Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நில ஆக்கிரமிப்புக்கு எதிராக இன்று நடக்கும் கடையடைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-07-25

நில ஆக்கிரமிப்புக்கு எதிராக இன்று நடக்கும் கடையடைப்பு

தமிழர்களின் பாரம்பரிய பூர்வீக தாயகமான மூதூர் கிழக்கை இலங்கை அரசுப்படைகள் கைப்பற்றி, ஆக்கிரமித்து, இராணுவக் கெடுபிடிகளால் அங்கிருந்து வல்வந்தமாக வெளியேற்றப்பட்ட தமிழர்களை மீளக்குடியமரவே வாய்ப்பளிக்காமல் தடுக்கும் நோக் கில் அப்பிரதேசத்தை உயர் பாதுகாப்பு வலயமாக அறிவித்து நிற் கின்றது.

கடந்த ஜூன் 10 ஆம் திகதி விடுக்கப்பட்ட விசேட வர்த்த மானி அறிவித்தலின் மூலம் இவ்வாறு மூதூர் கிழக்கில் சுமார் 22 கிராமங்களில் வசித்த நாலாயிரத்து ஐந்நூறு குடும்பங்களைச் சேர்ந்த ஏறத்தாழ பதினையாயிரம் தமிழர்கள் நிரந்தர ஏதிலிகளாக் கப்பட்டுள்ளனர்.

பத்தொன்பது பாடசாலைகள், இருபத்தியைந்துக்கும் மேற்பட்ட வணக்க ஸ்தலங்கள் , பல பொதுக்கட்டடங்கள், வளமான வயல்கள், 88 சிறுகுளங்கள், தோட்ட நிலங்கள், பெருமளவிலான கால்நடைகளைக் கொண்ட தமிழரின் பெரும் வளம் கொழிக்கும் பூமி பௌத்த, சிங்கள ஏகாதிபத்தியத்தினால் பாதுகாப்பின் பெயரால் ஏப்பம் விடப்பட்டிருக்கின்றது.

இந்த ஆக்கிரமிப்பை ஆட்சேபித்து தமிழர்களின் தாயகமான வடக்கு, கிழக்கிலும், தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் இன்று கடமைப் புறக்கணிப்பும் கதவடைப்பும் செய்து இலங்கை அரசின் மனித உரிமை மீறலுக்கு எதிர்ப்புக் காட்டு மாறு தமிழ் பேசும் மக்களைப் பகிரங்கமாகக் கோரியிருக்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

திருகோணமலைத் துறைமுகத்தின் பாதுகாப்பு என்ற பெயரி லேயே மூதூர் கிழக்குப் பிரதேசத்தைக் கபளீகரம் செய்யும் அர சின் இந்த அராஜகம் இங்கு அரங்கேறியிருக்கின்றது. திருகோண மலைத் துறைமுகத்தைச் சூழ அண்மைக்காலத்தில் மேற்கொள் ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் சிங்கள மயப் படுத்தப்பட்ட பல பிரதேசங்களும், கிராமங்களும் அப்படியே இருக்கின்றன. அவை உயர் பாதுகாப்புப் பிரதேசத்துக்குள் உள்ளடக்கப்படவில்லை. அதாவது, துறைமுகத்துக்குப் பக்கத்தில் அயலில் அதன் சுற்றாடலில் பல சிங்களக் குடியேற்ற நிலங்கள் அப்படியே இருக்க, துறைமுகத்துக்குப் பன்னிரண்டு கடல்மைல்கள் தாண்டி கடலுக்கு அப்பால் இருக்கும் மூதூர் கிழக்குப் பிரதேசத்தை பாதுகாப்பு உயர் வலயமாக அறிவிக்கும் அபத்தத்தையும் அரசு செய்திருக்கின்றது எனச் சுட்டிக்காட்டியிருக்கின்றத

யாழ் குடாநாட்டு பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முழுமையாகக் கடைப்பிடிப்பு

யாழ்ப்பாணத்தில் இன்று இடம் பெற்ற பணிப் புறக்கணிப்பப் போராட்டம் சுமாராக வெற்றி பெற்றுள்ளது. மூதுரை உயர் பாதுகாப்பு வலமாக பிரகடனம் செய்ததைக் கண்டித்து இடம்பெற்ற இந்த தொழில் புறக்கணிப்புப் போராட்டத்திற்குத் தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

காலையில் இலங்கை போக்குவரத்து சேவை பேரூந்துகள் மற்றும் தனியார் சிற்றூர்த்திகளும் காலை 7.00 மணிக்குப் பின்னர் மடடுப்படுத்திய அளவில் சேவையில் ஈடுபட்டது.

அரச ஊழியர்களின் வருகை குறைந்து காணப்பட்டதுடன் பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகையும் குறைவாக காணப்பட்டது. சில இடங்களில் படைத்தரப்பினர் பூட்டிய வர்த்தக நிலையங்களை திறப்பி;த்த சம்பவங்களும் இடம் பெற்றுள்ளது.

சங்கானை மற்றும் யாழ் நகரப் பகுதியில் சில இடங்களிலும் இத்தகைய சம்பவங்கள் இடம் பெற்றதைத் தொடர்ந்து வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டன. இதே நேரம் யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தகர்கள் பலர் துப்பாக்கி முனையில் இராணுவத்தினரால் மிரட்டப்பட்டுள்ளார்கள்.

சங்கானையில் காலை 9.00 மணி வரை அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டு இருந்த போதிலும் இராணுவத்தினர் வீடுகளுக்குச் சென்று வர்த்தகர்களை அழைத்து வந்து கடைகளை திறந்து மாலை வரை பூட்டக் கூடாது என அச்சுறுத்தி விட்டும் சென்றள்ளார்கள். ஆனாலும் பெருமளவில் யாழ் நகரப் பகுதியில் கடைகள் பூட்டப்பட்டுக் காணப்பட்டன.

இன்று யாழ் குடா நாட்டில் வழமைக்கு மாறாக சன நடமாட்டமும் குறைவாக காணப்பட்டது. போக்குவரத்துச் சேவைகளும் மட்டுப்படுத்திய அளவிலேயே இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

பதிவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.