Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடைசித் தமிழன் இருக்கும் வரை யுத்தம் தொடரும் : கஜேந்திரன்

Featured Replies

கடைசித் தமிழன் இருக்கும் வரை யுத்தம் தொடரும் என்று கஜேந்திரன் சூளுரை

கௌரவமான வாழ்வு: இன்றேல் கொளரவமான சாவு என்கிறார்.

"தமிழன் ஒரு போதும் சிங்களவர்களுக்கு அடிபணியமாட்டான். கடைசி தமிழன் இருக்கும் வரை இந்த யுத்தம் நடந்து கொண்டேதான் இருக்கும். நாங்கள் கௌரவமாக வாழ வேண்டும். இல்லாவிட்டால் கௌரவமாகவெ செத்து விடுவோம். எம்மை இந்தச் சிங்களக் காடையர்கள் அடக்க முடியாது."

இவ்வாறு நேற்று நாடாளுமன்றில் இடம் பற்ற தொப்பிகல கைப்பற்றப்ட்டமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றிய சமயம் த.தே.கூட்டமைப்பின் யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் சூளுரைத்தார்.

அவர் அங்கு மேலும் கூறியவையாவது :

சிங்களக் காடையர்கள் கிழக்கைப் பிடித்து அங்கு தமிழ் மக்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளனர். தங்களின் சொந்த இடங்களில் நிம்மதியாக வாழ்ந்த மக்கள் இப்பொது அகதி முகாம்களில் அல்லல்படுகின்றனர்.

சொந்தமாக தொழில் செய்து வாழ்ந்துவந்த இம்மக்களுக்கு சிங்களவர்கள் இன்று பிச்சை கொடுக்கின்றனர். சொந்த இடங்களை இழந்து,கல்வியை இழந்து,இம்மக்கள கஸ்டப்படுகின்றார்கள்.

எமது மக்கள் மீது சிங்கள அரசு கட்டுக்கடங்காத அடக்கு முறையை மேற்கொண்டுள்ளது. இடம் பெயர்ந்த மக்களின் வீடுகளை உடைத்து படை அதிகாரிகள் கொள்ளையடித்து வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் படையினரின் மனைவிமார்களுக்கும், பிள்ளைகளுக்கும் கொடுக்கபடுகின்றன. அமைச்சர்களும் இதனூடாகத் தமது வங்கிக் கணக்கை உயர்த்தியுள்ளார்கள்.

தொப்பபிகலவைக் கைப்பற்றிய இந்த அரசு விழாக் கொண்டாடுகிறது. இந்த அரசு வேறு நாட்டைப் பிடித்திருக்கிறதா? அல்லது நாட்டின் ஒரு பகுதியைப் பிடித்திருக்கிறதா? இவ்வாறான விழாக்கள் மூலம், அரசு எவ்வளவு கஸ்டப்பட்டு தொப்பிகலவைப் பிடித்திருக்கின்றது என்பதனையும், தமிழன் எவ்வளவு வீரமுள்ளவன் என்பதனையும் சர்வதேச நாடுகள் விளங்கியுள்ளது.

இந்த யுத்த மூலம் புலிகளைப் பலவீனப்படுத்தி அவர்களைப் பேச்சுக்கு அழைக்கலாம் என்று அரசு கனவு காணுகின்றது. அது ஒரு போதும் நடக்காது.

புலிகள் தான் தமிழர்களின் ஏகபிரதிநிதிகள். இந்த ஆணையை முன் வைத்ததுத்தான் த.தே.கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட்டு வென்றது. 95 வீதமான தமிழர்கள் வடக்கு-கிழக்கில் அதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

தொடர்ந்தும் தமிழர்களை அடிமைப்படுத்த முடியாது. ஒரு தமிழன் எஞ்சியிருக்கும் வரை இந்த யுத்தம் தொடரும். கௌரவமாக நாம் வாழ வேண்டும். இல்லையேல் கௌரவமாகவே சாக வேண்டும். என்றார்.

நன்றி

சுடர் ஒளி ஜூலை 21

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணா

கொழும்பில் நின்று இதைச்சொல்லும் உங்களது துணிவை மெச்சுகின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.