Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இணைத்தலைமை நாடுகளின் கூட்டம் இம்மாதம் ஒஸ்லோவில்.

Featured Replies

இணைத்தலைமை நாடுகளின் கூட்டம் இம்மாதம் ஒஸ்லோவில்.

இலங்கையில் வன்முறைகளும் மனித உரிமை மீறல்களும் அதிகரித்துள்ள நிலையில், உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் சந்திப்பு எதிர்வரும் 25, 26 ஆம் திகதிகளில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெறவுள்ளன.

இந்தச் சந்திப்பின் போது இலங்கையில் தற்போது அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்கள் குறித்தும், தொடர்ந்தும் மீறப்பட்டு வருகின்ற மனித உரிமைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என நோர்வேத் தூதரகப் பேச்சாளர் எரிக் நியூரன்பர்க் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், இலங்கைக்கு வழங்கப்படுகின்ற உதவிகள் குறித்து இணைத் தலைமை நாடுகள் மிகுந்த அக்கறையுடன் ஆராயலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நோர்வேயில் இந்த மாதம் இடம்பெறவிருக்கும் இந்த சந்திப்புக்களில் ஜப்பான், அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

கொழும்பு விடுதிகளிலிருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை மற்றும் செஞ்சிலுவைச் சங்க பிரிதிநிதிகள் இருவரின் கொலைகள் போன்றன இடம்பெற்றுள்ள நிலையில் இணைத்தலைமை நாடுகளின் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்புக்களின் போது சிறிலங்கா அரசாங்கத்தின் மீது மிகுந்த அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம் என அரசியல் ஆய்வாளார்கள் தெரிவித்துள்ளனர்.

இணைத்தலைமை நாடுகளின் சந்திப்புக்களில் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சட் பௌச்சர், நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், ஜப்பானின் இலங்கைக்கான விஷேட சமாதான தூதுவர் யசூசி அகாசி ஆகியோர் முக்கிய பிரதிநிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடான பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இலங்கைக்கு வழங்கி வருகின்ற உதவிகளை மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகளை காரணம் காட்டி பாதியளவாக குறைத்துள்ள நிலையிலேயே இணைத்தலைமை நாடுகளின் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

எனினும் இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான உதவிகளை எந்தவொரு காரணம் கொண்டு ஜப்பான் நிறுத்தாது என ஜப்பானின் இலங்கைக்கான விஷேட சமாதான தூதுவர் யசூசி அகாசி, கொழும்பில் வைத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதம் இடம்பெறவுள்ள இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் ஆராயப்படவுள்ள விடயங்கள் குறித்த விடயங்கள் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை என்று நோர்வேத் தூதரகப் பேச்சாளர் எரிக் நியூரன்பர்க் குறிப்பிட்டுள்ளார்.

-Sankathi-

  • தொடங்கியவர்

பேச்சுக்கு கொண்டு வரும் வழி குறித்து இணைத் தலைமை நாடுகள் ஆராயும்.

மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வருவதற்கு உள்ள சாத்தியமான அனைத்து வழிகள் குறித்தும் இணைத்தலைமை நாடுகள் தீவிரமாக பரிசீலனை செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இம்மாதம் 25, 26 ஆம் திகதிகளில் இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் அனுசரணையாளரான நோர்வேயின் சார்பில் அதன் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், நோர்வேயின் இலங்கைக்கான விஷேட சமாதான தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் றிச்சர்ட் பௌச்சர், ஜப்பானின் விஷேட சமாதான தூதுவர் யசூசி அகாசி, மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இக்கூட்டத்தில் இலங்கையில் அதிகரித்துச் செல்லும் வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளையும், அரசாங்கத்தையும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வருவதற்கு உள்ள சாத்தியமான அனைத்து வழிவகைகள் குறித்தும் இணைத்தலைமை நாடுகள் விவாதிக்கவுள்ளதாக தெரிகின்றது. மேலும் இடம்பெயர்ந்துள்ள மக்களின் பிரச்சினைகள், மீள் குடியமர்த்தல் மற்றும் ஏனைய மனிதாபிமான பணிகள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.

இதேவேளை இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பு குழு எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும், நிலைமைகளை சுமூகமாக்க அவ்வமைப்பு முன்வைத்துள்ள யோசனைகள் குறித்தும் தீவிர பரிசீலனை செய்யப்படவுள்ளது. இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசாங்கத்தின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பாக நோர்வே, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன தமது கடுமையான நிலைப்பாடுகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் அரசாங்கம் தொடர்பாக சாதகமான நிலைப்பாட்டையே தாம் மேற்கொள்ளவுள்ளதாக ஜப்பானிய இராஜதந்திரியொருவர் தெரிவித்தார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த றிச்சட் பௌச்சர் மற்றும் யசூசி அகாசி ஆகியோர் தமது விஜயம் தொடர்பான அறிக்கையை இக்கூட்டத்தில் சமர்ப்பிப்பார்கள் என தெரிகிறது.

-Tamilwin-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.