுத்துறையினர் வானில் ஏற்றும் போது சிலர் வானுக்குள் இருந்தவாறு தமிழில் பேசியதனை தாம் கேட்டதாக அவர்களுடன் கூடச்சென்ற பணியாளர் தெரிவித்துள்ளார். இராணுவத்தினருடன் மிக நெருக்கமாக இயங்கி வரும் துணை இராணுவக் குழுவினரே அவர்கள் எனக்கூறப்படுகின்றது.

இந்த கடத்தலின் பின்னரான காவல்துறையினரின் விசாரணைகளின் போது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வான் கருணா குழுவுக்கு சொந்தமானது என கண்டறியப்பட்டுள்ளது.

செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களின் கொலைகளை அடுத்து சிறிலங்கா அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. கருணா குழுவினரின் வழி நடத்தலில் இராணுவத்தினராலேயே இந்த கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவப் புலனாய்வுத் தகவல்களின் படி செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் கொழும்பை வந்தடைந்ததும் அவர்கள் தொடர்பான முதலாவது புலனாய்வுத் தகவல்கள் மட்டக்களப்பில் இருந்து கிடைத்து விட்டதாகவும் அதன் பின்னர் அவர்கள் அரச ஆதரவுடன் கருணா குழுவினரால் பின் தொடரப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Puthinam-

Edited by யாழ்வினோ

கொழும்பு ஊடகம் என்றால் அதற்குப் பெயர் கிடையாதா ?

இந்தக் கொலைகளை விசாரிக்க குழுவொன்று அமைக்கபட்டதாகவும் ஸ்கொட்லண்ட் யார்ட் அதிகாரிகளை வரவழைக்கப் போவதாகவும் கூறப்பட்டது. அப்படியானால் அவர்கள் இந்த சாட்சியங்களைக் கருத்தில் கொள்வார்களா ?

அல்லது ஆய்வு முடிவில் நீதிபதி, செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் இருவரும் கொலைதான் செய்யப்பட்டார்கள் என்று தீர்ப்பு வழங்குவாரா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.