Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எம்.பிக்களை லஞ்சம் கொடுத்து வாங்கி ஆட்சியைக் கவிழ்ப்பதற்குச் சதி! பின்னணியில் புலி ஆதரவாளராம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Wed Aug 8 8:05:13 EEST 2007

எம்.பிக்களை லஞ்சம் கொடுத்து வாங்கி ஆட்சியைக் கவிழ்ப்பதற்குச் சதி! பின்னணியில் புலி ஆதரவாளராம்

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆளும் தரப்புக்கு மாறி அமைச்சர்களான ஐ.தே.க. ஜனநாயக அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பல கோடி ரூபாவை லஞ்சமாகக் கொடுத்து, அவர்களை விலைக்கு வாங்கி, மீண்டும் அணி மாறவைத்து, அதன்மூலம் இந்த ஆட்சியைக் கவிழ்க்கும் சதி சூழ்ச்சி திட்டமிட்டுச் செயற்படுத்தப்படுகின்றது.

இப்படி நாடாளுமன்றில் நேற்று அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டார் மேற்படி ஐ.தே.க. ஜனநாயக அணியின் தலைவரும் பொது நிர்வாக அலுவல்கள் அமைச்சருமான கரு ஜயசூரிய.

இந்தச் சதித் திட்டத்தின் சூத்திரதாரியாக விடுதலைப் புலிகளின் ஆதரவாளரான சார்ள்ஸ் ஞானக்கோன் என்ற தமிழரே செயற்படுகின்றார் எனவும் அவர் தெரிவித்தார்.

சார்ள்ஸ் ஞானக்கோன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர். அந்த இயக்கத்துடன் நெருக்கமான தொடர்புடையவர். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலையுடன் தொடர்புடையவர் எனக் கைது செய்யப்பட்டவர். என்றும் கரு ஜயசூரிய நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவ்வாறான சதிமுயற்சிகளின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்பு ரிமைகள் மீறப்படுகின்றன என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.

நேற்று நாடாளுமன்றில் சபாநாயகரின் அனுமதியுடன் சிறப்புரிமைப்பிரச்சினை ஒன்றை முன்வைப்பதற்கு அவர் முன்னறிவித்தல் கொடுத்திருந்தார்.

ஆனால் ஆளும் கட்சிக் கொரடாவான அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே இந்த சிறப்புரிமைப் பிரச்சினையைத் தாமே முன்வைக்க முற்பட்டார். அப்போது எதிர்க்கட்சியினர் அதை வன்மையாக எதிர்த்தனர்.

இரு தரப்புகளும் இது குறித்து வாதப் பிரதிவாதம் செய்தன

இறுதியில் அமைச்சர் கரு ஜயசூரியாவையே சிறப்புரிமைப் பிரச்சினையை சபையில் சமர்ப்பிக்கும்படி சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.

அதற்கமைய அமைச்சர் கரு ஜயசூரிய சிறப்புரிமைப் பிரச்சினையை முன்வைத்தார்.

அப்போது அவர் கூறியவையாவது:

பயங்கரவாதத்திற்கு எதிராக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தோல்வியுறச் செய்யவும், அரசைக் கவிழ்க்கவும் சதித்திட்டம் ஒன்று இரகசியமாக செயற்படுத்தப்படவுள்ளது. பல்வேறு துறைகளிலும் சூட்சுமமாக நுழைந்து அரசுக்கு எதிராக திசை திருப்புவதே இந்த சதித்திட்டத்தின் நோக்கம்.

எங்கள் அணியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதினொரு கோடி அமெரிக்க டொலர்களை இலஞ்சமாக வழங்கவும் பேரம் பேசப்பட்டுள்ளது.

இக்கட்டான நிலையில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படும்போது அரசுக்கு எதிராக வாக்களிக்கச் செய்து ஆட்சியைக் கவிழ்ப்பதே இந்த சதித்திட்டத்தின் நோக்கம்.

இந்தச் சதியின் பின்னணியில் இருந்து சூத்திரதாரியாக செயற்படுபவர் புலிகளின் தீவிர ஆதரவாளரான சார்ள்ஸ் ஞானகோன்.

இவர் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலையுடன் தொடர்புடையவர் என்று கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்.

சார்ள்ஸ் ஞானகோன் இப்பொழுது சிங்கப்பூரில் இருக்கின்றார். இந்த நபர் ஒரு கோடீஸ்வர தனவந்தர்.

பணத்தை வீசி எங்கள் அணியினை வசப்படுத்த முடியாது. நாங்கள் பணத்திற்கு அடிமையாகிவிடமாட்டோம். எந்த ஒரு சூழ்ச்சிக்கும் பலியாகிவிடமாட்டோம். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்து அரசைக் கவிழ்க்க சூழ்ச்சி செய்வது ஒரு தேசத்துரோகம் மட்டுமன்றி உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மழுங்கடிக்கும் நடவடிக்கையுமாகும். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். எனவும் கரு ஜயசூரிய கூறினார்.(உ)

நன்றி - உதயன்

ஜ.தே.க அதிருப்திக் குழுவினரை இணைக்கும் முயற்சியில் தமிழ் வர்த்தகர் சார்ள்ஸ ஞானக்கோன்

ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி மாற்றுக் குழுவின் உறுப்பினர்களை மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைப்பதற்கு முயறச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் மாற்று குழுவின் தலைவரும் பொது விவகார உள் நாட்டு அலுவல்கள் அமைச்சருமான கரு ஜெயசூரிய இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அரசாங்கதில் இருந்து விலகி ஐக்கிய தேசிய கட்சியில் இணையும் ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரு கோடி ரூபா வழங்குவதாக பிரபல தமிழ் வர்த்தகரான சாள்ஸ் ஞானக்கோன் தமது கட்சியின் உறுப்பினர்கள் சிலரிடம் பேரம் பேசியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட வர்த்தகர் முன்னாள் ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும் அரசாங்கத்தை கவிழ்த்து ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைப்பதற்குரிய நிலையை உருவாக்குவதற்கு பல்வேறு தரப்பினரும் முயற்சித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் மாற்றுக் குழு உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்தில் இருந்து விலகி மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைவதற்கு தயாராகி வரும் நிலையில் அமைச்சர் கரு ஜெயசூரி இந்த குருத்தை வெளியிட்டுள்ளமை அவர்களின் நடவடிக்கைகளை தடுப்பதற்கான முயற்ச்சியே என்று தெரியவந்துள்ளது.

நன்றி : பதிவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.