Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதி யுத்தகாலத்தில் – பலர் காணாமல்போனவேளை- பொலிஸ்மா அதிபராக பதவி வகித்தவரை காணாமல்போனவர்கள் அலுவலகத்திற்கு நியமிப்பதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி யுத்தகாலத்தில் – பலர் காணாமல்போனவேளை- பொலிஸ்மா அதிபராக பதவி வகித்தவரை காணாமல்போனவர்கள் அலுவலகத்திற்கு நியமிப்பதா? மனித உரிமை அமைப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் கடும் எதிர்ப்பு

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பொலிஸ்மா அதிபராக பதவி வகித்தவரை காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் உறுப்பினராக அரசாங்கம் நியமித்துள்ளமை குறித்து மனித உரிமை அமைப்புகளும் பாதிக்கப்பட்டவர்களும் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.

இலங்கையில் யுத்தகாலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காகவும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தவர்களிற்கு இழப்பீட்டை வழங்குவதற்காகவும் உருவாக்கப்பட்ட நிலைமாற்று நீதி பொறிமுறையான காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் உறுப்பினராக முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ணவை நியமிப்பதற்கு நாடாளுமன்ற குழு 20 ம் திகதி பரிந்துரைத்துள்ளது.

jayantha-wickra-300x158.jpg
விக்கிரமரட்ணவின் நியமனம் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது நியமனம் காணாமல்போனனோர் குறித்த அலுவலகத்தின் பணிகளை பலவீனப்படுத்தும்,சாட்சிகளும் முறைப்பாடு செய்தவர்களும் பழிவாங்கப்படும் நிலையை உருவாக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நியமனம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள கொலை செய்யப்ப்ட்ட சண்டே லீடர் ஆசிரியர் லசந்தவிக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க டுவிட்டர் பதிவொன்றில் இந்த நியமனம் பாதிக்கப்பட்டவர்களிற்கான ஜனாதிபதியின் அவமரியாதையை இந்த நியமனம் வெளிப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
எனது தந்தையின் விசாரணைகளை 2009 இல் அப்போது பொலிஸ்மா அதிபராக விக்கிரமரட்ண குழப்பினார் என அகிம்சா பதிவிட்டுள்ளார்.
இன்னமும் பதில்களை கோரிக்கொண்டிருக்கும் சந்தியா எக்னலிகொட உட்பட பாதிக்கப்பட்டவர்களின் மனதை இந்த நியமனம் சிதறடிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

lasantha1.jpg
2009 இல் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டது குறித்த விசாரணைகளை ஜயந்த விக்கிரமரட்ண மேற்பார்வை செய்தார்.
பத்திரிகையாளரின் குறிப்பு புத்தகத்தை கைப்பற்றி அழித்துவிடுமாறு ஜயந்தவிக்கிரமரட்ண நேரடியாக உத்தரவிட்டார் என இரண்டு சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் சிஐடியினரிடம் தெரிவித்திருந்தனர்.
லசந்த கொல்லப்பட்டவேளை அவரது காரில் காணப்பட்ட குறிப்பு புத்தகத்தில் பல முக்கியமான விடயங்கள் இடம்பெற்றிருக்கலாம் என அவ்வேளை சிஐடியினர் தெரிவித்தனர்.
2018 மார்ச்சில் லசந்தகொலை தொடர்பில் தான் கைதுசெய்யப்படுவதற்கு எதிராக விக்கிரமரட்ண நீதிமன்றின் உத்தரவை பெற்றார்.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பும் முன்னாள் பொலிஸ்மா அதிபரின் நியமனத்தை கண்டித்துள்ளதுடன் இத்துடன் இலங்கையின் நீடித்த உள்நாட்டு யுத்தத்தின் பின்னர்நிலைமாற்றுகால நீதியை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட பொறிமுறைகளிற்கு இராணுவஅதிகாரிகளை நியமிக்கும் நடவடிக்கை பூர்த்தியாகியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
காணாமல்போனவர்களின் குடும்பத்தினரிற்கு நீதி உண்மை கிடைப்பதற்கான எந்த வாய்ப்பையும் இந்த நியமனம் அழித்துவிட்டது என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

yasmin-sooka2.jpg
இலங்கையின் யுத்தத்தின் இறுதியில் பெருமளவு பேர் பலவந்தமாக காணாமல்போவதற்கு காரணமான மூன்று பிரிவுகள் என ஐநாவால் குறிப்பிடப்பட்ட பிரிவுகளிற்கு இவர் பொறுப்பாகயிருந்தார் எனவும் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
இவர் தற்போது விசாரணைகளிற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
டெய்லி எவ்டி

Thinakkural.lk <p>இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பொலிஸ்மா அதிபராக பதவி வகித்தவரை காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் உறுப்பினராக அரசாங்கம் நியமித்துள்ளமை குறித்து மனித உரிமை அமைப்புகளும் பாதிக்கப்பட்டவர்களும் கடும் விமர்சனத்தை […]</p>

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.