Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பிலுள்ள லொட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த நான்கு தமிழர்கள் கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது.

Featured Replies

கொழும்பிலுள்ள லொட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த நான்கு தமிழர்கள் கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது.

போலித்தங்க ஆபரணங்கள் தயாரிப்பதாகக் குற்றம்சாட்டியே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடம் இருந்த தங்க ஆபரணங்கள் சிலவும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மேற்படி நான்கு பேரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரிவித்த கொம்பனித்தெரு பொலிஸார் இவ்வாறு பலர் போலித்தங்க ஆபரண வியாபாரத்தில் ஈடுபட்டுவருவதாகவும் கூறினர்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனித்தெரு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-Tamilwin-

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

லொட்ஜ்களிலிருந்து தமிழர் வெளியேற்றம் எதிர்காலத்தில் நடக்காது என்பதற்கு உத்தரவாதமில்லை.

கொழும்பு லொட்ஜ்களில் இருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க வருத்தம் தெரிவித்துள்ளார். அதுதான் அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். ஜனநாயக நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாது என்பதற்கு எவ்விதமான உத்தரவாதமும் இல்லை, உத்தரவாதம் வழங்கவும் முடியாது என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பாக அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் வருத்தம் தெரிவித்தாரே தவிர மன்னிப்புக்கோரவில்லை. இந்த விடயத்தில் அரசாங்கத்திற்குள் முரண்பட்ட கருத்துக்கள் இல்லை என்பதனால் முடிந்துவிட்ட விடயத்தை தயவு செய்து கிளறாதீர்கள் என்று ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;

மேற்குறிப்பிட்ட விடயத்தில் அரசாங்கம் சரியான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றது. இந்த விடயத்திற்கு அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க வருத்தம் தெரிவித்துள்ளார். அதேவேளை அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே அவரது தனிப்பட்ட கருத்தை தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் அரசாங்கத்திற்குள் எவ்விதமான முரண்பட்ட கருத்துக்களும் இல்லை. ஜனநாயக நாடு, ஜனநாயக அரசாங்கம் என்பதனால் யாருக்கும் கருத்து தெரிவிப்பதற்கு உரிமையுண்டு எனினும் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாது என்பதற்கு எவ்விதமான உத்தரவாதமும் வழங்க முடியாது என்று தெரிவித்தார்.

-Tamilwin-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜனநாயகமா அப்பிடி எண்டா என்ன யாப்பா?

பலவந்தமாக வெளியேர்ர பார்த்தாங்கள் முடியல இப்ப மறைமுகமாக பீதியை கிழப்பி வெளியேற்ற முயலுறாங்கள் இதற்கு வெளிநாடுகள் ஒண்டும் செய்யமாட்டாது முடியாது பாதுகாப்பு என்னும் வார்த்தையை சொல்லி அடைசிடும் மைந்த சிந்தனை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.