Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காலம் தாழ்த்தி இப்போதேனும் நீதி செய்யுமா சர்வதேச சமூகம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-06-15

காலம் தாழ்த்தி இப்போதேனும் நீதி செய்யுமா சர்வதேச சமூகம்?

இலங்கை நிலைமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களை அழைத்து விளக்கியிருக்கின்றார்.

இலங்கையில் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், கப்பம் கோரல் போன்ற மனித உரிமை மீறல்கள் எல்லாம் எல்லை மீறி அதிகரித்து விட்டன. இவற்றைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் சர்வதேச சமூகம் உடனடியாக இறங்கவேண்டும். இல்லையேல் நிலைமை மிக மிக மோசமாகிவிடும் என எச்சரித்திருக்கின்றார் ரணில்.

இவற்றையெல்லாம் தடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தார்மீக ரீதியான கடமையும், பொறுப்பும் சர்வதேச சமூகத்துக்கு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்ட விழைகின்றார்.

ஆனால், அதற்கு அப்பால் இத்தகைய நிலைமை இலங்கையில் ஏற்பட்டமைக்கு நேரடிப் பொறுப்பேற்க வேண்டிய கடப்பாடும் பொறுப்பும் சர்வதேச சமூகத்தையே சேர்ந்தது என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இலங்கையில் 2002 முற்பகுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசின் வருகையோடு தற்போதைய அமைதி முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. இரண்டு தசாப்த காலக் கொடூர யுத்தத்துக்கு முடிவு கட்டும்வகையில் "சரித் திர முக்கியத்துவம் வாய்ந்த' யுத்த நிறுத்தம் கூட செய்யப் பட்டது. அதனடிப்படையில் அமைதி முயற்சிகள் சமா தான நடவடிக்கைகள் மெல்ல மெல்ல முன் நகர்த்தப் பட்டன.

2002 பெப்ரவரியில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான முத லாவது நேரடி சமாதானப் பேச்சு ஏழு மாதங்கள் கழித்து செப்டெம்பர் நடுப்பகுதியில்தான் ஆரம்பமாகியது. இந்த ஏழு மாதத் தாமதத்துக்குப் பல்வேறு காரணங்கள் இருந் தன. யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்தபோதிலும் இலங்கை இராணுவமும், கடற்படையும் புலிகளுக்கு எதி ராகக் கடுமையான பகையுறவை வெளிப்படுத்தி நின் றமை, யுத்த நிறுத்த உடன்பாட்டில் இணங்கப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படாமை போன்றவை ஒருபுறம் குழப்பத்தை ஏற்படுத்தின. மறுபுறம் தமிழ் மக் களின் சட்டரீதியான, அதிகார பூர்வப் பிரதிநிதிகளாகவும் சமத்துவப் பங்காளிகளாகவும் மட்டுமே பேச்சுகளில் பங்கு பற்ற முடியும் என்ற விடுதலைப் புலிகளின் மாறாத நிலைப் பாட்டை ஏற்று அங்கீகரித்துச் செயற்பட ரணில் அரசு காலதாமதம் காட்டியமையும் மற்றைய பிரதான காரணமாகும்.

இலங்கை அரசுடன் சமத்துவப் பங்காளி சம தரப்பு அந்தஸ்து என்ற மாறா உறுதி நிலையுடனேயே அமைதி முயற்சிகளில் புலிகள் குதித்தனர். அந்த சமாதான எத் தனங்களுக்கு அடிப்படையாக இருந்ததே இந்த சமத்து வத் தரப்பு என்ற அங்கீகாரம்தான்.

சர்வதேச சமூகத்தின் ஈடுபாட்டுடன் முன்னெடுக்கப் பட்ட அந்த அமைதி முயற்சிகளில் புலிகளுக்கு வழங்கப் பட்டிருந்த சமத்துவப் பங்காளி என்ற அந்தஸ்தைக் குழப் பிக் கெடுத்ததன் மூலம், அந்த நன் முயற்சிகள் தகர்ந்து குட்டிச்சுவராக மூல காரணமாக அமைந்தது சர்வதேச சமூ கத்தின் பொறுப்பற்ற போக்கு.

சமாதானத்தின் சர்வதேச காவலர்கள் என்ற பாத்திரத் தைத் தாங்கி வந்த உலக நாடுகள், பேச்சுக்கு அடிப்படை யாக அமைந்த "சமத்துவப் பங்காளி' என்ற நிலைப்பாட்டை குழப்பும் வகையில் அந்த அமைதி முயற்சிக் காலத்தி லேயே விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத இயக்கமா கப் பட்டியலிட்டு, தடைசெய்து புறமொதுக்கின. சர்வ தேசத் தின் இந்த ஒதுக்கீடு ஒருபக்கச் சார்பான நடவடிக்கை சமாதான முயற்சிகளில் இரு தரப்புகளுக்கும் இருந்த அதி காரச் சமநிலையை ஆழமாகப் பாதித்தது. அமைதி முயற் சிகள் அடியோடு குழம்ப வழி சமைத்தது.

இலங்கையில் இப்போது சமாதானத்தைப் புறமொதுக்கி, போர்த் தீவிரத்தில் முனைப்புக் காட்டி, மனித உரிமை மீறல்களை வழமையாக்கி, அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டு, அமைதிக்கான வாய்ப்புகளுக்கு நிரந்தர ஆப்பு வைக்கும் தரப்பு உண்மையில் எது என் பதை மேற்குலகம் காலம் தாழ்த்தியேனும் இப்போது அடை யாளம் காணும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

இவ்விவகாரத்தில் உண்மைகளை எடுத்தியம்ப முயலும் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற மேற்குலக நாடுகளையே தூக்கி எறிந்து துச்ச மாக மதித்து விமர்சிக்கும் "தடிப்பு' நிலைக்கு உயர்ந்து மமதையோடு சூளுரைக்கின்றது கொழும்பு நிர்வாகம். அது மாத்திரமல்ல. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட "சார்க்' நாடுகள் மற்றும் ஜப்பான், சீனா உட்பட்ட ஆசிய நாடுகள் தங்கள் பின்புலத்தில் இருப்பதால் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் மேற்குலக நாடுகள் பற்றித் தங்களுக் குக் கவலையில்லை என மேற்கு நாடுகளைத் தூசாக மதித்துத் தூர ஒதுக்கி நையாண்டி செய்கிறது கொழும்பு.

அமைதிக் காலத்தில் சமாதானப் பேச்சு வேளையில் புலிகள் மீது குறைகண்டு, அவர்களைத் தடைசெய்து, சமதரப்பு அந்தஸ்தைக் குழப்பி, அதன்மூலம் அமைதி எத்தனங்களையே கெடுத்த சர்வதேச சமூகம், இப்போது கொழும்பு அரசின் இந்தக் கொடூரப் போக்குக் குறித்து உண்மை அம்பலமான இப்போதைய சூழலில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது?

முன்னர் விட்ட தனது தவறைத் திருத்தும் வகையில் பிராயச்சித்தம் செய்யும் விதத்தில் கொழும்பு தொடர் பாக உருப்படியான, காத்திரமான நடவடிக்கை எதையா வது சர்வதேசம் வெளிப்படுத்தி, அதன் மூலம் தமிழருக் குக் காலம் தாழ்த்தியேனும் நீதி செய்யுமா?

தமிழர்கள் உரிமையுடன் இப்பதிலுக்கு சர்வதேசத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.