Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் உள்வாங்கப்படாவிடில் , மாற்றத்திற்கான இலங்கையின் தேடல் தோல்வியடையும்! -ஜே.எஸ். திசைநாயகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் உள்வாங்கப்படாவிடில் , மாற்றத்திற்கான இலங்கையின் தேடல் தோல்வியடையும்! -ஜே.எஸ். திசைநாயகம்

 

 

 

”’சிங்களவர்கள்சிலர் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு அழைப்பு விடுத்தாலும், நாட்டின் அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை மாற்றவில்லை”.

‘ஒவ்வொரு முன்மொழிவும் பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரத்தை வழங்குவதன் மூலம் ஜனாதிபதியின் அதிகாரத்தை மட்டுப்படுத்தினாலும், இது அரசின் தன்மையை மாற்றாது .அரசு ஒற்றையாட்சியாகவே இருக்கும் . வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தமிழர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். பாராளுமன்றம் இன்னும் சிங்கள பௌத்தர்களின் ஆதிக்கத்தில் இருந்துவரும் .நிலையில் தமிழர்களுக்கு அதிகாரம் இல்லை.’

இலங்கையில் உள்ள தமிழர்கள் தவறான பொருளாதார முகாமைத்துவம் , அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை கோருகின்றனர். நாட்டின் அரசியலமைப்பை மாற்றும் ஒரு யோசனையொன்று முன்வைக்கப் பட்டிருக்கிறது . எவ்வாறாயினும்,வெளிவரும் முன்மொழிவுகள் கட்டமைப்பு ரீதியான மாற்றம் அல்லது ஸ்திரத்தன்மைக்கு சிறிதளவே உதவுகின்றன, ஏனெனில் அவை தமிழ்மக்களின் அக்கறைக்குரிய விடயங்களைப் புறக்கணிக்கின்றன. தமிழர்கள் அதிகாரப் பகிர்வுக்கான தமது சொந்த முன்மொழிவுகளை முன்வைக்க வேண்டும் அது இல்லாமல் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படமாட்டாது.
துரதிர்ஷ்டவசமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிலையான அரசாங்கம் நிறுவப்பட்டதும், தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதற்கு முன்னர், குறைந்தது இரண்டு தடவைகள் ஏற்பட்ட காலதாமதங்கள் தமிழர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளன.
2015 இல், சிறிசேன -விக்ரமசிங்க அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்தது. 2019 இல் அரசாங்கம் வீழ்ச்சியடைவதற்கு முன்னர், 2017 இல் ஏனைய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அரசியலமைப்பு நிர்ணயசபை ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில், தமிழர்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு பெறுமதிவாய்ந்த கால அவகாசம் இருந்தது. முன்னர் 1977 இலும் , ஐக்கிய தேசியக் கட்சி தமிழர்விடுதலை கூட்டணியுடன் தமிழர்களுடனான அதிகாரப் பகிர்வுதொடர்பாக , பேச்சுக்களை நடத்த இருந்தது., ஆனால் தாமதங்கள் இராணுவத்திற்கும் ஆயுதமேந்திய தமிழ் குழுக்களுக்கும் இடையில் வன்முறை வெடிப்பதை துரிதப்படுத்தியது.
கடந்த மாதத்தில், அரசியலமைப்பை திருத்துவதற்கு குறைந்தபட்சம் நான்கு தொகுப்பு முன்மொழிவுகள் மேற்கொள்ளப்ப்பட்டுள்ளன. ஒவ்வொரு திட்டமும் கட்டமைப்பு ரீதியான மாற்றத்திற்கான தொலைநோக்கை பூர்த்தி செய்யவில்லை.


சிவில் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் சார்பற்ற அதிகாரிகளை உள்ளடக்கிய அரசியலமைப்பு பேரவையை நியமிப்பதன் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதும் முன்மொழிவுகளில் அடங்கியுள்ளன தேசிய பொலிஸ் மற்றும் ஏனைய பொது அமைப்புகளுக்கான சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு பேரவை அதிகாரிகளை நியமிக்கும். ஆணைக்குழுக்கள் பாராளுமன்றத்திற்கு பதிலளிக்கும் கடப்பாட்டை கொண்டவை மற்றும் ஜனாதிபதியின் மீது பரிசீலனையை கொண்டவையாக செயற்படுகின்றன.


இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி பதவியை ஒழித்துவிட்டு “[அதற்கு] பதிலாக ஒரு பாராளுமன்ற நிறைவேற்று அதிகாரியை [பிரதம ர் ] கொண்டு வர வேண்டும்” என்று முன்மொழிந்தது.
ஐக்கியமக்கள் சக்தியின் முன்மொழிவுகள் இன்னும் விரிவாக உள்ளன. ஜனாதிபதி பதவியை இல்லாதொழித்து அதற்கு பதிலாக பாராளுமன்றத்திற்கு பொறுப்பான பிரதம ர் தலைமையிலான அமைச்சரவையை கொண்டு வர வேண்டும் என்று இந்த முன்மொழிவுகள் கோருகின்றன. ஜனாதிபதி பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார் மற்றும் அரச தலைவராகவும்படைகளின் தளபதியாகவும் இருப்பார், ஆனால் அரசாங்கத்தின் தலைவராக அல்ல.. சுயாதீன ஆணைக்குழுக்கள் மீளமைக்கப்படும். அரசியலமைப்பு அங்கீகாரம் பெற்றமுழுநாட்டிற்கும் பொதுவான தேசியம் இருக்கும்.

