Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மியான்மாரில் தோல்வி கண்ட அணுகுமுறையை இலங்கையில் கடைப்பிடிக்கும் இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மியான்மாரில் தோல்வி கண்ட அணுகுமுறையை இலங்கையில் கடைப்பிடிக்கும் இந்தியா

[13 - June - 2007]

ஷ்ரீலங்காவில் புலிகள் இயக்கப் பயங்கரவாதத்தை ஆரம்பித்து வைத்தது இந்திய அரச உளவு அமைப்பாகிய `றோ'தான். இன்றும் அந்த அமைப்பின் முன்னாள் தலைவர் ராமன் ஷ்ரீலங்கா படையினருக்கு இந்தியா, ஆயுதங்கள் வழங்குவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என இந்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதன் பொருள், ஷ்ரீலங்காவில் தொடர்ந்தும் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு வழங்கி அதன் பயங்கரவாத செயற்பாடுகளை ஊக்குவிப்பதேயாகும்.

அண்மையில் தமிழ்ச்செல்வன் பி.எஸ். 89 ரக நவீன தொழில்நுட்பம் கொண்ட ரொக்கட் லோஞ்சர் ஏவுகணையை தோளில் வைத்துக் கொண்டு அதன் செயற்பாட்டை பரிசீலிக்கும் முறையைக் காட்டும் புகைப்படம் புலிகளின் சர்வதேச இணையத்தளத்தில் வெளியாகியிருந்தது. இந்த பிந்திய தொழில்நுட்பத்திலான பி.எஸ். 89 ரக ரொக்கட் லோஞ்சர் ஆயுதம் பற்றி ஷ்ரீலங்கா பாதுகாப்புத்துறை மேற்கொண்ட விசாரணைகளுக்கேற்ப அவை தாங்கிகளைத் தாக்கியழிக்கும் நவீன மிசில்ஸ் ஏவுகணை வகையைச் சேர்ந்தது என்றும் (Latest anti- tank missiles) அவை சீனாவில் உற்பத்தி செய்ப்பட்டவை என்றும் அவற்றை சீனாவின் இராணுவம் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த பி.எஸ். 89 ரக ஏவுகணையிலிருந்து நிமிடத்து 5 முதல் 7 வரை ரொக்கட்டுகள் ஏவப்பட முடியும் எனவும் அவை 200 மீற்றர் தூரத்திலுள்ள இலக்குகள் மீது மிக இலகுவாகவும் அதற்கு அப்பாலும் குறி தவறாது தாக்கியழிக்கும் சக்தி வாய்ந்தவை எனவும் மேலும் பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட நவீன பி.எஸ். 89 ஏவுகணைகளைப் புலிகள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு இந்தியாவின் எதிரி நாடாகக் கருதப்படும் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஏவுகணைகளை புலிகள் இயக்கத்தினர் பயன்படுத்தும் நிலையில் அவை புலிகளுக்கு எவ்வாறு கிடைத்தன. சீனாவே இரகசியமாக வழங்கியதா அல்லது வேறு நாடுகள் மூலம் பெற்றுக் கொண்டார்களா என்பது பற்றி இந்திய உளவு சேவையாகிய "றோ" விசாரணை செய்யவில்லை. ஷ்ரீலங்காவுக்கு ஆயுதம் வழங்கக்கூடாது என்ற நிலைப்பாட்டிலுள்ள "றோ" முதலில் புலிகள் இயக்கத்தினர் சீனாவின் ஆயுதங்களைப் பயன்படுத்துவது பற்றி விசாரணை செய்ய வேண்டும்.

அண்மையில் ஷ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இந்திய இராணுவ உயரதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது புலிகள் இயக்கம் அதிசக்தி வாய்ந்த நவீன யுத்த ஆயுதங்கள் உபகரணங்களை அண்மையில் பெற்றிருப்பதாகவும் இதனால் ஷ்ரீலங்காவுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ஆகாயத் தாக்குதலுக்கான பீரங்கிகள், செலுத்துனர் இல்லாத துரித தாக்குதல் சக்தி வாய்ந்த "நிஷாந் யூ.ஏ.வி.' (Nishant U.A.V.) ரக விமானங்கள் மற்றும் லேசர் ஆயுதங்களைத் தரும்படியும் கேட்டிருந்தார். ஆனால், இந்திய பாதுகாப்பு உயரதிகாரிகள் அவ்வாறான ஆயுதங்கள் அவசியமில்லை என்ற நிலைப்பாட்டை தெரிவித்து விட்டனர். இந்த நிலையில் இந்தியா, ஷ்ரீலங்கா படையினருக்கு வழங்கியவை பெரும் தாக்குதல்களை மேற்கொள்ள முடியாதும் கீழ் மட்டத்தில் பறந்து செல்லக் கூடியதுமான விமானங்களின் நடமாட்டத்தைப் பதிவு செய்யக் கூடிய இரண்டு ராடார் கருவிகள் மட்டுமே. அத்துடன், எம்.ஐ. 17 ரக போக்குவரத்துக்குப் பயன்படும் இரண்டு ஹெலிகொப்டர்களில் இந்திய விமானப்படையினர் குழுவொன்று இங்கு வந்து விமானப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சில அறிவுறுத்தல்களை ஷ்ரீலங்கா விமானப்படை உயரதிகாரிகளுக்கு வழங்கிவிட்டுச் சென்றது. ஷ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கு இந்தியா செய்த பாதுகாப்பு உதவி இவை மட்டுமே.

