Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குற்றச்சாட்டுக்கு இலக்கானவரே விசாரணையையும் நடத்தும் நியாயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-08-08

குற்றச்சாட்டுக்கு இலக்கானவரே விசாரணையையும் நடத்தும் நியாயம்

இலங்கையில், இலங்கைஅரசுத் தரப்பின் ஆசீர்வாதத் தோடு அரசுப் படைகளும், அதற்கு ஒட்டுறவாகச் செயற்படும் துணைப்படையான கருணா குழுவும் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளும் மேற்கொள்ளக்கூடிய மனித உரிமை மீறல் துஷ்பிரயோகங்களைக் கண்காணித்து, விசாரித்து, அறிக்கையிடக் கூடிய ஆணையோடு ஐ.நாவின் கண்காணிப் புக்குழு ஒன்றை இங்கு நிறுவவேண்டும். அத்தகைய செயற் பாட்டை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட இவ்விடயத்தில் சிரத்தையுள்ள அரசுகளும் மற்றும் இலங்கை அரசுத் தரப்பும் ஒத்துழைக்க வேண்டும்.

நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமைகள் அவதானிப்பு மையம் (Human Rights Watch) என்ற அமைப்பு இலங்கை நிலைவரம் தொடர்பான தனது பிந்திய அறிக்கையில் இவ்வாறு கோரியிருக்கின்றது.

இலங்கை அரசுத் தரப்பையும் கருணா குழுவையும் மோசமான மனித உரிமை மீறல் துஷ்பிரயோகங்களில் ஈடு படுகின்றன என்று தெரிவித்து கடுமையாகச் சாடியிருக்கின் றது இந்த அறிக்கை.

மனித உரிமைகள் அவதானிப்பு மையத்தின் அறிக்கை வெளியான கையோடே, அந்த அறிக்கையில் இடம்பெற்ற பிரதான கோரிக்கையை அடியோடு நிராகரித்து விட்டது இலங்கை அரசுத் தரப்பு.

அரசின் சார்பில் அதன் பாதுகாப்புத்துறைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல இவ்விடயம் தொடர் பாகக் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

""மனித உரிமை மீறல் கண்காணிப்புக்காக ஐ. நா. குழு ஒன்றை அழைப்பதற்கு இங்கு இடமில்லை. அப்படி அழைப் பது இலங்கையின் இறைமையை மீறும் செயற்பாடாக இருக்கும். அத்தோடு இத்தகைய விவகாரங்கள் தொடர்பாக இலங்கை தனது அதிகாரிகள் மூலம் விசாரணைகளை மேற்கொள்வதற்கான தகைமை, அவ்வாறு ஐ.நா.கண் காணிப்புக் குழு நியமிக்கப்படுவதன் மூலம் சந்தேகத்துக் கும் கேள்விக்கும் உள்ளாகும்'' - என்றும் அமைச்சர் கெஹலிய விளக்கமளித்திருக்கின்றார்.

""மனித உரிமைகளைச் சரிவரப் பேணுவதற்கு எம்மால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம். எங்களது செயற்பாடுகள் குறித்து எமக்குச் சந்தேகம் - ஐயம் ஏதுமில்லை. ஆகவே வெளியாரின் கண் காணிப்பு இது விடயத்தில் அவசியமல்ல. அத்தகைய கண் காணிப்பை ஏற்படுத்துவது இலங்கையின் இறைமையை அடியோடு மீறும் செயலாகும்.'' என்றும் அவர் விளக்க மளித்திருக்கிறார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இவ்விவகாரத்தில் இத்தகைய - முற்கூட்டியே தயாராக இருக்கும் ("ரெடி மேட்') பதிலே இலங்கை அரசுத் தரப்பிடமிருந்து வெளிவரும் என் பதையும் மனித உரிமைகள் அவதானிப்பு மையம் தனது அறிக்கையில் ஏற்கனவே கோடி காட்டியிருப்பதுதான்.