200க்கும் மேற்பட்ட அமைப்புகள் மற்றும் ஆர்வலர்களால் மூன்றாவது முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. நாட்டின் ஜனாதிபதியான கோத்தாபய ராஜபக்சவை இராஜினாமா செய்து, இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று அந்த முன்மொழிவுகள் கோருகின்றன. பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமனம் “கட்சித் தலைவர்கள் மாநாட்டின் மூலம் செய்யப்பட வேண்டும்” என்று அது கூறுகிறது.


அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட ஒரு இறுதிப் பிரேரணை மற்றும் நாட்டின் அரசியலமைப்பில் உள்ளடக்கப்படக்கூடிய தொன்று , ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தவோ அல்லது ஏனைய கட்டமைப்புரீதியான மாற்றங்களைச் செய்யவோ சிறிதளவும் செய்யாது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கூற்றுப்படி, “ஜனாதிபதி தொடர்ந்து அமைச்சுக்களை தக்கவைத்துக்கொள்ள முடியும், மேலும் எந்தவொரு விடயத்தையும் அல்லது பணியையும் தனக்கே ஒதுக்கிக் கொள்ள முடியும் மற்றும் எந்தவொரு அமைச்சருக்கான விடயதானங்களையும் செயற் பாடுகளையும் பொறுப்பேற்க முடியும்.”என்பதாகும்
இந்த முன்மொழிவுகள் தமிழர்களுக்கு பாரிய அச்சுறுத்தலை முன்வைக்கின்றன. அவர்கள் இரண்டுவிடயங்களில்அவ்வாறு செய்கிறார்கள்.


முதலாவதாக, ஒவ்வொரு முன்மொழிவும் பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரத்தை வழங்குவதன் மூலம் ஜனாதிபதியின் அதிகாரத்தை மட்டுப்படுத்தினாலும், இது அரசின் தன்மையை மாற்றாது.அரசு ஒற்றையாட்சியாகவேஇருக்கும் . வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தமிழர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் சிங்கள பௌத்தம் என்பதால் , பாராளுமன்றம் இன்னும் சிங்கள பௌத்தர்களின் ஆதிக்கத்தில் இருந்துவரும் . தமிழர்களுக்கு இன்னும்அதிகாரம் இல்லை.


இரண்டாவதாக, உருவாக்கப்படும் எந்தவொரு ஆணைக்குழுவும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்காது. 2015 மற்றும் 2019 க்கு இடையில் – இராணுவமயமாக்கலை கட்டுப்படுத்த சுயாதீன ஆணைக்குழுக்கள் சிறிதளவும் செய்யவில்லை, இது வடகிழக்கு இலங்கையில் தனியார் மற்றும் பொது நிலங்களை இராணுவம் ஆக்கிரமிக்க வழிவகுத்தது. முஸ்லிம் தீவிரவாதிகளால் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்குப் பிறகு சிங்களக் கும்பல்களிடமிருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்க அரசாங்கம் சிறிதும் செய்யவில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சிங்கள-பௌத்த பெரும்பான்மை ஆட்சியை பிரதிபலிக்கும் ஒரு பாராளுமன்றத்திற்கு சுயாதீன ஆணைக்குழுக்கள் முதன்மையான பதிலளிக்கும் கடப்பாட்டை கொண்டவையாகும்.
சில சிங்களவர்கள் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு அழைப்பு விடுத்தாலும், நாட்டின் அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை மாற்றவில்லை.


தமிழர்கள் கட்டமைப்பு ரீதியான மாற்றத்துக்கான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டிய தருணம் இது – குறைந்தபட்சம் சமஷ்டி அரசியலமைப்பு மூலம் அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கைகளை முன்வைக்கவேண்டிய காலகட்டமாகும். . கட்டமைப்பு மாற்றத்திற்கான திட்ட வரைபின் ஒரு பகுதியாக அவை இருக்க வேண்டிய நேரம் இதுவாகும் . சமஷ்டி முறைமை ஒன்றை அறிமுகப்படுத்துவது என்பது அரசியலமைப்பை மாற்றுவதாகும், அதற்கு தேர்தல் அல்லது சர்வஜன வாக்கெடுப்புதேவைப்படுகிறது மற்றும் சிங்களவர்களால் நிராகரிக்கப்படுமென எதிர்பாக்கப்பட்டாலும் , அது செய்யப்பட வேண்டியதாகும்.
இன்டர்நேஷனல் பொலிசி டைஜ ஸ் ட்

https://thinakkural.lk/article/182992

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.