இவ்வாறான சிறிய பாதுகாப்பு உதவிகள் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்கப் போதுமானவை அல்ல என்ற கருத்தை ஷ்ரீலங்கா அரசு முன்வைத்தபோதும் இந்திய அரசு அதற்கு எந்தவித அக்கறையையும் காட்டவில்லை. மேலும், அண்மையில் ஷ்ரீலங்காவின் பாதுகாப்பு நிலைமை பற்றி ஆராய்வதற்கு பேச்சுவார்த்தை நடத்திய இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், இந்திய அமைச்சரவை செயலர் பி.கே. சதுர்வேதி, இந்திய இராணுவத் தளபதி சிங், இந்திய கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தா, இந்திய பாதுகாப்புச் செயலர் சேகர்பாட், இந்திய விமானப்படைத் தளபதி எவ்.எச். மேஜர் உட்பட இந்திய உயர்மட்ட பாதுகாப்புக் குழுவினர் இறுதியில் ஷ்ரீலங்காவுக்கு கூடுதல் தாக்குதல் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் வழங்குவது பற்றி எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை. இவ்வாறு இந்தியத் தரப்பில் மிகவும் பின்னடைவான ஏமாற்றமான பிரதிபலனையே பெற்றுள்ள இக்கட்டான நிலையில் ஷ்ரீலங்கா மேற்படி கூடுதல் பாதுகாப்பும் தாக்குதல் சக்தியும் வாய்ந்த ஆயுதங்களை பாகிஸ்தானிடமிருந்தும் சீனாவிடமிருந்துமே பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு இந்தியா, ஷ்ரீலங்காவின் பாதுகாப்பு நிலைமை விடயத்தில் அக்கறையில்லாத நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கும் இந்த நிலையில் புதுடில்லி உயர்மட்ட பாதுகாப்பு சிரேஷ்ட உத்தியோகத்தர் ஒருவர் ஷ்ரீலங்கா விடயத்தில் மியன்மாரில் (பர்மா) கடைப்பிடித்த நடைமுறையையே இந்தியா மேற்கொள்ளும் எனவும் இந்த வகையில் மியன்மாரில் இந்தியா செய்த பாதுகாப்புப் செயற்பாடுகளையே ஷ்ரீலங்காவில் செய்யும் பட்சத்தில் மியன்மாரில் நிகழ்ந்ததே ஷ்ரீலங்காவிலும் நிகழப்போகிறது என்று இந்திய பாதுகாப்புத்துறையை எச்சரிக்கும் வகையில் கூறியிருந்தார். இக்கூற்றுக்குச் சார்பாக இந்திய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்த கருத்துகளில் முன்னர் மியன்மார் அரசு இந்தியாவிடமிருந்து பாதுகாப்பு உதவியைக் கோரிய சந்தர்ப்பத்தில் அதுபற்றி இந்திய அரசு அலட்சியப்படுத்திய காரணத்தால் இறுதியில் சீனாவும் பாகிஸ்தானும் மியன்மாருக்கு பாதுகாப்பு உதவிகளை வழங்கியதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறு ஷ்ரீலங்காவுக்கான பாதுகாப்பு உதவிகள் வழங்கும் விடயத்தில் இந்திய பாதுகாப்பு உயர்மட்ட அதிகாரிகள் இரண்டு பிரிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் மற்றும் உயர்மட்டக் குழுவினர் மேற்படி ஷ்ரீலங்காவுக்குப் பாதுகாப்பு உதவி செய்வதை ஆதரிக்கும் பாதுகாப்பு அதிகாரிகளின் கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் வகையில் எந்த அறிக்கையையும் இதுவரை வெளியிடவில்லை.

திவயின பாதுகாப்பு விமர்சனம்: 10.06.2007

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.