""மனித உரிமை மீறல் துஷ்பிரயோகங்களுக்கு முடிவு கட்டப்படும், அவை தொடர்பான விசாரணைகள் மேற்கொள் ளப்படும் என அரசு மீண்டும் மீண்டும் வாக்குறுதிகளை வழங் கிவந்துள்ளது. எனினும் காத்திரமான நடவடிக்கை எடுக்கும் விதத்தில் அது, போதிய அரசியல் பற்றுறுதியை வெளிப் படுத்தவேயில்லை.'' என்று மனித உரிமைகள் அவதா னிப்பு மையத்தின் ஆசியப் பணிப்பாளர் பிரேட் ஆடம்ஸ் முற்கூட்டியே குறிப்பிட்டதற்கு, இப்போதும் மீண்டும் உறுதி வழங்கப்படுகின்றது.

இத்தகைய மனித உரிமை மீறல் துஷ்பிரயோகங்களைக் கட்டுப்படுத்தவும், அவற்றைப் புரிந்தவர்களை அதற்குப் பொறுப்பாக்கித் தண்டிக்கவும் செய்யும் மனவுறுதியும் திட சங்கற்பமும் அரசுத் தரப்பிடம் இல்லை என்பதே பிரதான குற்றச்சாட்டு.

மனித உரிமைகள் அவதானிப்பு மையம் தனது பிந்திய அறிக்கையில் சுட்டிக்காட்டியபடி மஹிந்தரின் அரசு பதவி யேற்ற பின்னர், தமிழருக்கு எதிரான மோசமான மனித உரிமை மீறல்கள் படுகொலைகள், ஆள்கடத்தல்கள், காணாமற் போகச் செய்தல், கப்பம் அறவிடல் போன்ற மோசமான சம்பவங்கள் பல்கிப் பெருகியுள்ளன. ஆனால் இதில் சம் பந்தப்பட்டவர்கள் என்று கருதப்படும் அரசுப் படையினரோ அல்லது கருணா குழு போன்ற துணைப்படையினரோ இத் தகைய நடவடிக்கைகளுக்காகப் பொறுப்பாக்கப்பட்டு, சட்ட ரீதியாகத் தண்டிக்கப்படுவதற்கான செயற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டன என்ற சரித்திரமே இங்கு கிடையாது. மனித உரிமைகள் அவதானிப்பு மையம் கூறுவதுபோல, ""பாதுகாப்புப் படைகள் கீழ்த்தரமான யுத்த உத்திகளைக் கையாள்வதற்கு வெளிப்படையாகவே இலங்கை அரசு பச் சைக் கொடி காட்டியுள்ளது. தீவிரமடைந்துவரும் துஷ்பிர யோகங்கள், அவற்றின் அளவு கடந்த பெருக்கம் ஆகியவை தொடர்பான நடவடிக்கைகளை கையாளத் தம்மால் இயலாது அல்லது அத்தகைய விருப்பம் தமக்கு இல்லை என்ற நிலைப்பாட்டை அரசு அமைப்புகள் ஐயத்துக்கு அப்பால் வெளிப்படுத்தி வருகின்றன. அரசு வேண்டுமென்றே பாசாங் குத்தனத்துடன் பாராமுகமாக இருக்க, இந்த மனித உரிமை மீறல் துஷ்பிரயோகங்கள் தொடர்கின்றன'' என்பதே உண்மை நிலையாகும்.

இப்போது இலங்கையில் மோசமாக இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல் துஷ்பிரயோகங்களுக்கான குற்றச் சாட்டு வெறுமனே இலங்கையின் அரசுப் படைகள் மீதும் அந்தப் படைகளுடன் ஒட்டுறவாகச் செயற்படும் கருணா குழு மீதும் மட்டும் சுமத்தப்படவில்லை. இத்தகைய மீறல் கள் குறித்து பாராமுகமாக இருந்து, அவற்றைத் தூண்டி, வழிநடத்தி, அவற்றுக்குப் பச்சைக்கொடி காட்டி அனுமதிப் பதே அரசுதான் என்ற சர்வதேச மட்டத்திலான குற்றச்சாட் டும் இப்போது பகிரங்கமாக வெளிவந்திருக்கிறது.

இவ்வாறு தனக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டுக் குறித்து ஆராய தனது (அரசினது) விசார ணைக் கட்டமைப்பே போதுமானது என்று அரசுத் தரப்பில் கூறப்படுவது, குற்றம் சுமத்தப்பட்டவரே தனக்கு எதிரான குற்றச்சாட்டுக் குறித்து விசாரணை செய்யும் கேலிக்கூத்தை நியாயப்படுத்துவதற்கு ஒப்பாகும்.

நனறி - உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.